செவ்வாய், 12 ஜூன், 2012

அலேக் அனுபவங்கள் 04:: அப்பலராஜு

     
அசோக் லேலண்டில் அடியேன் பணிபுரிந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் , சற்றேறக் குறைய, பதினாறு ஆண்டுகள் என்னுடைய பாஸ் ஆக இருந்தவர் திரு பி அப்பலராஜு. அவர் கையால் நான் மூன்று பிரமோஷன்கள் வாங்கினேன்.  
     
அவர், நேற்று (11-06-2012 திங்கட்கிழமையன்று ) சென்னை வேளச்சேரியில், காலமானார் என்னும் துயரச் செய்தியை, என்னுடைய நண்பர் தேவதாஸ் அலைபேசியில் அழைத்து, சொன்னார். 
    
திரு அப்பலராஜு பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அவருடைய மேலதிகாரிகள் இட்ட பணிகள் எதையும் மிகுந்த ஈடுபாட்டுடன், செய்து முடிப்பார். நான், அவருடைய குழுவில் பல கடினமான பிராஜக்டுகள் செய்ததுண்டு. அது பற்றிய விவரங்கள் பிறிதொரு சமயம் எழுதுகின்றேன். அவர் அசோக் லேலண்டில், DGM - Quality Control பதவியில் இருந்து, இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு பல மேனேஜ்மெண்ட் கல்லூரிகளில், பெரிய பதவிகள் வகித்தார். ஆசான் மேனேஜ்மெண்ட் கல்லூரி டீன் ஆக இருந்தார் என்று இணையம் விவரம் தருகின்றது. 
                  
அவருடைய ஆன்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். 
     
கௌதமன். 
       

6 கருத்துகள்:

  1. கௌதமன் - இது மிகவும் துயரமான செய்தி. திரு அப்பலராஜூ அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
    அவர் தலைமையில் பணி புரிந்த நான்கு ஆண்டுகள் பசுமையாய் என் நினைவுகளில்.

    பதிலளிநீக்கு
  2. திரு அப்பலராஜூ அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அவரின் இறப்புச் செய்தியையும் பதிவாகப் பதிந்ததிலிருந்து உங்களை அவர் எவ்வளாவு ஈர்த்துள்ளார் என்று புரிகிறது. இறைவன் அருள் கிட்டட்டும்.

    பதிலளிநீக்கு
  4. மேலதிகாரியாய் மட்டுமில்லாது நல்ல மனிதராகவும் இருந்திருக்கிறார் என்பது உங்கள் எழுத்திலிருந்து புரிகிறது. என் ஆழ்ந்த அனுதாபங்களும். அவருடைய ஆன்மா சாந்தியடைய நானும பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல மனிதர் என்பது புரிந்தது. அவருடைய குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்கும் பிரிவு வருத்தத்தைத் தரும். எங்கள் அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல அணுகுமுறையும் அன்பும் கொண்ட மேலதிகாரிகள் பணி செய்ய பெரும் உந்துசக்தி. உங்கள் வருத்தத்தை உணர முடிகிறது. கௌதமன் சார்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!