ஞாயிறு, 13 ஜனவரி, 2019

ஞாயிறு : எங்கோ ஒரு சிலந்தி




ஹனுமாரின் வஸ்திரங்கள் காய்கின்றன


நான் மேலே போய் இந்த அம்மாவும் அப்பாவும் வராங்களா இல்லையான்னு...


எல்லோருமே அன்னாசியும் வெள்ளரியும் தேடித் போறாங்களே ..  ஏன் popcorn வாங்கலே


உட்கார வசதியாகத்தான் இருக்கு


கிளம்பிட்​டீ​ங்களா..  இதோ வந்துட்டேன்


ஆஞ்சியின் வாசலில் ஆராய்ச்சி மணி


இவ்வளவு தூரம் வந்து ஆஞ்சியை ஒரு படம் கூடப் பிடிக்கலைனா எப்படி?


ஒரு சிலந்தி எங்கோ இருக்கு 


நமக்கு தெரியும் 210 deg க்குள் இந்த நதியை எவ்வளவு படம் தான் எடுப்பீங்க?


ஒரு 30...40?


அப்பாடா ரெண்டு பேரும் இதோ வந்துட்டாங்க படகுத் துறைக்குப் போகவேண்டியதுதான்.




44 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அழகு. படங்களுக்கு நீங்கள் தந்திருக்கும் கேப்ஷன்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. அட.... இன்னிக்கு இன்னும் யாரும் வரலை இன்னும்....

    பதிலளிநீக்கு
  4. படங்களும் அதற்கான தலைப்பும் அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய நற்காலை வணக்கம்..
    படக்கதையும், படங்களும் வெகு அழகு.
    ஆஞ்சனேயருக்கு நமஸ்காரம்.

    இந்த ஞாயிறு அனைவருக்கும் இனிய நாளாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம். அழகிய படங்கள். இயற்கை எழில் கொஞ்சுகின்றது. அது சரி, காமாக்யா போனாங்களா? போயிருந்தால் அந்தப் படங்களையும் வெளியிடுங்கள். போக நினைச்சு முடியாமலே போகிறது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா அக்கா. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு கே ஜி எஸ் பதில் சொல்வார் என்று நம்பு.....கிறேன்!

      நீக்கு
  7. சிலந்தியைத் தேடினேன். கிடைக்கலை. அங்கே ஆஞ்சியைப் பார்த்ததுக்கு என்ன பிரசாதம் கிடைச்சதாம்? அதை விட்டுட்டீங்க போல? ஜிலேபி? அதாவது நம்ம உளுந்து ஜாங்கிரி? அங்கே இமர்த்தி என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்... நீங்க சொன்னதை கேஜிஎஸ் தவறா புரிஞ்சுக்கிட்டு அட்டென்ஷன்ல சில நொடிகள் நின்னிட்டிருப்பாரு. அடுத்த தடவை அவரை பயண விளக்கமும் சொல்லச் சொல்லுங்க. உணவு, அந்த இடங்களுக்கே உரிய ஸ்பெஷல் இனிப்பு என்பதையும் எழுதச் சொல்லுங்க.

      நீக்கு
  8. பிற்காலத்தில் இப்படங்கள்நினைத்துப்பார்க்க மகிழ்ச்சியூட்டும்

    பதிலளிநீக்கு
  9. அன்னாசியும், ஆரஞ்சும் அங்கே அபரிமிதமாக விளையும் என்பார்கள். வட மாநிலங்களில் அன்னாசி ரொம்பவே விலை மலிவு. பதினைந்து ரூபாய்க்கு ஒரு பெரிய தம்பளர் நிறைய அன்னாசிச் சாறு பம்ப்ளிமாஸும் சேர்த்துப் போட்டு பிழிந்து தருவார்கள். சர்க்கரை எல்லாம் போடுவதில்லை. ஜூஸ்களில் சேர்க்கவும் கூடாது. அங்கே கொஞ்சம் சாட் மசாலா அல்லது கறுப்பு உப்பு, ஜீரகப்பொடி மேலே தூவிக் கொடுப்பாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா சாம்பசிவம் மேடம்.... பம்பளிமாஸை ஞாபகப்படுத்தாதீங்க.

      இப்போதான் கும்பகோணத்துல, அதை வாங்கி, ரொம்ப கசந்ததுனால எப்படிச் சாப்பிடறதுன்னு, கஷ்டப்பட்டுச் சாப்பிட்டோம்.

      நீக்கு
    2. அதே அதே. அதென்ன கும்பகோணத்தில்தான் பம்ப்ளிமாஸ் கிடைக்குமா? என்னையும் அங்குதான் ஏமாற்றியது.

      நீக்கு
    3. @நெ.த. http://thalaivazhaivirundhu.blogspot.com/2014/06/blog-post.html இங்கே பாருங்க.என்னைப்போன்ற பம்ப்ளிமாஸ் பிரியர் எழுதி இருக்கார். இஃகி, இஃகி, வாங்கின உடனே சாப்பிடக் கூடாது. பழம் பழுத்து வாசனை தாங்கலைனா அப்போச் சாப்பிடணும். உங்களுக்கு ஏக அவசரம்!:)))))) ஒரு காலத்தில் கும்பகோணம், திருச்சி,தஞ்சாவூர்ப் பகுதிகளில் நிறைய விளைந்திருக்கிறது. இப்போப் பம்ப்ளிமாஸ்னா யாருக்கானும் தெரியுமானு சந்தேகம்! :( ஆனால் வடக்கே நிறையக் கிடைக்கிறது. எலுமிச்சை, நாரத்தைக் குடும்பம். அதே போல் ஊட்டி, கொடைக்கானலில் கொழுமிச்சங்காய்னு ஒண்ணு கிடைக்கும். ஊறுகாய் போட்டால் அமிர்தம்! மோர் சாதத்துக்கு அத்தனை சுவையாக இருக்கும். :))))) வாங்கினால் மட்டும் போதாது. பயன்படுத்தத் தெரியணும்.:)))) திருச்சியில் தாத்தாச்சாரியார் பழத்தோப்பில் கிடைக்கும் என்கின்றனர். நான் அங்கெல்லாம் போனது இல்லை.

      நீக்கு
    4. அக்கா கரீக்டா சொல்லிட்டீங்க பப்ளிமாஸ் பற்றி. எங்க வீட்டுலயும் ரொம்பப் பிடிக்கும் எங்களுக்கு (எதுதான் பிடிக்காது??!!! ஹா ஹா ஹா ஹா ஹா)

      இங்கு பப்ளிமாஸ் பார்த்தேன் ஏலஹங்கா டவுன்ல...முந்தா நாள் ...ஆனா வாங்கலை.....வாங்கனும்..

      நீங்க சொல்லிருக்காப்புல வாசனை வந்தாதான் பழம் பழமா இருக்கும்....

      ஹையோ அக்கா கொழுமிச்சை பத்தி நினைவு படுத்திட்டீங்க...

      கொழுமிச்சை ஊறுகாய், ரசம் சூப்பரா இருக்கும். திருச்சியில் முன்பு உறவினர் வீட்டில் அவங்க வீட்டுக்குப்பின்னாடி இருக்கும் மரம். நான் அப்ப சின்னவ...அவங்க வீட்டுல சாப்பிட்டுட்டு அப்புறம் கொழுமிச்சை எங்கு பார்த்தாலும் வாங்கி ரசம், ஊறுகாய்னு....நிறைய செஞ்சாச்சு. கிச்சிலிக்காய் அதுவும் மேட்லி சப்வேல கிடைத்தது. ஊறுகாய் நல்லாருக்கும்...

      கீதாக்கா நீங்க சொல்லிருக்காப்புல நானும் ஜூஸில் சர்க்கரை சேர்ப்பதில்லை. கறுப்பு உப்பு கொஞ்சம், வறுத்து பொடித்தா ஜீரகப் பொடி...

      கீதா

      நீக்கு
    5. என்னது.... இந்த நெல்லைக்கே அல்வாவா? பம்பளிமாஸை எப்படிச் சாப்பிடணும்னு சொல்றீங்களே கீசா மேடம்.. அவங்க என்க்கு எப்படி வித்தாங்கன்னு உங்களுக்கு வாட்சப்ல படம் அனுப்பறேன்.

      (ஆனா, தோலெல்லாம் எடுத்துட்டு, அதாவது சுளையில் உள்ள தோலையும், சாப்பிட்டால் பரவாயில்லை)

      நீக்கு
  10. படங்களுக்கான தலைப்புகள் நல்லா ருக்கு.

    அனைவருக்கும் காலை வணக்கம்

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. படம் பார்த்து நன்றாக கதை சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    இயற்கை காட்சிகள் நிறைந்த இடம்.

    பதிலளிநீக்கு
  14. மனித நடமாட்டமில்லை .அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் பஞ்சமில்லை. வனத்தினிடையே பயணம் செய்ய .கொடுத்து வைத்தவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும்,பிரம்ம புத்ராவும் அழகு. தலைப்புகளும் மிக்க அழகு. ஆஞ்சநேயருக்கு நமஸ்காரங்கள். அன்புடன்

      நீக்கு
  15. நல்ல தொகுப்பு. சிலந்தி கண்ணில் அகப்படவில்லை:).

    பதிலளிநீக்கு
  16. படங்கள் எல்லாமே நல்லாருக்கு...ஸ்ரீராம் உங்க கேப்ஷன்ஸ்....அந்த இடங்களுக்குப் போகாட்டாலும் சூப்பரா எழுதியிருக்கீங்க..

    கூடவே டூர் பற்றி விரிவாக எழுதலைனாலும் பரவாயில்லை...அட்லீஸ்ட் இவை என்ன இடம், எந்த மாநிலைம், பெயர்கள், சிறப்பு ஜஸ்ட் ஒரு லைன்..மட்டுமே....பாராவா இல்லைனாலும் படங்களுக்குக் கீழே கொடுக்கலாம் ஸ்ரீராம் முடிந்தால் அவங்ககிட்ட கேட்டு கொடுங்க அடுத்த பதிவுக்கு முன்ன அந்தந்த படங்களுக்குக் கீழ கொடுத்தா போதும்...

    எங்கோ ஒரு சிலந்தியைத் தேடினேன்...தேடுகிறேன்...தேடிக் கொண்டே இருக்கிறேன்...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நினைத்தேன் ,நீங்கள் கேட்டுவிட்டீர்கள் கீதா.😊

      நீக்கு
  17. ஆஞ்சு தரிசனம் சூப்பர்!! அழகு ஆஞ்சு!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. எந்த ஊர் ஆஞ்சநேயர் படங்கள் அழகோ அழகு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!