புதன், 10 மார்ச், 2010

தொடரும் கேள்விகளும் ...

கேள்வி: நித்யானந்தா இஷ்டைல்ல இன்னாவோ சொல்வியாங்காட்டியும்னு பாத்தா..ரூட்டு மாத்துறியே நைனா? ...-அப்பாதுரை
பதில்: அப்பாதுரை சார் - எல்லாமே ஒரே ரூட்டுதான். அவரு எக்ஸ்பிரஸ் - நம்ம பாசஞ்சர்ஸ்.

அனானி : ஐயா சாமி, துரைமாரே, அப்பா, நித்யம் ஒரே ஆனந்தத்தைக் கட்டிக் கிட்டு கஷ்டப் படணுமா என்ன?
பதில் : அதானே - கஷ்டப்படுவது என்று வந்துவிட்டால், - பல கஷ்டங்கள் படவேண்டியதுதானே!

கேள்வி (கு.கு) பெண்களுக்குப் பெண்தான் எதிரி என்பது சரிதானோ?
பதில் : இதுக்கு ஏதாவது ஏடா கூடமா சொன்னா - அவங்க ஆண்களையும் கடிச்சுக் குதறிடுவாங்க சாமி !

கேள்வி (ஜெட்லி) : சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்தாங்க அப்படின்னு சொல்றாங்க.... ஏன் மஞ்சள்,பச்சை கலர் கம்பள வரவேற்பு கொடுத்தா தப்பா....??
பதில் : மஞ்சள் பச்சை - அதோடு நீலமும் சேத்துக்குங்க. அல்லது இவைகள் எல்லாவற்றையும் சேர்த்து காவி கலர்? - இந்த மாதிரி - குழம்பாம - இரத்தம் ஒரே நிறம் என்பதால் - சிவப்பை தேர்ந்தெடுத்தார்கள் போலிருக்கிறது.



சாய்ராம் : //கொசுறு ... கே ப//  கே ப - ennai sollavillayae ?
பதில் : எங்களைச் சொல்லிக்கொண்டோம். (ஹூம் - எங்களைச் சொல்லவேண்டும்!)

6 கருத்துகள்:

  1. நடை பாதையில் கம்பளம் விரிக்கும் பழக்கம் ஏற்பட்ட போது கம்பளங்கள் மிகக் குறைந்த வண்ணங்களில் மட்டுமே கிட்டின - சிவப்பு மிகவும் சிறப்பாகக் கருதப்பட்டது மன்னர்களாலும் மற்ற பிரபுக்களாலும்

    பதிலளிநீக்கு
  2. //நித்யானந்தா... அவரு எக்ஸ்பிரஸ் - நம்ம பாசஞ்சர்ஸ் //

    அந்த ஆளோட பக்தைகள் ஆகாம இருந்த போதும் !!

    ரஞ்சிதா நிலை என்ன என்று ஸ்ரீராம் என் ப்ளோகில் எழுதி இருந்தார். தினமலர் பேப்பர் படித்தேன்; ரஞ்சிதா நான் அவருக்கு பணிவிடை செய்தேன் ஆகா ஓகோ என்று சொல்லி இருந்தார் ?

    இப்படியும் சாமி என்று ஊரை ஏமாற்றும் ஒருவனுக்கு பணிவிடை கிடைக்குமா ?

    பலே பலே - தமிழ் நாட்டில் / பெங்களூரில் சாமியார் வேலை எதாவது காலி இருக்கா ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!