ஞாயிறு, 23 ஜூன், 2019

மியூசியத்தில் கொஞ்ச நேரம்...





மியூசியத்தில் படம் எடுத்தவர்

ஒவ்வொரு தளத்திலும் இருக்கும் சூப்பர்வைசர் சோதித்த பின்னரே நாம் காமெராவை உபயோகிக்க முடியும் 


அந்தந்த பிரதேசங்களை சேர்ந்த புகழ் பெற்ற  மனிதர்களின் கேலரி


உலகப் புகழ் பெற்றவருக்கு தனி பேனல்


தினசரி உபயோகத்தில் இருந்த கருவிகளின் காட்சி


மலைப்பிரதேசத்தில் மீன்பிடித்தல் முக்கிய தொழில் என்பது வியப்பை அளிக்கிறது

வேடர்கள் வில் அம்புடன் உண்டி வில்லும் உபயோகித்தனராம்

வேல் வேல் ...


மான் பிடிக்கும் பொறியாம்

மீன் பிடித்தார்கள் மான் பிடித்தார்கள் இங்கே நெல் அளக்கிறார்கள்

என்னவென்று சொல்லவும் வேண்டுமா?

 இப்படியும் சில கலை நயங்கள்




இன்னும் எவ்வ்ளவு தளங்கள்?

 வேட்டையாடப்பட்ட காட்டெருமை

49 கருத்துகள்:

  1. அன்பின் அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்...
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு.. வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இனி வரவிருக்கும் நட்புறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம், மற்றும் நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும், ஶ்ரீராமுக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
  3. ஏதோ உங்களால் இதையெல்லாம் காணும் நல்வாய்ப்பு கிடைத்தது..
    மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
  4. இன்னும் எத்தனை தளங்கள் எனத் தலைப்பிட்டிருக்கும் படத்தை எடுத்திருப்பவர் நல்ல ரசனையோடு எடுத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி காட்சிப்படுத்துவதில் அகிரா குரசோவா (திரைப்பட இயக்குநர்) எல்லோருக்கும் முன்னோடி. அவர் எடுத்த காட்சிகளைத்தான் பல படங்களில் இன்னமும் தொடர்கிறார்கள். இந்த மாதிரி மாடிகளை அவர் படங்களில் முதன் முதலில் எடுத்துள்ளார் என நான் படித்திருக்கிறேன்.

      நீக்கு
  5. ம்யூசியம் குறித்த அரிய தகவல்களை இங்கே அளித்திருப்பதால் அநேகமாய் கேஜிஎஸ்ஸே எல்லா விளக்கங்களும் கொடுத்திருக்கிறார் என நம்புகிறேன்.
    இந்த மாதிரித் தான் அஜந்தா, எல்லோராவிலும் ஃப்ளாஷ் பயன்படுத்தாமல் படங்கள் எடுக்கச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் முன்னிலையில் சரி என்று சொல்லிவிட்டு உள்ளே குகைக்குள் ஃப்ளாஷ் போட்டுப் படம் எடுத்தவர்கள் பலர்! :( ரொம்பவே வருத்தமாக இருந்தது. அதிலும் அஜந்தாவின் சித்திரங்கள் பல அழியும் நிலையில் உள்ளன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்குற்றால சித்திர சபையில் இதே காரணத்துக்காகவும், சித்திரங்கள் பழுதுபடக் கூடாது என்பதற்காகவும் புகைப்படங்கள் எடுக்க அனுமதிப்பதில்லை.

      எந்த அனுமதியையும் பொறுப்பா பயன்படுத்தும் ஆட்கள் அனேகமாக இல்லை என்பதால், யாருக்கும் அனுமதி தருவதில்லை. உதாரணமா திருப்பதி மற்றும் மற்ற கோவில்கள்ல சன்னிதி புகைப்படங்கள்லாம் எடுப்பாங்க (மூலவர் இல்லை. திருப்பதில, தங்க வாசலுக்குள்ள கேமரா போகாது). ஆனா மக்களுக்கு அனுமதி கொடுத்தா, அவங்க மூலவரோடு செல்ஃபி எடுப்பதிலேயே முனைப்பா இருப்பாங்க, செக்யூரிட்டிக்கும் ஆபத்து.

      நீக்கு
    2. ஆமாம் கீதா அக்கா.. எல்லாம் அவர்கொடுத்திருக்கும் விவரங்கள்தான்.

      நன்றி நெல்லை.

      நீக்கு
  6. புகழ் பெற்ற மனிதர்களின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  7. அரிய வாய்ப்பு. அருங்காட்சியப் புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  8. மூன்றாம் படத்தில் என்னுடைய முந்தைய பிறவி படம் வெளியிட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! நம்ம பேயாரா அது! அது சரி, உங்க பெயரைச் சொல்லலையே பேயார்?

      நீக்கு
    2. ஹிஹிஹிஹிஹி... ராங் கிளெய்ம்?!!

      நீக்கு
    3. எந்தப் பதிவிலோ கௌதமன் க்ளெய்ம் பண்ணி இருந்த நினைவு! தேட முடியலை! உட்கார முடியாமல் போயிட்டுப் போயிட்டு வந்துட்டு இருக்கேன்! :(

      நீக்கு
    4. என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லையே? நான் என்ன கிளைம் பண்ணினேன்?

      நீக்கு
    5. பேயார் யாரெனச் சொல்லி இருந்த நினைவு! ஒருவேளை கனவு, கினவு கண்டேனோ? தெரியலை!

      நீக்கு
  9. நல்ல பகிர்வு. மைசூர் ஜெகன்மோகன் அரண்மனையில் இப்படி வேட்டையாடப்பட்ட மிருகங்களின் தலைகள் காட்சிப் படுத்தப்பட்டிருப்பதை நிறையப் பார்க்க முடியும். அந்நாளில் அது பெருமைக்குரிய விஷயமாக இருந்திருக்கிறது :(.

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம்.

    ஸ்ரீராம் - இந்த வார கேப்ஷன் சிலதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது இதுதான்.

    சிவாஜி கணேசனுடன் கூட வந்தவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையிடம் - ஐயா...இவர்தான் சிவாஜி கணேசன்.
    கவிமணி - அப்படியா? இவர் யாரு? என்னவாயிருக்கார்?

    //அந்தந்த பிரதேசங்களை சேர்ந்த புகழ் பெற்ற மனிதர்களின் கேலரி//
    //உலகப் புகழ் பெற்றவருக்கு தனி பேனல்//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சம்பவத்தை கவியரசர் தனது சொற்பொழிவின் போது சொல்லியிருக்கிறார்...

      நீக்கு
    2. அமிதாப்பைக் கூட அந்த ஊர் பிரபலம் ஒருத்தர் விமானப் பயணத்தில் இப்படிக் கேட்டதா படிச்சிருக்கேன்!

      நீக்கு
    3. அமிதாப் பச்சனைக் கேட்டவர் டாடாவின் பாஸான JRD Tata. இப்படிக் கேட்டார்:
      Tata : What do you do?
      Amitabh : I am an actor.
      Tata : That's ok. What do you do for your living ?!


      நீக்கு
  11. அரிய காட்சிகள்தான் காண வைத்தமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  13. உங்களால் நாங்களும் பார்த்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. கலை வண்னங்கள் எங்கு எந்த உருக்கொண்டு
    இருந்தாலும் மதிப்பும் அழகுமே,,/

    பதிலளிநீக்கு
  15. // இன்னும் எவ்வளவு தளங்கள்...? //

    இன்று எபி-யும்...! (தொடரட்டும்)

    ???

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    அழகான படங்கள். கலை நயத்துடன் இருக்கும் அருங்காட்சியகத்தின் அரிய பொருட்களை படமாக எங்களுக்கு எடுத்துக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. /அந்தந்த பிரதேசங்களை சேர்ந்த புகழ் பெற்ற மனிதர்களின் கேலரி/ எனக்கு கவல் நிலையத்தில் இருக்கும் சில புகைப்படங்களோ என்பதையே நினைவுபடுத்தியது ம்யூசியத்தில் படமெடுத்தவர் ஸ்ரீ ராமின் சாயலில் இருக்கிறாரோ

    பதிலளிநீக்கு
  18. இனிய மாலை வணக்கம் ஸ்ரீராம்.

    இன்றைய படங்கள் சிறப்பு. அருங்காட்சியகங்களில் இருக்கும் கலைப் பொருட்களைப் பார்ப்பதில் எனக்கும் ஆர்வம் உண்டு.

    பதிலளிநீக்கு
  19. அழகான அருகாட்சியகம் படங்கள் எல்லாம் அழகு.

    லிபட் இல்லையா? மேல்தளங்களுக்கு செல்ல படி ஏற வேண்டுமா?

    மியூசியத்தில் படம் எடுத்தவர் வீரமாக போஸ் கொடுத்து இருக்கிறார்.



    பதிலளிநீக்கு
  20. இனிய திங்கள் காலை வணக்கம். மீன் பிடிக்கும் கருவிகள் எல்லாம் கலை நயத்தோடு பின்னப் பட்டிருக்கின்றன.
    பேயாக வருபவர் எங்கள் ஊரில் இருப்பவர்னு நினைக்கிறேன்.
    நிறைய சஸ்பென்ஸ் படங்களிலோ,இல்லை அஞ்சலி படத்திலோ
    இந்த மாதிரி தளங்களைப் பார்த்த நினைவு.

    பேய் பற்றிய பதிவில் தவறான படப் பெயர் கொடுத்திருக்கிறேன் .
    அந்தப் படத்தின் பெயர் ஈரம்.

    அனிவருக்கும் எல்லா நாட்களும் இனிமையாக இருக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. படங்கள் அத்தனையும் நன்றாக இருக்கின்றன. ம்யூசியம் சிறப்பாக உள்ளது. கலைநயம் அருமை..

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  22. //உலகப் புகழ் பெற்றவருக்கு தனி பேனல்//

    இதை யாரென்று குறிப்பிட்டிருக்கலாமோ?

    அந்த மாடி எடுத்த விதம் சூப்பர் அதாற்கான கேப்ஷனும்...

    மயில், முள்ளம்பன்றி அந்தக் கலைநயம் மிக்க கைவண்ணங்கள் எல்லாம் செமையா இருக்கு.

    படங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றன.

    இன்னும் கொஞ்சம் குறிப்புகள் கொடுத்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!