புதன், 3 அக்டோபர், 2012

அலேக் அனுபவங்கள் 11 :: மருத்துவப் பரிசோதனை.

                  
டிசம்பர் இரண்டாம் தேதி, ஆண்டு 1971. அவர்கள் கேட்டிருந்தபடி, எல்லா சான்றிதழ்களும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். புறப்படுவதற்கு முன்பு,  என்னுடைய எக்ஸ்-ரே யை, ஒரு புதிய மஞ்சள் நிற காகித கவரில் போட்டு, ரிப்போர்ட் இருந்த கவரை வீட்டிலேயே விட்டு, கிளம்பினேன். 
                    
மருத்துவப் பரிசோதனைக்கு மொத்தம் ஐந்து பேர் வந்திருந்தனர். கௌதமன், பாஸ்கர், அனந்தராமன், விஸ்வநாதம் (ஆமாம் - தம் தான்) ஷ்யாம் சுந்தர் ரெட்டி - என்று ஞாபகம். ஐந்தாவது நபர் சரியாக ஞாபகம் இல்லை. 
                   
எல்லோரையும் மருத்துவ மையம் வாசலில் நிறுத்தி, எக்ஸ் ரே மற்றும் வாக்சினேஷன் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பெயர்கள் எழுதிக் கொண்டு, உள்ளே ஒரு அறையில் சென்று அமரச் சொன்னார்கள். அனைவரும் உள்ளாடை மட்டும் அணிந்து, ஒரு வெள்ளை நிற பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டோம். 
                 
ஒரு மணி நேரம் இப்படி சங்கோஜமான நிலைமை. அவ்வப்போது கையில் / காலில் அடிபட்டு, டிஞ்சர் போட்டுக் கொள்ள வந்த இரண்டொரு தொழிலாளர்கள், அதிசயமாக எங்களைப் பார்த்து, அருகில் இருந்த கம்பவுண்டரிடம், 'யாரு இவங்க எல்லாம்? ஏதேனும் திருடிட்டு செக்யூரிடி அலாரம்ல மாட்டிகிட்டான்களா?' என்று ரகசியமாகக் கேட்டார்கள். கம்பவுண்டர், அவர்களிடம், 'இல்லைபா, சூப்பர்வைசர் ட்ரைனிங் கு புதுசா சேர வந்திருக்கின்ற  ஆளுங்க.அவங்களுக்கு மெடிக்கல் எக்சாமினேஷன்'' என்றார். 
                  
ஒவ்வொருவரையும் எடை மெஷினில் நிறுத்தி எடை பார்த்தார்கள். நான் முப்பத்தைந்து கிலோதான் இருந்தேன். எடை பார்த்தவர், "வரும்பொழுது நிறைய வாழைப் பழம் சாப்பிட்டு வந்திருக்கக் கூடாதா? வெயிட் கொஞ்சம் அதிகமாகக் காட்டியிருக்குமே " என்று கேட்டார். 'முன்னரே சொல்லியிருக்கக் கூடாதா' என்று நினைத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு ஆளுக்கு ஒரு சோதனைக் குழாயைக் கையில் கொடுத்து அந்தப்புரத்திற்கு அனுப்பினார்கள். 'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என்று மனதினுள் பாடியபடி சென்றேன். 
             
பிறகு நடந்தது என்ன என்றால் ... 
           
அட! பதிவுல சென்சார் புகுந்து சில பகுதிகளை கட் செய்துவிட்டார்கள்! 
                
டாக்டரை சந்திக்க ஒவ்வொருவரும் தனித் தனியே அழைக்கப்பட்டார்கள்  (ஆமாம், ஆமாம் உள்ளாடை மட்டும்தான் - இப்பவும்) ஒவ்வொருவருக்கும் பத்து முதல், பதினைந்து நிமிடங்கள் ஆயின. என்னுடைய முறை வந்ததும், அறையினுள் சென்றேன். 
               
டாக்டர் வயதானவர். உயரமாக, புன்னகை தவழும் முகத்தோடு, வழுக்கைத் தலையுடன், வெள்ளைக் கோட்டு, வெள்ளை பாண்ட்  அணிந்து, பருமனான மனிதராக இருந்தார். (பெயர் தெரியும். சொல்ல மாட்டேன்! ) என்னை நூறு சதவிகிதம் தேகப் பரிசோதனை செய்த பின், என்னுடைய எக்ஸ்-ரேயை அங்கிருந்த ஒளி  பொருந்திய ஸ்டாண்டில் மாட்டினார். எக்ஸ்-ரே யை சில வினாடிகள் உற்றுப் பார்த்தார். 
             
பக்கத்து அறையில் இருந்த அவருடைய உதவியாளரை, சத்தமாக அழைத்தார். (உதவியாளர் பெயர் ஞாபகம் இல்லை). என்னுடைய சப்த நாடிகளும் ஒடுங்கிப் போயின. 
            
டாக்டர், 'ஹியர் இஸ் எ கேஸ் ஆப் அக்யூட் பிராங்கிடிஸ் விச் மே டெவலப் இண்டு எ சீரியஸ் அண்ட்  மாலினன்ட்  ஒன்  அண்டர் அனட்டென்டட் சர்க்கம்ஸ்டான்சஸ் ....' என்று சொல்லி, உதவியாளர் உதவியோடு, என்னை ஆம்புலன்சில் ஏற்றி, சென்னைப் பொது மருத்துவமனைக்கு கொண்டுபோய் விட்டு விடுவாரோ என்ற பயம் வந்துவிட்டது, எனக்கு. 
           
உதவியாளர் வந்தார் ..... 
     
மீதி அடுத்த பதிவில் பார்ப்போம். 
            

15 கருத்துகள்:

  1. சுருக்கமாக நீங்களும் பதிவை கட் செய்து விட்டீர்களே...

    பதிலளிநீக்கு
  2. நீங்க எந்தப் பாட்டு வேணா முணுத்திருக்கலாம், 'சோதனை மேல் சோதனை' பாட்டை நிச்சயமா மனசுக்குள்ளேயோ வெளியேயோ பாடியிருக்க முடியாது. நீங்க காலப்பயணியா இருந்தாலொழிய.

    (ஹூஸைனம்மாவுக்கு முன்னால நான் சொல்லிடறேன்:-)

    பதிலளிநீக்கு
  3. நான் பாடியது சினிமாப் பாட்டு இல்லைங்கோ. முகாரி ராகத்தில், நானே இயற்றி, நானே இசையமைத்து நானே பாடி, நானே கேட்டுக்கொண்ட, பாடல்.

    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!
    சோர்ந்து போயி சொர்ணம் தேட வேண்டுமடா சாமி!
    சொந்த பந்தம் ஏதுமின்றி தேறாது டாமி,
    நோய் வந்தா நொடிச்சுப் போகும் என் மேனி ...

    (விஜய கே ஜி ஜி)

    பதிலளிநீக்கு
  4. எல்லாருக்குமே இதுபோல சோதனை மெல்ல் சோதனை அனுபவவங்கள் இருக்கும் போல இருக்கே

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. எடை முப்பத்தஞ்சு கிலோதானா???
    கடைசி பத்தி படிச்சுட்டு கடைசி
    படத்தை பாத்தபோது சிரிப்பை அடக்க முடியல. :)

    பதிலளிநீக்கு
  7. ஞாபகம் இல்லைங்கறதெல்லாம் இப்போதைய ஞாபகத்தில் இருப்பது தான் ஆச்சரியம்!

    பதிலளிநீக்கு
  8. //ஜீவி said...
    ஞாபகம் இல்லைங்கறதெல்லாம் இப்போதைய ஞாபகத்தில் இருப்பது தான் ஆச்சரியம்!//
    உதவியாளர் பெயர் அப்போ ஞாபகம் இருந்தது; ஆனால் இப்போ ஞாபகம் இல்லை .. (நான் சரியாக சொல்கிறேனா !!!)

    பதிலளிநீக்கு
  9. //ஹூஸைனம்மாவுக்கு முன்னால நான் சொல்லிடறேன்//

    ரொம்ப பில்டப் பண்ணி வச்சிருக்கேனோ? இன்னுமா உலகம் நம்மள நம்புது!! :-(((

    எனக்கு அந்தப் பாட்டைத் தெரியும், ஆனால் அது குறித்து வேறெந்த தகவலும் தெரியாது. சினிமா & பாடல்கள் அறிவுல நான் கொஞ்சம் வீக். அதனால், உங்க யூகம் தவறு!! :-)))))

    பதிலளிநீக்கு
  10. மருத்துவப் பரிசோதனையே ஒரு ஒரு பெரிய சோ(ரோ)தனையா இருந்திருக்கும்போல. அதுவும், போலீஸ் ஸ்டேஷன்ல உக்கார வச்சதுபோலயெல்லாம்... பாவம்!!

    என்னது... முப்பத்தஞ்சு கிலோதானா.... (ரகசியம் என்னவோ?) அதிருக்கட்டும், இப்போ வெயிட் கண்ட்ரோலா இருக்கா உங்களுக்கு? :-)))


    //டாக்டர் வயதானவர்.....(பெயர் தெரியும். சொல்ல மாட்டேன்!//
    அப்பவே வயதானவர் என்றால் இப்போது..... அப்புறம் பெயரைச் சொல்ல என்ன தடை? :-)))

    டாக்டர் பெயர் ஞாபகமிருக்கு, உதவியாளர் பேர் ஞாபகமில்லன்னா... அதெப்படி? :-)))

    அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க.

    பதிலளிநீக்கு
  11. டாக்டர் பெயர் எஸ் என்று ஆரம்பித்து, 3 என்று முடியும். உதவியாளர் பெயர் மெய்யாலுமே மறந்துபோய் விட்டது.

    திருமணத்திற்குப் பிறகு திருமதி அளித்த சத்துணவு எல்லாம் சாப்பிட்டு, கடந்த பத்தாண்டுகளாக எடை ஐம்பத்தைந்து கிலோவாக மாறாமல் இருந்து வருகின்றது.

    பதிலளிநீக்கு
  12. // (நான் சரியாக சொல்கிறேனா !!!)//

    கேஜிஜி! நீங்கள் தான் சரி.

    பதிலளிநீக்கு
  13. ஒவ்வொருவரையும் எடை மெஷினில் நிறுத்தி எடை பார்த்தார்கள். நான் முப்பத்தைந்து கிலோதான் இருந்தேன்.//

    அடாடா, எனக்கும் மின் வாரியத்தில் வேலைக்குச் சேருகையில் மருத்துவப் பரிசோதனையில் எடை ரொம்பக் கம்மி. ஆனால் அந்த டாக்டர் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்ல டாக்டர். என்னை யாரு, என்னனு விசாரிச்சுட்டு, அப்பா ஸ்கூல் வாத்தியார்னு தெரிஞ்சதும், பாசம்பொங்கி வர, நானும் ஸ்கூல் வாத்தியார் பிள்ளைதானு சொல்லிட்டு எடையை 42 கிலோனு போட்டுக் கொடுத்தார். ஹிஹிஹி, அதே மருத்துவர் இப்போப் பார்த்தால்??????????

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!