tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1532484586511413967..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :கோபம் பாபம் பழி - நெல்லைத்தமிழன் - சீதை 17கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger125125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43187823139257695122017-08-30T10:49:29.362+05:302017-08-30T10:49:29.362+05:30வருகைக்கு நன்றி ஏஞ்சலின். கதையைப் படித்துக் கருத்த...வருகைக்கு நன்றி ஏஞ்சலின். கதையைப் படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.<br /><br />நீங்கள் முரட்டுக்குணம் உடைய தகப்பனைப் பற்றி சொல்லியிருப்பது உண்மைதான். 'கோபம்' என்பதே ஒருவரது பலவீனம்தானே. அதை, சிறிது நேரம் கழித்து (அதாவது கோபத்தினால் விளைவு ஏற்பட்டபிறகு) புரிந்துகொள்வதால்தான், தான் கோபப்பட்ட நபரிடமே அன்பைப் பொழிந்து, 'கோபம்' வந்த காரணத்தையே dilute ஆக்கி, purposeஏ இல்லாமல் செய்துவிடுவார்கள். 'முன்னேறிய நாடுகளில், குழந்தைகளை அடிப்பது தடை செய்யப்பட்ட ஒன்று, அவர் 16-18 வயது ஆகிவிட்டால் பெரியவர் ஆகிவிடுவார், அவருடைய வாழ்க்கை முடிவுகளை அவரே எடுத்து அதன் விளைவையும் அனுபவிக்கும் நிலைமைக்கு ஆளாவார். பெற்றோரின் கடமை என்பது அங்கு இல்லை. இங்கு, இறக்கும் வரையில், மகனுக்கு 70 வயது ஆகியிருந்தாலும் அவன் குழந்தைதான். அப்போதும் அப்பாவை எதிர்த்துப் பேசாத கலாச்சாரமாகத்தான் இந்த பூமி அப்போது இருந்தது.<br /><br />உங்கள் கருத்துகளுக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50390852937680488102017-08-30T04:12:55.374+05:302017-08-30T04:12:55.374+05:30கதை மனதை என்னமோ செய்தது .காரணம் நான் இப்படிபட்டோரை...கதை மனதை என்னமோ செய்தது .காரணம் நான் இப்படிபட்டோரை பார்த்திருக்கேன் .இந்த முரட்டு தந்தை போல பலர் இன்னும் இருக்காங்க ..அப்பா கூட வேலை செய்தவர் மகன்களை மூர்க்கமாக அடிப்பாராம் அதில் வெறுத்துப்போய் இரண்டு மகன்களும் தவறான பாதையை தேர்ந்தெடுத்து வழிதப்பிய ஆடுகளாயிட்டாங்க தந்தை இறக்கும்வரை அதற்க்கு பிறகும்திருந்தவில்லை :( கோபத்தினால் முரட்டு குணத்தால் என்னத்தை சாதித்தார் அந்த தந்தை ..அன்பாய் நடத்தியிருந்தா ஓரளவு ஊர் மதிக்கும் பிள்ளைகளாகவாவது இருந்திருப்பாங்க ..பைபிளில் பழைய ஏற்பாட்டில் ஓரிடத்தில் இருக்கு வீட்டுக்கு அடங்காத பிள்ளையை தகப்பன் ஊர் பெரியோர் முன் ஒப்படைச்சி என்னவேனும்னாலும் செஞ்சிக்கோங்க (கல்லால் அடிங்கன்னு ) பெர்மிஷன் தருவாராம் தந்தை அப்போ அந்த காலத்தில் இருந்தே இந்த முரட்டு தந்தை மகன் லடாய் இருந்திருக்கு போல <br />நானறிந்த இன்னோர் தந்தை கண்டித்தே நல்ல மகனை நாசமாக்கிட்டார் :( சில விஷயங்கள் குறிப்பா நண்பர்களுடன் செல்வது நட்புக்களை வீட்டுக்கு அழைப்பது அந்தந்த வயதுக்குரிய சந்தோஷங்கள் அதை அனுபவிக்க விடணும் பிள்ளைகளை இல்லேனா இப்படி வாசுக்கள் பெருகக்கூடும் ..அட்லீஸ்ட் சீதாவாவது கொஞ்சம் கூடுதலா வாசுவிடம் அன்பு செலுத்தியிருக்கலாமோ என்று தோணுது ..<br />இங்கே வெளிநாட்டில் கையை நீட்ட முடியாது காப்பு ரெடியா வரும் கைக்கு ...அப்படியும் நம்ம இந்தியர் கொஞ்சம் வெளிக்காட்டி மாட்டியிருக்காங்க ...பிள்ளைங்க நேரே சைல்ட் அபியூஸ் லைனுக்கு கால் போட்ருவாங்க அதனால் கொஞ்சம் பயத்தோடதான் இருக்காங்க ..இன்னும் சில இந்தியர் தண்ணி கழுவி விட்ட மாதிரி ஒன்றுமே கண்டுகொள்வதில்லை இதனாலும் பிரச்சினைகள் தான் :(<br /> என்னைப்பொறுத்தவரை அன்புடன் கூடிய லேசான கண்டிப்பு இருந்தாலே போதும் ..ஒரு பிள்ளை தன தந்தையை கண்டு பயப்படுகிறான் என்றால் அதைவிட கொடுமை வேறில்லை ..<br /><br /><br />சீதாவும் காலம் கடந்து மன்னித்ததில் என்ன பயன் இறக்கும்வரை :(பேசாமல் அனுப்பி வச்சிட்டாரே கணவரை <br /><br />இதனால்தான் எப்பவும் கோபத்தை வெறுப்பை மட்டும் வைத்திருக்கக்கூடாது நாம் எதிராளியை மன்னிக்கும் நாளில் அவர் அதை ஏற்கும் நிலையில் இருப்பாரோ என்னவோ :(<br /><br /><br />பல குடும்பங்களில் நான் பார்த்ததை இங்கே கதையாக காட்சிப்படுத்தி விட்டீர்கள் ..அப்புறம் அந்த<br /> படங்கள் எல்லாம் நல்லா வந்திருக்கு ..வளையல் என்று எல்லாரும் குறிப்பிட்டு சொல்லும்போது அப்போவும்இப்பவும் எனக்குள்ள பழக்கம் வளையல் போட மறந்திருவேன் :) ஒருவேளை உங்க கதாநாயகி சீதா என்னை மாதிரியோ :) லாங் ஸ்லீவ்ஸ் போடும்போது வளையல் போடடாட்டியும் தெரியாது :) then புடவை முந்தானையை கைமேல் போட்டு வரைஞ்சிருந்தா வளையல் போடலைன்னாலும் தெரிஞ்சிருக்காது <br /><br />அப்புறம் மெட்டியும் மிஸ்ஸிங் :) <br /><br />உங்களை மாதிரியே கதைக்கு நானே படம் வரையணும்னு யோசிச்சி வச்சிருந்தேன் நேரம் கிடைக்க மாட்டேங்குது :) கதைக்கும் படத்துக்கும் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68455228247423780082017-08-28T20:48:45.454+05:302017-08-28T20:48:45.454+05:30என் எழுத்துக்களை ரசிப்பதற்கு எப்படி நன்றி சொல்லப்ப...என் எழுத்துக்களை ரசிப்பதற்கு எப்படி நன்றி சொல்லப்போகிறேன், நெல்லைத் தமிழன்? நன்றி, நன்றி, நன்றி.<br />நன்றி ஜீவி ஸார். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42613603442906812902017-08-27T22:41:32.610+05:302017-08-27T22:41:32.610+05:30ஸ்ரீராம்! உங்களுக்கு அரியலூர் அடுக்கு தோசை என்றால...ஸ்ரீராம்! உங்களுக்கு அரியலூர் அடுக்கு தோசை என்றால் எனக்கு 'தோழி' பத்திரிகை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17698722589197979302017-08-27T10:56:16.017+05:302017-08-27T10:56:16.017+05:30இன்றுதான் உங்கள் பின்னூட்டம் படித்தேன் ரஞ்சனி நாரா...இன்றுதான் உங்கள் பின்னூட்டம் படித்தேன் ரஞ்சனி நாராயணன் மேடம். மிகுந்த அனுபவம் உள்ள எழுத்தாளர் நீங்கள். கருத்துச் சொன்னதற்கு நன்றி.<br /><br />'தான்இறப்பதற்கு முன், கணவன் தன் குழந்தை வீட்டைவிட்டுப் போய், தன் வாழ்க்கையின் அர்த்தம் இல்லாமல் செய்துவிட்டாரே' என்றெழுந்த கோபத்தை மறக்கும், தன் கணவரை மன்னிக்கும் வாய்ப்பு கிடைத்ததுதான் 'கடைசி வரிகளை நோக்கிக் கதை சென்றதன் அர்த்தம்' என்று தோன்றியது. பையன் திரும்பி வருகிறான் என்றெல்லாம் கதையை நகர்த்தினால், நாடகமாகிவிடும் என்பது என் எண்ணம்.<br /><br />நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும். எல்லோரும் ஆவலுடன் படிப்போம். ஆனாலும் நீங்கள் என்ன எழுதினாலும் என் மனதில் உங்களைப் பற்றி நினைக்கும்போது, 'அரியலூர் அடுக்குதோசை' என்பதுதான் ஞாபகம் வரும். தளங்களுக்கு வந்த புதிதில் படித்த இடுகைகள் அவை, இயல்பான நிகழ்வுகள், அதைச் சொல்லிப்போன விதம், என்னை மறக்கவொட்டாமல் செய்துவிட்டது. அதைவிட்டால், உங்களது, ஆங்கிலம் போதித்த அனுபவங்கள்.<br /><br />அடுத்தமுறை, கதையைவிட, படங்கள் அட்டஹாசம் என்று சொல்லும்வகையில் படம் வரைய முயற்சிப்பேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49683569591000224272017-08-26T06:42:43.941+05:302017-08-26T06:42:43.941+05:30படங்கள் நன்றாக வந்திருக்கின்றன நெல்லைத் தமிழன். மு...படங்கள் நன்றாக வந்திருக்கின்றன நெல்லைத் தமிழன். முதலிலேயே பாராட்டியிருக்க வேண்டும். ஸாரி. பாராட்டுக்கள். கோமதி ஒரு ஓவியரின் மனைவி என்பதை நிரூபித்துவிட்டார். அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20235610177307272022017-08-26T06:39:02.254+05:302017-08-26T06:39:02.254+05:30முதலில் நெல்லைத் தமிழனுக்குப் பாராட்டுக்கள் கேட்கா...முதலில் நெல்லைத் தமிழனுக்குப் பாராட்டுக்கள் கேட்காமலேயே கதையை எழுதி அனுப்பியதற்கு. கதையை படித்து உள்வாங்கிக் கொண்டு கருத்துரையை எழுதிவிட்டு பிறகு பின்னூட்டங்களை படித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஸ்ரீராம், உங்கள் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களை தொகுத்துப் போட்டாலே சுவாரஸ்யமான ஒரு புத்தகம் கிடைக்கும் போல!<br /><br />நிற்க.<br />பின்னூட்டங்கள் எங்கெங்கோ போய் -மிக மிக சுவாரஸ்யம் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் - காமாஷிமா மூலம் மறுபடியும் கதைக்கு வந்துவிட்டது. இது நான் இந்தக் கருத்துரையை எழுதும் சமயத்து நிலவரம்.<br /><br />அதீத கண்டிப்பான அம்மா, அப்பா இருவருமே மறைமுகமாக வெறுக்கப்படுகிறார்கள் என்பதை பல வீடுகளில் பார்த்திருக்கிறேன். அப்பா கண்டிக்கும் போது அம்மா பரிந்து பேசலாம். அப்பா முன் இல்லையென்றாலும் குழந்தைகளிடம் தனியாகச் சொல்லலாம். என்னுடைய பாணி இதுதான்.தவறில்லை. நிறைய எழுதிவிட்டார்கள். நானும் அதையே திருப்பிச் சொல்ல விரும்பவில்லை. <br /><br />ஒரே ஒரு விஷயம் ஒப்புக்கொள்ள முடியவில்லை: பிள்ளை வீட்டைவிட்டு ஓடிப்போய் கணவரும் போன பிறகு யாரை மன்னித்தாள் சீதா? கதை தான் என்றாலும் கதாபாத்திரங்களை காரணமில்லாமல் சாகடிப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்கள் கதை என்றில்லை. இது பொதுவான கருத்து. அட்லீஸ்ட் பிள்ளை திரும்பி வந்திருந்தால் அந்த மன்னிப்பிற்கு ஒரு அர்த்தம் இருந்திருக்குமோ என்னவோ.<br /><br />ஒவ்வொரு கதை படிக்கும்போதும் இதுதான் சிறந்தது என்று தோன்றலாம். அப்படித்தான் ஜீவி ஸாரும் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் என் கதையை நம்பர் ஒன் என்று சொன்னதற்கு கீதாவிற்கு நன்றி சொல்லுகிறேன். மறுபடியும் நான் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஊக்கத்தை உங்கள் பாராட்டு அளிக்கிறது கீதா. நன்றி!<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69918558342437610872017-08-25T21:40:01.947+05:302017-08-25T21:40:01.947+05:30இன்றைக்குத்தான் உங்கள் கருத்தைப் பார்த்தேன் அனுராத...இன்றைக்குத்தான் உங்கள் கருத்தைப் பார்த்தேன் அனுராதா பிரேம்குமார். வருகைக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33054294337274672182017-08-24T18:01:26.675+05:302017-08-24T18:01:26.675+05:30உடம்பு சரியில்லாதபோதும் உங்கள் நேரத்தைச் செலவழித்த...உடம்பு சரியில்லாதபோதும் உங்கள் நேரத்தைச் செலவழித்து கதையைப் படித்துக் கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி காமாட்சியம்மா. உங்கள் பாராட்டுக்கு நன்றி.<br /><br />விரைவில் நலமுற்று, இரண்டு உணவுப் பதிவு 'சொல்லுகிறேன்'இல் எழுதுங்கள். எனக்கும் இன்னும் ஒரு வாரத்துக்குள் 3-4 நாள் விடுமுறை வரும். அப்போது செய்துபார்க்கத் தோதாக இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80609770712083251992017-08-24T17:52:41.655+05:302017-08-24T17:52:41.655+05:30அந்தப்பிள்ளை லோல்பட்டுவிட்டு திரும்ப வருவதுதான் மு...அந்தப்பிள்ளை லோல்பட்டுவிட்டு திரும்ப வருவதுதான் முன்பெல்லாம் ஸகஜம். அப்பாவோ,அம்மாவோ போயிருப்பா. இது என்னடான்னா இரண்டுபேர் ஸகஜநிலைையையும் முழுங்கி, ஆளும் போயி, அவளையும் கடைசிநேரத்தில் எவ்வளவு வருஷம் கழித்து படிக்கிறாளாம். ஊர் உலகத்திலே அப்பன்காரங்க இப்படிதான். இப்பொ என்ன பொண்ணே ஓடிப்போரா என்ன சொல்லமுடியும். ஒரு பாமர பாட்டி இந்தக்கதையைப் படித்துவிட்டு அபிப்ராயம் இப்படி சொல்லுவாள். ரொம்ப சோகம். பையன் வந்துடணும். <br />நான் மிகவும் உடல்நிலைஸரியில்லாது இருக்கிறேன். கண்டிப்பு கூடாதது இல்லை. அன்பும் கொடுத்திருந்தால் அது வேறு மாதிரி. நெ.தமிழன் கதையோ கொக்கோ. பாராட்டுகள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10534763965648968952017-08-24T14:12:37.808+05:302017-08-24T14:12:37.808+05:30//மீள்வருகைக்கு நன்றி கீதா சாம்பசிவம் மேடம். உங்கள...//மீள்வருகைக்கு நன்றி கீதா சாம்பசிவம் மேடம். உங்கள் புக்ககத்தின் VISIONஐப் பாராட்டுகிறேன். இதைத்தான் 'மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்' என்று SIMPLEஆச் சொல்லிடறாங்க.//இதன் பலாபலன்களை இன்றளவும் அனுபவிப்பதால் என்னால் இதை ஏற்க முடியவில்லை. சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லியே ஆகணும். அதே போல் குழந்தைகளிடம் கொஞ்சம் கண்டிப்புக் காட்டவில்லை எனில் பிடிவாதமும், நினைத்ததைச் சாதிக்கும் குணமும், பெரியோரிடம் அவமரியாதை காட்டுவதும் தான் நிலைக்கிறது! தவறுகளை ஆசிரியர்களோ வீட்டின் மற்றப் பெரியவர்களோ பார்த்துக் கண்டித்தால், "நீ யார் கண்டிக்க? உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ!" என்பார்கள்! ஆகவே சின்ன வயதிலிருந்தே செல்லம் கொடுக்கும் அளவுக்குக் கண்டிப்பும் காட்ட வேண்டும். மற்றபடி "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை!" என்பதில் எனக்குப் பெரிய அளவில் நம்பிக்கையும் உண்டு. அதைக் கடைப்பிடிக்கவும் செய்வேன்; செய்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85164104433185990182017-08-24T13:30:43.880+05:302017-08-24T13:30:43.880+05:30கீதா சாம்பசிவம் மேடம்... இதற்கு மட்டும் பதில் எழுத...கீதா சாம்பசிவம் மேடம்... இதற்கு மட்டும் பதில் எழுதலை.<br /><br />"இனிமேல் மன்னித்தால் என்ன? மன்னிக்காவிட்டால் என்ன? போனவர் துக்கத்தோடேயே போய் விட்டார். கடைசிப் படுக்கையில் மன்னித்திருந்தாலும் ஒரு அர்த்தம் இருந்திருக்கும்!"<br /><br />எனக்குத் தெரிந்தவர், தன் மரணப்படுக்கையில், தன் மூத்த மருமகளிடம், 'நான் உன்னை ரொம்பப் படுத்திவிட்டேனோ ..யா' என்று கேட்டார். அதற்கு அந்த மருமகள், 'அதுனால என்னம்மா' என்று பதில் சொன்னார். (பிறகு என்னிடம் சொல்லும்போது, அந்த சமயத்தில் மாமியார் வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்? இந்த 'படுத்தக்கூடாது' என்ற எண்ணம் முதலிலேனா வந்திருக்கணும் என்றார்)<br /><br />செய்த செயலைப் பொறுத்துத்தான் 'மன்னிப்பு' என்பதெல்லாம். நானும் என் பசங்க, 'சின்ன வயசுல நீங்க இதை இப்படிப் பண்ணினீங்க' என்று இப்போது குறை சொல்லும்போது, 'அப்பாவை மன்னிச்சுடுடா. அப்ப எனக்குத் தெரியலைடா' என்று சொல்லிவிடுவேன். அதற்கு என் பெண், 'இப்படி Sorry கேட்டு என்ன use. இப்போவும் நீங்க சொல்ற சில விஷயம் பிடிக்காது. பின்னால இதைச் சொன்னால், அப்போவும் 'Sorry மன்னிச்சுக்கோ'ன்னு சொல்லிடுவீங்க' என்று சொல்வார்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1743715793086393322017-08-24T13:28:52.376+05:302017-08-24T13:28:52.376+05:30கதை ரொம்ப அருமையாய் இருக்கு...
இது போல் தொடர்ந்து...கதை ரொம்ப அருமையாய் இருக்கு...<br /><br />இது போல் தொடர்ந்து பல கதைகள் எழுதி உங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள்....<br /><br />(பதிவு போட்ட உடனே படித்து. ..கருத்தும் கொடுத்தேன்...ஆனால் அன்று வரவில்லை...இன்று மீண்டும் வாசிக்கும் போது இத்தனை கருத்து மலையுனுள் நம்மது இல்லைனா பராவில்லை என்று தான் தோணியது..<br /><br />இருப்பினும் கொடுத்துவிட்டேன்...)Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72123684530112023202017-08-24T11:07:13.150+05:302017-08-24T11:07:13.150+05:30விரைவில் இன்னொரு கதை எழுதுவேன். அதில் நீங்கள் '...விரைவில் இன்னொரு கதை எழுதுவேன். அதில் நீங்கள் 'நன்றாயிருக்கிறது' என்று சொல்லும்படியான இரண்டு ஓவியங்களையும் வரைவேன். (எனக்குத் திருப்தி தரும் ஜெ. ஓவியத்தை, எங்கள்பிளாக் ஸ்ரீராம் வெளியிடுவாரா என்பது எனக்குச் சந்தேகம்தான்) 'படத்தைப் பற்றிய' உங்கள் கருத்துக்கு நன்றி அப்பாதுரை சார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10909487226934225702017-08-24T11:05:32.059+05:302017-08-24T11:05:32.059+05:30அப்பாதுரை சார்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...அப்பாதுரை சார்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் எழுதியது என் மனதைப் பாதித்தது. <br /><br />உங்கள் தளத்தில் அந்தக் கதை(?)யைப் படித்தேன்.ஒரு கதையோ அல்லது இடுகையோ, நம் வாழ்க்கைக்கு உபயோகமான ஒன்றைத் தெரிந்துகொள்ளச் செய்யும்போது நான் அடையும் திருப்திக்கு, பசியுடன் இருக்கும் ஒருவன், நல்ல சுருசியான உணவை உண்டபின் கிடைக்கும் திருப்திக்குத்தான் இணையாகச் சொல்லமுடியும். நீங்கள் எழுதிய "தந்தை சொல்" ஒரு சிறந்த கதை. Well Done.<br /><br />'தவறுகளிலிருந்துதான் எளிய மனிதர்களான நாம் பாடம் கற்றுக்கொள்ள முடியும்'. சில சமயம் கோபம் நம்மை எப்படி ஆட்கொண்டுவிடுகிறது என்பதை, அதன் விளைவுகளெல்லாம், கொஞ்ச காலம் கடந்து நம்மை உரசும்போதுதான் தெரிந்துகொள்ளமுடிகிறது. வாழ்க்கையில் திருத்தமுடியாத தவறுகளைச் செய்துவிடக்கூடாது, அதுவும் கோபத்தில், என்பதுதான் என்னுடைய தின ப்ரார்த்தனையில் ஒன்று.<br /><br />நான் சமயத்தில் என் குழந்தைகளிடம் சொல்லுவேன், 'நான் செய்வது தவறு என்று நீங்கள் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ, அதை என்னிடம் சொல்லுங்கள், நான் அதைத் தவறு என்று நினைத்தால் ஒத்துக்கொள்கிறேன். அதே சமயம் நீங்கள், நான் செய்வது தவறு என்று நினைப்பதை உங்கள் வாழ்க்கையில் எப்போதும் செய்யாதீர்கள்'. <br /><br />நன்றி அப்பாதுரை சார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55007852574011954982017-08-24T10:57:34.121+05:302017-08-24T10:57:34.121+05:30உங்கள் பாராட்டுக்கு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்.
...உங்கள் பாராட்டுக்கு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்.<br /><br />இதுமாதிரி கதை எழுதும்போது, உண்மையாக நம்முடைய மனநிலை எப்படி இருக்கிறது, நாம் எப்படி நடந்துகொள்கிறோம், எப்படி நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் மனது சிந்திக்கிறது. அதுதான் இந்தக் கதை எழுதும்போது என்றுடைய அனுபவம். இதைவிடவும் நிலைமை மோசமாகிவிடலாம் (அதையும் எழுதிப்பார்த்து பின்பு அந்தப் பாதையில் கதையைக் கொண்டுசெல்லவில்லை. அப்பா அடிக்கும்போது, பையன் தடுக்க நினைத்துத் தள்ளிவிடுகிறான், அப்பா, மேசையின் முனை தலையில் பட்டு இறந்துவிடுகிறாள்... இந்தப் புலத்திலும் கதையைக் கொண்டுசென்று, ராமபத்ரன் என்ற வாசுவை ஒரு சமயத்தில் சீதை மன்னிப்பதுபோல் எழுதலாம். ஆனால் அந்தச் சாதாரண குடும்பத்தில் இந்த மாதிரி ஒரு நிகழ்வைப் புகுத்த என் மனது ஒப்பவில்லை. அதனால் எழுதியவற்றை நீக்கி வேறு வழியில் கதையைக் கொண்டுசென்றேன்)<br /><br />கோமதி அரசு மேடம் சொன்னது என் மனதில் நிற்கிறது. "கோபத்தால் திருத்தம் ஏற்படாது வருத்தம்தான் ஏற்படும்".<br /><br />வருகைக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63531807307079796992017-08-23T20:49:41.193+05:302017-08-23T20:49:41.193+05:30என் அப்பாவுவின் அடி உடை திட்டுக்குப் பயந்து வீட்டை...என் அப்பாவுவின் அடி உடை திட்டுக்குப் பயந்து வீட்டை விட்டு ஓட நினைத்ததுண்டு. என் அப்பாவை மனதாராமல் திட்டியதும் உண்டு. <br /><br />என் அனுபவங்களை வைத்து சில வருடங்களுக்கு முன் <a href="http://moonramsuzhi.blogspot.com/2011/10/blog-post_12.html" rel="nofollow">தந்தை சொல்</a> என்று ஒரு கதை எழுதினேன்.. கற்பனையாக இருந்தாலும் என் தங்கைக்குப் புரிந்துவிட்டது.. ஓவென்று அழுது எனக்கு ஒரு கடிதம் அனுப்பினாள். அவளை சமாதானம் செய்வதற்குள் போதுமென்றாகிவிட்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50389738115276676672017-08-23T20:34:01.313+05:302017-08-23T20:34:01.313+05:30//அதாவது 4 மாதங்களுக்கு முன்பு, as if நாளைக்கே வெள...//அதாவது 4 மாதங்களுக்கு முன்பு, as if நாளைக்கே வெளியிட்டுடுவார் என்று எண்ணிக்கொண்டு)<br /><br />:-)<br /><br />இரண்டாவது படம் நன்றாகவே இருக்கிறது. முதல் படம் பரவாயில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34886901720598423092017-08-23T20:29:47.405+05:302017-08-23T20:29:47.405+05:30ஒரு முறை ஜீவியிடம் "ஜெயகாந்தன் அப்படி என்ன சா...ஒரு முறை ஜீவியிடம் "ஜெயகாந்தன் அப்படி என்ன சாதித்து விட்டார்?" என்று கேட்ட நினைவு. வருந்துகிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74793178987178307042017-08-23T20:27:59.819+05:302017-08-23T20:27:59.819+05:30பின்னூட்ட கருத்தாடல் அபாரம். பின்னூட்ட கருத்தாடல் அபாரம். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60500006043229876722017-08-23T20:27:27.037+05:302017-08-23T20:27:27.037+05:30மனதை வருடிப் போன கதை. படித்ததும் எல்லாரையும் மன்னி...மனதை வருடிப் போன கதை. படித்ததும் எல்லாரையும் மன்னிக்கத் தோன்றுகிறது.<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25838105400474252882017-08-23T16:41:35.004+05:302017-08-23T16:41:35.004+05:30பாராட்டுக்கள் நெல்லை தமிழன்! நல்ல கதை. நேற்று முதல...பாராட்டுக்கள் நெல்லை தமிழன்! நல்ல கதை. நேற்று முதல் இன்று மதியம் வரை நெட் வேலை செய்யவில்லை. அதனால் உடனே பின்னூட்டம் இட முடியவில்லை.<br /><br />எங்கள் தூரத்து உறவில் ஒருவர் இப்படித்தான் மிகவும் கண்டிப்பாக இருப்பார். வீட்டில் இட்லி, தோசை செய்தால் கண்டிப்பாக சட்னி, சாம்பார் மிளகாய் பொடி என்று எல்லாம் செய்ய வேண்டும். சப்பாத்தி என்றால் குருமா.. அவர் மனைவி அவருடைய ஷூவை தினமும் பாலிஷ் செய்து ரெடியாக வைக்க வேண்டும். குழந்தைகளை பச்சைத் தண்ணீரில்தான் குளிப்பாட்ட வேண்டும்,அதுவும் தினசரி இரண்டு முறை. இப்படி சாப்பாட்டு விஷயம் முதல் குழந்தைகள் வளர்ப்பு வரை எல்லாவற்றிலும் கடும் நிபந்தனைகள். குழந்தைகள் தவறு செய்தல் பெல்ட்டால் அடிப்பது..அவருடைய இந்த அதீத கண்டிப்பை தாங்க முடியாத அவர் மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுதே வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டான். <br /><br />இப்படி அதீத கண்டிப்பில் வளரும் குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் வீட்டை விட்டு ஓடா விட்டாலும், தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும், சுயமாக முடிவு எடுக்க முயாதவர்களாகவும்தான் இருக்கிறார்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25715137678370261222017-08-23T11:05:55.058+05:302017-08-23T11:05:55.058+05:30அதிரா... சர்வ சாதாரணமாக விவேகசிந்தாமணி பாடலைக் கோட...அதிரா... சர்வ சாதாரணமாக விவேகசிந்தாமணி பாடலைக் கோடி காண்பித்துச் சென்றுவிட்டீர்கள். Brilliant.<br /><br />ஆபத்துக் குதவாப் பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்<br />தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்<br />கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்<br />பாபத்தைப் போக்காத் தீர்த்தம் பயனிலை ஏழும் தானே.<br /><br />இதுல 'கோபத்தை அடக்கா வேந்தன்' என்பதை, 'கோபத்தை அடக்கா குடும்பத் தலைவன்' என்றும் பொருள்கொள்ளலாம். 'குருமொழி கொள்ளாச் சீடன்' என்பதை, 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பதைப் புரிந்துகொள்ளாத மகன் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.<br /><br />பாராட்டுக்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81224782531424093812017-08-23T11:02:52.859+05:302017-08-23T11:02:52.859+05:30வருகைக்கு நன்றி புலவர் இராமானுசம் ஐயா. ஒரு பின்னூ...வருகைக்கு நன்றி புலவர் இராமானுசம் ஐயா. ஒரு பின்னூட்டத்தில் 'சாவி'யை நான் தொட்டதால், 'விடாது கருப்பு' என்பதுபோல, சாவி அவர்களின் வாழ்க்கைப் பயணம் என்று பின்னூட்டங்கள் விரிந்துவிட்டன. சாவி சாருக்கு அத்தனை பெருமையும் 'தகும்' 'தகும்'.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40008030503387604082017-08-23T11:00:47.440+05:302017-08-23T11:00:47.440+05:30வாங்க பகவான்ஜி. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. '...வாங்க பகவான்ஜி. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. 'பையன்' அப்பாவைக் கொண்டு பிறந்திருந்தால், அந்தப் பெண் என்ன செய்வாள்? சீதை என்ற பெயரைக் கேட்டாலே எனக்கு, 'ஐயையோ நானும் ஓர் பெண்ணாய்ப் பிறந்ததை' என்ற பாடல்தான் எனக்கு ஞாபகம் வரும். பெண்களின் கஷ்டம் அநுதாபத்துக்குரியது. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com