சனி, 4 பிப்ரவரி, 2012

எட்டெட்டு பகுதி 8:: தன்னிலை அறிய மருந்து!

                        
முந்தைய பதிவு: எட்டெட்டு பகுதி 7 சுட்டி <<< 

ஆவி மாயா கூறிய கதை தொடர்கிறது. 

கே வி - நான், உங்க தூக்கத்தை அதிக நேரம் கலைக்க விரும்பவில்லை.சுருக்கமாக என்ன நடந்தது என்று சொல்லி விடுகின்றேன். அதற்குப் பிறகு நீங்க எனக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்பதையும் கூறி விடுகின்றேன். 

ஜோதிட வைத்தியரிடம் என்னைப் பற்றி, ஓ ஏ பற்றி, பிங்கி பற்றி முழு விவரங்களும் கூறி, அதற்குப் பின், என்னுடைய, ஓ ஏ வினுடைய ஜாதக நகல்களை அவரிடம் கொடுத்தேன். அவர் நான் கொடுத்த ஜாதகங்களை, தீவிரமாக ஆராய்ந்தார். கம்பியூட்டரில் தகவல்கள் கொடுத்து, அதையும் உன்னிப்பாகப் படித்தார். பிறகு சொன்னார்: "மாயா, உனக்கு என்னுடைய மருந்து எதனாலும் பயன் இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், உன் கணவன் மனம் திருந்தி, தன்னிலை அறிய ஒரு சக்தி வாய்ந்த , இமய மலை மூலிகை மருந்து ஒன்று உள்ளது. அதில் ஒன்றே ஒன்று சேர்ந்தால் கூட, எந்த ஒரு மனிதரும் தன்னிலை அறிந்து, தடம் புரளாமல் மனம் திரும்புவர். அதில் மூன்று மாத்திரைகளை, நான் உன்னிடம் கொடுக்கின்றேன். அதில் ஒன்றையாவது, உன் கணவன் சாப்பிட்டால் போதும். மனம் திருந்தி பிங்கியிடமிருந்து விலகிவிடுவான். ஆனால், இது இந்தியாவில் தடை செய்யப் பட்ட மருந்து. உன் கணவன் ஒரு மாத்திரையை சாப்பிட்டு விட்டால் கூட, மீதி உள்ள மாத்திரைகளை, என்னிடம் கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும். செய்வாயா?" 

"அப்படியானால், ஒரு மாத்திரையை மட்டும் கொடுங்கள்." 
  
"முதலில் நானும் அப்படி கொடுக்கத்தான் நினைத்தேன். ஆனால், இது ஒரு நீல நிற பாட்டிலில் வைத்திருக்கப் படவேண்டிய மாத்திரை. என்னிடம் தற்சமயம், ஒரே ஒரு நீல நிற பாட்டில்தான் இருக்கின்றது. நீல நிற பாட்டிலில் இருந்தால்தான், இந்த மாத்திரையின் வீர்யம் குறையாமல் இருக்கும். மீதம் உள்ள மாத்திரைகளை, நீல நிற பாட்டிலோடு சேர்த்து, என்னிடம் திருப்பித் தருவாயா?"

'எப்படியாவது ஓ ஏ மனம் திருந்தி, பிங்கியுடனான தன் உறவைத் திருத்திக் கொண்டால், அவரை மீட்டு என்னிடமே கொண்டு வந்திடலாம்' என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எனவே, "அப்படியே செய்கின்றேன் சார்" என்று அவருக்கு உறுதியளித்தேன். 

***********

அன்று மாலையே, ஓ ஏ வைப் பார்க்க இந்த ஹோட்டலுக்கு வந்தேன். அவர் இருக்கின்ற அறைக் கதவின் அழைப்பு மணியை ஒலித்தேன். 
  
கதவைத் திறந்தவள் அந்த சண்டாளி பிங்கி.   
                             
(தொடரும்) 
              

3 கருத்துகள்:

  1. சுவாரசியமாக போய் கொண்டிருக்கும் போது தொடரும் போட்டு விட்டீங்களே!!அடுத்த பகுதி எப்போது??படிக்க ஆவலாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. //'எப்படியாவது ஓ ஏ மனம் திருந்தி, பிங்கியுடனான தன் உறவைத் திருத்திக் கொண்டால்..//

    ஒரு மாத்திரை கொடுத்து, ஓ ஏ மனம் திருந்துவதற்குப் பதில், அந்த மாத்திரையை பிங்கிக்கே கொடுத்து அவளின் உறவை நிறுத்தி விடலாம் போலிருக்கு. முதல் மாத்திரை காலி. அடுத்து ஓ.ஏ.க்கு. அடுத்து யாருக்கு என்பது தான் மில்லியன் டாலர் கேள்விக்கான பதில்.

    பதிலளிநீக்கு
  3. கொஞ்சம் அச்சு&பிச்சுத் தனமான யோசனை. இருந்தாலும் பரவாயில்லை!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!