செவ்வாய், 15 செப்டம்பர், 2009

மாட்ச் பார்க்கப் போவோமா?

மாட்ச் பார்க்கப் போவோமா? (Sent By: Radha Suresh Padmanabhan - Money Workshop)
வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க? என்ன விஷயம் ?
நித்யா : வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை ? நிறைய ஜாதகமா வந்திருக்கு . அதுல 4 அல்லது 5 ஒத்து வர மாதிரி இருக்கு . எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை .அதான் குழம்பி போய் இருக்கேன் .
வித்யா : என்ன குழப்பம்?
நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு . இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு யோசிக்கறாங்களாம் . அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல . நீதான் சாப்ட்வேர் இஞ்சினியராச்சே . எனக்கு கொஞ்சம் சந்தேகங்கள் இருக்கு - நீ விளக்கிச் சொல்லு .
வித்யா : சொல்லிட்டா போகுது . ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷன்னு சொல்லு .
நித்யா : முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு .
வித்யா : மேனஜரா ? அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு .ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு . ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்யச் சொல்லுவாரு . ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்யச் சொல்லுவாரு . அதுமுடியாதுனன்னு சொன்னாலும் , ஒத்துக்க மாட்டாரு . எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கணும்னு சொல்லுவாரு . வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு . டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்கமாட்டாரு .
நித்யா : ஆஹா . அவ்வளவு ஆபாத்தானவரா ? அப்ப நான் எஸ்கேப் . அடுத்து இருக்கறவரு டெஸ்ட் இஞ்சினியரு .
வித்யா : இவரு அவரை விட ஆபத்தானவரு . எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு . நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு . நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா , நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை . அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு ரொம்ப நல்லவரு . அப்பிடீன்னு - அடிக்கடி அவரே ஸொல்லிக்குவாரு!
நித்யா : அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம் . அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம் .
வித்யா : இது அதுக்கும் மேல . எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானுகேட்பாரு . காபி போட 10 நிமிஷமாச்சுனா , காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு.. நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது .
நித்யா : அப்ப சாப்ட்வேர் மாப்பிள்ளையே வேண்டாம்னு சொல்றியா ?
வித்யா : யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய்க் கூட்டம் ஒண்ணு இருக்கு . அது தான் டெவலப்பர் கூட்டம் . எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.
நித்யா : அவுங்களை பத்தி சொல்லேன்.
வித்யா : நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க . நாம அப்பப்போ உற்சாகப்படுத்தினா போதும் . ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்ன தெரியுமா? எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க . நம்ம " அறிவாளி " படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி . அப்படினாலும் . கே தான் . எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க . ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு " நீ ரொம்ப நல்லவன்"னு சொல்லணும் . அவ்வளவுதான் . !
நித்யா : இது சூப்பரா இருக்கே . அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்.....!
காசு சோபனாவிற்கு - ஐ டி மானேஜர்தான் - மாட்ச் ஆக வேண்டுமாம் - எல்லோரும் மானேஜரைப் பார்த்து பயந்து சலாம் அடிக்கும் பொழுது, அவர் இவரைப் பார்த்து பயந்து, சலாம் அடிக்க வேண்டுமாம்!)

4 கருத்துகள்:

  1. சமையல் Software ஆ, Hardware ஆ...? மொத்ததுலக் கலக்கிட்டீங்க...

    பதிலளிநீக்கு
  2. புதுமையான கற்பனை. சுவாரஸ்யமா எழுதப்பட்டிருக்கு. திருமதி.ராதா சுரேஷுக்கு பாராட்டுக்கள்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  3. அந்தக் காலத்தில் உறவுக்குள் தெரிந்த பையனை தேர்ந்து எடுத்து திருமணம் செய்து வைப்பார்கள் பெண்ணுக்கு. உறவை மீறிச் செல்வதானால் உறவின் முறை உள்ள பையானது பெற்றோர்கள் அனுமதி கொடுத்தால் தான் உண்டு. அதாவது right to first refusal?

    அடுத்த கட்டமாக தெரிந்தவர் நண்பர் பையன் அல்லது பெண்ணை திருமணம் செய்து கொள்வது. அதற்கும் அடுத்த கட்டம் ஜாதகப் பரிவர்த்தனை நிலையங்கள் மூலம் தேர்ந்து எடுத்தல்.

    தன இன நபர்தான என்று பார்த்துப் பார்த்துக் காதல் கொண்டு கல்யாணம் செய்து கொள்வது பெரிய புரட்சியாகக் கருதப் பட்டது. பிற்பாடு, தன இனம் மதம், மாநிலம், பிரதேசம், நாடு, கண்டம் என்று விரிவடைந்து, ஆண் / பெண் எனும் தகுதி மட்டுமே கருதப் பட்டு காதல் செழித்தது. இன்று திருநங்கை திருமண மையம், ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் மகா புரட்சியில் வந்து நிற்கிறது. இதற்கும் அதிகப் படி புரட்சிக்கு ஆசைப்பட்டால் பொருந்தா உறவுத் திருமணம் ஒன்றுதான் பாக்கி.

    எல்லாம் சரிதான். ஆனாலும் அன்று முதல் இன்று வரை இதில் success percentage என்பது காலம் செல்லச் செல்லக் குறைந்து வருகிறது என்பதுதான் வியப்பிலும் வியப்பு. இதற்கு காரணம் என்ன?

    யோசிக்க வேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!