செவ்வாய், 14 ஜூலை, 2009

கூடாது- கூடாது

இந்த கேள்வி சீக்வென்ஸ் பற்றி ஒரு கர்ண பரம்பரைக் கதை உண்டு.
நேருவின் மந்திரி சபையில் இருந்த ஒரு நண்பர் நேருவிடம் பேசும் பொழுது
"எப்படி நீங்கள் சற்று நேரத்திலேயே உங்களுக்கு முன்னே பின்னே தெரியாதவரிடம் கூட ஒன்றிப் பேச ஆரம்பித்து விடுகிறீர்கள்?"
என்று கேட்டதற்கு .......

6 கருத்துகள்:

  1. "முன்னே பின்னே தெரிந்தவர்கள் நான் வாயைத்
    திறந்தாலே ஓடிவிடுகிறார்களே!"
    என்று சொன்னாரோ?

    பதிலளிநீக்கு
  2. பாக்கியை எப்பொழுது சொல்லப் போகிறீர்கள்?
    நானும் தினம் தினம் வந்து பார்க்கிறேன் - ஊம்-ஹும்

    பதிலளிநீக்கு
  3. யாரையும் பார்த்த உடன் நாட்டு நடப்பு, உள்நாட்டு & வெளிநாட்டு அரசியல், பொருளாதாரம் என்று ஆரம்பிக்காமல் "உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா ? - எத்தனை குழந்தைகள் ?'
    என்றெல்லாம் ஆரம்பித்தால் பின்னர் வேறு விஷயங்களைப் பேசலாம்" என்றார்.
    மறு நாள் மந்திரித் தோழர் வீங்கிய கன்னத்துடன் வந்ததைப் பார்த்த நேரு என்ன விஷயம் என்று கேட்க, 'எல்லாம் உங்களால் வந்த வினை' என்றார்.

    மீண்டும் துருவிக் கேட்டவுடன், 'உன்னை மாதிரி
    பாப்புலர் ஆகிவிட வேண்டும் என்று நீ [அதென்ன திடீரென்று ஏகவசனம்? என்பவருக்கு, பின்னே] என்னை எப்படிப்பட்ட இக்கட்டில் மாட்டி விட்டாய்?'

    "இதோ பார் சொன்னதைத் திரும்பத் திரும்ப சொல்வதை விட்டு விட்டு திருந்தச் சொல்" என்றார்
    நேரு.

    "நேற்று ஒரு பார்ட்டிக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு பெண்ணிடம் பேசும் பொது, உங்கள் அணுகு முறையைக் கையாண்டு பார்க்கலாமே என்று.

    'உங்களுக்குக் கலியாணம் ஆகிவிட்டதா ?'
    என்று கேட்டேன். அவள் 'உம் ... என்று மேலும் ஏதோ சொன்னாள். கூட இருந்த சலசலப்பில் சரியாகக் காதில் விழவில்லை. இருந்தும் அடுத்த கேள்வியைக் கேட்டு விடுவோம் என்று கேட்டே விட்டேன் 'எத்தனை குழந்தைகள் ?' என்று.
    பலன்?
    பார்க்கிறீர்களே அதுதான்'' என்றார்.

    பதிலளிநீக்கு
  4. நேருவின் தோழர் பின் என்னதான் செய்வது என்றார். கலியாணம் ஆகவில்லை - தேடிக்கொண்டிருக்கிறோம் என்றவரிடம் எத்தனை குழந்தைகள் என்றா கேட்பது? கிளிப்பிள்ளை மாதிரி நாம் பேசியதை அப்படியே ஒப்பித்து விடுவதா. மாற்றிக் கேட்கத் தெரிய வேண்டும் என்றார். தோழர், அப்படித்தான் முந்தா நாள் முதலில் எத்தனை குழந்தைகள் என்றும் பின் கல்யாணம் ஆயிற்றா என்று கேட்டதனால் ஒரு கன்னமும் நேற்று ஒன்றும் ஆக இரண்டு அனுபவம் என்றார்.

    பதிலளிநீக்கு
  5. அனானி - உங்கள் ஐயங்கள் தீர்ந்தனவா?

    பதிலளிநீக்கு
  6. கதை கேளு கதை கேளு என்று ஒரு பாடல் தொடங்கும்
    காந்தி நேரு கதை எல்லாம் கேட்டால் போடுகிற மாதிரி
    நிறைய வைத்திருக்கிறீர்களோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!