ஞாயிறு, 20 மே, 2018

ஞாயிறு 180520 : இன்னொன்று எங்கே? "அட, அதாங்க இது!





இருளிலே சில ஒளித் துணுக்குகள்!


இலைகளை இழந்த மரங்கள் நிழல் சாட்சியாய்...


இந்தப் பெண்மணி மிகவும் புகழ்பெற்றவராம்.  யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று கேட்கச் சொல்கிறார் புகைப்படங்களைச் சுட்டவர்!



கார்க்கண்ணாடியில் என்ன எழுதியிருக்கு?



அதென்ன?  இரண்டு சூரியனா?


இப்போது பார்த்தால் ஒன்றுதான் தெரிகிறது?  இன்னொன்று எங்கே?   "அட, அதாங்க இது!"



ஊஞ்சலாடும் இளமை..  ச்சே..  ஊஞ்சலாடும் இலைகள்...



பூஜைக்கு வந்த மலரே வா...


கீழே மறைக்கப் பட்டிருக்கும் இடத்தில் என்ன இருந்திருக்கும்?


வெள்ளை ரோஜா.......க்....கள் சொட்டுதோ? 


ஜோடி மலர்கள் வாடும்முன்னே சேர்ந்தன...



இது தாஜ்மகால் இல்லை...

34 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  3. கடைசிப் படம் ஸ்வாமி நாராயண் மந்திர் மாதிரி இருக்கு. எந்த ஊர்?

    பதிலளிநீக்கு
  4. இன்னிக்கு இங்கே வரதுக்கே நினைப்பு வரலை. முகநூலில் லிங்க் பார்த்தேனா, அதான் வந்தேன். ஒரு வாரமா உங்க எ.பி. எனக்குத் திறப்பதே இல்லை. :)))) முகநூல் வழியாத் தான் வரேன்.

    பதிலளிநீக்கு
  5. துரை சார் வந்திருப்பார்னு நினைச்சேன். தி/கீதாவுக்குத் தோழி உடல்நலம் சரியாகலை போல!

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம். Travelling to Chennai for a short trip.

    பதிலளிநீக்கு
  7. வாங்க கீதா அக்கா.. உங்கள் கேள்வியைப் படித்ததும் படங்களை எடுத்தவர் வந்து எங்கே எடுத்தது என்று சொல்லுவார்!

    பதிலளிநீக்கு

  8. தி.கீதா! ஹா... ஹா.. ஹா...

    ஆமாம் நிலையகத்து கீதா ரெங்கனுக்கு கணினி மருத்துவரிடம் போயிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் பானு அக்கா... வெல்கம் டு சென்னை!

    பதிலளிநீக்கு
  10. ஹூஸ்டன் ஸ்வாமி நாராயண் மந்திரும் கிட்டத்தட்ட இதே அமைப்புத் தான்!

    பதிலளிநீக்கு
  11. க்ரோட்டன்ஸ் போல அல்லவோ தெரிகிறத. க்ரோட்டன்ஸ் பூஜைக்கு உதவுமா?
    கடைசி படம் பிர்லா மந்திர் போல தெரிகிறது. பிர்லா மந்திர்கள் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. //பிர்லா மந்திர்கள் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.// இருக்கலாம். எப்போவோ சிகந்திராபாதில் பார்த்தது பிர்லா மந்திர். அதனால் தெரியாது!

    பதிலளிநீக்கு
  13. எப்போதும்போல் படங்களுக்கு ரசனையாக தலைப்பு கொடுத்துருக்கீங்க. பாராட்டுகள்.

    படங்கள் எடுத்தவர் வந்து விளக்கம் சொல்வாரா?

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    படங்களை விட தலைப்புகள் அருமை.
    மலர்கள் அனைத்தும் அழகு. ஒரு சூரிய வெப்பமே தாங்க முடியவில்லையாம். இரண்டு சூரியனா. சாமி காப்பாத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.... ஹா.... ஹா... ஆமாம், ஆமாம்.. இரண்டு சூரியன் தாங்காதுதான். நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    சூப்பர் படங்கள். படங்களும், அதற்கேற்ற தலைப்புகள் அனைத்தும் மனதை கவர்கின்றன.

    படங்களை எடுத்தவரை எங்கோ செய்திகளில் பார்த்த நினைவு வருகிறது. யார் என சட்டென சொல்லத் தெரியவில்லை.

    இலைகளை இழந்த மரங்கள் நிழலை சாட்சியாக வைத்துக் கொண்டு வாதாடுகிறதோ? வர்ணனை மிக அருமை.

    சூரியர்கள் படமும் ஜோர். சூரியன் படமும் அருமை.

    ஊஞ்சலாடும் இலைகளும், பூஜைக்கு வந்த மலர்களும், 'கள்' சொட்டும் வெள்ளை ரோஜாக்களும், வாடும் முன்பே உஷாராக ஜோடி சேர்ந்த மலர்களும் மிக மிக அழகு.

    காலை பொழுதை இனிதாக்க, ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் படமாக, தலைப்பு தலைப்பாக ரசித்த கமலா ஹரிஹரன் சகோவுக்கு நன்றிகள். உடம்பு முற்றிலும் குணமாகி கலகலப்பாகி விட்டதா?

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    மறுபடி உடல் நலத்தைப் பற்றி விசாரித்ததற்கு மிகவும் நன்றி சகோ.
    முற்றிலும் குணம் இல்லையென்றாலும், இந்த மாதிரி அனைவரின் பதிவுகளை படித்து ரசித்து கருத்திடுவதின் மூலம் உற்சாகப்படுத்திக் கொள்கிறேன். இவையும் மனதை கலகலப்பாக்கும் இல்லையா? நன்றி .

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.



    பதிலளிநீக்கு
  17. ரசனையான படங்கள். ஆங்காங்கே புதிருடன், சற்றே யோசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  18. படம்,தலைப்பு, இரண்டும் ஒன்றைஒன்று போட்டி போட்டு்கொண்டு என்னை முதலில் ரஸி என்கிறது.இரண்டுமே அழகு. சேர்த்தே ரஸிக்கிறேன். அன்புடன்

    பதிலளிநீக்கு
  19. பல தலைப்புகளில் தாங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் ஆல்பம் அருமை

    பதிலளிநீக்கு
  20. படங்களும் அதற்கேற்ற வார்த்தை தலைப்புகளும் நன்றாக இருக்கிறது. இரண்டு சூரியன் கள்வடியும் பூக்கள் அழகு.
    மறைந்திருக்கும் இடத்தில் உணவு மேஜை இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி இரா. முத்துசாமி ஸார்..

    பதிலளிநீக்கு
  22. அழகிய வண்ணப்படங்கள் கண்களை ஈர்த்தன பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  23. படங்களுடன் அதிரடி வரிகள்
    அருமை அருமை

    பதிலளிநீக்கு
  24. படங்கள் தலைப்புகளுடன் மிக நன்றாக இருக்கின்றன ஸ்ரீராம் ஜி. இரண்டு சூரியன் தலைப்பை ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  25. துளசி அனுப்பியிருந்த கமென்ட் எல்லாம் தேடித் தேடி எடுத்து ஒவ்வொண்ணா போட்டுக்கிட்டு....இதோ நான் வரேன்...

    பூக்கள் செம அழகு....நிலவு படமும் செம அதிலும் அந்த இரண்டாவது படம் வாவ்!!! என்ன கலர் ஷேட்!!

    நதியும் அழகு க்ளிட்டரிங்க்!!! ரொம்ப அழகா இருக்கு அந்தப் படமும்....செம படங்கள் ஸ்ரீராம் உங்க தலைப்பு அசத்தல்...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!