ஞாயிறு, 1 நவம்பர், 2015

ஞாயிறு 330 :: நிழலுக்கு அஞ்சாத காக்கை!

             
     

26 கருத்துகள்:

  1. நிழலின் நீளத்தைப் பார்க்கும்போது இது காலை ஏழு மணி அல்லது மாலை ஐந்தரை மணியாக இருக்கலாம்.

    மாலை வேலைகளைவிட காலையில்தான் காக்கைகள் சுறுசுறுப்பாக இருக்கும். ஆகவே இது காலை வேளை என்று முடிவுக்கு வரலாம்.

    காலை என்பதால் இது நிச்சயமாக அரபிக் கடல் என்று அடித்துக் கூற முடியும். ஆக, இது கேரளா, கர்நாடகா அல்லது கோவா ஆகிய ஏதேனும் ஒரு கடற்கரையில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம்.

    எதுவுமே இல்லை, மறுகரையில் மரங்களுடன் ஒரு ஊர் தெரிகிறது. ஆகவே இது ஒரு தீவாகவும் இருக்கலாம். அவ்வ்வ்வ்.....

    பதிலளிநீக்கு
  2. கடல் மணலில் நெடு நிழல். அருமை.

    காக்கைக்கு அஞ்சாத.. (மனிதர்) என்றும் சொல்லலாமோ:)?

    பதிலளிநீக்கு
  3. அறிஞர் கார்த்திக் சரவணன் தெரிவித்த கருத்தோடு
    எனது எண்ணமும் ஒத்துப்போகிறது!

    பதிலளிநீக்கு
  4. ஆளுக்கே அஞ்சமாட்டோம்... அவர் நிழலுக்கா அஞ்சப்போகிறோம்.. என்று அசட்டை காட்டுகிறதோ காக்கை...

    பதிலளிநீக்கு
  5. நல்ல ரசனை.
    வாய்ப்பு கிடைக்கும்போது விக்ரமம் என்னும் இடத்தில் நாங்கள் பார்த்த புத்தர் சிலையைப் பற்றிய அனுபவப்பகிர்வைக் காண வருக. http://ponnibuddha.blogspot.com/2015/11/blog-post.html

    பதிலளிநீக்கு
  6. சில காக்கைகள் யாருக்கும் அஞ்சுவது இல்லை.

    பதிலளிநீக்கு
  7. எங்க ஊர் காக்கைகள் நிஜத்துக்கே அஞ்சுவதில்லை! படம் அருமை!

    பதிலளிநீக்கு
  8. இருவரும்: அட! காக்கைகள் இப்போதெல்லாம் பயங்கர தைரிய சாலிங்க..மக்களோடு இருந்து இருந்து பழகிட்டாங்க. நாம பக்கத்துல போனாலே பயப்படறது இல்லை..நிழலுக்கா..?!!

    படம் மிக மிக அருமை....

    பதிலளிநீக்கு
  9. கார்த்திக் சரவணன் ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதியிருக்கின்றார்.
    மாலை வேளை. மணி நான்கு நாற்பத்தைந்து .
    அரபிக்கடல்.
    ஆனால் செயின்ட் மேரி தீவின் கிழக்குக் கடற்கரையோரம்!!
    சூரியன் எனக்குப் பின்னால் அஸ்தமனம் நோக்கி இறங்கிக்கொண்டிருக்கின்றது.
    தூரத்தில் தெரிவது இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரம்!
    அவருடைய கருத்துரையின் கடைசி இரண்டு வரிகள் மிகவும் சரி!

    பதிலளிநீக்கு
  10. ராமலக்ஷ்மி said...
    கடல் மணலில் நெடு நிழல். அருமை.

    காக்கைக்கு அஞ்சாத.. (மனிதர்) என்றும் சொல்லலாமோ:)?

    ஆஹா ! அது சரிதான். காக்காய்ப் (படம்!) பிடிக்கத் தயங்காதவன்!

    பதிலளிநீக்கு
  11. //Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...
    அறிஞர் கார்த்திக் சரவணன் தெரிவித்த கருத்தோடு
    எனது எண்ணமும் ஒத்துப்போகிறது!//

    பேரறிஞர்களுக்கு என் நன்றி!

    பதிலளிநீக்கு
  12. //S.P. Senthil Kumar said...
    அருமை!
    த ம 4//

    பாராட்டுக்கும், ஓட்டுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. //கீத மஞ்சரி said...
    ஆளுக்கே அஞ்சமாட்டோம்... அவர் நிழலுக்கா அஞ்சப்போகிறோம்.. என்று அசட்டை காட்டுகிறதோ காக்கை...//

    உண்மை! அங்கே கத்துகின்ற காக்கைகள், கடலலைகளின் சத்தத்தை மீறி பெரிதாகக் கத்துகின்றன.

    பதிலளிநீக்கு
  14. //Dr B Jambulingam said...
    நல்ல ரசனை.
    வாய்ப்பு கிடைக்கும்போது விக்ரமம் என்னும் இடத்தில் நாங்கள் பார்த்த புத்தர் சிலையைப் பற்றிய அனுபவப்பகிர்வைக் காண வருக. http://ponnibuddha.blogspot.com/2015/11/blog-post.html//

    நன்றி. இதோ வருகின்றேன்.

    பதிலளிநீக்கு
  15. சிறந்த, ஆராய்ச்சிக் கட்டுரை படங்களுடன், விவரங்களுடன். நன்றி டாக்டர். B.J

    பதிலளிநீக்கு
  16. //G.M Balasubramaniam said...
    சில காக்கைகள் யாருக்கும் அஞ்சுவது இல்லை.

    November 1, 2015 at 2:35 PM
    ‘தளிர்’ சுரேஷ் said...
    எங்க ஊர் காக்கைகள் நிஜத்துக்கே அஞ்சுவதில்லை! படம் அருமை!

    November 1, 2015 at 3:26 PM
    KILLERGEE Devakottai said...
    ஸூப்பர் ஸ்டில் நண்பரே....//

    நன்றி, நன்றி, நன்றி!

    பதிலளிநீக்கு
  17. //Thulasidharan V Thillaiakathu said...
    இருவரும்: அட! காக்கைகள் இப்போதெல்லாம் பயங்கர தைரிய சாலிங்க..மக்களோடு இருந்து இருந்து பழகிட்டாங்க. நாம பக்கத்துல போனாலே பயப்படறது இல்லை..நிழலுக்கா..?!!

    படம் மிக மிக அருமை....//

    அங்கே சுற்றிவருகின்ற காக்கைக் கூட்டங்களையும், அவைகள் கரைவதையும் கேட்டபொழுது எனக்கு ஆல் ஃ ரெட் ஹிட்ச்காக்காய் சாரி ஹிட்ச்காக்கின் birds படம் ஞாபகம் வந்தது!

    பதிலளிநீக்கு
  18. கீதா: கார்த்திக் சரவணன் சொல்லுவது போல் இது கேரளா அல்ல, அரபிக்கடலும் அல்ல. வங்காள விரிகுடா-சென்னை...இது ஒன்று மஹாபலிபுரம் போகும் வழியில் உள்ள கோவளம் பீச்..இல்லை என்றால் நீலாங்கரை தாண்டியதுமே.., திருவிடந்தை வரை உள்ள கடற்கரையில் இருந்து பார்த்தாலே கடற்கரை வளைவாக இருப்பதால் மஹாபலிபுரம் கடற்கரையும் அதன் அடுத்தாற் போல் உள்ள கடற்கரையும் வளைந்து செல்லும் இந்த மரங்கள் அடர்ந்த பகுதியும்...தெரியும். எனவே அந்தப் பகுதிதான் இங்கு படத்தில் தூரத்தில் தெரியும் பகுதி. மஹாபலிபுரத்தில், கோவளம் பீச்சில் இருந்தாலும் இந்த வளவுப் பகுதி தெரியும். ஆனால் தூரமாக இருப்பதால் அதற்கு முன்பான பகுதியாக இருக்க வேண்டும். என்பது ஒரு அனுமானம். நிழலின் அமைப்பு...மாலை என்பதைக் குறிக்கின்றது. சூரியன் மேற்கு திசையில்...நிற்பவர் காலை என்றால் அவரது நிழல் அவரது முன்பு ஆனால் இடப்புறமாகவும்...மாலை என்றால் அவரது வலப்புறமாகவ்ம் விழ வேண்டும். இது வலப்புற ஆங்கிளில் இருக்கின்றது..காக்கை கல் அவற்றின் நிழலும் அது போன்றே....ஸ்பாடா... ஒருவழியா அனலைஸ் பண்ணி முடிச்சாச்சு...

    பதிலளிநீக்கு
  19. //Thulasidharan V Thillaiakathu said...
    கீதா:!!!!! ///

    கொஞ்சம் அப்புல பாருங்க!

    அரபிக்கடல்.

    செயிண்ட் மாரீஸ் தீவு.

    அந்தத் தீவின் கிழக்குக் கரை.

    மாலை மணி நான்கு நாற்பத்தைந்து.

    தூரத்தில் தெரிவது உடுப்பி / மால் பே கடற்கரையின் மேற்குக் கரை.

    பதிலளிநீக்கு
  20. தன் நிழலையே கண்டும் அஞ்சுபவன் மனிதன் மட்டுமே!
    நிழல்படம்!

    பதிலளிநீக்கு
  21. நிழல் கண்டு அஞ்சாத நிஜக்காக்கை...

    படத்தினை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  22. ஆராய்ச்சிகள் சுவாரசியம். எல்லோருமெல்லாத்தையும் சொல்லிட்டுப் போயிட்டாங்க! நாம என்னத்தைச் சொல்றது? நீங்க சமீபத்தில் மங்களூர் போனதாலே இது அரபிக்கடலோரம் தான் என்று புரிஞ்சது. மத்த தகவல்களுக்கு நன்னி ஹை!

    பதிலளிநீக்கு
  23. நிழலுக்கஞ்சா காக்கை
    யாரிடமோ சொல்கிறது
    எனக்கு அஞ்சா நிழல்

    பதிலளிநீக்கு
  24. நிழலைக் கண்டு அஞ்சா காக்கையை அழகாய் படம்பிடித்தற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!