திங்கள், 7 செப்டம்பர், 2009

தேசிய உயர் நிலைப் பள்ளி



ஒன்பதாவது வகுப்பு மெயின் பில்டிங்கில். எஸ்.பி (S. Balasubramaniam) என்கிற சிறந்த மனிதர் எங்கள் வகுப்பு ஆசிரியர். கம்பீரமான தோற்றம். கலகலப்பான பேச்சு. டீக்கான உடை. இடத்துக்கேற்ற பாவனை. நாம் கற்றுக்கொள்ள வேண்டிய எவ்வளவோ விஷயங்கள் உள்ள மனிதர். நகைச்சுவை அதிகம். நன்றாகப் பேசுவார். எந்த நிகழ்ச்சியிலும் அவருக்கு முன்னுரிமை உண்டு.


எல்லாருக்கும் கட்டு மேனிக்கு பட்ட பெயர் வைப்பார். அந்த பெயர் நிலைத்து உண்மை பெயர் மறந்து போய்விடும். கதக்,,பழபழ, சொம்பு. ஓசிபீசி போன்றவை உதாரணம், அவரிடம் படிததவர்களுக்கு, நாலு கால் மண்டபமும் - கழுதையும் நன்றாக ஞாபகம் இருக்கும். அவர் வேலைக்கு வந்தும்பாதிக்க வேண்டியதில்லை என்பதை (நிஜமா?) அடிக்கடிசொல்வார். சில்லரையாக மாற்றி அக்கரைக் குளத்திற்குப் போய் ஒரு ரூபாயாக காசில் தெத்திக்கல் விடும் அளவிற்குபணம் இருப்பதாகச சொல்லி அசத்துவார்.(ஒரு ரூபாய் எங்களுக்கு மிகப் பெரிய விஷயம் -எட்டு வெங்காய தோசை தோப்பு துரை ஹோட்டலில் சாப்பிடலாம் - அதில்தான் ஜென்ம சாபல்யம் அடைவோம்! ). நேரு பிறந்த நாள் என்றால் அவர் மாதிரியே ஷெர்வானி அணிந்து காட்சி தருவார். கதா காலட்ஷேபம் செய்யும்போது பஞ்ச கச்சம் சிப்லா க்ட்டையுடனும், சர்ரணர் தினம் என்றால் ஸ்கார்ஃபுடன் மார்புக்கு மேல் ஏறிய பாண்ட் சஹிதமாகவும் சபாக்கச்சேரிக்கு ஜிப்பா வேஷ்டியுமாகவும் அனேகமாக பொருத்தமாக வரும் அவரை சராசரி ஆசிரியராகக் கருதக்கூடாது என்று அவர் கருதியது நியாயமே ! புதிய எண்ணங்களுக்கும், முயற்சிகளுக்கும் வித்தியாசமாக ஆதரவு தருவார. சுற்றுலா செல்வதற்கு ஸ்பான்சர் ஏற்பாடு செய்வது என ஈடுபாடு கொள்வார். மிகச் சிறிய நெருங்கிய மாணவர்களிடம் அவர் சென்னைப் பயணம் பற்றி கூறுவார். நம்புவது நம்பாதது அவரவர் இஷ்டம். நமப முடியாததை நம்புவதில் ஒரு த்ரில் இருக்கும்தானே !


நம்ம ஸ்கூலில் உதவி தலமை ஆசிரியருக்கு மேல் ப்ரொமோஷன் இல்லை என்ற நிலையில் வெளிப்பாளையம் நடராஜன் தமயந்தி ஸ்கூலுக்கு (நன்றி ஜவர்லால்!)  தலைமை ஆசிரியராகச் சென்றார். பெருமாள் கோவில் சன்னதியில் இருந்த அவ்ர் வீடடிலிருந்து குதிரை வண்டி கிடைக்காவிட்டால் மேல ரோட்டில் கம்பீரமாக நடப்பதை பார்த்து நான் வியந்ததுண்டு. நாங்கள் நண்பர்கள் 'மீட்'டுக்கு நாகை செல்லலும்போது, அவரை போய்ப் பார்ப்போம். அக்கறையுடன் விஜாரிப்பார். நிறைந்த ஆயுள் வாழ்ந்து மறைந்தார்.
பெரிய பண்டிட் பெயருக்கு ஏற்ற உருவம். க்ணீர் குரல். அதிகமாக கோபம் வராது. எப்பொதும் எதோ யோஜனையில் இருப்பார். சின்ன பண்டிட் (அமைதி பண்டிட்) நேர் மாறுதல்.மூக்கு நுனியில் கோபம் தயாராக இருக்கும். அமைதி அமைதி என்று அமைதியை குலைப்பார். சோமசுந்தரம் ப்ண்டிட் சாந்த சொரூபி, மிக இனிமையானவர். நல்ல குரல் வளம் உள்ளவர். மார்கண்ட செட்டி தெருவில் மணி வீடுக்கு எதிரில் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். மணி அவர் வீட்டிலேயேதான் இருப்பான். பல வருடங்களுக்குப் பிறகு, வளர்ப்பு மகனுடன் சென்னையில் ஓரிரு முறை பார்த்தேன்.
எஸ். எஸ் பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. காளி உபாசகர். சந்தானம் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி இருந்தார். ஹெட்மாஸ்டருக்கும் இவருக்கும் ஷஷ்டாஷ்டகம். வகுப்பில் தாராளமாக அவரை திட்டுவார்.
கே. துரைசாமிப் பிள்ளை என்கிற கேடிபிள்ளை. இவர் எங்களுக்கு வகுப்பு ஆசிரியர் அல்ல. ஆனாலும் நானும் சந்தானமும் இவரிடம் ப்ரைவேட் என்று மருவப்பட்ட ட்யூஷனுக்கு சென்றோம். மாதம் 6 ரூபாய் ஃபீஸ். எந்த மாதமும் முழுதாகக் கொடுத்ததில்லை. எங்கள் செலவுக்குக் கொஞ்சம் எடுத்துக்கொள்வோம். (செலவு என்ன செலவு! நித்யானந்த பவன் நெய் தோசைககு யார் பணம் தருவாங்க ?).ஃபீஸ் கொடுக்கும்போது சீனுவாசன் ஸார் பற்றிப் பேசுவோம். அவ்ளவ்தான்.ஃபீஸை மறந்து, அவரை திட்டத் தொடங்குவார். அது போதுமே எங்களுக்கு. பாதி நேரம் இங்கர்சாலை (அவர் மகன்) திட்டுவார். இல்லாவிட்டால் அவர் ஊர் கமுதியைப் பற்றிப் பிரலாபிப்பார். பிதகோரஸை மூட்டை கட்டி வைத்துவிட்டு உம் கொட்டிவிட்டு வீடு வந்து விடுவோம். அருமையான நாட்கள்! By Rangan.
(தொடரும்)

8 கருத்துகள்:

  1. நல்ல நினவு... நல்ல பதிவு...

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  3. நம் வாழ்க்கையில் நாம் அடிக்கடி நினைத்துப் பார்ப்பவர்களில் மாதா, பிதா, குரு - முக்கியமானவர்கள்.
    இந்த ஆசிரியர்கள் தின வாரத்தில் - குரு ஸ்தானத்தில் இருக்கின்ற ஆசிரியர்கள் பற்றி நினைவு கூர்ந்தது மிகவும் பொருத்தமே. நன்றி ரங்கன் சார்!

    பதிலளிநீக்கு
  4. ரங்கன்ஜி, பிச்சி உதறிட்டீங்க இந்த எபிசொட். அருமை! எஸ்.பி. சேர்ந்த பள்ளி நடராசன் தமயந்தி ஸ்கூல் என்று நினைக்கிறேன். சோமசுந்தரம் பண்டிட் எங்க காலத்தில் பி.சோ. ஆகி விட்டார்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  5. பி சோ அவர்களுக்கு, 'மதுரையை எரித்தவர்' பெயர் கொண்ட ஒரு மகள் இருந்ததாக ஞாபகம். அந்தக் காலத்தில் நாகை நாஷனல் ஹை ஸ்கூல் படித்து, இந்த வருடம் பணி ஒய்வு பெறுபவர்கள் யாராவது - இதைப் படிப்பவர்கள் - இருந்தால் இது பற்றிக் கூறலாம்.

    பதிலளிநீக்கு
  6. காரைக்காலில் படித்த நாளில் school excursion tripல் வேளாங்கன்னி சென்ற போது வழியில் பஸ் ரிப்பேராகி கீத்துக் கொட்டகையில்(?) சாப்பிட்டுப் படுத்த நினைவு வருகிறது. I think it was national high school.

    பதிலளிநீக்கு
  7. நான் CSI யில் படித்ததால் அங்குள்ள வாத்தியார்கள் அவ்வளவு பரிட்சயம் இல்லாமல் போனது ஆனால் பெருமாள் கோவில் சன்னதி என்ற போது எப்படி தெரியாமல் போனது என்று விழிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. குமார் அவர்களே - சி எஸ் ஐ ஸ்கூல் என்பது - நாங்கள் மெஷின் ஹை ஸ்கூல் என்று அன்போடு அழைத்த ஸ்கூல் என்று நினைக்கிறேன். நெடு நாட்கள் கழித்து, அதன் இயற்பெயர் Mission High School என்று தெரிந்துகொண்டோம்? நான் பெருமாள் கோவில் சன்னதியில் குடியிருந்த சொற்ப காலத்தில், மிஷன் ஹை ஸ்கூல் கிரவுண்டில்தான் மாலை நேரங்களில் விளையாடுவேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!