ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ஞாயிறு 268 :: நீலவானம்!

     
       
இருள் கவியத் துவங்கும் நேரத்தில் ஓர் இரயில் நிலையம்! 
       
கவிதை எதுவும் தோன்றினால், இங்கே கருத்துரையாகக் கொட்டுங்க! 
   
(ஆமாம், சுப்புத் தாத்தாவை எங்கே ரொம்ப நாளாக் காணோம் - எங்கள் வலைப் பக்கம்?) 
               

18 கருத்துகள்:

  1. கண்ணனின் நீல நிறம் எப்படி இருந்திருக்கும் என்பது இதைப் பார்த்தாலே புரிகிறது.

    நீல நிறம் அது கண்ணனின் நிறம்.

    பதிலளிநீக்கு
  2. நீல நிறம் ,வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் என்ற பாடல்தான் காதில்
    ஓலிக்கிறது !

    பதிலளிநீக்கு
  3. nee..eela vaanam, nee..yum naanum -nu kamalhaasan pattu than gnapagam varuthu; kavithainnu yosichcha!!:-))

    பதிலளிநீக்கு
  4. நீலவான ஓடையில்
    நீந்துகின்ற ஒளிவிளக்கு..!

    பதிலளிநீக்கு
  5. அருமையான க்ளிக்! வாழ்த்துக்கள்!
    என் ஹைக்கூ

    புகை படிகையில்
    பொலிவானது
    வானம்.

    பதிலளிநீக்கு
  6. e rul
    e rail
    e mail il
    comments.

    subbu thatha.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. அழகான படம்...

    நீலம் போர்த்திய வானம்...
    சூப்பர்...

    பதிலளிநீக்கு
  8. நீல வான ஓடையில் நீந்துகின்ற ரயில் நிலா.யம்.வெகு அழகு வர்ணக்கலவை.

    பதிலளிநீக்கு
  9. இப்போ வரைக்கும் இன்னும் ஒண்ணும் "திங்க" ஆரம்பிக்கலை போலிருக்கே! ஶ்ரீராம் சரவண பவனின் ஒசத்தியான சாம்பார் ரெசிபி போடறதாச் சொல்லி இருந்தார். வந்தால் ஒண்ணையும் காணோம். :))))

    பதிலளிநீக்கு
  10. இருள் கவிழ்ந்தாலும்
    இயங்கிடுவோம் நாங்கள்
    உறக்கமின்றி உருண்டோடி
    உழைப்போம் உங்களுக்காக!

    ரயில் நிலையத்திற்கு உறக்கம் ஏது?

    பதிலளிநீக்கு
  11. கருத்த வான்மேகத்துக்கும் கனத்த மனித இதயத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சேர்த்து வைத்த நீர் வடித்து முடித்தபின் இரண்டும் தெளிவு பெறுகின்றன - இணையத்தில் படித்த ஒரு தத்துவம்

    பதிலளிநீக்கு
  12. gowtham!
    This is the msg i sent thro
    email. u did not see this one.

    இருள் வரும் நேரம் இது.
    இரு உள் என்றதாம் கரு மேகம்.
    தன்னுள் இருந்த ஒளியைப் பார்த்து.

    மின்னல் சிரித்ததாம்.
    பின் சீறித்து வந்ததாம்.

    ஒரு கணம்
    உலகமே மின்னித்தாம்.
    உயிர்த்து எழுந்ததாம்.

    எதிரெதிரே
    இருளிலே இரு
    இரயில்கள்.
    சத்தமில்லா வந்ததை

    ஒரே பாதையில் வர இருந்ததை
    நல்ல வேளை
    மின்னல் தடுத்து விட்டது.
    வெவ்வேறு பாதைகளில்
    ஒன்று வர இன்னொன்று சென்றது.

    பாயிண்ட்ஸ் மென்
    பெருமூச்சு விட்டார்கள்.

    ஒரு கணம் நான்
    உயிருடன் இருந்தாலும்
    ஒளியுடன் வாழ்ந்தேன்
    என்றதாம் மின்னல்.


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!