சனி, 22 மே, 2010

ரோஜாக்கள் - அனுப்பியவர்: ராமலக்ஷ்மி

தாமதத்திற்கு மன்னிக்கவும். 
வலைப்பூ: முத்துச்சரம்
http://tamilamudam.blogspot.com





16 கருத்துகள்:

  1. வரைந்தவையும் வளைத்தவையும் அருமையோ அருமை!

    பதிலளிநீக்கு
  2. படம் இரண்டில் இருக்கும் சிகப்புப் பட்டு ரோஜாவை என் ஃப்ளிக்கர் தளத்தில் 'ராஜா மகள் ரோஜா மலராக'..

    பட்டுப் பூவின் அழகு கண்டு
    பின்னிருக்கும்
    மொட்டும் மலர்ந்திடத் துடிக்குது"

    எனும் வரிகளுடன் பதிந்திருந்தேன்.

    லக்ஷ்மிகாந்தன் என்பவர் ‘வரிகள் பாதியிலே நிற்கிற மாதிரி தோணுதே. மொட்டுக்கு அந்தப் பூ என்ன சொல்ல விரும்புது’ எனக் கேட்டிருந்தார்.

    சேர்த்தேன் உடனே பின் வரும் வரிகளை:

    "துடிக்கிற மொட்டுக்குப்
    பட்டுப்பூ சொல்லுது

    ‘மிளிர்வதும்
    பின்னொரு நாள் உதிர்வதும்
    எவருக்கும் விதித்தது

    இருக்கும்போது
    மற்றவர் மனதுக்கு
    இதமாக இருந்திடு

    இதழ் இதழாய் விரிக்கையில்
    இதைக் கவனத்தில் வைத்திடு

    உலகையே வெறுப்பவரையும்
    உன் புன்னகையால் மாற்றிடு

    அன்பேதான் அழகென்பதை
    அனைவருக்கும் உணர்த்திடு!’ "

    கேட்டவர் திரும்பி வந்து பார்க்கவில்லை:(!
    ஆகையாலே நீங்களெல்லாம் சொல்லுங்களேன் எப்படின்னு:)?

    _______________

    படம் மூன்று : பூக்களைக் கிள்ளாதீர்கள்

    “கிள்ளிப் பார்க்கத் துணிபவரைத்
    தள்ளி வைக்கத்தான்
    முள்ளினை தந்தானோ ஆண்டவன்
    அள்ளிடும் அழகு படைத்த
    அற்புத ரோஜா மலர்களுக்கு?”

    _______________

    படம் ஒன்று : நான் வரைந்தது:)! ரெண்டு வரி வருகிற யாராவது சொல்லாமலா போயிடுவீங்க:))? இப்போதே நன்றி.

    எங்கள் ப்ளாக், உங்களுக்கும் மனமார்ந்த நன்றி:)!

    பதிலளிநீக்கு
  3. அதற்குள் வந்து விட்டதா பாராட்டுக்கள்:)?

    நன்றி சித்ரா.

    நன்றி LK.

    நன்றி அநன்யா.

    பதிலளிநீக்கு
  4. //மிளிர்வதும்
    பின்னொரு நாள் உதிர்வதும்
    எவருக்கும் விதித்தது//

    ராமலக்ஷ்மி அருமை அருமை

    பதிலளிநீக்கு
  5. குரோம்பேட்டைக் குறும்பன்22 மே, 2010 அன்று PM 4:00

    // உலகையே வெறுப்பவரையும்
    உன் புன்னகையால் மாற்றிடு

    அன்பேதான் அழகென்பதை
    அனைவருக்கும் உணர்த்திடு!’ //

    ஆஹா அருமையான வரிகள். பிரமாதம் ராமலக்ஷ்மி மேடம்.

    பதிலளிநீக்கு
  6. எண்ணமும், வண்ணமும் அருமை ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  7. படம் அழகு.அதைவிட லஷ்மி அக்கா கையெழுத்து ரொம்ப ரொம்ப அழகு.எப்பவும் ரசிப்பேன்.

    "பூவே
    இருந்துவிடு
    புன்னகைத்தபடி
    பூவாகவே
    மாறிவிடாதே
    மனிதனாய் மட்டும் !"

    பதிலளிநீக்கு
  8. பதிவெல்லாம் நினைவேற ரொம்ப நேரமாகுதுங்க... டமிலிஷ்.காம்ல நிக்குது குட்ஸ் வண்டியாட்டம்.. அதுக்கப்பால 4ஷேர்ட்ல சிக்னல் விழ மாட்டேங்குது.. சைடுபார்ல தான் சிக்கல்னு தோணுது..
    ஒரு வேளை நான் தான் அம்பலம் கோணல்னு சொல்லுறனா?

    பதிலளிநீக்கு
  9. Appadurai sir.
    There appears to be some problem in Tamilish and google (blogger)
    4 shared also has holiday problem.
    That is why there are troubles in the blog loading.
    Let us wait and watch.

    பதிலளிநீக்கு
  10. ஒரு ரோஜா பாடல். "ரோஜா மலரே அழகக்கூடாது. கண்ணீரு வீணாகுமே. முழுகாத மகராசி அழுதாளே பாவம்." படம்- ராஜாங்கம்.

    பதிலளிநீக்கு
  11. கை வண்ணம்
    கவி வண்ணம்
    கண் வண்ணம்

    மூன்று அழகு

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  12. ராமலக்ஷ்மி, வரைந்த ஓவியமும் பேசிய செந்தமிழும் மிக அழகு.

    பூவும் மொட்டும் சம்பாஷணை இன்னும் அற்புதம்.
    இன்று ஞாயிற்றுக்கிழமை, இங்கிருந்தே உங்களுக்குத் திருஷ்டி கழித்து விடுகிறேன். என் கண்ணே பட்டுவிடும்:)

    பதிலளிநீக்கு
  13. நன்றி சாய்ராம்.

    நன்றி குறும்பன்.

    நன்றிங்க மீனாக்ஷி.

    நன்றி ஹேமா. உங்கள் வரிகள் நன்று. என் கையெழுத்தை பலமுறை பாராட்டி விட்ட உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். கல்லூரி காலத்தில் ஸ்டைலாக இருக்கிறதே என தங்கள் கையெழுத்தை என்னிடம் வடிவமைத்துக் கொண்டவர்கள் உண்டு:)! அதிலொருவர் அவ்வாறே தொடர்வதாய் சமீபத்தில் சொன்ன போதுதான் அது என் நினைவுக்கே வந்தது. உங்களிடம் இப்போது அதைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது:)!

    நன்றி ஸ்ரீதர் எனும் ஆர் ராமமூர்த்தி:)!

    தமிழ் உதயம் உங்களுக்கு பாடல் நினைவுக்கு வந்ததா?

    நன்றி விஜய் கவித்துவமான பாராட்டுக்கு.

    ஆகா வல்லிம்மா, பாராட்டுக்கும் உங்கள் அன்புக்கும் ரொம்ப நன்றி:)!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!