ஞாயிறு, 6 நவம்பர், 2016

ஞாயிறு 161106 :: கவனித்திருக்கிறீர்களா?


பகல்  நேரப்  பயண  இரயில்களில், பெரும்பாலும், ரயில்  கிளம்பும்  நிலையத்தில்,   நடை மேடை  பக்கத்தில்  உள்ள  லக்கேஜ்  குறைவாகவும், எதிர்  திசையில்  இருக்கின்ற  லக்கேஜ்  அதிகமாகவும்  இருக்கும். 

கவனித்திருக்கிறீர்களா?  

இந்தப்படத்தில், சென்டிரலில்  ஆறாம்  எண்  நடைமேடையிலிருந்து  புறப்பட்ட  ரயிலில்,  இடது  பக்கம்  (நடைமேடைப்  பக்கம் )  லக்கேஜ்  குறைவாகவும், வலது  பக்கம்  அதிகமாகவும்  இருப்பதைப்  பாருங்கள். 

இதற்கு  என்ன  காரணமாக  இருக்கும்? 


10 கருத்துகள்:

  1. வலப்பக்கம் வைக்கக் கை வாகாய் இருப்பதால் இருக்கும். அதோடு இடப்பக்கம் உட்காருபவர்களும் தங்கள் கண்ணெதிரே சாமான்கள் இருப்பு தெரியணும்னு எதிர்ப்பக்கமே வைப்பாங்க! அதனாலும் இருக்கும். இடப்பக்கம் காலி இடங்கள் இன்னமும் பூர்த்தி அடையாமல் வர இருக்கும் நிலையங்களில் மக்கள் ஏறுவதற்குக் காத்திருக்கலாம். :) மிச்சத்தை நீங்களே சொல்லிடுங்க.:)

    பதிலளிநீக்கு
  2. AC coach - இந்தப் பக்கம் மூணு ஸீட், அந்தப் பக்கம் ரண்டு ஸீட்னாலயும் இருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  3. பொதுவா, கதவுப்பக்கம் உள்ள (நடைமேடை) பகுதியில் வைக்க மனது தயங்கும். (அப்படியே ஜன்னல் வழியாத் தூக்கிண்டு போயிருவான்னு). கண்ணெதிரே சாமான்'கள் தெரியுமாறு வைப்பதுதான் வழக்கம்.

    பதிலளிநீக்கு
  4. :)))

    என்னவெல்லாம் சிந்தனை செய்கிறீர்கள்....

    நான் இப்படி எல்லாம் வைப்பதில்லை. எங்கே இடம் இருக்கிறதோ அங்கே வைப்பது தான்.

    பதிலளிநீக்கு
  5. இதில் எந்த பக்கம் இரண்டு சீட் எந்த பக்கம் மூன்று சீட்

    பதிலளிநீக்கு
  6. திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களின் கருத்தே என்னுடையதும்.
    விமானத்தில் ஏறுபவர்கள்கூட பெரும்பாலும் தனக்கு எதிர்புற பாக்ஸில்தான் தனது லக்கேஜை வைப்பார்கள்

    பதிலளிநீக்கு
  7. ji the more important thing is we must take off our suitcase only ..
    and leave behind the other ones
    since all branded suitcases LOOK ALIKE...
    did any of you take the othermans suitcase in a hurry...or vice versa...

    பதிலளிநீக்கு
  8. நாங்கள் எங்களுக்கு சீட் கொடுக்க பட்டு இருக்கும் இடத்திற்கு மேலே தான் வைப்போம். பஸ் பிராயணம் செய்யும் போது நமக்கு எதிர்பக்கத்தில் வைப்போம் கவனித்துக் கொள்ள வசதி என்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!