ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஞாயிறு 213:: ஏரி காப்போம்!

               

மேலே உள்ள படத்தில் நீங்கள் காண்பது, பெங்களுரு அகரா ஏரி. சென்ற மாதம் (ஜூலை) ஏழாம் தேதி, இந்த ஏரியின் சுற்றுப் புறத்தில் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியினை, நூற்றுக் கணக்கில் சேர்ந்த மக்கள், ஆர்வத்தோடு செவ்வனே செய்தனர். இந்தப் படம், அன்று எடுக்கப்பட்ட படங்களில் ஒன்று. 
           
இன்று - ஆகஸ்ட் நான்காம் தேதி, காலை ஆறரை மணி முதல் பத்தரை மணி வரையிலும், சென்னை செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில், பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடிக் குப்பை அகற்றுகின்ற பணி நடைபெறுகின்றது. அப்பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழுகின்ற, மற்றும் ஆர்வம் உள்ள எங்கள் ப்ளாக் வாசகர்கள், காலை ஆறரை மணிக்கு, குன்றத்தூர் - நந்தம்பாக்கம் பேருந்து நிறுத்தம் - அருகே  வரும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். 
              
For details log on http://cleanplast2013.in 
   
சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு, மேம்பாட்டிற்கு, நம்மால் இயன்றதைச் செய்வோம்! நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருப்போம்! 
                   

10 கருத்துகள்:

  1. பாராட்டப்பட வேண்டிய முயற்சி. வெற்றி பெற்றால் அனைவருக்கும் நல்லதே.

    பதிலளிநீக்கு
  2. வெற்றி பெறமனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. பாராட்டத்தக்க முயற்சி
    பதிவாக்கிப் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இந்த முயற்சியில் ஈடுபடும் அனைவருக்கும் பாராட்டுகள்......

    தகவல் தந்த உங்களுக்கு நன்றி.....

    பதிலளிநீக்கு
  5. நல்ல முயற்சி. எல்லோருக்கும் படிப்பினை தரும் முயற்சி அல்லவா.
    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  6. மக்களும் அக்கறை காட்டினாலே சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முடியும். நல்ல படம், பதிவு.

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு முயற்சி. இப்போத் தான் காவிரி நீர் வாராது போல் வந்த மாமணியைப் பாதுகாக்க வேண்டும்னு சொல்லிட்டு வந்தேன். இங்கே இந்தப் பதிவு. வாழ்த்துகள். எல்லாப் பகுதிகளிலும் மக்கள் இப்படி தன்னார்வப் பணி செய்தால் தான் குப்பைகளையும் அடியோடு ஒழித்து, நீர் ஆதாரங்களையும் பாதுகாக்க முடியும். இதுக்கு யார் வந்து சொல்லணும்! அந்த அந்தப் பகுதி மக்களே முன் வரணும்.

    பதிலளிநீக்கு
  8. யாரேனும் ஓரிருவராவது பங்கேற்றால் நன்றாயிருக்கும் என்று நேற்றே பசுமை விடியல் பக்கத்திலும் பகிர்ந்தேன்.
    உண்மையில் இது ஒரு நல்ல விஷயம் ..நம் அஜாக்ரதையால் வீசும் பிளாஸ்டிக் கடலுக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் சொல்ல முடியாத அளவு பாதிப்பை ஏற்படுத்துது ..இன்னும் இதைப்பற்றி விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படணும் .
    Angelin.

    பதிலளிநீக்கு
  9. அருமையான சேவை, பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!