திங்கள், 20 ஜூன், 2016

"திங்க"க்கிழமை :: பீடா அடை (சண்டிக்கீரை அடை)



சண்டிக்கீரை... அல்லது நச்சுக்கொட்டைக் கீரை இலைகளை எடுத்துக் கொள்ளவும்.  
 
 

வீட்டில் அடைமாவு இருந்தால் எடுத்துக் கொள்ளவும். வேறு ஏதாவது உங்களுக்கு மாவு ஐடியா தோன்றினால் அதையும் எடுத்துக் கொள்ளலாம்.
 
 

இலையில் நடுவே சிறிது மாவை வைக்கவும்.
 
 

வைத்துச் சுருட்டவும்.  சுருட்டிய இலை பிரியாமலிருக்க நூல் வைத்துக் கட்டலாம்.
 
 

'என் காக்கை அலை சூளை' யில் மூன்று நிமிடம் வைக்கவும்!!  (நன்றி கேஜிஜி)
 
 

மூன்று நிமிடத்துக்குப் பின்...
 
 


அவற்றை எடுத்து தோசைக் கல்லில் இட்டுப் புரட்டி எடுக்கவும்.
 
 

நூல் உரித்து....
 
 
 

அப்படியே சாப்பிட்டு விடலாம்!


 


30 கருத்துகள்:

  1. ஹூம், இது என்ன பெரிசா! நாங்க சேம்பு இலையிலே பண்ணுவோமாக்கும். சேம்பு இலை அடை அல்லது வடை அல்லது கறி என அந்த அந்த வட்டார வழக்குக்கு ஏற்றாற்போல் மாறும். இதே போலப் புடலங்காயிலும் செய்யலாம். முட்டைக்கோஸிலும் செய்யலாம். :)

    பதிலளிநீக்கு
  2. நாங்க இதுக்குன்னே அரைப்போம். அடைமாவு, தோசை மாவுக்கெல்லாம் பெரிய நோ!

    பதிலளிநீக்கு
  3. சாப்பிடத் தூண்டுகிறது நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  4. லெட்ச கெட்ட கீரைன்னு சொல்லுவாங்களே அதுவும் இதுவும் ஒன்னு தானா...? செய்து பார்க்கனும்...நன்றி

    பதிலளிநீக்கு
  5. ம்ம்ம்... இந்த இலைக்கு தில்லியில் எங்கே போவது!

    கண்ணாலே சாப்பிட வேண்டியது தான்!

    பதிலளிநீக்கு
  6. நச்சுக் கொட்டைக் கீரை பீடா அடை செய்முறை விளக்கம் அருமை. அது என்ன "காக்கா சூளை' என்று போட்டிருக்கிறீர்களே குமுட்டி அடுப்போ?

    பதிலளிநீக்கு
  7. வாங்க கீதா மேடம்... மேலதிகத் தகவல்களுக்கு நன்றி. நாங்கள் குழந்தைகள்.. இப்போதான் ஒவ்வொண்ணா செய்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி கீதா மேடம். அப்படியும் செய்யலாம். இது அவசரகாலச் சமாளிப்பு! நாக்கு நமநம என்னும்போது படக்கென எதையாவது செய்ய ஐடியா!

    பதிலளிநீக்கு
  9. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  10. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா..

    பதிலளிநீக்கு
  11. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி. நீங்கள் கேட்ட கேள்வியை அப்படியே கீதா மேடத்துக்கு பாஸ் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. நன்றி வெங்கட். கண்ணால் காதலியைச் சாப்பிடலாம்.. இதையுமா!

    பதிலளிநீக்கு
  13. நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம். கேஜிஜி முந்தைய திங்கள் பதிவொன்றில் மைக்ரோவேவ் ஓவனை இப்படிச் சொல்லியிருந்தார். அதுதான். அவருக்கு நன்றியும் சொல்லியிருக்கேன் பாருங்க!

    பதிலளிநீக்கு
  14. பருப்பு உசிலிக்கு அரைக்கிறமாதிறி அறைத்துப் பண்ணுவோம். அப்போ மைக்ரோவேவ் அவனெல்லாம் கிடையாது. ஆவியில் வேக வைத்துதான் செய்வோம். உங்கள் செய்முறை கட்லெட்மாதிரி இருக்கு. கீரைக்கு எங்கு போவது. நல்ல ருசியானது, பேஷ் அன்புடன்

    பதிலளிநீக்கு
  15. //என் காக்கை அலை சூளை' யில் மூன்று நிமிடம் வைக்கவும்!//

    MICRO MEANS MY CROW. WONDERFUL !
    LET IT BE.
    I ATTEMPTED TO DO THIS A LITTLE WHILE AGO.
    i CANNOT SAY THAT I WAS NOT SUCCESSFUL.
    BUT I MADE A MISTAKE.
    INSTEAD OF COTTON THREAD, ( WHICH WAS NOT AVAILABLE IMMEDIATELY )
    I USED A RUBBER BAND AND
    HEATED THE ROLLED ONES ( TEN NOS.) IN MICRO OVER.

    WITHIN SECONDS, A VERY PUNGENT SMELL CAME,
    I OPENED THE OVEN AND FOUND
    THE RUBBER BAND I USED GOT HOT AND EMITTED THE SMELL.

    I DID NOT LOSE COURAGE.
    I REMOVED THEM AND NOW I COVERED WITH COTTON BANDAGES.
    NOW AGAIN TRIED MY LUCK.

    IT IS NOW FAIRLY OK. BUT THE PUNGENT RUBBER SMELL STILL IS THERE.

    PLEASE SEE ME...I AM JUST GOING TO THE TERRACE OF OUR BUILDING.
    AND PUTTING THE WHOLE TEN PIECES...

    AND SHOUT....KAA....KAAA.....KAA....

    A LOT OF CROWS COME AND BICK UP BITS OF THE WONDERFUL RECIPE.

    THANK U. VERY MUCH.

    BECAUSE IT IS DAD'S DAY, ( I THOUGHT IT IS YESTERDAY )
    LIKELY, MY DAD WOULD HAVE COME AS A CROW, AND
    HAD A TASTE OF IT.

    IS IT NOT POSSIBLE, MADAM GEETHA SAMBASIVAM ?

    SUBBU THATHA.

    பதிலளிநீக்கு
  16. ஹையோ, ஹையோ, சு.தா. இதை எல்லாம் என் காக்கை அலை சூளையிலும் வைக்கக் கூடாது. கயிறோ, ரப்பர் பான்டோ போட்டுக் கட்டவும் கூடாது. வாழை நார் சிறப்பு. ஆனால் பெரும்பாலும் நான் எதுவும் கட்டுவதில்லை. இலையையே அப்படியே மடிச்சுச் சுருட்டி வைப்பேன். இட்லித் தட்டில் வேட்டில் வேக வைப்பதால் வெந்து விடும்! :)))) இதுக்குச் சோம்பல் பட்டுண்டு என் காக்கை அலைச் சூளையை எல்லாம் தேடினால் அம்புடுதேன்! :)))))

    பதிலளிநீக்கு
  17. அரேபியர்களின் உனவுமுறையும் இப்படி இருக்கின்றது உள்ளே சோறு வைத்து இருப்பார்கள் புளிக்கும் நல்ல சுவையாகவும் இருக்கும் பார்ட்டிகளுக்கு போனால் நான் விரும்பி சாப்பிடுவேன்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி காமாட்சி அம்மா.. வாழை இலையில் வைத்துக் கூட செய்யலாம் இல்லையா அம்மா!

    பதிலளிநீக்கு
  19. வாங்க சுப்பு தாத்தா.. நீங்க நகைச்சுவைக்குத்தான் எழுதி இருக்கீங்கன்னு தெரியும். ரப்பர் பேண்டை சூட்டில் வைக்கக் கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா என்ன! எனவே நகைச்சுவையை ரசித்தேன். பின்னூட்டத்தில் காக்கையைக் கொண்டு வரவேண்டி எழுதப்பட்டது இல்லையா.. ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  20. வாங்க கீதாக்கா.. மீள் வருகைக்கு டாங்ஸ்...தாத்தாவுக்கு தெரியாதுன்னா நினைக்கறீங்க? சும்மா வம்பிழுக்கிறார்! நாங்கள் இட்லித்தட்டும் வைத்திருக்கிறோம், ஓவனும் வைத்திருக்கிறோம்... இதிலும் செய்வோம்... அதிலும் செய்வோம்.. ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  21. நன்றி கோமதி அரசு மேடம். மொபைலிலிருந்துதானெ கமெண்ட் போட்டீர்கள்?

    பதிலளிநீக்கு
  22. அட! எங்க ஊர்ல இதை பத்ரோடை என்பார்கள். கீதா சொல்வதுபோல இதற்கென தனியாக அரைப்போம். சேப்பங்கிழங்கு இலையில் செய்வோம். முதலில் மாவை இலையில் வைத்து சுருட்டி (நூல் கட்டுவது இல்லை) இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுத்து விட்டு, பிறகு சின்னச்சின்ன துண்டுகளாக கட் பண்ணி கடுகு உ.பருப்பு, க. பருப்பு எல்லாம் திருமாறுவோம். சேப்பங்கிழங்கு வாங்கி வந்தால் அதில் முளை விட்டதையெல்லாம் நட்டு வைத்துவிடுவோம். பீடா அடை என்கிற பெயர் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  23. லெட்ச கெட்ட கீரைன்னுதான் மதுரையில சொல்லுவாங்க மதுரையில் நாங்கள் வசிக்கும் போது ரயில்வேயில் குடியிருப்பில் எங்க வீட்டுக்கு கிழாத்து மாமிவீட்டில் இந்த மரம் உண்டு அவர்கள் ஆவியில் வேகவைத்து செய்வார்கள் அப்போ எல்லாம் மைக்ரோ அவன் அந்த அளவிற்கு பாப்புலர் கிடையாது

    எங்க ஆத்து மாமி வலைப்பக்கம் எல்லாம் வருவது கிடையாது அப்படி வந்து பார்த்துட்டா எனக்குதான் பிரச்சனை என்னை செய்ய சொல்லி வற்புறுத்துவா அப்புறம் நான் இலைக்கு எங்க போவது?

    பதிலளிநீக்கு
  24. இது போன்று ப்ராசு இலை என்று சொல்லுவார்களே அதிலும் செய்யலாம், சேம்பு இலையிலும் வாழை இலையிலும் செய்யலாம். கேரளத்தில் எங்கள் ஊரில் எல்லாம் இனிப்பு அடை, இலை அடை என்று செய்வதுண்டு. வேறு வேறு ரெசிப்பிகள். கேபேஜ் இலையிலும் செய்யலாம்.

    (பதிவிற்குச் சம்பந்தம் இல்லாத ஒன்று சிஸ்லர்ஸ் என்று பல காய்கள் சில மசாலாக்கள் என்று கேபேஜ் இலையைப் பெரிதாக எடுத்துக் கொண்டு அதில் வைத்துச் சூடாக செய்யலாம் கடாய் அல்லது சிறிய தாவாவைக் கொண்டு வைக்கும் போதே ஸ்ஸ்ஸ்ஸ் என்று அதில் சத்தம் வரும்...வரணும் அப்பத்தான் அது சிஸ்லர் ஹிஹிஹி...)

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!