வியாழன், 22 பிப்ரவரி, 2018

எம் எஸ் வி யும் நௌஷாதும் மற்றும் சில அரட்டைகள்



MSV - Naushad The Legends! 


ராணிமைந்தனின், 'மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.,' நூலிலிருந்து:




மும்பையில் சண்முகானந்தா அரங்கில், இசை நிகழ்ச்சி நடத்த விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு அழைப்பு. டி.எம்.எஸ்., சுசீலா, சந்திரபாபு, சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, பி.பி.ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பின்னணி பாடகர்கள் மற்றும் தன் இசைக் குழுவினருடனும், எம்.எஸ்.வி., மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடானது.


நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏ.எல்.சீனிவாசன், 'எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீங்க?' என்று எம்.எஸ்.வி.,யிடம் கேட்டார். உடனே விஸ்வநாதன், 'அது இரண்டாம் பட்சம்; எனக்கு வேண்டியதெல்லாம் ஒன்றுதான். மும்பை நிகழ்ச்சியில் பிரபல இந்தி இசையமைப்பாளர் நவுஷத் அலி கலந்து கொண்டு, என்னை வாழ்த்த வேண்டும். இது தான் என் ஆசை; அதற்கு நீங்கள் ஏற்பாடு செய்தால், அதைவிடப் பெருமை எனக்கு வேறில்லை. சம்பளத்தைப் பற்றி பின் பேசலாம்...' என்றார்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நவுஷத் அலியுடன் தொடர்பு கொண்டனர். 'சனிக்கிழமை நிகழ்ச்சி வைத்திருக்கிறீர்கள். அன்று எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது. இருந்தாலும், நிச்சயம் நிகழ்ச்சிக்கு வந்து, விஸ்வநாதனை வாழ்த்து வேன்; ஆனால், நிகழ்ச்சியை முழுவதுமாக ரசிக்க முடியாத நிலை. பரவாயில்லையா?' என்றார் நவுஷத்.

'வந்தாலே போதும்...' என்று ஒப்புக்கொண்டனர்.

சண்முகானந்தா அரங்கம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியைத் துவங்கினார் எம்.எஸ்.வி., குறித்த நேரத்தில் நவுஷத் அலியும் வந்து விட்டார்.

நிகழ்ச்சியின் இடையில் மேடை ஏறிய நவுஷத் கையில், ஒரு பை இருந்தது. விஸ்வநாதனின் தலை மீது, கை வைத்து ஆசிர்வதித்த நவுஷத், தன் கையிலிருந்த பையைக் கவிழ்த்துக் கொட்டினார். கத்தை கத்தையாகக் கடிதங்கள்!

'இவையெல்லாம் எனக்கு விஸ்வநாதன்ஜி எழுதிய கடிதங்கள். முதல் கடிதத்திலேயே என் இசை பற்றிய நுணுக்கங்களைப் பாராட்டி எழுதியிருந்த தன்மையைப் பார்த்ததும் புரிந்து கொண்டேன்... இவர் பின்னாளில், இசையுலகில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பார் என்று! என் கணிப்பு பொய்யாகவில்லை...' என்று அவர் கூறியதும், அரங்கில் பலத்த கரவொலி.

வாழ்த்திவிட்டு மேடையிறங்கினார் நவுஷத். ஏற்கெனவே சொன்னதுபோல், அவர் தன் வேலையை கவனிக்கப் போய்விடுவார் என்று நினைத்து, அவருக்கு நன்றி கூறி மேடையிலிருந்து வழியனுப்பி வைத்தார் எம்.எஸ்.வி., ஆனால், நவுஷத் வெளியே போகவில்லை. மீண்டும், தன் இருக்கையில் சென்று அமர்ந்தார்.

இசை நிகழ்ச்சி நீண்டு கொண்டே போனது. நவுஷத் தன் இருக்கையிலேயே அமர்ந்திருப்பதைப் பார்த்து, பரவசப்பட்டார் விஸ்வநாதன்.

திடீரென மேடைக்கு ஒரு சீட்டு வந்தது. பி.பி.ஸ்ரீனிவாஸ் அதைப் படித்து, விஸ்வநாதனிடம் ஓடிவந்து, 'நவுஷத்ஜி எழுதியனுப்பியிருக்கிறார்... 'ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே...' என்ற பாடலைக் கேட்க விருப்பப்படுகிறார்...' என்றார்.

ஒரு நிமிடம் அசந்து போனார் எம்.எஸ் .வி., 'என் பாடல்களையெல்லாம், அவர் கேட்டிருக்கிறாரே...' என்று புளங்காகிதப்பட்டு, உடனே சீர்காழி கோவிந்தராஜனை, அந்தப் பாடலை பாடச் சொன்னார்.

நிகழ்ச்சி முடிந்ததும், மீண்டும் மேடைக்கு வந்து விஸ்வநாதனையும், மற்ற கலைஞர்களையும் பாராட்டிவிட்டு சென்றார் நவுஷத்.




- தினமலர் - திண்ணை -
 8-2-15


========================================================================================================================










==================================================================================================================================


இனிய வாசக நண்பர் ஒருவரின் சமீபத்து பின்னூட்டம்...   எங்கள் தளத்தின் ஒரு பழைய இடுகைக்கு!  அந்த வாசகர் யார் என்று சொல்லித்தான் தெரியனுமா என்ன!


அச்சச்சோ எனக்கு காண்ட்ஸும் ஓடல்ல லெக்ஸ் உம் ஆடல்ல... ஒரே பதட்டமா இருக்கு, ஆனா ஸ்ரீராம் கூலா நகைச்சுவையா எழுதியிருக்கிறார்... நண்பனுக்கு எதுவும் ஆகியிருக்கக்கூடாது என வேண்டிக்கொண்டே பகுதி 2இல் நுழைகிறேன்... ஒரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ரென்சனா இருக்கெனக்கூஊஊஊஊஊ:))..

கெள அண்ணனுக்கு 20 டிக் டிக்:) எனக்கு 80 டிக் டிக்:))  


கடவுளே எதுவும் ஆகவில்லை எனும்போது மகிழ்ச்சியே, ஆனா இது உண்மையில் உண்மைச் சம்பவமோ?:) என்னால நம்பவே முடியவில்லை.. அதெப்படி நண்பன் மருந்து குடித்து விட்டார் எனத் தெரிந்தும் பேசாமல் இருந்தீங்க..:).. தொல்லை வேண்டாம் போய்த் துலையட்டும் என நினைச்சீங்களோ?:)...

ஒருவேளை அன்று ஏதாவது நடந்திருப்பின், வாழ்நாள் முழுக்க துன்பமாகவே உங்கள் வாழ்க்கை நகர்ந்திருக்குமே:)).. எல்லாம் கும்பிடும் பலன் தான் காப்பாற்றியது எல்லோரையும்.. ஹா ஹா ஹா.. சுபம்!!!  


///அதுவரையிலும் ஒன்றும் நேராதது வேறு எங்களுக்குக் கவலையைத் தந்திருந்தது! ///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எல்லோரையும் தேம்ஸ்ல தள்ளோணும்:) என்னா நினைப்பு இது..

////நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை அடுத்தவரிடம் பகிர முடியாத தருணங்களின் பாக்கு மென்று தண்ணீர் குடித்தது போல் நெஞ்சடைக்கும் தவிப்பு இருக்கிறது பாருங்கள்.... அனுபவித்தால்தான் தெரியும்! //

ஹா ஹா ஹா கர்ர்:) இது லவ்வூ ஸ்டோரியை விட மோசமா இருக்கும்போல இருக்கே:) கர்:) 
 







=============================================================================================================


நெஞ்சு வலியும், மாரடைப்பும் ஒன்றல்ல!



சென்னையைச் சேர்ந்த இதய நோய் மருத்துவ நிபுணர் தியாகராஜமூர்த்தி:

நம் இதயம் ஒரு தசை. நிமிடத்துக்கு, 70 - 80 முறை துடிக்கும். இந்த தசைப் பகுதிக்கு ரத்தத்தைக் கடத்தும் மூன்று முக்கிய ரத்தக் குழாய்களில் சிதைவு ஏற்பட்டால், ரத்தக் கட்டி உருவானால் அல்லது இன்னும் சில காரணங்களால், இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவது தான் மாரடைப்பு.

தசைப் பிடிப்பு, நெஞ்சு எலும்பிலோ, உணவுக் குழாயிலோ பிரச்னை போன்ற பல காரணங்களால் நெஞ்சு வலி ஏற்படலாம்; அது மாரடைப்பல்ல.

சாதாரண நெஞ்சு வலி, தாங்க முடிகிற அளவில் இருக்கும். மாரடைப்பின்போது நெஞ்சில் மிக அதிக வலி இருக்கும். அந்த வலி இடது கையில் பரவும்; அதிகமாக வியர்க்கும்; மூச்சடைக்கும்; மயக்கமும், உச்சபட்சமாக மரணம் கூட ஏற்படும். பொதுவாக முதல், 'அட்டாக்'கில், 10 - 20 சதவீதம் பேர், மருத்துவமனைக்கு வருவதற்குள்ளாகவே இறந்து விடுகின்றனர்;

அந்தளவுக்கு அது தீவிரமாக இருக்கும்.பெரும்பாலும் நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களையே இலக்காகக் கொண்டிருந்த மாரடைப்பு, இப்போது, 20 வயதினருக்கு கூட ஏற்படுகிறது. மரபு, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மன அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்றவை, மாரடைப்பின் காரணிகள்.

தேங்காய் எண்ணெயில் சமைத்தால், 'ஹார்ட் அட்டாக்' வரும் என்பது தவறான தகவல். தேங்காய் எண்ணெய், குறிப்பாக, 'வெர்ஜின் தேங்காய் எண்ணெய்' நம் உடலுக்கு நல்லதே. இதய நோயாளிகள், காய், பழங்கள் அதிகமாகவும், சாதத்தைக் குறைத்தும், எண்ணெய் உணவுகள், வெண்ணெய், நெய் போன்றவற்றைத் தவிர்த்தும், சாப்பிட வேண்டியது அவசியம்.

விலை குறைவாகக் கிடைக்கும் மத்தி மீனில், இதயத்துக்கு ஆரோக்கியம் தரும், 'ஒமேகா 3' ஆயில் இருப்பதால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடலாம்.

பத்து ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரை நோய் இருப்போருக்கு, 'சைலன்ட் அட்டாக்' வர வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு நரம்புகள் பாதிப்படைந்திருக்கும் என்பதால், மாரடைப்பு வந்தாலும் நெஞ்சுவலி தெரியாது. வாந்தி உணர்வு, மூச்சு விட சிரமம் மற்றும் வியர்வை போன்ற அறிகுறிகளை உணரலாம்.

இதய நோயாளிகள், ஆஸ்பிரின், அடோர்வாஸ்டாடின், க்ளோபிடாப் மாத்திரைகள், கையுடன் வைத்திருக்க வேண்டியவை என்றும், ஹார்ட் அட்டாக் வந்த நேரத்தில், உடனடியாக இவற்றை சாப்பிட்டால், மூன்று மணி நேரத்துக்கு ஆபத்தில்லை என்றும், ஒரு செய்தி பரவலாக இருக்கிறது. இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் தப்பில்லை.

முதல் ஒரு மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை உட்கொண்டால், மேலும் ரத்தக் கட்டி உருவாவதை தடுக்கும். ஆனால், இது மட்டுமே சிகிச்சை அல்ல; இது, முதலுதவி மட்டுமே.


================================================================================================

ஃபிப்ரவரி 27...  சுஜாதா மறைந்த தினம்.







========================================================================================================


இனிய பிந்த நாள் வாழ்த்துகள் அதிரா...  தகவல் அறிய உதவிய உங்கள் அன்பு செக். க்கு நன்றி.  இன்று போல என்றும் வாழ்க...  பல்லாண்டு வாழ்க...





====================================================================

153 கருத்துகள்:

  1. வணக்கம் வணக்கம் இனிய காலை வணக்கம்...ஸ்ரீராம் துரை அண்ணா, கீதாக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. ஹை மீ ஃபர்ஸ்டூஊஊஊஊ!!!!??? இல்லை இல்லை துரை அண்ணாவின் கமென்ட் ஒளிந்து கொண்டிருக்கும்...ஸ்ரீராம் அதை எடுத்து வெளியில போடுங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். அடடே... முதலில்!

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  6. அதிரா அவர்கள் பல்லாண்டு வாழ்க..
    அன்பின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  7. 6.01க்குத் தான் தளம் திறக்கின்றது..

    எபி நல்லபிள்ளையா... இல்லையா!..
    தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  8. ஆனால் ஆறு மணிக்குதான் ஷெட்யூல் செய்யப்படுகிறது... நாளை ஒரு நிமிடம் முன்னதாக வைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  9. M.S.V. மற்றும் நௌஷாத் அவர்களைப் பற்றி செய்தி மெய் சிலிர்க்கச் செய்தது..

    பதிலளிநீக்கு
  10. ஓ!! சுஜாதா மறைந்த தினமா?!!! வரேன் முழுவதும் வாசிக்கா. ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கே எம் எஸ் வி...எல்லாம் பார்த்ததும்...

    துரை அண்ணா இப்பத்தான் உங்கள் வீட்டில் நீங்கள் மாட்டியிருக்கும் படங்களைப் பார்த்தேன்...அருமையா இருக்கு...அங்க கமென்ட் போட்டேன் போயிருக்கானு பார்க்கணும்...

    அங்கு போய் பார்த்தால் அங்கும் செல்லவில்லை...இங்கு வந்து பார்த்தால் இந்தக் கமென்ட் செல்லவில்லை....இப்ப மீண்டும் ..

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம் இப்போது தலைப்பு மாறியிருக்கே...என்ன ஆச்சு எனக்குத்தான் இப்படியா...ஒன்னுமே புரியலையே...

    ஓ பூஸாருக்கு பிறந்த நாளா?!!!! பூஸார் எங்கள் அனைவரது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!! பல்லாண்டு சந்தோஷமாக வாழ்ந்திட வாழ்த்துகள்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீராம் உங்கள் கவிதை முதலில் கண்ணில் பட்டது ஸ்க்ரீன் ஓடும் போது......வாவ்!!!! செமை ஸ்ரீராம்...ஒவ்வொரு நாளும் புதியதாய்த்தானே பிறக்கிறோம்...!!! வரிகள் அசத்தல்..மிகப் பெரிய உண்மை நட் ஷெல்லில்!!! சூப்பர்ப்!! ரொம்பரொம்ப ரொமப் ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம்..எவ்வளவு அழகா சொல்லிருக்கீங்க!!!! வியந்தேன்...ரசித்தேன். செல்லத்தின்..படமும் அருமை..

    மற்றவை பின்னர்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஸ்ரீராம் உங்கள் கவிதை முதலில் கண்ணில் பட்டது ஸ்க்ரீன் ஓடும் போது......வாவ்!!!! செமை ஸ்ரீராம்...ஒவ்வொரு நாளும் புதியதாய்த்தானே பிறக்கிறோம்...!!! வரிகள் அசத்தல்..மிகப் பெரிய உண்மை நட் ஷெல்லில்!!! சூப்பர்ப்!! ரொம்பரொம்ப ரொமப் ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம்..எவ்வளவு அழகா சொல்லிருக்கீங்க!!!! வியந்தேன்...ரசித்தேன். செல்லத்தின்..படமும் அருமை..

    மற்றவை பின்னர்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அதிராவின் படம் முதலில் தெரியவில்லை...உங்கள் வாழ்த்துகளும்...இப்பத்தான் தெரியுது....அது போல என் கமென்ட் போயிடுச்சுன்னு கமென்ட் மாடரேஷன் போல வந்துச்சு....என்னடா இது என்று மீண்டும் கொடுத்தேன்...ஹப்பா வந்துவிட்டது...

    என்னமோ எங்க வீட்டு இணையத்தில் நடக்குது ஒன்னும் புரியலை போங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
  15. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அதிரா!. அருமையான, ஆரோக்கியமான ஆண்டு அமைய ஆசிர்வதிக்கிறேன்💐

    பதிலளிநீக்கு
  16. முதலில் அதிராவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  17. சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. //'ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே...' என்ற பாடலைக் கேட்க விருப்பப்படுகிறார்...' என்றார்.//

    குறைந்த இசைக் கருவிகளை வைத்து இசையமைத்த அற்புதமான பாடல்.
    எனக்கு பிடித்த பாடல்.

    ஸ்ரீராம் உங்கள் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு

  19. /நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை அடுத்தவரிடம் பகிர முடியாத தருணங்களின் பாக்கு மென்று தண்ணீர் குடித்தது போல் நெஞ்சடைக்கும் தவிப்பு இருக்கிறது பாருங்கள்.... அனுபவித்தால்தான் தெரியும்! //

    உண்மைதான் அதிரா.

    மீண்டும் பின்னூட்டங்களை படிக்க வாய்ப்பு தந்த ஸ்ரீராமுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. நெஞ்சு வலியும், மாரடைப்பும் ஒன்றல்ல!//

    தேவையான பகிர்வு நன்றி.

    மணியன் செல்வன் வரைந்த சுஜாதா அவர்கள் படமும் செய்தியும் அருமை.

    பதிலளிநீக்கு

  21. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அதிரா... தகவல் அறிய உதவிய உங்கள் அன்பு செக். க்கு நன்றி. இன்று போல என்றும் வாழ்க... பல்லாண்டு வாழ்க...//


    இன்று போல என்றும் வாழ்க எங்கள் வீட்டு திருமகளே!

    பல்லாண்டு பல்லாண்டு வாழ்க அதிரா.
    நன்றி ஏஞ்சலின்.

    பதிலளிநீக்கு
  22. தான் மனதிலும் உயர்தவனே என்பதை உணர்த்தி விட்டார் திரு. நவ்ஸாத்.
    எம்.எஸ்.வி. நவ்ஸாத்தின் குருநாதராவார் இதை இறுதிவரை சொல்லி வந்த மாபெரும் இசைக்கலைஞன் திரு.எம்.எஸ்.வி.

    அதிராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    நெஞ்சுவலி தகவல் நன்று.

    பதிலளிநீக்கு
  23. ’பின்னூட்டத்தாரகை’ அதிராவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பெல்ட்டைக் கழட்டிவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கச்சொல்லுங்கள்!

    சிலமாதங்களுக்கு முன்பே எழுதியிருந்தேன்: ’ஜெயகாந்தனின் முன்னுரைகள்’ போல, ’அதிராவின் பின்னூட்டங்கள்’ எனத் தனிப்புத்தகம் போடும் புண்ணியத்தை எங்கள் ப்ளாக் ஏற்றுக்கொள்ளலாம்..

    சுஜாதா, எம் எஸ் வி, நௌஷாத் என எக்கச்சக்கமான பதிவு. காலையில் மாமிபோட்டுக்கொடுத்த காப்பி மிகவும் சுவையானதாக இருந்திருக்கவேண்டும்! பின்பு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  24. முதலில் அதிரா அவர்களுக்கு எமது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! இதே மகிழ்ச்சியுடன் இன்னும் மகிழ்ச்சியுடன் எப்போதும் எல்லா நன்மைகளும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்திட வாழ்த்துகள்!

    நௌஷத் மற்றும் எம் எஸ் வி பற்றிய செய்தி அருமை. இருவரின் ஆளுமையை வெளிப்படுத்துகிறது. அந்த ஆளுமை வெளிப்பட்டதன் காரணம் இருவருமே தலையில் கனத்தை வைத்துக் கொள்ளவில்லை!!! மனதைத் தொட்ட நிகழ்ச்சி.

    வழ்க்கம் போல் உங்கள் கவிதை அருமை ஸ்ரீராம். மிகவும் ரசித்தேன். எப்படி இவ்வளவு அழகாகச் சொல்லுகின்றீர்கள்!!

    அதிரா அவர்களின் பின்னூட்டம் எப்பவுமே அதிரடியாக கலகலக்க வைக்கும்!!! வாழ்த்துகள் அதிரா!

    நெஞ்சுவலி, மாரடைப்பு வித்தியாசம் என்பதும் அதைக் குறித்த செய்திகளும் மிகவும் பயனுள்ள தகவல்.

    சுஜாதா அவர்களின் எல்லா படைப்புகளையும் வாசித்ததில்லை. எனவே சொல்லத் தெரியவில்லை. முன்பு தமிழ்நாட்டில் இருந்த போது இதழ்களில் அவரது தொடர் ஒன்று வாசித்த நினைவு..கொலையுதிர்காலம் என்ற நினைவு...

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  25. ஸ்ரீராம் முதல் செய்தி ரொம்ப நெகிழ்ச்சி. அகம்பாவம் சற்றும் இல்லாத மாமனிதர்கள் என்பதைச் சொல்லுகிறது. அதுவும் நௌஷத் அக்கடிதங்களைப் பத்திரப்படுத்தி, தன் விருப்பம் சொல்லிப் பாடலை பாட வைத்தது உட்பட...எத்தனை உச்சிக்குப் போனாலும் நிறைகுடம் தளும்பாது என்பது!!! நாம் எல்லோரும் கற்க வேண்டியய் பாடம். எம் எஸ் வி அவர்களின் இளம் வயது ஃபோட்டொ அசத்தல்..

    உங்கள் கவிதைக்கான செல்லத்தின் தூக்கம் படம் அழகு...கடற்கரையில் புதிதாய் பிறந்தோம் என்று உதயத்தைப் பார்ப்பதும் ரைட்டோ!! ஆனால் இந்தாண்டை இருக்கும் படம்????!!!!!!!! ஹிஹிஹிஹிஹி!!!!

    ஸ்ரீராம் எனக்கும் இந்தக் கேள்வி அடிக்கடி எழுவதுண்டு. . இலக்கியம் என்றால் என்ன? என்ன டெஃபெனிஷன்? ஜெயமோகன் மட்டுமல்ல எஸ்ரா வும் சொல்லியிருக்கார். சா அ வி அவருக்குக் கிடைக்கவில்லை என்பது வேதனைதான்.....அப்படினா ஜனரஞ்சகமா எழுதுவது எழுத்தில் சேர்த்தி இல்லையா என்ன? புரியவில்லை...

    இன்று அதிராவின் பிறந்தநாள் என்பதால் கூடுதல் சிறப்போ?!!! அவரது பின்னுட்ட வெளிப்பாடுகள்!! சூப்பர்.. அவரது பின்னூட்டங்கள் அனைத்தும் கல கல தான் சிந்திக்கவும் வைக்கும்...

    என்னால் தான் இப்போது ஏஞ்சல், அதிரா இவர்களோடு இங்கு கும்மி அடிக்க முடியலை...இன்று கண்டிப்பா அதிரா இங்கு அதிரடி சதிராட்டம் ஆடுவார்!! ஹா ஹா ஹா...வரப் பார்க்கிறேன்...

    பர்த்டே பேபிக்கு ஒரு சர்ப்ரைஸ் உண்டு....ஆனால் அது சரி சரி சீக்ரெட்...இப்போதல்ல...(பூஸார் இன்று இதை அறிய அங்கும் இங்கும் நடப்பார்...ஹிஹிஹி.இருந்தாலும் சொல்லமாட்டோம்ல..இப்ப....)

    இப்ப அவரின் செக் வீட்டுக்குப் போணும். அல்ரெடி விருந்துக்குப் போய் கொஞ்சம் கொண்டாடிவிட்டு வந்தாச்சு...மீண்டும் போய் கலாய்க்கணும்..நெட் இருக்கும் போது..

    கீதா

    பதிலளிநீக்கு
  26. ஸ்ரீராம் இப்பல்லாம் இன்னிக்கு என்ன கிழமை என்பதே காலைல 6 மணிக்கு இங்க வந்து குட்மார்னிங்க் வைக்கும் போது எபி தான் உதவுது!!! ஹா ஹா ஹா ஹா.

    திங்க வா..ஓ அப்ப இன்று திங்கள்....இன்று கேவாபோக வா அப்ப இன்று செவாய்....இன்று லேட்டாகுதா எபி!!!!! பு பு வா அப்ப இன்று புதன்....கதம்பமா அப்ப வியாழன்...பாட்டு - வெள்ளி - பா நியூஸ் சனி....ரிலாக்ஸ்டா படம் போட்டு காட்டினா சண்டே....அப்படினு மனசுல பதிஞ்சு போச்சு!!!!

    ..ஸோ பதிவு பேட்டர்ன் மாத்தினீங்கனா என் மெமரி ரொம்பவே அவஸ்தைப் படுமோ??!!!!!! ஹா ஹா ஹா ஸோ மாத்தினீங்கனா ஒரு வாரம் முன்னாடியே சொல்லிடுங்கப்பா!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  27. அதிரடிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இதே சந்தோஷத்துடனும் சுறுசுறுப்பு கலகலப்புடனும் எப்போதும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழவும் பிரார்த்தனைகள். இன்னிக்குப் பிறந்த நாள் சிறப்புப் பதிவு உண்டா? வந்து பார்க்கிறேன். உங்க பிறந்த நாளைக்கு எனக்கு என்ன பரிசு கொடுக்கப் போறீங்க? அந்தப் பச்சைக்கல் நெக்லஸ் நடுவில் 5 காரட் வைரம் பதித்தது தானே? சரி, சரி!

    பதிலளிநீக்கு
  28. அருமையான பதிவு. ஆனால் ஹிஹிஹி, நௌஷத் பற்றி எம்.எஸ்.வி. சொன்னதாகச் சொல்லி இருப்பதை ஏற்கெனவே படிச்சுட்டேன்! ஹிஹிஹிஹி!
    செல்லக்குட்டிச் சமத்தாத் தூங்குது!

    அதிரடியின் அதிரடிப் பின்னூட்டமும் படிச்சாச்சே!

    தேங்காய் எண்ணெய் பத்திக் கரடியாய்க் கத்தி இருக்கேன் ஏற்கெனவே! (தமிழில் சொல்லி இருக்கணுமோ? கரடி பாஷை யாருக்கும் புரியலை போல!) யாரும் காதில் போட்டுக்கலை!

    சுஜாதா இலக்கியம் படைக்கலைனா ஜெ.மோ. மட்டும் என்னவாம்? வேண்டாம், வேண்டாம் ஏதானும் சொல்லிடுவேன். அப்புறமா இங்கே வரும் ஜெ.மோ. ரசிகர்கள் கோவிச்சுக்கப் போறாங்க!:)

    பதிலளிநீக்கு
  29. ஸ்ரீராம் அண்ட் ஏஞ்சல், இன்று அதிராவின் முதல் வரி .."எனக்கு காண்ட்ஸும் ஓடல்ல லெக்ஸ் உம் ஆடல்ல"
    .... மீ ரொம்ப பிசி!!!! எல்லா இடமும் ஓடி ஓடி அஞ்சுவின்ட பார்ற்றில கலந்துகொண்டு எல்லோருக்கும் பதில் சொல்லி, எங்கட வீட்டுல செலிப்ரேஷன்...எபில ஒரு ப பார்ற்றி.. மீ பிஸி!!!!....ஸ்பாஆஆஆ எனக்கு நல்ல ஒரு ரீ போட்டுக் கொடுங்கோளேன்....இந்த கீசா அக்கா என்னோட பர்த்டே பார்ற்றிக்கு வராம..எங்க காணலை?!! கீ சாக்கா லேட்டூ..விடமாட்டேன் விடமாட்டேன்....கௌ அண்ணா பு பு கிஃப்ட் எனக்கு அனுப்பிடுங்கோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  30. தேங்காய் எண்ணெய் பத்திக் கரடியாய்க் கத்தி இருக்கேன் ஏற்கெனவே! (தமிழில் சொல்லி இருக்கணுமோ? கரடி பாஷை யாருக்கும் புரியலை போல!) யாரும் காதில் போட்டுக்கலை! //

    கீதா க்கா எப்ப இந்தக் கரடி பாஷை நான்...பாக்கலையே...இங்க பதிவா அக்கா? என் கண்ணில் படலையே...ஹைஃபைவ் அக்கா..நானும் தே எ க்கு சப்போர்ட்தான்...

    ..தே எ பத்தி புரளி கிளப்பினது எல்லாம் இந்த ஆலிவ் எண்ணையை ப்ர்மோ பண்ண......வெங்கடேஷ் பட்டும் கூட அவரது ஷோவில் சொன்னார்...

    கீதாக்கா அந்த ப க வை நெ தான் பூஸார் இன்று ஏற்கன்வே அவங்க செக் கிட்டருந்து பத்திரமா வாங்கி இன்னிகக்கு செலிப்ரேஷன்ல போட்டுக்க....வைச்சுருக்காங்க..!! ஹா ஹா ஹா ஹா..

    கீதா

    பதிலளிநீக்கு
  31. காலையிலேயே படித்துவிட்டேன். பிறகு வருகிறேன்.

    ஶ்ரீராம் எழுதியுள்ளது காப்பியடித்த கவிதை. திருக்குறள் சொல்கிறது, "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு"

    பதிலளிநீக்கு
  32. காலையிலேயே படித்துவிட்டேன். பிறகு வருகிறேன்.

    ஶ்ரீராம் எழுதியுள்ளது காப்பியடித்த கவிதை. திருக்குறள் சொல்கிறது, "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு"

    பதிலளிநீக்கு
  33. @ நெ.த.:

    //..ஶ்ரீராம் எழுதியுள்ளது.. திருக்குறள் சொல்கிறது..//

    ஒருவேளை திருராம், ஸ்ரீவள்ளுவரின் அவதாரமோ ..?

    பதிலளிநீக்கு
  34. எம்.எஸ்.வி அவர்கள் நௌஷத் அலி மீது பெரிய மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். அந்தக் காலத்தில் வட இந்திய திரைப்பட உலகம் தென் இந்திய திரையுலகத்தின் மேதைகளின் மீது பெரிய மரியாதை கொண்டிருந்தது. வாலியின் சில செய்திகள், அவர்களைப் பற்றி பெரிய மதிப்புக்கொள்ளச் செய்கிறது. எப்போதும் நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும் என்பது உண்மைதான் போலும். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் செய்தி முதல் முறை படிக்கிறேன்.

    அதிரா அவர்களுக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் இன்றுபோல் அவர் நிறைய நண்பர்களைக் கொண்டு வளமுடன் வாழட்டும்.

    சாகித்ய அகாடமி, பத்ம விருதுகள் போன்றவற்றில் எனக்குப் பெரிய மரியாதை இல்லை. அது தகுதியையும் தாண்டி வேறு எதிர்பார்க்கும் விருதுகள்.

    இதய நோயாளிகள் இத்தனை மாத்திரைகளையும் கையில் வைத்துக்கொண்டிருக்கவேண்டுமா? இப்படித்தான் மாறன் நெஞ்சுவலியால் துடித்தபோது சமயோசிதமாக அவர் மகள் சார்பிட்டால் வாயில் அடக்கிக்கக் கொடுத்து பிழைக்கவைத்தார் என்று படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  35. சுஜாதாவுக்கு 'கடவுள் இருக்கிறாரா', 'பிரம்ம சூத்திரம் ஒரு எளிய அறிமுக' என்பவற்றிர்க்கு விருது கொடுக்கலாம். வாக்களிக்கும் எலெக்டிரானிக் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதற்கே அவருக்கு விருது கொடுத்திருக்கவேண்டும். இல்லையென்றால் எத்தனை குழப்பங்கள், எத்தனை நேரம், எத்தனை பேப்பர்கள் வீணாகியிருக்கும்?

    ஆனால் விருதுகளெல்லாம் திறமைக்கா கொடுக்கப்படுகின்றன? அப்படி ஒத்துக்கொண்டால், எம்.எஸ்.வி., கண்ணதாசன், நாகேஷ், வாலி போன்றவர்கள் திறமை இல்லாதவர்கள் என்பதாகிவிடும்.

    பதிலளிநீக்கு
  36. கீதா...

    சுஜாதா தினம் பிப் 27 . பதிவில் படித்திருப்பீர்கள்.
    கவிதையை ரசித்தமைக்கு நன்றி.

    இலக்கிய டெபனிஷன்.. நாம் எங்கள் பிளாக் வாட்ஸாப் க்ரூப்பில் கூட ஆரம்பித்தோம்... தொடரவில்லை!

    பர்த்டே பேபிக்கு என்ன சர்ப்ரைஸ் என்று அறிய எனக்கும் ஆவல்!

    நாள் காட்டி போல எபி இருப்பது சந்தோஷம். பதிவு பாணி இப்போதைக்கு மாற்றமில்லை என்றே நினைக்கிறேன். மாற்ற வேண்டும் என்றால் வாசகர்கள் சொல்லுங்கள்... யோசிப்போம்!

    பதிலளிநீக்கு
  37. /மெய் சிலிர்க்கவைக்கிறது//

    நன்றி துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் பானுக்கா .. .அதிராவுக்கு ஆசியுடன் நிறுத்தி விட்டீர்கள்! மற்றவை?

    பதிலளிநீக்கு
  39. நன்றி கரந்தை ஜெயக்குமார் ஸார்.

    பதிலளிநீக்கு
  40. வாங்க கோமதி அக்கா... ஓடம் நதியினிலே பாடல் காட்சி அப்படியே ஒரு ஹிந்திப்பாடல் காட்சியின் காபி தெரியுமோ? கவிதையை ரசித்தமைக்கு நன்றி. அதிரா அந்தப் பின்னூட்டங்களை எந்தப் பதிவுக்குக் கொடுத்திருப்பார் என்று யாருமே குழம்பவில்லையோ!!!

    // இன்று போல என்றும் வாழ்க எங்கள் வீட்டு திருமகளே! பல்லாண்டு பல்லாண்டு வாழ்க //

    ஒன்று எம் ஜி ஆர் படம். ஒன்று எம் ஜி ஆர் பாடல்!

    பதிலளிநீக்கு
  41. வாங்க கில்லர்ஜி... வந்தமைக்கு ரசித்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  42. வாங்க ஏகாந்தன் ஸார்.. மாமி என்னிக்கிதான் நல்ல காபி தரவில்லை? ஸ்ரீவள்ளுவர், திருராம்... ஹா...ஹா.....ஹா...

    பதிலளிநீக்கு
  43. வாங்க துளஸிஜி... ஒவ்வொரு விஷயத்துக்கும் பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. வாங்க கீதா அக்கா.. நீங்கள் இவற்றில் சிலவற்றை முக நூலில் வாசித்திருக்கலாம். எனவே மறுபடி போலத்தோன்றுகிறது.

    அதிரடியின் பின்னூட்டம் உங்கள் தபால் பொட்டிக்கே வந்திருக்கும்!!!

    தேங்காய் எண்ணெய் பற்றி கீதா அக்கா எதுவுமே சொல்லவில்லை என்று பதிவில் நான் எழுத்திருக்கிறேனா என்று தேடிப்பார்த்தேன்.. நல்லவேளை இல்லை!!!! (உங்கள் பதில் : grrrrrrr)

    ஜெமோ பற்றி யாருக்குதான் தெரியாது?

    பதிலளிநீக்கு
  45. வாங்க நெல்லை...

    பிரபலங்கள் "உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே மண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே" என்று எழுதினால் சரி என்கிறீர்கள். நான் எழுதினால் சண்டைக்கு வருகிறீர்கள்!!!!

    நிறைகுடம் தளும்பாதுக்கு நிறைய உதாரணங்கள் உண்டு. கூத்தாடும் குறைகுடத்துக்கு உதாரணம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். சமீபத்து உதாரணம் கூடச் சொல்லலாம்!

    அதிலேயே சொல்லி இருப்பது போல இந்த மருந்துகள் கூட தற்காலிகம்தான். ஸார்பிட்ரேட்டும். சிலர் இருமச் சொல்வார்கள். ஆனால் அப்படிக் கிடைக்கும் பொன்னான நேரத்தை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    சுஜாதாவுக்கு விருதுகள் தேவை இல்லை. விருதுகள் வாங்கியவர்கள் படைப்புகளை பெரும்பான்மை வாசகர்கள் படிப்பதில்லை! விருதுகள் எல்லாம் திறமைக்கா கொடுக்கப்படுகின்றன? இல்லை. நாகேஷ் பற்றி என் சேமிப்பில் ஒரு விஷயம் இருக்கிறது. பின்னர் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  46. ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் மீ லாண்டட்ட்ட்ட் ஆஆஆ பிங்கி மயம் கீழே சுவீட் 16 அதிராவோ அதூஊஊஊ?:) ஹையோ 2ம் தடவையா நேக்கு ஷை ஷையா வருதேஏஏஏஏ:)... லேசாஆஆ நெஞ்சு வலிக்கிறமாதிரி இருக்கே:) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் ஸ்ரீராம்ம் எதிர்பாரா இன்ப அதிர்ச்சி.....

    ஆஆஆ கீதா என்வலப்பை எல்லாம் கவனமா எண்ணி... கவனிக்கவும் எண்ணி என் செக்:) இடம் குடுங்கோ பிளீஸ்:)...
    ஆஆஆஆ கீசாக்கா கிவ்ட் பார்சலை எல்லாம் ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடியில் வச்சுவிடுங்கோ... பிளீஸ்:) நான் ஹெலியை லாண்ட் பண்ணி எடுத்து வாறேன்ன்ன்:)...

    எல்லோருக்கும் நன்றி கொஞ்சத்தால வருகிறேன்... இண்டைக்கு எனக்கு செக் வீட்டில லஞ்... பிரியசகி அம்முலு வீட்டில டின்னர் ஹையோ இப்போ ஓடவும் முடியல்லியே:)..

    பதிலளிநீக்கு
  47. அன்புறவுகளுக்கு இனிய வணக்கம்!

    அன்புத் தோழி அதிராவுக்கு என் உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!
    நன்நலமும் வளமும் பெருக மகிழ்வு நிறைய நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!

    நல்ல பல தகவல்களுடன் இன்றைய பதிவு சிறப்பாக இருக்கிறது சகோ ஶ்ரீராம்.
    முக்கியமாக நெஞ்சுவலி, மாரடைப்பு வேறுபாடுகள் அறிந்திருக்க வேண்டிய நல்ல விடயம்.
    நல்ல பதிவு + பகிர்வு! நன்றி!

    அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  48. வணக்கம் சகோதரரே

    எம். எஸ். வி அவர்களுக்கு கிடைத்த பெருமைக்குரிய மனமகிழ்ச்சியோடு கிடைத்த கெவரவ நிகழ்ச்சி அறிந்திராத தகவல். நெளஷத் அலியின் பெருந்தன்மையையும் எம். எஸ. வி அவர்களின் திறமையையும் சொன்னதற்கு நன்றி.

    இரவின் நீண்ட தூக்கத்திற்கு பின் எழும் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கிறோம். அதை நயமாக நாலு வரிகளில் உணர்த்திய தங்கள் கவிதை அருமை. வார்த்தைகளின் அழகு மனதில் நிறைந்தது.

    சுஜாதாவின் கதைகளை விருப்பத்துடன் படித்திருக்கிறேன்.கதைகளை புது பாணியில் எழுதியும், அறிவியலிலும் நிறைய ரசிகர்களை பெற்றிருக்கும் சிறந்த எழுத்தாளர். அவர் அறிமுகமானதிலிருந்து இன்று வரை அவரை அறியாதவர் யாருமில்லை. அதுவே அனைத்து விருதுகளுக்கும் சமம்.

    நெஞ்சுவலி, மாரடைப்பு தகவல்கள் உபயோகமானவை.

    பதிவர் அதிராவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.அவரது பின்னூட்டங்கள் சுவாரஸ்யமானவை. ரசித்து படிப்பேன்.

    கதம்பம் மிகவும் நன்றாய் உள்ளது.பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  49. பிரமிக்க வைக்கிறார் நௌஷத்த் அவர்கள் .அருமையான செய்தி .இதெல்லாம் எனக்கு தெரியாது .பகிர்வுக்கு நன்றிகள் .
    தூக்கம் ..இன்ஆக்டிவ் ஸ்டேட் of மைண்ட் அண்ட் நெர்வஸ் சிஸ்டம்னு என் ப்ரொபஸர் சொல்வார் .ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கிறோம் இல்லையா

    பதிலளிநீக்கு
  50. கீதா அக்கா :) நானும் 3 வருஷமா தேங்காய் எண்ணெய் யூஸ் செய்கிறேன்

    பதிலளிநீக்கு
  51. லெக்ஸ்ஹா /காண்ட்ஸ் ஓடாத ஆடாத ஒரே ஆள் மியாவ் தானே :) அதில்லாம இன்னிக்கு பிளாக் தடார் தாடார்னு ஆடுது :)

    பதிலளிநீக்கு
  52. தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது இதை தெரியாமலேயே எங்கம்மா சுவைக்காக அதில்தான் சமைப்பாங்க .அப்பா அம்மாவுக்கு கொலஸ்ட்ரால் நீரிழிவு ஹார்ட் பிரச்சினைகள் இல்லை .
    நான் மூன்று வருஷமா தேங்காய் எண்ணெய்த்தான் சமையலுக்கு அப்பளம் டீப் பொரியல் குறைவு அதுக்கு மட்டும் மற்ற எண்ணெய்

    பதிலளிநீக்கு
  53. காலத்தால் அழிக்க முடியாதவை சுஜாதா அவர்களின் எழுத்து நகரம் ,என் இனிய இயந்திரா ஸ்ரீரங்கத்து தேவதைகள் இன்னும் எத்தனையோ இருக்கே

    பதிலளிநீக்கு
  54. பெர்த்டே பேபியை இங்கும் வாழ்த்திக்கறேன் .ஆப்பி பெர்த்டே மியாவ் :)

    பதிலளிநீக்கு
  55. எம்.எஸ்.வி., நௌஷாத் பற்றிய தகவல் வெளியிட்டதோடு, நௌஷாதின் பாடல் ஒன்றையும் இணைத்திருக்கலாம்.

    குட்டியின் தூக்கமும், குட்டி கவிதையும் அழகு! (நெ.த. ஸ்ரீராமின் கவிதை பற்றிய உங்கள் கமெண்ட் rude!)

    சுஜாதாவின் நினைவு நாள் இப்போதா வருகிறது? எனக்கு டிசம்பரில் என்று நினைவு.

    மாரடைப்பு பற்றி தொலைக்காட்சியில் நிறைய வருகிறது, என்றாலும் உருப்படியான தகவல் என்பதால் வெல்கம்! வெல்கம்!

    //இலக்கியத்துக்கு வரையறை என்ன?//

    கௌதம் வாசுதேவ் மேனனிடம் இரவல் வாங்கி சொன்னால்,"அது நம்மை தாக்க வேண்டும். புரட்டிப் போட வேண்டும்." சுஜாதாவின் எந்த எழுத்து அப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது?

    ஏராள மார்பு என்று எழுதினால் இலக்கியவாதி ஆகி விட முடியுமா?

    "டாக்கு டாக்கு என்று நடந்தாள். டாக்கு டாக்கு என்றல் சரியான டாக்கு டாக்கு"
    "வதனத்தின் இன்றைய ஸ்பெஷல் கண்கள், மையின்றி, பொய்யின்றி இரண்டு கரிய சலனங்கள்" என்று ரசிக்கும் படி வர்ணிப்பவர். இலக்கிய தரம் என்னும் அந்தஸ்து பெற இவையே போதுமா?

    சிறு கதைகளில் எல்டோரோடா' சாவியில் எழுதிய பஞ்ச பூத கதைகளில் 'நெருப்பு', 'ரத்தம் ஒரே நிறம்' நாவல் போன்றவை நல்ல படைப்புகள்தான், என்றாலும் பொழுது போக்கு இலக்கியம்தான்.

    சுஜாதாவின் படைப்புகளில் ஒன்றை சாகித்ய அகாடமிக்கு பரிந்துரைக்க வேண்டுமா? ஜோக்கா? வேறு வழியே இல்லை என்றால் 'ரத்தம் ஒரே நிறம்'.


    பதிலளிநீக்கு
  56. நெ த வின் வரிகளை அதாவது விருதுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதை வழி மொழிகிறேன். சுஜாதாவுக்குக் கிடைகக்வில்லை என்பது வருத்தத்திற்குரியதுதான் என்றாலும்.....அவர் சொல்லியிருப்பது இப்போது நினைவுக்கு வருகிறது. கடவுள் இருக்கிறாரா, பிரம்ம சூத்திரம் ஒரு எளிய அறிமுகம்...(இது இணையத்தில் இருந்தது. வாசித்தேன் மீண்டும் வாசிக்கனும் என்று நினைத்தது...அவர் தன் சகோதரன்-அண்ணாவுடன் சேர்ந்து எழுதியது என்று நினைக்கிறேன்..கொஞ்ச நாளாகவே எதிலும் மனம் ஒத்துழைக்க அடம் அதனால் எதுவும் டக்கென்று நினைவுக்கு வருவதில்லை..) நெ த சொல்லுவது போல் அவரை ஜனரஞ்சகர் என்று கன்ஸிடர் பண்ணவில்லை என்றலௌம் இதற்காகவாவது கொடுத்திருக்கலாம்....விருதுகளுக்கு மிக அவசியம் லாபியிங்க்!! ..எனவே நெல்லையின் இந்த வரிகளை....//ஆனால் விருதுகளெல்லாம் திறமைக்கா கொடுக்கப்படுகின்றன? அப்படி ஒத்துக்கொண்டால், எம்.எஸ்.வி., கண்ணதாசன், நாகேஷ், வாலி போன்றவர்கள் திறமை இல்லாதவர்கள் என்பதாகிவிடும்.// வழி மொழிகிறேன்....இன்னும் நிறைய பேரை சொல்லலாம் இல்லையா நெல்லை..

    கீதா

    பதிலளிநீக்கு
  57. ஸ்ரீராம், நேற்றுதான் உங்களிடம் சுஜாதாவின் 'ப்ரியா' நாவல் இருந்தால் எடுத்து வையுங்கள் என்று கேட்கலாம் என்று நினைத்தேன். அந்த கதை குமுதத்தில் தொடராக வந்தது. லண்டனை நிலை களனாக கொண்டு எழுதப் பட்ட நாவல். இன்று அவர் இலக்கியவாதி இல்லை என்று எழுதும்படி செய்து விட்டீர்கள்.

    சரி உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் நல்ல பொழுதுபோக்கு இலக்கியகர்த்தா என்று வைத்துக் கொள்ளலாம். ஹா ஹா ஹா.

    ப்ரியா கிடைக்குமா? படித்து விட்டு பத்திரமாக திருப்பி தந்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  58. ஆவ்வ்வ்வ் மீ இங்கின கால் வைப்பேனா அங்கின கால் வைப்பேனா:) குட்டிக் காலால:) எப்பூடித்தான் ஓடுறதாம்:).. அதிலும் இன்று பார்த்து நிறையப் பேர் புயுப் போஸ்ட் போட்டிருக்கினம் அவ்வ்வ்வ்வ்:))..

    இருப்பினும் கடமை முக்கியம் நேக்கு:).. ஸ்ரீராமின் கவிதை படிக்காட்டில்.. செ..சே.. அதிராவின் பேர்த்டேயால ஆருமே என் கவிதை படிக்காமல் விட்டிட்டினமே என எண்ணி.. என் போட்டோவைத் தூக்கிடப் போறாரே:)) ஹா ஹா ஹா:)).. பொறகு:) பரிசு கிடைக்காதே:) அந்த அப்பாவீஈஈஈஈஈஈ முகத்தைப் பார்த்துத்தானே கிஃப்ட் எல்லாம் வரப்போகுதூஊஊஊஊஊ:))...

    ஸ்ரீராமின் தூக்கமும் எழுதலும் அதிலும் ஸ்ரீராம் தன் படங்களோடு போட்டு அசத்தியிருக்கிறார்:)) என்னா தெகிறியம்:).. அருமையா இருக்கு.. இருப்பினும் நெல்லைத்தமிழன் என்னமோ சொல்லிட்டாரே அதுக்கு:)..

    //எம் எஸ் வி யும் நௌஷாதும்///

    அது ஒரு அழகிய நிமிடமாகத்தான் இருந்திருக்கும்.. கடிதங்களைத் தலையில் கொட்டி வாழ்த்தியது வியப்பாக இருந்திருக்கும்.. சிலருக்கெனில் கோபம்கூட வந்திருக்கும்... என் கடிதங்களை என் தலையிலேயே கொட்டுகிறாயோ என:)..

    ஓடும் நதியினிலே.. ஒருத்தி மட்டும் கரையினிலே... எப்போ கேட்டாலும் நெஞ்சை என்னமோ பண்ணும் பாட்டு...

    பதிலளிநீக்கு
  59. வாங்க அதிரா.... பிறந்தநாள் நல்வாழ்த்துகள். எப்படிக் கொண்டாடினீர்கள்?

    அதிரா..

    // என் போட்டோவைத் தூக்கிடப் போறாரே:))//

    பேசாமல் அந்தப் புகைப்படத்துக்கு ஒரு கவிதை கேட்டிருக்கலாமோ!!!

    பதிலளிநீக்கு
  60. வாங்க சகோதரி இளமதி.. நலமா? பதிவு சிறப்பு என்று சொல்லி இருப்பதற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  61. வாங்க சகோதரி கமலா ஹரிஹரன்.. கவிதையை ரசித்து, கதம்பம் நன்றாய் உள்ளது என்று ரசித்திருப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  62. வாங்க ஏஞ்சல்...

    உங்கள் பதிவின் மூலமே அதிராவின் பிறந்தநாள் இன்று என்று காலை ஐந்து ஐம்பதுக்கு அறிந்து ஆறு மணிக்குள் திருத்த வேண்டி உடனே இங்கு ஓடிவந்து விட்டேன்! ஸ்ரீரங்கத்து தேவதைகள் - நல்ல சாய்ஸ்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  63. வாங்க பானு அக்கா...

    நௌஷாதின் பாடல்கள் அதிகம் நானே கேட்டதில்லை. இங்கு இணைத்தால் யார் கேட்பார்களோ! நாளை வேறு ஒரு வீடியோ பதிவு வரும்... எனவே இணைக்கவில்லை.

    சுஜாதா 3 மே, 1935 இல் பிறந்து, பிப்ரவரி 27, 2008 இல் மறைந்தார். கெளதம் வாசுதேவ் மேனன் வார்த்தைகளை நினைவு வைத்திருப்பதும், சுஜாதாவின் வரிகளை நினைவு வைத்திருப்பதும் சிறப்பு. இலக்கியம் இல்லை என்பதற்கு வார்த்தைச் சான்றுகள் அளித்த நீங்கள் இலக்கியத்துக்கும் சான்றுகள் கொடுத்திருக்கலாம். சாகித்ய அகாடமிக்கு சுஜாதாவின் கதைகளைப் பரிந்துரைப்பதில் எனக்கு இஷ்டமில்லை. அவர்களின் வரையறை என்ன என்றே எனக்குத் தெரியாது. அல்லது விலை? அதற்கு பதில் சுஜாதாவின் எந்தெந்த படைப்புகள் மனதில் நிற்கின்றன என்று சொல்லலாம். ஸ்ரீரங்கத்து தேவதைகள், ரத்தம் ஒரே நிறம், என்றெல்லாம் கொஞ்சம் சொல்லலாம். எனினும் அவரின் கதைகளை விட கற்றதும் பெற்றதும், கணையாழியின் கடைசிப் பக்கங்கள் போன்ற அனுபவப் பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
  64. ப்ரியா நாவல் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். எடுத்து வைக்கிறேன்.

    // நல்ல பொழுதுபோக்கு இலக்கியகர்த்தா என்று வைத்துக் கொள்ளலாம். ஹா ஹா ஹா.//

    இலக்கியகர்த்தாக்கள் தாடி வளர்த்துக்கொண்டு சீரியஸ் லுக்குடன் தீவிரமாக இருக்கவேண்டும் என்கிறீர்களா? என்ன வரையறை இது!!

    :))))

    பதிலளிநீக்கு
  65. அதிரா, ஏஞ்சல் வாங்கோ வாங்கோ..

    //வாங்க ஏகாந்தன் ஸார்.. மாமி என்னிக்கிதான் நல்ல காபி தரவில்லை?// இது ஸ்ரீராமின் பதில் ஏகாந்தன் அண்ணாவுக்கு!!! ஆஹா ஆஹா!!!! இதை அவர் பாஸுக்குச் சொல்லணுமே!!!

    அதிரா கண்டிப்பா வலைபைகளை எல்லாம் கலெக்ட் செஞ்சு உங்க செக் கிட்ட கொடுத்தடறேன்...அந்த பச்சைக்கல் வைர நெக்லஸ் எங்கிருக்கு அதிரா இப்ப...ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  66. கமெண்ட் மாடரேஷன் போல கமெண்ட் ரேஷனிங் உண்டா? இருந்தால் முதலில் போடுங்கள். இந்த தி.கீதாவின் லொள்ளு தாங்க முடியவில்லை. இணையம் வருவதே இல்லை என்று புலம்பிக் கொண்டே பன்னிரண்டு பின்னூட்டங்கள்.. !!

    பதிலளிநீக்கு
  67. // இந்த தி.கீதாவின் லொள்ளு தாங்க முடியவில்லை. இணையம் வருவதே இல்லை என்று புலம்பிக் கொண்டே பன்னிரண்டு பின்னூட்டங்கள்.. !! //

    அவர் கஷ்டம் அவருக்குதான் தெரியும்! இணையம் சரியாய் இருந்தால் இதுவரை 24 பின்னூட்டங்கள் வந்திருக்கும்! இல்லையா கீதா?

    பதிலளிநீக்கு
  68. ///இனிய வாசக நண்பர் ஒருவரின் சமீபத்து பின்னூட்டம்... எங்கள் தளத்தின் ஒரு பழைய இடுகைக்கு! அந்த வாசகர் யார் என்று சொல்லித்தான் தெரியனுமா என்ன!///

    ஹா ஹா ஹா என் எத்தனையோ கொமெண்ட்ஸ் இல்.. இக்கொமெண்ட்ஸ் பிடித்த மாயமென்னவோ:)).. சிலசமயம் எனக்கே ஆச்சரியமா இருக்கும் இதை நானா எழுதினேன் என:)) ஏனெனில் எழுதும்போது இருக்கும் அந்த உணர்ச்சி, பொயிங்கல்:) பின்பு படிக்கும்போது குறைஞ்சிடுமோ என்னமோ:))

    //நெஞ்சு வலியும், மாரடைப்பும் ஒன்றல்ல!///

    மிக உபயோகமான தகவல்... ஆனா எது வந்தாலும் உடனே டொக்டரிடம் போய் விடுவது மேல்:) பிறகு இது சாதாரண நெஞ்சுவலிதான்:) ஸ்ரீராம் சொல்லியிருக்கிறார் .. அதனால இப்போ டொக்டர் வாணாம் என அடம்பிடிச்சாலும் பிடிப்பினம்
    சிலர் கர்ர்ர்ர்ர்:))..

    ஹா ஹா ஹா.

    ஊரில் இருந்த காலம் தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் ஒலிவ், வெளிநாடு வந்து தேங்காய் எண்ணெய் தொடுவதே இல்லை.. இங்கு உறைந்து விடுகிறதே நெய் போல...

    ///ஃபிப்ரவரி 27... சுஜாதா மறைந்த தினம்.///
    இப்போதான் புரிகிறது ஸ்ரீராம் அடிக்கடி சொல்வதன் அர்த்தம்.. அடடா ஆச்சர்யக்குறி!! என்பாரே:) அது இங்கிருந்துதான் வந்திருக்கிறது போலும்:))

    இலக்கியத்துக்கு வரையறை என்ன?:)////
    பதில் வேணுமெனில் முதலில் என் எக்கவுண்டுக்கு செக்:) அனுப்பி வைக்கவும் இது வேற செக்:))

    பதிலளிநீக்கு
  69. அதிரா...

    // சிலசமயம் எனக்கே ஆச்சரியமா இருக்கும் இதை நானா எழுதினேன் என:)//

    உங்கள் கமெண்ட் மட்டுமல்ல, மற்ற நண்பர்களின் வேறு சில கமென்ட்களும் எடுத்து வைத்துள்ளேன். ஏகாந்தன் ஸார் (முன்னரேயும் சொல்லியிருக்கிறார்) சொல்வதற்கு முன்னரே இது சம்பந்தமாய் கொஞ்சம் சேர்த்து வைத்திருக்கிறேன்.

    // உடனே டொக்டரிடம் போய் விடுவது மேல்:)//

    ஏன், ஃபீமேல் போகமாட்டாங்களா என்ன!!!!

    // அடடா ஆச்சர்யக்குறி!! என்பாரே:) //

    இல்லை அதிரா.. அது சுஜாதா இல்லை. பார்த்திபன் ஒரு படத்தில் சொல்லும் வசனம்.(உன்னருகில் நான் இருந்தால் என்று நினைவு!)
    // பதில் வேணுமெனில் முதலில் என் எக்கவுண்டுக்கு செக்:) //

    எனக்கு பதில் வேணாம்!!!!

    பதிலளிநீக்கு
  70. இண்டைக்கு எனக்கு செக் வீட்டில லஞ்... பிரியசகி அம்முலு வீட்டில டின்னர் ஹையோ இப்போ ஓடவும் முடியல்லியே:)..ஆவ்வ்வ்வ் மீ இங்கின கால் வைப்பேனா அங்கின கால் வைப்பேனா:) குட்டிக் காலால:) எப்பூடித்தான் ஓடுறதாம்:).. //

    ஹலோ பூசார் நீங்க ரன்னிங்க்ல வின்னராக்கும் மறந்துராதீங்க!! நீங்கதான் சொல்லிருக்கீங்க!!! ஹா ஹா ஹா

    பூசார் நல்லா ஓடுவார் தெரியுமா...குட்டிக் கால் இருந்தாலும் அதுவும் சத்தமே கேட்காமல் ஓடுவார்...வெரி ஃபாஸ்ட்...அப்படிப்பட்ட பூசார் இப்படிச் சொல்லலாமோ??!!! நோ நோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  71. //நல்ல இலக்கியம் என்பதற்கும் சான்று கொடுத்திருக்கலாம்//

    பின்னூட்டம் மிகவும் நீண்டு விடப்போகிறதே என்று கொடுக்கவில்லை.

    அசோகமித்திரனின் 18வது அட்ச கோடு,புலிக் கலைஞன்(சுஜாதாவே வியந்த கதை இது) தி.ஜானகிராமனின் மோக முள், லா.ச.ரா.வின் பாற்கடல் என்னும் கதை( இதை இரண்டு வருடங்களுக்கு முன்பு குமுதம் ஸ்நேகிதியில் வெளியிட்டார்கள்), தரிசனம். புதுமைப் பித்தனின் பல படைப்புகள், வாஸந்தியின் அம்மணி. பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள், அப்பம், வடை, தயிர் சாதம், ஆர்.சூடாமணியின் பல கதைகள், ஜெயகாந்தனின் பல படைப்புகள் என்று நீண்டு கொண்டே செல்லும். இவர்கள் யாரும் தாடி வைத்துக் கொண்டு சீரியசான தோற்றத்தோடு இருக்கவில்லை.

    நம் ஊரில் மிக சமீபமாக கூட ஒரு பெண்ணை ஒரு பொறுக்கி கெடுத்து விட்டான் என்றால் அவனுக்கே அவளைத் திருமணம் செய்து விடுவது என்று படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் 60களிலேயே ஜெயகாந்தன் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் ஒரு முழுக்கு போட்டு விட்டு மேற் கொண்டு நடக்க வேண்டியதை பார் என்று அக்னி பிரவேசம் சிறுகதையில் எழுதியிருக்கிறார் என்று தெரிந்து அதைப் படித்த பிறகு,"அடடா! தன்னை சுற்றியுள்ள சமூகத்தின் மீது எத்தனை கருணை இருந்தால் இப்படி எழுத தோன்றியிருக்கும்?" என்று நினைத்தேன். இப்படி எல்லாம் சுஜாதா யோசிக்க வைத்திருக்கிறாரா?

    சுஜாதா திறமைசாலிதான், ஆனால் ஒரு நல்ல இலக்கியவாதி ஆவதற்கு திறமை மட்டும் போதுமா?

    ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பில் 'ஏறக்குறைய ஜீனியஸ்' படித்து, ரசித்து அப்படி சிரித்திருக்கிறேன். We can enjoy Sujatha's writings, but can't relish them as literary piece.

    பதிலளிநீக்கு
  72. நெஞ்சுவலி, மாரடைப்பு வித்தியாசம் , எம்.எஸ்.வி யின் நிறைவேறிய விருப்பம், சுஜாதா தகவல் என அருமையான பதிவு. கவிதை மிக அருமை.
    அன்பு நண்பி அதிராவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  73. @ அதிரா: //.. எழுதும்போது இருக்கும் அந்த உணர்ச்சி, பொயிங்கல்..//

    பொயிங்கி பொயிங்கி நெஞ்சம் உருகியே.. உங்களைத் தவிர வேறு யாருக்கு இப்படி வரும்.. அடடா!

    பதிலளிநீக்கு
  74. கலைஞர்கள்-உண்மையான கலைஞர்கள்- தெற்கு வடக்கு பார்ப்பதில்லை. இனம் இனத்தோடு சேர்ந்து மகிழ்கிறது, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம்.

    இப்போது கண்டவனெல்லாம் தன்னை கலைஞன்..ர், ஆர்ட்டிஸ்ட், பேரரசு என்கிறான். விருதுநோக்கி அரசியல் கனெக்‌ஷன்ஸை ஏற்படுத்திக்கொண்டு காயை நகர்த்துகிறான். இந்த உலகிலும் சிறந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் இருக்கிறார்கள்தான். இருந்தும், இல்லாமலும் எனத் தோன்றும். அவர்கள் தங்கள் வாழ்நாளில் அங்கீகரிக்கப்படாது, அலட்சியப்படுத்தப்படலாம். எல்லா நாடுகளிலும் இது நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அவர்களது படைப்புகள் காலங்கடந்து நிற்கும்; அவர்கள் யாரெனச்சொல்லும்.

    பதிலளிநீக்கு
  75. ஸ்ரீராமின் ‘மரண ஒத்திகையாய்’ கவிதை: இப்படியான எண்ணம் எனக்கும் தோன்றிருக்கிறது -தினமும் செத்து செத்துத்தான் எழுந்துவருகிறோமோ.. அப்புறம் ஏன் அதைப்பற்றி இப்படி ஒரு பில்டப், அச்சம் என நினைத்திருக்கிறேன். இங்கே முதலில் நினைத்தது நானா, ஸ்ரீராமா என்பது பெருங்கேள்வி!

    நெஞ்சுவலி .. உபயோகமான கட்டுரை. பெரும்பாலான விஷயங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும் அதுவரும்போது -God forbid that- (பகுத்தறிவுப்பம்மல்களுக்கும் கடவுள்தான் தடுப்பாரில்லையா?), தடுமாறுவோம் நாம். பயம் மேலிட, இது அதுதானோ எனவே தோன்றும்.

    பதிலளிநீக்கு
  76. ஆஆங்ங்ங் இன்று கீதாவோ 1ஸ்ட்டூஊ:)) அதிராவின் படம் பார்த்து கீசாக்காவுக்கு நெஞ்சு வலிச்சு ஓட முடியல்லப்போலும்:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

    வாழ்த்துக்கு மிக்க நன்றிகள் துரை அண்ணன்... அதுதானாக்கும் ஜாமத்தில எனக்கு மேலே பறப்பதைப்போல கனவு வந்துதே:)..

    மிக்க நன்றி கீதா..

    மிக்க நன்றி பானுமதி அக்கா...

    பதிலளிநீக்கு
  77. மிக்க நன்றி கோமதி அக்கா.///ஸ்ரீராம் உங்கள் கவிதை அருமை./// ஹா ஹா ஹா அவர் இப்போ குளிர்ந்து போயிருப்பார்:)

    மிக்க நன்றி கரந்தை அண்ணன்..

    பதிலளிநீக்கு
  78. கோமதி அரசு said...

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அதிரா... தகவல் அறிய உதவிய உங்கள் அன்பு செக். க்கு நன்றி. இன்று போல என்றும் வாழ்க... பல்லாண்டு வாழ்க...//


    இன்று போல என்றும் வாழ்க எங்கள் வீட்டு திருமகளே!

    ///
    உண்மையில் இந்த வசனம் கண்டு கண்கள் கலங்கி விட்டது கோமதி அக்கா...
    வலையுலகில் எல்லோரும், எழுத்தில் காட்டும் அன்பே நம்மை உருக வைக்கிறதே.. அன்புக்கு மீ அடிமை:)..

    மிக்க நன்றி கில்லர்ஜி... எல்லோரும் வாழ்த்தையும் சொல்லி கீழே நெஞ்சுவலியையும் சொல்லிப் போகினமே:) அதைப்பார்த்து நேக்கு நெஞ்சு வலிக்குதே:)) ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  79. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    ’பின்னூட்டத்தாரகை’ அதிராவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.!///

    மிக்க மிக்க நன்றிகள் ஏகாந்தன் அண்ணன்.. எனக்குத்தான் எத்தனை பட்டங்கள்...:) சாவதற்குள் எனக்கு அனைத்தும் கிடைத்து விட்ட திருப்தி:) இப்போ தேம்ஸ்ல குதிக்கவும் மீ ரெடீஈஈஈ:) ஆனா இண்டைக்கு நான் ஆஞ்சநேயர் விரதம் ச்ச்சோஒ குதிக்க மட்டேஎன் வெரி சோரி:)..

    // பெல்ட்டைக் கழட்டிவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கச்சொல்லுங்கள்///

    ஹா ஹா ஹா நீங்க சிம்பிளாச் சொல்லிட்டீங்க:) பிறகு பொலிஸ் பிடிச்சு உள்ளே வச்சால் ஏகாந்தன் அண்ணன் வந்து என்னை ரயில்ல.. ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே:).. பெயில்ல எடுக்கோணும்:))

    பதிலளிநீக்கு
  80. மிக்க மிக்க நன்றிகள் துளசி அண்ணன்..

    @கீதா
    ///என்னால் தான் இப்போது ஏஞ்சல், அதிரா இவர்களோடு இங்கு கும்மி அடிக்க முடியலை...இன்று கண்டிப்பா அதிரா இங்கு அதிரடி சதிராட்டம் ஆடுவார்!! ஹா ஹா ஹா...வரப் பார்க்கிறேன்...///

    ஹா ஹா ஹா என்னாலும் இன்று முடியாமல் இருக்கே கீதா ஹா ஹா ஹா:))

    ///பர்த்டே பேபிக்கு ஒரு சர்ப்ரைஸ் உண்டு....ஆனால் அது சரி சரி சீக்ரெட்...இப்போதல்ல...(பூஸார் இன்று இதை அறிய அங்கும் இங்கும் நடப்பார்...ஹிஹிஹி.இருந்தாலும் சொல்லமாட்டோம்ல..இப்ப....)///

    அவ்வ்வ்வ்வ்வ் பண்ணுறதுதான் பண்ணப்போறீங்க:) சேப்ரைஸ் ல வைரம் வைடூரியம் பதிச்சதா இருந்தா மீ என் நேர்த்தியை இந்த வருட பேர்த்டேயிலயாவது நிறைவேத்திப் போடுவனெல்லோ.. வள்ளி ரொம்பக் கோபத்தில இருப்பதாக் கிளவி ஹையோ கேள்விப்பட்டனே:)..:)) ஹா ஹா ஹா:).. விரைவில் எதிர்பார்க்கிறேன் சேர்பிறைஸ் ஐ:)).. மிக்க நன்றிகள் கீதா.. உங்கள் எல்லோரினதும் குதூகலம் பார்த்து எனக்கு இன்னும் ரெண்டு வயசு மைனஸ் ஆகுதே:) அப்போ இப்போ என்ன வயசூஊஊஊஊ?:))

    பதிலளிநீக்கு
  81. மிக்க நன்றி கீசாக்கா..

    //இன்னிக்குப் பிறந்த நாள் சிறப்புப் பதிவு உண்டா? வந்து பார்க்கிறேன்.///
    அது என்பக்கம் இல்லை:) எனக்கு ஓடி ஓடிப் பரிசுகளைக் கலெக்ட் பண்ணவே நேரமில்லை:) கொஞ்சம் கண்ணயர்ந்தாலே காணாமல் போயிடுமோ பரிசுகள் எனப் பக்குப் பக்கெண்டு நெஞ்சு வலிக்குதே:))

    ///
    உங்க பிறந்த நாளைக்கு எனக்கு என்ன பரிசு கொடுக்கப் போறீங்க? அந்தப் பச்சைக்கல் நெக்லஸ் நடுவில் 5 காரட் வைரம் பதித்தது தானே? //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்பூடித்தான் சின்னவர் எங்களைக் கேட்பார்.. தனக்கு என்ன தருவீங்க என:)).. உங்கட 9 கல்லு மூக்குத்தியில்தான் எனக்கு ரெண்டு கண்:).. அதுக்கு ஏதோ பெயர் சொன்னீங்க மறந்திட்டேன்.

    பதிலளிநீக்கு
  82. ///இந்த கீசா அக்கா என்னோட பர்த்டே பார்ற்றிக்கு வராம..எங்க காணலை?!! கீ சாக்கா லேட்டூ..விடமாட்டேன் விடமாட்டேன்....கௌ அண்ணா பு பு கிஃப்ட் எனக்கு அனுப்பிடுங்கோ...

    கீதா///

    கீதாவுக்கும் இந்தக் காலத்துள்தான் பிறந்தநாளோ?:) எ எ பு:) ஹா ஹா ஹா:)).


    ///ஏகாந்தன் Aekaanthan ! said...
    @ நெ.த.:

    //..ஶ்ரீராம் எழுதியுள்ளது.. திருக்குறள் சொல்கிறது..//

    ஒருவேளை திருராம், ஸ்ரீவள்ளுவரின் அவதாரமோ ..?///

    ஹா ஹா ஹா திரு.ஸ்ரீராம்:).. ஹையோ ஸ்ரீராமுக்குள் திருவள்ளுவர் அடக்கம்ம்:)).. ஹையோ கீசாக்கா ஓடி வாங்கோ.. அன்று படு கோபமா போஸ்ட் போட்டிருந்தீங்க.. திருவள்ளுவர் என்ன கொப்பி அடித்தவரொ என:) இப்போ வந்து பாருங்கோ ... ஸ்ரீராமைக் கொப்பி அடிச்சிருக்கிறார்.. ஸ்ரீவள்ளுவர்:)) ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  83. மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

    //ஸ்ரீராம். said...
    வணக்கம் பானுக்கா .. .அதிராவுக்கு ஆசியுடன் நிறுத்தி விட்டீர்கள்! மற்றவை?//

    அதானே அவரின் அக்கவிதைக்கும் படத்துக்கும் என்னதான் முடிவு?:).. வந்து ஜொள்ளுங்கோ:)) ஸ்ரீவள்ளுவரோ திருராம் ஓ?:) ஹையோ நேக்கு என்னமோ ஆச்சு இண்டைக்கு:))

    பதிலளிநீக்கு
  84. ///ஸ்ரீராம். said...
    வாங்க கோமதி அக்கா... . அதிரா அந்தப் பின்னூட்டங்களை எந்தப் பதிவுக்குக் கொடுத்திருப்பார் என்று யாருமே குழம்பவில்லையோ!!!///

    ஹா ஹா ஹா இதில இருந்து என்ன தெரியுதின்னா:)) அதிராஅவின் கொமெண்ட்தான் பிடிச்சிருக்கு:)) அது எதுக்குப் போட்டா என்பதெல்லாம் முக்கியமே இல்லை:)) ஹா ஹா ஹா ஹையோ எனக்கு இருட்டடி விழுந்தாலும் விழலாம்.. கடவுளே முருகா இண்டைக்கு மட்டும் என்னைக் கொஞ்சம் ஸ்ரெடியா பிடிச்சு வச்ச்சிருங்கோ.. 4 எ சேஞ்:) இம்முறை முருகனுக்கு ஒரு வைரக்கல் பதிச்ச வேல் தருவேன்:)..

    ஸ்ரீராம் அந்த போஸ்ட் இன் லிங்கையும் அதி ல் போட்டிருக்கலாம் நீங்க என நினைச்சேன்...

    பதிலளிநீக்கு
  85. மிக்க நன்றி இளமதி.. அனைத்து வாழ்த்தும் உளம் குளிர வைக்குது.

    மிக்க நன்றி சகோ கமலா ஹரிகரன்.///அவரது பின்னூட்டங்கள் சுவாரஸ்யமானவை. ரசித்து படிப்பேன்.
    //

    மிக்க மிக்க நன்றிகள். இதைப் படிச்சதும் பழைய நினைவு ஒன்று வந்துது.. ஆரம்ப காலம் ஒரு நண்பி எனக்கு ஒருநாள் மெயில் போட்டா.. “அதிரா, காலை கொம்பியூட்டரை ஓன் பண்ணியதும் முதலில் உங்கள் கொமெண்ட்ஸ் எங்கெங்கு இருக்கு எனத் தேடிப் படிச்சுவிட்டே பின்பு மிகுதி படிப்பேன்” என... இப்படியான வரிகளால் எனக்கு என்ன சொல்வதென்றே தெரிவதில்லை ஏனெனில் நான் எதையும் நினைச்சு யோசிச்சு எழுதுவதில்லை.. என்னைப்பற்றி என்ன நினைபினமோ என்றுகூட எண்ணுவதில்லை.. அந்நேரம் மனதில் எழுவதை.. ச்சும்மா லூஸ்போல் எழுதிவிட்டுப் போய் விடுவேன்ன்.. ஆனா அது ரசிக்க வைக்குது எனும்போது.. ஸ்பீச்லெஸ் ஆகி நிக்கிறேன்:))... என்னை அறியாமல் ஆரையாவது புண்படுத்தியிருப்பின் தான் கவலை வரும்..

    பதிலளிநீக்கு
  86. ///Angel said...
    பெர்த்டே பேபியை இங்கும் வாழ்த்திக்கறேன் .ஆப்பி பெர்த்டே மியாவ் :)//

    மிக்க நன்றி அஞ்சு.. மீ பியூட்டி பாலரில் இருக்கிறேன் இப்போ..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டிசுரேப்பு மீஈஈஈ பிறகு கொண்டை கழண்டு விழுந்திடும் கேக் கட் பண்ணும்போது:)..

    பதிலளிநீக்கு
  87. ஸ்ரீராம். said...
    வாங்க அதிரா.... பிறந்தநாள் நல்வாழ்த்துகள். எப்படிக் கொண்டாடினீர்கள்?/// அது புது சூஸ், புதுச் சட்டை, புதுத்தொப்பி எல்லாம் போட்டு:) ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்ரீராம்...

    அதிரா..

    // என் போட்டோவைத் தூக்கிடப் போறாரே:))//

    பேசாமல் அந்தப் புகைப்படத்துக்கு ஒரு கவிதை கேட்டிருக்கலாமோ!!!//

    ஹா ஹா ஹா இது நல்லா இருக்கே:).. ஏகாந்தன் அண்ணனைக் கேட்போம் முதல் கவிதை தரச்சொல்லி:))

    ஊசிக்குறிப்பு:
    முதலில் அதிராவை பத்து தடவை ஆவது நல்ல வார்த்தையில் புழுகோ புழுகெனப் புழுகிப்போட்டுத்தான்:) பிறகு திட்டுவதாயின் திட்டோணும்:) அல்லது சிரிச்சுச் சிரிச்சு திட்டினாலும் ஓகே:)) ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
  88. ///ஸ்ரீராம். said...
    வாங்க ஏஞ்சல்...

    உங்கள் பதிவின் மூலமே அதிராவின் பிறந்தநாள் இன்று என்று காலை ஐந்து ஐம்பதுக்கு அறிந்து ஆறு மணிக்குள் திருத்த வேண்டி உடனே இங்கு ஓடிவந்து விட்டேன்!///

    ஹா ஹா ஹா என்னா ஸ்பீட்டா வேலை நடந்திருக்கு.. மீ புல்லாஆஆஆ அரிச்சுப்போயிட்டேன்ன்ன்ன்.. இதனாலதான் போல இண்டைக்கு துரை அண்ணன்.. கீசாக்கா இருவருமே கோட்டை விட்டிட்டினமேஎ:))

    பதிலளிநீக்கு
  89. //Bhanumathy Venkateswaran said...
    . இந்த தி.கீதாவின் லொள்ளு தாங்க முடியவில்லை. இணையம் வருவதே இல்லை என்று புலம்பிக் கொண்டே பன்னிரண்டு பின்னூட்டங்கள்.. !!///

    ஹா ஹா ஹா கண்ணு படுத்தாதீங்கோ பானுமதி அக்கா:) இண்டைக்கு அவ 1ஸ்ட் எல்லோ அதனாலதான் இந்தகுதி குதிக்கிறா:)) ஹா ஹா ஹா:)..

    //ஸ்ரீராம். said...
    அதிரா...

    // சிலசமயம் எனக்கே ஆச்சரியமா இருக்கும் இதை நானா எழுதினேன் என:)//

    உங்கள் கமெண்ட் மட்டுமல்ல, மற்ற நண்பர்களின் வேறு சில கமென்ட்களும் எடுத்து வைத்துள்ளேன். ஏகாந்தன் ஸார் (முன்னரேயும் சொல்லியிருக்கிறார்) சொல்வதற்கு முன்னரே இது சம்பந்தமாய் கொஞ்சம் சேர்த்து வைத்திருக்கிறேன்.///

    உண்மைதான் ஸ்ரீராம் போடுங்கள்.. ஒவ்வொருவரின் கொமெண்ட்ஸ் இலும் ஒவ்வொரு சுவாரஷ்யம் இருக்கிறதுதானே.. திரும்பப் படிக்கும்போது இன்னும் நல்லா இருக்கும்..

    //ஏன், ஃபீமேல் போகமாட்டாங்களா என்ன!!!!///

    ஹா ஹா ஹா இங்குதான் நீங்க தப்புக் கணக்கு பண்ணுறீங்க:)) ஃபீமேல் க்கு எங்காவது நெஞ்சுவலி வருமோ?:) நாங்க அடுட்த்ஹவருக்கு வரப்பண்ணுவோமே தவிர:) நமக்கு நஹி:)) ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
  90. @மியாவ்
    //ஊசிக்குறிப்பு:
    முதலில் அதிராவை பத்து தடவை ஆவது நல்ல வார்த்தையில் புழுகோ புழுகெனப் புழுகிப்போட்டுத்தான்:) பிறகு திட்டுவதாயின் திட்டோணும்:) அல்லது சிரிச்சுச் சிரிச்சு திட்டினாலும் ஓகே:)) ஹா ஹா ஹா:))..//
    அது நல்ல வார்த்தையில் புகழோ புகழென புகழி //
    இது தெரிஞ்சா இதுக்கும் ஒரு படத்தை போட்டு கேப்ஷன் எழுதியிருப்பேன்

    பதிலளிநீக்கு
  91. @ஸ்ரீராம்
    //// பதில் வேணுமெனில் முதலில் என் எக்கவுண்டுக்கு செக்:) //

    எனக்கு பதில் வேணாம்!!!!///

    ஹா ஹா ஹா எல்லோரும் வரவர ரொம்ம்ம்ம்ம்ப ஷார்ப்பூஊஊஊஊஊஊஊஊஊ:))..

    ///ஹலோ பூசார் நீங்க ரன்னிங்க்ல வின்னராக்கும் மறந்துராதீங்க!! நீங்கதான் சொல்லிருக்கீங்க!!! ஹா ஹா ஹா

    பூசார் நல்லா ஓடுவார் தெரியுமா...குட்டிக் கால் இருந்தாலும் அதுவும் சத்தமே கேட்காமல் ஓடுவார்...வெரி ஃபாஸ்ட்...அப்படிப்பட்ட பூசார் இப்படிச் சொல்லலாமோ??!!! நோ நோ!!!

    கீதா///

    ஹா ஹா ஹா அதானே கீதா.. அதை மறந்திட்டேனே... நாம ஆரூஊஊஊ 1500 மீட்டரில 2வதா வந்தேனாக்கும்:).. ஆனா ஸ்பீட்டா ஓடி எல்லையைத்தாண்டி சைனாவுக்கும் ஓடிடுவேன் என்னைக் கொஞ்சம் கொன்றோலில் வச்சிருங்கோ கீதா:))..
    ஹா ஹா ஹா என் கணவர் இப்படி அடிக்கடி என்னிடம் சொல்லுவார்ர்.. நான் ஓவரா புழுக்ஸ்ல பேசத் தொடங்கிட்டால் என்னைக் கொஞ்சம் முறைச்சுப் பார்த்திடுங்கோ அதிரா:) நான் உடனே நோர்மலாகிடுவேன் என ஹா ஹா ஹ:)) ஹையோ ஹையோ:))

    பதிலளிநீக்கு
  92. மிக்க நன்றி அம்முலு.. எனக்கு எல்லோருக்கும் எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை.. ஓடிப்போய் தேம்ஸ்ல குதிக்கலாம் போல வருது:) ஹா ஹா ஹா.

    ///ஏகாந்தன் Aekaanthan ! said...
    @ அதிரா: //.. எழுதும்போது இருக்கும் அந்த உணர்ச்சி, பொயிங்கல்..//

    பொயிங்கி பொயிங்கி நெஞ்சம் உருகியே.. உங்களைத் தவிர வேறு யாருக்கு இப்படி வரும்.. அடடா!///

    ஹா ஹா ஹா முடியல்ல என்னால:)) ஏகாந்தன் அண்ணன் பிளீஸ்ஸ் ஒரு கவிதை எழுதுங்கோ ஸ்ரீராம் சொன்னபடி:)) ஆனா என் செக்:) இடமோ கீதாவிடமோ ஏதும் அட்வைஸ் கேட்டிடாதீங்கோ:))

    பதிலளிநீக்கு
  93. அதிராவுக்கு அன்பான ஆசிகள்.

    அதிராவின் சிறப்பு அந்த ஸ்பீடுதான். யாருக்கும் அதிரா மாதிரி சிரிப்பூ பூக்களை உதிர்க்கணும்ன்னா, யோசித்துத் தான் எழுத வேண்டியிருக்கும். ஆனா அதிராவுக்கு அப்படி இல்லைங்கறது தான் அவரோட சிறப்பு. படு ஸ்பீடு. ஐந்து வினாடிகளில் ஐந்து கலகலப்புகளை அவரால் நிகழ்த்த முடியும். அந்தத் திறமைக்கு வாழ்த்துக்கள், அதிரா!

    பதிலளிநீக்கு
  94. ///Angel said...
    @மியாவ்
    //ஊசிக்குறிப்பு:
    முதலில் அதிராவை பத்து தடவை ஆவது நல்ல வார்த்தையில் புழுகோ புழுகெனப் புழுகிப்போட்டுத்தான்:) பிறகு திட்டுவதாயின் திட்டோணும்:) அல்லது சிரிச்சுச் சிரிச்சு திட்டினாலும் ஓகே:)) ஹா ஹா ஹா:))..//
    அது நல்ல வார்த்தையில் புகழோ புகழென புகழி //
    இது தெரிஞ்சா இதுக்கும் ஒரு படத்தை போட்டு கேப்ஷன் எழுதியிருப்பேன்///

    ஹா ஹா ஹா குறைமாதக் கொயந்தை இன்று சூப்பர் மாட்டி:)) நல்லவேளை எங்கட டமில் மஸ்டர்.. இப்பக்கம் வரவில்லை இதைப் படிக்க இல்லை எனில் அவ்ளோதேன்ன்:))..

    புகழ்தல் வேறு அஞ்சு.. இது நான் என்ன என்னைப் புகழச் சொல்லியோ கேட்டேன்:)){அப்படிக் கேட்டால் அடிக்க வருவினம் எல்லோ ஹா ஹா ஹா:)} புழுகுதல் என்றால் பொய்யுக்கு ஏதாவது சொல்லி ஒருவரை மகிழ்விப்பது:)).. மீ ரொம்ப நல்ல பொண்னாக்கும்:)) ஹா ஹா ஹா ஏன் கவிஞர் ஸ்ரீராம் கூட ஒரு கவிதை எழுதலாமோ இப்போ சுடச்சுட:))

    பதிலளிநீக்கு
  95. அதிரா உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை என்றாலும் வாழ்த்தி வணங்குகிறேன்

    அதிரா உங்களுக்கு 61 வயது ஆனாலும் இன்னும் பதினாறாக நினைத்து வாழும் உங்களை இன்று போல என்றும் வாழ்க என வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  96. ஸ்ரீராம் அதிராவிற்கு வாழ்த்து சொல்லிவிட்டு அவரை பெல்ட்டால் கட்டி போட்டு வைத்திருக்கிறீர்கள் இப்படி செய்தால் அவர் எப்படி தேம்ஸ் நதியில் குதிக்க முடியும்....ஒரு வேளை அவரி இப்படி கட்டி நாம்தான் அவரி நதியில் தூக்கி போட வேண்டும் என்று சிம்பாலிக்காக சொல்லு வருகிறீர்களோ?

    பதிலளிநீக்கு
  97. ஜீவி said...
    அதிராவுக்கு அன்பான ஆசிகள்.

    அதிராவின் சிறப்பு அந்த ஸ்பீடுதான். யாருக்கும் அதிரா மாதிரி சிரிப்பூ பூக்களை உதிர்க்கணும்ன்னா, யோசித்துத் தான் எழுத வேண்டியிருக்கும். ஆனா அதிராவுக்கு அப்படி இல்லைங்கறது தான் அவரோட சிறப்பு. படு ஸ்பீடு. ஐந்து வினாடிகளில் ஐந்து கலகலப்புகளை அவரால் நிகழ்த்த முடியும். அந்தத் திறமைக்கு வாழ்த்துக்கள், அதிரா!///


    ஆஆஆஆவ் என்னால முடியேல்லை.. மீ ஃபெயிண்ட் ஆகிறேன்ன்ன் எனக்கு ஆராவது சுட்டாறிய தண்ணி அடிச்சு எழுப்புங்கோ பிளீஸ்ஸ்ஸ்.. ஐஸ் வோட்டர் ஒத்துக்காது.. அவசரத்துக்கெண்டாலும் அடிச்சிடாதீங்கோ ஐஸ் வோட்டரை:)))....

    உண்மையில் மிக்க மிக்க நன்றிகள்..பெரியவர்களும் இப்படிப் பாராட்டும்போது எனக்கு எப்படிப் பதில் சொல்வதென்றே தெரியவில்லை.. மிக்க மகிழ்ச்சியாக இருக்கு. மிக்க மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  98. ராணி மைந்தனுக்கு வேணுமானாலும் நவுஷாத்தாக இருக்கலாம்.
    நமக்கெல்லாம் நெளஷாத் தான்.
    சில பெரிய மனிதர்கள் என்ன செய்தாலும் அது விதந்து ஓதப்படுகிறது. நெளஷத் விஷயத்திலும் அதான் நடந்திருக்கிறது.
    நெளஷாத் செய்த காரியம்-- எம்எஸ்வி தலையில் அவர் இவருக்கு எழுதிய கடிதங்களையே கவிழ்த்தது-- எனக்கு உடன்பாடில்லாத சமாச்சாரம்.
    'கோகிலா என்ன செய்து விட்டாள்?' குறுநாவலில் ஜெயகாந்தன் 'கடிதங்கள் எப்போழுதுமே முகவரியிட்டவர்களுக்குச் சொந்தம்' என்பார். எம்எஸ்வியின் கடிதங்களை அவர் சேர்த்து வைத்திருந்தது நெளஷாத்தின் அன்பான செயல். ஆனால் எம்எஸ்வியின் கடிதங்களை பொது நிகழ்ச்சியில் அவரிடமே திருப்பியது சரியல்ல என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  99. ///Avargal Unmaigal said...///

    ஆவ்வ்வ்வ்வ் ட்றுத் எங்கே நீண்ட நாளாகக் காணல்லியே உங்களை இங்கு.

    ///அதிரா உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை என்றாலும் வாழ்த்தி வணங்குகிறேன்//

    உங்கள் தன்னடக்கம் பார்த்து மீ மெய்சிலிர்க்கிறேன்ன்:)) நான் பெரிய கதாசிரியர், மகாகவி எனச் சொன்னதை எல்லாம் நம்பிட்டீங்க போல:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்:))

    //அதிரா உங்களுக்கு 61 வயது ஆனாலும் இன்னும் பதினாறாக நினைத்து வாழும் உங்களை இன்று போல என்றும் வாழ்க என வாழ்த்துகிறேன்///

    ஹா ஹா ஹா ஒரு பொய்யை பலதடவை ஜொன்னா அது உண்மையாகிடுமோ எனப் பயமாக்கிடக்கு என கீசாக்கா சொன்னா அன்று:)).. ஆனா உண்மை என்றும் அழியாது என்பதை இன்று அஞ்சுவின் வாழ்த்துப் போஸ்ட் படிச்சவர்களுக்கு தெரியும்:)).. நொந்து நூடில்ஸ் ஆகிப்போய் என் செக்:) உண்மையை ஒத்துக் கொண்டு சுவீட் 16 பிறந்தநாள் எனப் போட்டிட்டாவே:)) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  100. இரவு தூக்கங்கள் யாவும்
    மரண ஒத்திகை என்றால்
    புதுப் பிறவிக்கான ஒத்திகை
    விடியல்கள் இல்லையா, ஸ்ரீராம்

    தூங்கப் போகும் போது யாரும் மரண பயத்துடன் தூங்கப் போவதில்லையாதலால் தான் விடியும் போது அந்தப் புதுப்பிறவி உணர்வும் இல்லாது போகிறது போலும்.

    வாழ்க்கையை நுண்மையாகப் பார்க்கிறவர்களுக்குத் தான் இந்த உணர்வெல்லாம் என்பதையும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். தூக்கமும் விழிப்பும் சர்வ சாதாரணமாகிப் போனவர்களிடம் சொன்னால், "இன்னா சொன்னே? ஒண்ணுமே வெளங்கலியே?" என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  101. இனிய வாசகர் நண்பர் ஒருவரின் சமீபத்து பின்னூட்டத்தில் ஒரு விசேஷம்:

    எனக்கென்னவோ அந்தப் பின்னூட்டத்திலும் துளசி மணம் கமகமத்த உணர்வு.

    பதிலளிநீக்கு
  102. நன்றி பானு அக்கா.. நல்ல லிஸ்ட்.

    பதிலளிநீக்கு
  103. ஏகாந்தன் ஸார்..

    // விருதுநோக்கி அரசியல் கனெக்‌ஷன்ஸை ஏற்படுத்திக்கொண்டு காயை நகர்த்துகிறான். //

    ஆம். உண்மை. கிடைக்காதவன் கிடைத்தவர்களைத் திட்டுகிறான்!

    // இங்கே முதலில் நினைத்தது நானா, ஸ்ரீராமா என்பது பெருங்கேள்வி!//

    நீங்கள்தான்! நெஞ்சுவலி - பயம் பற்றிச் சொல்லும்போது ஒன்று நினைவுக்கு வருகிறது. பாம்பு கடிப்பதால் மரணம் அடைபவர்களைவிட, பாம்பு கடித்துவிட்டதே என்கிற பயத்தில் சாகிறவர்கள்தான் அதிகம் என்று படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  104. அதிரா...

    // /// ஹா ஹா ஹா அவர் இப்போ குளிர்ந்து போயிருப்பார்:)//

    நான் எப்போ சூடாக இருந்திருக்கிறேன்?!!!!

    // ஸ்ரீராமைக் கொப்பி அடிச்சிருக்கிறார்.. ஸ்ரீவள்ளுவர்://

    ஹா.... ஹா.... ஹா....

    // ஸ்ரீராம் அந்த போஸ்ட் இன் லிங்கையும் அதி ல் போட்டிருக்கலாம் //

    அது எதற்கு?

    // அதிராஅவின் கொமெண்ட்தான் பிடிச்சிருக்கு:)) அது எதுக்குப் போட்டா என்பதால்//

    உண்மை... உங்கள் பின்னூட்டங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை.

    // ஏகாந்தன் அண்ணனைக் கேட்போம் முதல் கவிதை தரச்சொல்லி:))//

    நல்ல ஐடியாவா இருக்கே...

    // பிறகு திட்டுவதாயின் திட்டோணும்:) //

    உங்களை யார் திட்டப்போறாங்க, எதற்கு திட்டப்போறாங்க அதிரா... நீங்கள் அன்பான சகோதரி, தோழி.

    // கவிஞர் ஸ்ரீராம் கூட ஒரு கவிதை எழுதலாமோ இப்போ சுடச்சுட:)) //

    இப்படி கவிஞர் என்று சொன்னதற்கே எழுதலாம்தான்! ஆனால் வியாழன், வெள்ளிகளில் நான் கவிதை எழுதுவதில்லை!!!!!!!!!!!!!! :P

    பதிலளிநீக்கு
  105. வாங்க ஜீவி ஸார்...

    // ஆனால் எம்எஸ்வியின் கடிதங்களை பொது நிகழ்ச்சியில் அவரிடமே திருப்பியது சரியல்ல என்று நினைக்கிறேன். //

    ஆம். ஆனால் அவர் அன்பால் செய்ததுதான். பெரியவர்கள் செய்யும்போது இதையெல்லாம் யாரும் பார்ப்பதில்லை!

    // இரவு தூக்கங்கள் யாவும்
    மரண ஒத்திகை என்றால்
    புதுப் பிறவிக்கான ஒத்திகை
    விடியல்கள் இல்லையா, ஸ்ரீராம்//

    நன்றாயிருக்கிறது ஸார் தலைகீழ்க்கவிதை!

    // தூங்கப் போகும் போது யாரும் மரண பயத்துடன் தூங்கப் போவதில்லையாதலால் தான் விடியும் போது அந்தப் புதுப்பிறவி உணர்வும் இல்லாது போகிறது போலும். //

    ஆமாம். அந்த எண்ணம் வந்தால் மனிதன் தவறு செய்ய மாட்டானே.. "நாளைப்பொழுது என்றும் நல்ல பொழுதாகும் என்று நம்பிக்கைக் கொள்வாயடா" என்கிற சீர்காழி பாடல் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  106. சுஜாதாவின் எழுத்துக்களில் மனம் பறிகொடுத்தவர்களால் அவரைக் கடக்க முடியவில்லை என்பது பளிச்சென்று தெரிகிறது.

    ஜெமோவிடம் கேட்டால் "அவரைக் கடந்தால் அல்லவா இலக்கியம் என்பது என்னவென்று தெரியும்" என்பார்.

    இலக்கியம் மட்டுமில்லை, நாவலிலும் ஜெமோக்கென்று தனிக் கருத்துக்கள் உண்டு.

    அவரைப் பொறுத்தமட்டில் தமிழின் முதல் நாவல், க.ந.சு.வின் 'பொய்த்தேவு'. படித்திருக்கிறீர்களா, ஸ்ரீராம்?. சோமு முதலியாரின் முழு வாழ்க்கைச் சரித்திரம். வாசித்து முடித்ததும் வரைபடம் போட்ட மாதிரி கிராம வர்ணிப்பு தான் மனசில் தேங்கும்.

    நல்ல நாவலுக்கு, ப. சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி' ஜெமோவின் ஆதர்ச சிபாரிசு.

    தொடர்கதையெல்லாம் நாவலில்லை என்பது அவரது அழுத்தமான கருத்து.

    இது பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுது ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
  107. ஹலோவ் மியாவ்

    //நொந்து நூடில்ஸ் ஆகிப்போய் என் செக்:) உண்மையை ஒத்துக் கொண்டு சுவீட் 16 பிறந்தநாள் எனப் போட்டிட்டாவே:)) ஹா ஹா ஹா:)..//

    எப்பவுமே அதாவது பிறந்த நாள் முதல் நானா அடுத்தவங்க சந்தோஷமே முக்கியம்னு நினைப்பேன் .மை மம்மி சொல்வாங்க நான் பிறந்ததும் குட்டியா ஸ்மைல் பண்ணேனாம் :) உங்களுக்கு 16 சந்தோஷத்தை தருதுன்னா எதுக்கு உண்மை வயசை போட்டு உங்களை மற்றும் நம்ம பிரண்ட்ஸை கலவரப்படுத்தனும்

    பதிலளிநீக்கு
  108. ஜீவி ஸார்..

    / அவரைக் கடக்க முடியவில்லை //

    எதற்காக கடக்க வேண்டும்? கடக்க முடியாத எழுத்துகளுக்கு சொந்தக்காரர் சுஜாதா என்பதில் சந்தேகம் இல்லை. கடந்துதான் மற்றவர்களைப் படிக்கவேண்டும் என்பதில்லையே... ஜெமோ எந்த சமயம் என்ன பேசுவார் என்று தெரியாது! பொய்த்தேவு கேள்விப்பட்டிருக்கிறேன். படித்ததில்லை. உங்களிடம் இருக்கிறதா? புயலிலே ஒரு தோணி எப்பொழுதோ படித்தது. அப்பா அதை பைண்ட் செய்து வைத்திருப்பது தெரியாமல் நான் வேறு புதிதாய் ஒன்று வாங்கி இருந்தேன். ஒரு லிஸ்ட் ஆஃப் புக்ஸ் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருக்கிறது! பார்க்கிறேன். தொடர்கதை எல்லாம் நாவல் இல்லை. சரிதான். சீரியல் எல்லாம் திரைப்படமாகாது! ​

    பதிலளிநீக்கு
  109. வாங்க ஏஞ்சல்...

    // உங்களுக்கு 16 சந்தோஷத்தை தருதுன்னா எதுக்கு உண்மை வயசை போட்டு உங்களை மற்றும் நம்ம பிரண்ட்ஸை கலவரப்படுத்தனும் //

    அடிச்சீங்களே ஒரு அடி! ஹா.. ஹா... ஹா... சரி, சரி, நீங்க அவங்க செக். அத்யந்தத் தோழி. உங்களுக்குத்தான் உண்மை வயசு தெரியும்... எனெக்கெதற்கு ஊர் வம்ப்ஸ்....!

    :)))

    பதிலளிநீக்கு
  110. ///Avargal Unmaigal said...
    ஸ்ரீராம் அதிராவிற்கு வாழ்த்து சொல்லிவிட்டு அவரை பெல்ட்டால் கட்டி போட்டு வைத்திருக்கிறீர்கள் இப்படி செய்தால் அவர் எப்படி தேம்ஸ் நதியில் குதிக்க முடியும்....ஒரு வேளை அவரி இப்படி கட்டி நாம்தான் அவரி நதியில் தூக்கி போட வேண்டும் என்று சிம்பாலிக்காக சொல்லு வருகிறீர்களோ?///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  111. ///இப்படி கவிஞர் என்று சொன்னதற்கே எழுதலாம்தான்! ஆனால் வியாழன், வெள்ளிகளில் நான் கவிதை எழுதுவதில்லை!!!!!!!!!!!!!! :P///

    ஹா ஹா ஹா ஸ்ரீராம் இதை என் டயறியில் சிவப்பு மையால் குறிச்சு வைக்கிறேன்:)).. இனி விசாளன் வெல்லி:) ல கண்ணுக்குள் விளக்கெண்ணெயோடு திரிவேன் ஆக்கும்:))..

    பதிலளிநீக்கு
  112. இசை ஜாம்பவான் பற்றிய பதிவு அருமை அனைத்து பதிவும் பாராட்டும்படி உள்ளது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  113. // ஸ்ரீராம் அதிராவிற்கு வாழ்த்து சொல்லிவிட்டு அவரை பெல்ட்டால் கட்டி போட்டு வைத்திருக்கிறீர்கள் இப்படி செய்தால் அவர் எப்படி தேம்ஸ் நதியில் குதிக்க முடியும்.//

    ஹா... ஹா... ஹா... மதுரை... பிறந்த நாளிலாவது அவர் ஜாலியாய் இருக்கட்டுமே! இல்லாவிட்டால் தப்பித்து ஓடிப்போய் போர்வைக்குள் பதுங்கி விடுவார்!

    பதிலளிநீக்கு
  114. ///Angel said...
    ஹலோவ் மியாவ்

    //// அதாவது பிறந்த நாள் முதல் நானா அடுத்தவங்க சந்தோஷமே முக்கியம்னு நினைப்பேன் .மை மம்மி சொல்வாங்க நான் பிறந்ததும் குட்டியா ஸ்மைல் பண்ணேனாம் :) உங்களுக்கு 16 சந்தோஷத்தை தருதுன்னா எதுக்கு உண்மை வயசை போட்டு உங்களை மற்றும் நம்ம பிரண்ட்ஸை கலவரப்படுத்தனும்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹலோ மிஸ்டர் அப்போ நீங்க உண்மை பேசல்லியா ஜொன்னதெல்லாம் பொய் ஆஆஆஆஆஆஆ:)).. இதைப் படிக்கும் எல்லோரும் அதிராவுக்கு சுவீட் 16 இல்லையாக்கும் என நினைச்சிடப்போகினமே:)).. நான் ஜொன்னனே.. ஜொன்னனே.. எனக்கு எடிரி வெளில இல்ல இல்ல:))

    பதிலளிநீக்கு
  115. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  116. ஆவ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊஊ கீதாஆஆஆஆஆ ஓடியாங்கோ ஸ்ரீராம் இப்போ கம்பி மேல:)).. ஹையோ கெதியா வாங்கோ நீங்க இருவரும் 86 கிலோ எடையுடன் அசைஞ்சு அசைஞ்சு வருவதுக்குள் அவர் இறங்கி ஓடிடப்போறாரே:)).. நீண்ட நாளாச்சு இப்பூடி நேருக்கு நேர் மோதி:) ஹையோ பேசி:))

    பதிலளிநீக்கு
  117. // இதை என் டயறியில் சிவப்பு மையால் குறிச்சு வைக்கிறேன்:)).. இனி விசாளன் வெல்லி:) ல கண்ணுக்குள் விளக்கெண்ணெயோடு திரிவேன் ஆக்கும் .//

    ஆஹா... மாட்டிக்கிட்டாண்டா மாப்பு! குறித்து வைக்காமலேயே நினைவிருக்கும் விஷயங்கள் ஏற்கெனவே கலக்குது... இது வேறயா!

    பதிலளிநீக்கு
  118. // ஸ்ரீராம் இப்போ கம்பி மேல://

    நாளைக்கு ரெடியாய்ட்டு இருக்கேனாக்கும்!

    // இருவரும் 86 கிலோ எடையுடன்//

    ஆளுக்கு சரியாய் 43 கிலோவா?

    பதிலளிநீக்கு
  119. //இருவரும் 86 கிலோ எடையுடன்//

    ஆளுக்கு சரியாய் 43 கிலோவா?//

    hahahahhaa :)

    பதிலளிநீக்கு
  120. ///
    ஆளுக்கு சரியாய் 43 கிலோவா?///

    அச்சச்சோ ஐயோ அச்சச்சோ ஹையோ.. சொந்தச் செலவில சூனியம் வச்சிட்டேனோ?:)).. இதுதானாக்கும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும் என அருணகிரி அங்கிள் தேவையில்லாமல் ஜொள்ளிட்டுப் போயிட்டார் கர்:)).... அது பிரிச்சுப் பிரிச்சுப் படிக்கோணும் ஸ்ரீராம்.. ஆளாளுக்கு 86 கிலோ:)).. ஹையோ இங்கின நான் படும் பாடிருக்கே:)) இதை விடக் காசிக்குப் போயிடலாம் எனப் பார்த்தால் என் செக்:) விடுறாவே இல்லை கர்:)).. அவவைக் கூட்டிப்போய்த்தானே விட்டிட்டு வரோணும்:)..

    பதிலளிநீக்கு
  121. ////Angel said...
    //இருவரும் 86 கிலோ எடையுடன்//

    ஆளுக்கு சரியாய் 43 கிலோவா?//

    hahahahhaa :)///

    தெய்வீகச் சிரிப்பையா உங்களுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என்னா ஒரு ஜந்தோஜம்:))

    பதிலளிநீக்கு
  122. // ஆளுக்கு சரியாய் 43 கிலோவா?//

    hahahahhaa :) //

    ஏஞ்சல்... இந்த சமாளிப்ஸ்கு பதில் எனக்கு ஒரு கதை எழுதி அனுப்புங்கள்!

    பதிலளிநீக்கு
  123. அதிரா...

    // அருணகிரி அங்கிள் தேவையில்லாமல் //

    அவசரத்தில் அருணாச்சலம் அங்கிள் என்று படித்து விட்டேன்.

    // காசிக்குப் போயிடலாம் எனப் பார்த்தால்//

    அது விக்ரம் நடிச்ச படம்.. ஒன்றிரண்டு பாடல்கள் நல்லாயிருக்கும்!

    பதிலளிநீக்கு
  124. இனியும் இந்த உசிர் இந்த உடம்பில இருக்குமோ:))[இது என்னைச் சொன்னேன்:)].. விடுங்கோ விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ....:)) ஹா ஹா ஹா...

    http://www.ndcabins.com/CatShootingPheasant.gif

    பதிலளிநீக்கு
  125. ///ஸ்ரீராம். said...
    // ஆளுக்கு சரியாய் 43 கிலோவா?//

    hahahahhaa :) //

    ஏஞ்சல்... இந்த சமாளிப்ஸ்கு பதில் எனக்கு ஒரு கதை எழுதி அனுப்புங்கள்!////

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது இது கிளவி ஹையோ கேள்வி:)).. கதை எழுதாட்டில் என்னோடு காசிக்கு வரச்சொல்லிச் சொல்லுங்கோ ஸ்ரீராம்:)).. அவவை சொய்ஸ்ல விட்டிடலாம்:)) ஹா ஹா ஹா யூப்பர் மாட்டீஈஈஈஈஈ.. இதுக்காகத்தான் இவ்ளோ நேரம் காத்திருந்தேன்:)) ஆவ்வ்வ் இனித்தான் நிம்மதியான நித்திரை வருமெனக்கு:))

    பதிலளிநீக்கு
  126. // கதை எழுதாட்டில் என்னோடு காசிக்கு வரச்சொல்லிச் சொல்லுங்கோ ஸ்ரீராம்:))//

    அப்பாடி... ஏஞ்சல் கதை எழுதுவதே பெட்டர் என்று feel பண்ண வச்சுட்டீங்க... ஹெல்ப்புக்கு நன்றி அதிரா...

    // விடுங்கோ விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ....//

    நோ................. வேண்டாம்... சொன்னாள் கேளுங்கோ அதிரா... வேண்டாம்... எதுவாயினும் இன்று வேண்டாம். பிறந்தநாள் பாருங்கோ... நாளை தேம்ஸில் குளிக்கலாம்!

    பதிலளிநீக்கு
  127. @ஜீவி சார் - தொடர்கதையெல்லாம் நாவலில்லை என்பது அவரது அழுத்தமான கருத்து - நீங்க அதுக்கு காரணமும் கொடுத்திருக்கணும். தொடர்கதை எழுதும்போது வாசகர்களை 'அடுத்தது என்ன' என்று ஒரு வாரமோ, இரு வாரமோ, மாதமோ காத்திருக்க வைக்க, ஒவ்வொரு இதழிலும் வலிந்து திணிக்கப்பட்ட சிறு ட்விஸ்டு அல்லது சஸ்பென்ஸ் இருக்கும். வலிந்து திணிப்பதால், நாவல் என்ற தலைப்பில் வராது என்பது அவரது எண்ணம். அது சரிதானே?

    பதிலளிநீக்கு
  128. ஸ்ரீராம். said...
    ///நோ................. வேண்டாம்... சொன்னாள் கேளுங்கோ அதிரா... வேண்டாம்... எதுவாயினும் இன்று வேண்டாம். பிறந்தநாள் பாருங்கோ...////

    ஆஆஆஆவ்வ்வ் பாருங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ் இப்பூடித்தான் இருக்கோணும் எனக்கு சப்போர்ட் பண்னவும் ஆட்கள் இருக்கினமாக்கும்.. என் செக்:) இப்போ கண்ணை மூடிட்டு இருப்பாவே:)) கர்:))

    //நாளை தேம்ஸில் குளிக்கலாம்!///
    என்னாதூஊஊஊஊஉ நாளைக்கு குதிக்கலாமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))

    பதிலளிநீக்கு
  129. ///Angel said...
    @sriram :)சீ .எ .அ///

    இதுக்கு நாளைக்கு ஸ்ரீராம் வந்து.. ஏஞ்சல்.. அ பு ரி என்பார்ர்:)) அதுக்கு இடம் கொடுக்காமல் மீ ஜொள்ளிடுறேன்.... அது சீக்கிரமே எழுதி அனுப்புவாவாம்:) பின்ன அதிராவின் வயசை வச்சுக் கதை எழுதுவதாயின்.. கரும்பு தின்னக் கைக்கூலி வேணுமோ?:)).. ஸ்ரீராம் கலகத்தை ஆரம்பிச்சுட்டார்ர்ர்ர்ர்:)) ஹையோ இனி என்ன எழுதப்பட்டு வரப்போகுட்தோ பகவானே பீஈஈஈஸ் சேஃப் ஒன்லி அதிரா:).

    பதிலளிநீக்கு

  130. சுஜாதாவின் எழுத்துபற்றிக் குறைகூறுதல், தமிழ் இலக்கிய உலகில் ஒரு பொழுதுபோக்கு சிலருக்கு – அரசியல் அரைவேக்காடுகள், எதெற்கெடுத்தாலும் மோதியைச் சாடுவதைப்போல.

    இலக்கிய எழுத்து என்பதென்ன? யாருக்கும் புரியாத, யாராலும் படிக்கப்படாத எழுத்துக்களை, எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பதா? அல்லது ஓரிரு எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் எனப் புகழப்படுவதால், அங்கீகரிக்கப்படுவதால், அவர்களைப்போலவே பிறிதொரு எழுத்தாளனும் எழுதித்தான் ஆகவேண்டுமா? வேறு வகைமையை அவன் முயற்சிக்க சுதந்திரமில்லையா? அல்லது இலக்கிய வகைமைகளாகக் கருதப்படும் realism, magical realism, modernism, post-modernism என்றெல்லாம் கேள்விப்பட்டு, ஏதாவது வெளிநாட்டு படைப்பின் பாடாவதி மொழியாக்கத்தைப் படித்துவிட்டு, தனக்கேதோ புரிந்துவிட்டதுபோல் பாசாங்குபண்ணி, தானும் ஏதாவதொரு ‘இஸத்திற்குள்’ தலையைவிட்டுக்கொண்டு, அது என்னவென்று தெரியாமலே திணறி, எழுதுவதாக உளறிக்கொட்டுவதா, இலக்கிய எழுத்து? மேலும், ஒருசில சமகாலக் கழிசடைகளைப்போல் ‘அதோ அந்தப் புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் இருக்கிறானே, நோபல் பெற்றவன், அவனைவிட என் எழுத்துப் பன்மடங்கு உயர்ந்தது.. தமிழில் எழுதித்தொலைக்கவேண்டிய விதி எனக்கு...இல்லாட்டி எப்போதோ எனக்குக் கிட்டியிருக்கும் நோபல் பரிசு’ என்று பொய்மேதமையில் புலம்புபவனா இலக்கியவாதி?

    இன்னொன்றையும் பார்க்கலாம். இப்படியெல்லாம் முயற்சிக்காமல், எந்த ஒரு வகைமையிலும் வராமல், எந்தக்குழு அரசியலிலும் சிக்காமல், படாடோபமற்ற மொழியில், மிகச்சாதாரண தினப்படி விஷயங்களை எழுதி, அசாதாரணமான விஷயங்களைக் கோடிட்டுச்சென்றாரே- வணிகப்பத்திரிக்கைகளால் பொதுவாக மறுக்கப்பட்ட, பல வருடங்கள் இலக்கியவாதிகளால்கூடக் கண்டுகொள்ளப்படாமலே இருந்த- அசோகமித்திரன்? அவர் எழுதியது வணிக எழுத்தல்ல. சரி. இலக்கியமும் இல்லையா? இல்லை, அவருக்கு சில விருதுகள் கிடைத்துவிட்டன, சில இலக்கியப்பெரிசுகள் அவரது எழுத்தைப் பிற்பாடு சிலாகித்திருக்கிறார்கள் என்பதனால், வேறுவழியின்றி இலக்கிய எழுத்து என அங்கீகரிக்கப்பட்டுவிட்டதா அவரது எழுத்து ?

    மாறாக, ஒரு எழுத்தாளர் வணிகப்பத்திரிக்கைகளில் எழுதினார், அவரை நிறையப்பேர் படித்தனர், பாப்புலராக இருந்தார் என்பதே, அவருக்கு நிறைய இளையதலைமுறை வாசகர்கள் இருந்தனர் என்பதே - அவரது இலக்கியத் தகுதியின்மையாகிவிடுமா? அவரது வித்தியாசமாக விரிந்த எழுத்துமுயற்சிகள், புதுமொழிநடை என்பதெல்லாம் ஒன்றுமே இல்லையா? ‘வணிகப்பத்திரிக்கைகளில் வந்த என்னுடைய படைப்புகளை மட்டுமே விமரிசிக்கிறார்கள். வேறுவிதமாகவும் நிறைய எழுதியிருக்கிறேனே..அதை ஏன் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்?’ – என்று கேட்டாரே சுஜாதா. எந்தக் கிழடும், இலக்கிய விமரிசகனும் அதற்கு பதில் சொல்லவில்லையே? ஏன்?

    ஒரு மூன்று, நான்கு சமகால எழுத்தாளர்கள், கொஞ்சம் புகழ்பெற்றுவிட்டோம் என்கிற மதர்ப்பில் நானெழுதுவது இலக்கியம், நீ எழுதுவதோ, அவனெழுதியதோ இல்லை என்று ஊளையிட்டால், அதனை எல்லோரும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடவேண்டுமா?
    தொழில்ரீதியான பொறாமை வெக்கையில் வெந்தவர்களின் விமரிசனத்தை செவிமடுத்து, ஒரு ஆளுமையின், சிறப்பான ஆக்கங்களையும், புதுமுயற்சிகளையும் ஒரு தமிழ் வாசகன் அலட்சியப்படுத்தலாகுமா? என்ன நியாயமய்யா இது?

    பதிலளிநீக்கு
  131. கமெண்ட் மாடரேஷன் போல கமெண்ட் ரேஷனிங் உண்டா? இருந்தால் முதலில் போடுங்கள். இந்த தி.கீதாவின் லொள்ளு தாங்க முடியவில்லை. இணையம் வருவதே இல்லை என்று புலம்பிக் கொண்டே பன்னிரண்டு பின்னூட்டங்கள்.. !! //

    பானுக்காஆஆஆஆஆவ்....அது ஒரு தக்கினிக்கு!!!!!! ரசித்தேன் உங்க கமென்டை...அக்கா...

    அதானே பாருங்க ஸ்ரீராம் கரீயீயிக்டா சொல்லிருக்கார்...நெட் மட்டும் சரியா இருந்துருந்தா 24 கமென்ட் போட்டிருப்பேனாக்கும் ஹா ஹா ஹா ஹா..ஸ்ரீராம் நன்றி நன்றி...மத்த தளங்களும் வாசிக்கணும்...இந்த நெட் வர சமயத்தில் ..அதான்.......

    கீதா

    பதிலளிநீக்கு
  132. ஶ்ரீராம், அதிரா கொடுத்த பச்சைக்கல் நெக்லஸைப் பத்திரமா வைச்சிருக்கீங்க இல்லையா? நேத்திக்கு உறவினர் வருகையால் இணையத்துக்கே வர முடியலை! ஆனாலும் இதே நினைப்பா இருந்தேனாக்கும். :)))))

    பதிலளிநீக்கு
  133. சுஜாதா பத்தி மற்ற எழுத்தாளர்கள் பத்தி எல்லோரும் சொல்லி இருப்பதைப் படிச்சேன். ம்ம்ம்ம்ம், பாலகுமாரன் எழுதறதெல்லாம் இலக்கியம்னா சுஜாதா எழுதினதும் இலக்கியம் தான். அதிலும் சில கதைகள், நாவல்கள் அவற்றின் தாக்கம் இப்போது நினைத்தாலும் சிலீர் எனக் குத்தித் தூக்கி வாரிப் போடும்.

    பதிலளிநீக்கு
  134. //இதுதானாக்கும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும் என அருணகிரி அங்கிள் தேவையில்லாமல் ஜொள்ளிட்டுப் போயிட்டார்/
    அதிரா இதை சொன்னது பட்டினத்தார். அருணகிரிநாதர் இல்லை.

    பதிலளிநீக்கு
  135. கீசாக்கா அது ஸ்ரீராமின் வலது பக்க பொக்கட்டில் இருக்கு... வாங்கிடுங்கோ:)

    பதிலளிநீக்கு
  136. ஓ கோமதி அக்கா ... அது பட்டினத்தார்.. நினைவுபடுத்திட்டீங்க..நன்றி தங்கூ.. எனக்கு பட்டென எழுதும்போது அருணகிரியார்தான் நினைவுக்கு வந்தார்:)... நல்லவேளை நேற்று ஆரும் கவனிக்கவில்லை அதை ஹா ஹா ஹா .. என் செக்:) க்கும் இந்த கதை தெரியாதுபோல அதனால தப்பிட்டேன்ன்ன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
  137. //அதிரா இதை சொன்னது பட்டினத்தார்.//

    கோமதிம்மா.. இதைச் சொன்னது பட்டினத்தார் அங்கிள் இல்லையா?.. :))

    பதிலளிநீக்கு
  138. சுஜாதாவை அவர் போக்கில் விட்டிருந்தால் எவ்வளவோ சாதித்திருப்பார். 'இந்த மாதிரி நீங்கள் நடித்தால் தான் ஜனங்க ஏற்றுக் கொள்வார்கள்' என்பது மாதிரியான சினிமாத்தன வற்புறுத்தலில் இந்தப் பத்திரிகைக்காரங்க அவரை அவர் மனம் போன படிக்கு எழுதாமல் குறுக்கி விட்டார்கள் என்பது என் எண்ணம். இதை 'இதோ நிஜ சுஜாதா' என்ற கட்டுரையில் எனது 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை' புத்தகத்தில் மனத்தில் படிகிற மாதிரி சொல்லியிருக்கிறேன்.

    கடந்து தான் மற்றவர்களை படிக்க வேண்டும் என்றில்லை.. ஆனால் காலவித்தியாச வாசிப்பு ஈடுபாட்டில் நம் வளர்ச்சி வாசிப்பிலும் பிரதிபலிப்பதால் ஒவ்வொருவரையும் தாண்டித் தாண்டி வருகிறோம், இல்லையா? கடப்பது என்பது அதுவாக இருக்கலாம். அதனால் ஜெமோ சொல்வதில் ஆத்திரப்பட எதுவும் இல்லை.

    என் முதல் சிறுகதையைப் பிரசுரித்தவர் தமிழ்வாணன். ஆனால் இந்த வயது வாசிப்பு வளர்ச்சியில் தமிழ்வாணனின் எழுத்தை ரசிக்க முடியாது. அதனால் தமிழ்வாணனைப் புறக்கணித்து விட்டோம் என்று அர்த்தம் இல்லை. அந்த வயசுக்கேத்த கதை சொல்லலில் தமிழ்வாணன் நிபுணர் என்றே கொள்ள வேண்டும்.(நெ.த. கவனிக்க) அவரது 'ரகசியம்' கதைத் தொடர் இன்னும் தேசலாக நினைவில் மங்கியும் மங்காமலும் இருக்கிறது. கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகானாம்பாள் விகடனில் வரும் பொழுது ஆஹாஓஹோ என்று ஒவ்வொரு வாரமும் கண்ணில் ஒற்றிக் கொண்டு படித்துக் கொண்டிருப்பேன். இப்பொழுது வாசிக்கையில் கதையை முன்னே-பின்னே சொல்வதில் சில திருத்தங்கள் செய்யலாமே என்று தோன்றுகிறது. ஆக, கடக்கிறது என்பது தலை முழுகுதல் இல்லை. அது நமது வளர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயம்.

    //பொய்த்தேவு உங்களிடம் இருக்கிறதா?//

    இருக்கிறது, ஸ்ரீராம். உங்களது 'லா.ச.ராமாமிருதம் கதைகள்' புத்தகமும் பத்திரமாக என்னிடம் இருக்கிறது. அது பக்கத்தில் இருப்பதே ஒரு பலமாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  139. @ நெ.த..

    //அது சரிதானே?//

    அப்படித்தான் ஜெமோவின் கருத்து. இந்த கருத்தியலில் ஒட்டுமொத்தமாக நூற்றுக்கணக்கான முன்னோடிகளின் தொடர்கதைகளை நாவலில்லை என்று ஒரே வரியில் அவரால் மறுத்து விட முடிகிறது. அவரது வாதம் இன்னும் சில கருதுகோள்களைக் கொண்டிருக்கிறது.

    அவர் நிலையெடுப்பது மேனாட்டு நாவல்களை ஒட்டி. நாவல்களே மேனாட்டுச் சமாச்சாரம் என்ற வாதத்தில் நாவல் அமைப்புகளில் மேனாட்டு அளவுகோல்களை அவர் கையாளுகிறார்.

    விக்டர் ஹீயூகோ போன்றவர்களின் படைப்புகளை கையிலெடுத்துக் கொண்டால் அவற்றை வாசிக்கையில் ஒரு மூழ்கடிப்பு நமக்கு நேருகிறதல்லவா?.. அந்த மாதிரியான அனுபவம் ஏற்படவேண்டும் என்பது அவரது வாதம் போல் தோன்றுகிறது. நாவலுக்கு முதல் பக்கத்தில் நாவல் நிலைக்களத்தை படமாகக் காட்ட ஒரு MAP. கதைக்களத்தை ஆழமாக வர்ணித்தல், லியோ டால்ஸ்டாயின் 'போரும் வாழ்வும்' மாதிரி அதிக அளவு பாத்திரப்படைப்புகள், ஒரு சிறு பாத்திரப் படைப்பு கூட நம் நினைவை விட்டு அகலாதபடி பாத்திரங்களின் வார்ப்பு-- இப்படி ஏகப்பட்ட விஷயங்கள்.

    பெரிய கட்டுரையாக ஆழ்ந்து அமர்ந்து எழுத வேண்டும்.



    அப்போ தமிழில் நாவலே இல்லை?.. ஏன் இல்லை?.. 'சிலப்பதிகாரமே' அந்நாளுக்கு ஏற்ற நாவல் தான். அகநானூறு, புறநானூறு பத்து வரிகளில் சிறுகதைகளே சிறையுண்டு இருப்பதைக் கூட நாம் பார்க்கலாமே?..

    பதிலளிநீக்கு
  140. ///ஜீவி said...
    //அதிரா இதை சொன்னது பட்டினத்தார்.//

    கோமதிம்மா.. இதைச் சொன்னது பட்டினத்தார் அங்கிள் இல்லையா?.. :))///

    ஹா ஹா ஹா அவர் அங்கிள்தான்.. அங்கிள்தான்:))

    பதிலளிநீக்கு
  141. அதிரா...

    அடடே... கதையை என்ன கருவில் எழுதலாம் என்றும் எடுத்துக் கொடுக்கறீங்களே...!

    பதிலளிநீக்கு
  142. வாங்க ஏகாந்தன் சார்...

    இதுதான் இலக்கியச் சீற்றமோ! நீங்கள் சொல்லும் கருத்துகளில் எனக்கும் உடன்பாடு.

    பதிலளிநீக்கு
  143. //அதிரா கொடுத்த பச்சைக்கல் நெக்லஸைப் பத்திரமா வைச்சிருக்கீங்க இல்லையா? //

    grrrrrrrr....

    பதிலளிநீக்கு
  144. //கீசாக்கா அது ஸ்ரீராமின் வலது பக்க பொக்கட்டில் இருக்கு.//

    ஹா.... ஹா... ஹா... கர்ர்ர்ர் ..:)

    பதிலளிநீக்கு
  145. //இருக்கிறது, ஸ்ரீராம். உங்களது 'லா.ச.ராமாமிருதம் கதைகள்' புத்தகமும் பத்திரமாக என்னிடம் இருக்கிறது. //

    ஹா... ஹா... ஹா.. நன்றி ஜீவி ஸார்..

    // பெரிய கட்டுரையாக ஆழ்ந்து அமர்ந்து எழுத வேண்டும்.//

    சீக்கிரம் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  146. //கடந்து தான் மற்றவர்களை படிக்க வேண்டும் என்றில்லை.. ஆனால் காலவித்தியாச வாசிப்பு ஈடுபாட்டில் நம் வளர்ச்சி வாசிப்பிலும் பிரதிபலிப்பதால் ஒவ்வொருவரையும் தாண்டித் தாண்டி வருகிறோம், இல்லையா? கடப்பது என்பது அதுவாக இருக்கலாம். அதனால் ஜெமோ சொல்வதில் ஆத்திரப்பட எதுவும் இல்லை.//

    'கடப்பது' என்பது என்ன என்பதான புரிதலில் இது பற்றி ஏதாவது சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!