வெள்ளி, 30 ஜூலை, 2010

எங்கள் வாசகர்கள் சினிமாட்டிக்(கெட்)டிக் ‌‍‌


முதலில் இரண்டு தவறுகளுடன் வெளியான புதிருக்கு,  மணி (ஆயிரத்தில் ஒருவன்) எல்லா விடைகளையும் சரியாக எழுதி, ஒரு தவறையும் எடுத்துக் காட்டி எழுதி இருந்தார்.  மணிக்கு இருபதுக்கு இருபது.

அதே சமயத்தில், ஸ்ரீமாதவன், பத்து சரியான விடைகளை எழுதி இருந்தார்.

புதிர் வெர்ஷன் இரண்டு வெளியிடப்பட்டது. அப்பாவி தங்கமணி (குணசுந்தரி தவிர) எல்லா விடைகளையும் சரியாக எழுதி, ஒரு தவறு இருப்பதையும் சுட்டிக்காட்டி இருந்தார். அவருக்கும் இருபதுக்கு இருபது.

பிறகு வந்த பதில், ஹேமா அவர்கள் அனுப்பியது. எல்லாமே சரி. அவருக்கு 20/20.
பிறகு எல்லா பதில்களும் சரியாக அனுப்பியவர் பெயர் சொல்ல விருப்பமில்லை (20/20) 


Altruist http://brindhaavanam.blogspot.com/  இவர் அனுப்பியிருந்த பதில்கள் இருபதுக்கு பதினேழு சரி.

கடைசியில் பதில்கள் அனுப்பி, இருபதுக்கு பத்தொன்பது பெற்றார், மீனாக்ஷி SPS. 
இவர்கள் எல்லோருடைய ஆர்வமும், சினிமா ஞானமும், பாராட்டுக்குரியவை. 

இது குறுக்கெழுத்துப் புதிர் அமைப்பதில், எங்கள் முதல் முயற்சி. அடுத்த முயற்சியில், தவறுகள் இல்லாமல் அமைப்போம் என்று உறுதி கூறுகிறோம்.
பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் நன்றி. 

11 கருத்துகள்:

  1. உண்மையிலேயே வலைப்பூ வரலாற்றில் இது முதல் முயற்சி. வித்தியாசமான முயற்சி.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மாதவன் பாதிக்குப் பாதி சாய்ஸ்ல விட்டுட்டீங்க அதனால உங்களுக்கு இருபதுக்கு இருபது எல்லாம் கிடையாது. வெறும் பத்துக்குப் பத்துதான் :))

    தமிழ் உதயம் - நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி
    சினிமா குறுக்கெழுத்து புதிரை ஆவலுடன் எதிர் பார்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. ///மாதவன் பாதிக்குப் பாதி சாய்ஸ்ல விட்டுட்டீங்க அதனால உங்களுக்கு இருபதுக்கு இருபது எல்லாம் கிடையாது. வெறும் பத்துக்குப் பத்துதான் :))///

    இருபதுக்கு இருபது பத்துக்குப் பத்து
    ரேணும ஒண்ணுதான் சார்...

    பதிலளிநீக்கு
  5. என்ன? இருபதுக்கு இருபதும் பத்துக்குப் பத்தும் ஒன்றா?
    சரி அப்போ அஞ்சுக்கு அஞ்சு என்று வைத்துக்கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... முடியறப்ப எழுதுங்க... நன்றி
    http://appavithangamani.blogspot.com/2010/07/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  7. பரிசு: "எந்திரன்" டிக்கெட் அனுப்பி வைக்கப்படும்.

    பதிலளிநீக்கு
  8. என்ன அதிசயம்ன்னா...எனக்கே தெரியாம ஒவ்வொரு கட்டமும் நிரப்பத் தானாவே எல்லாம் நிரம்பிடிச்சு !

    பதிலளிநீக்கு
  9. நல்ல பதிவு, அடிக்கடி இந்த மாதிரி பதிவுகள் வெளியிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  10. கோம்பை இவ்வளவு நாள் தூங்கிகிட்டு இருந்தீங்களா!!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!