tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3269206169218983758..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப்போடும் கதை : ஞானம் - ஜீவி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22299397294021618582020-10-10T18:23:09.142+05:302020-10-10T18:23:09.142+05:30உண்மையைச் சொல்லுவதெனில் எங்க வீட்டில் என் மாமியார்...உண்மையைச் சொல்லுவதெனில் எங்க வீட்டில் என் மாமியார் தான் வாசல் தெளித்துக் கோலம் போடுவார். என்னிடம் இருந்தவரை 2005 ஆம் ஆண்டு வரை! அவர் அதை விட்டுக் கொடுத்ததில்லை. தான் தான் செய்வார். நான் கோலம் என்னிக்காவது போட்டால் அக்கம்பக்கத்தினர் மாமியாருக்கு என்ன ஆச்சு என்று தான் கேட்பார்கள். இது ஒண்ணும் ஏறுமாறெல்லாம் இல்லை. நடப்பது/நடந்தது/இனியும் நடக்கப் போவது! அதிலும் கிராமத்தில் இருந்தவரையில் நான் வெளியே எட்டிக் கூடப்பார்க்க முடியாது/பார்த்ததில்லை. எதிர்த்த கொல்லைக்குப் போனால் கூடக் கடைசி நாத்தனார் துணையுடன் அவளுக்கு சௌகரியப்பட்டப்போத் தான் போகணும். அதிலும் தெருவில் யாரானும் இருந்தால் உடனே நான் உள்ளே வந்துடணும்! போகக் கூடாது. நாத்தனார் ஆத்துப் பெண் என்பதால் அவள் போவாள். இந்த மாதிரிப் புண்ணியம் பார்த்துக் கொண்டு கோலம் போடச் சொல்லுவது, விளக்கேற்றச் சொல்லுவது எல்லாம் எங்க வீடுகளில் நான் அதிகம் பார்த்ததில்லை. மாமியார் சொன்னால் தான் நான் ஸ்வாமிக்கு விளக்கே ஏற்றலாம். இல்லைனா சும்மா நமஸ்காரம் பண்ணிட்டு வந்துடணும். மருமகளை இளையவளாய் வீட்டின் முதல் பெண்ணாய் நினைப்பவர்கள் எல்லா மாமியார்களும் அல்ல! குதிரைக்குப் போட்ட பட்டை போல அதை விட்டுக் கண்களைத் திருப்பாமல் அதுக்குள்ளேயே பார்த்தால் இப்படித் தான் தெரியும்! என் கணவர் சாப்பிடும்போது கூட கிராமத்தில் இருந்தப்போவும் சரி/சென்னை வந்தப்புறமும் சரி, மாமியார் சொன்னால் தான் நான் சாப்பாடு போடமுடியும். அப்படியே போடவந்தாலும் என்னிடம் இருந்து பாத்திரத்தை வாங்கி என் கடைசி நாத்தனாரிடம் மாமியார் கொடுத்துவிட்டு அவரும் அங்கேயே இருந்து கொண்டு என்னை நீ அந்தப்பக்கம் போ! என்று சொல்லி விடுவார். இதை எழுத வேண்டாம்னு நினைச்சேன். ஆனால் ஏறுமாறாகப் புரிந்து கொண்டதாகச் சொன்னதால் எழுதும்படி நேர்ந்தது. மன்னிக்க வேண்டும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8984129134667194902020-10-10T18:14:49.933+05:302020-10-10T18:14:49.933+05:30அப்படிச் சொல்பவர்கள்/சொன்னவர்கள் உண்டு! இருக்கிறார...அப்படிச் சொல்பவர்கள்/சொன்னவர்கள் உண்டு! இருக்கிறார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28117736253684832232020-10-10T16:06:57.257+05:302020-10-10T16:06:57.257+05:30//அவ்வளவு ஈடுபாடு கொண்ட மாமியார், தானே வாசல் தெளித...//அவ்வளவு ஈடுபாடு கொண்ட மாமியார், தானே வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு ஒரு வாக்குவாதத்தைத் தவிர்த்திருக்கலாம்.//<br /><br />பக்கத்து வீட்டில் கோலம் போட வந்த இளம் பெண், "என்ன மாமி? உங்க மாட்டுப்பெண் ஆத்தில் இல்லையா?" என்று தான் கேட்பாள்.<br /><br />'அவ்வளவு ஈடுபாடு' என்பது குடும்ப நலனில். மருமகள் தான் இளையவளய் வீட்டின் முதல் பெண். அவள் தான் கோலம் போட வேண்டும், அவள் தான் சுவாமி விளக்கு ஏற்ற வேண்டும்; அத்தனை புண்ணியமும் அவளுக்கும் அவள் வழிவழி வரப்போகிற குடும்பத்திற்குத் தான் என்ற பெரும் கனவு.<br /><br />இதை எத்தனை தரம் வலியுறுத்திச் சொன்னாலும் ஏறுமாறாகத் தான் புரிந்து கொள்ள வேண்டுமா"..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60181580558685562622020-10-10T15:59:42.452+05:302020-10-10T15:59:42.452+05:30அதான் மாமியார் எதற்கு இருக்கிறார்?.. அவர் இலையை எ...அதான் மாமியார் எதற்கு இருக்கிறார்?.. அவர் இலையை எடுத்தால் என்ன குடியா முழுகிப் போய் விடும்?.. என்று நல்லவேளை ஏனோ சொல்லவில்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81846491083868220822020-10-09T18:54:44.028+05:302020-10-09T18:54:44.028+05:30அபுரி, டி.டி.
அத்தனை மகளென்றாலும் இந்தப் பிரச்னை...அபுரி, டி.டி.<br /><br />அத்தனை மகளென்றாலும் இந்தப் பிரச்னை இருந்து தான் தீருமோ?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56740300140151277632020-10-09T18:49:29.984+05:302020-10-09T18:49:29.984+05:30அப்படியிருப்பத்தை விட பேசாமல் 'விட்டதடி ஆசை வி...அப்படியிருப்பத்தை விட பேசாமல் 'விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட' என்று சந்நியாசம் வான்கிக் கொண்டு போகலாம்.<br /><br />'தமிழை அவமதிப்பவரை தாய் தடுத்தாலும் விடேன்' என்று சூளுரைக்கும் போது தாய் தான் முன்னிலைப்படுத்தப் படுகிறார். இன்னொருவர் தன் மனைவியேயானாலும் தாயைப் பழிப்பத்தை எந்த ஆண்மகனாலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இது தான் துடிக்காவிட்டாலும் தன் சதை துடிக்கும் என்பது போல ஒன்று. <br /><br />இதனால் தான் மா.ம. பிரச்சனையே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.<br /><br />கருத்திட்டமைக்கு நன்றி வெங்கட்ஜி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8547023077336285022020-10-09T18:11:42.137+05:302020-10-09T18:11:42.137+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23520513887142227812020-10-09T13:15:45.840+05:302020-10-09T13:15:45.840+05:30வணக்கம் சகோதரரே
/அதாவது வழி வழி வரும் நம் பண்பாட...வணக்கம் சகோதரரே <br /><br />/அதாவது வழி வழி வரும் நம் பண்பாட்டு வழிகாட்டல்கள் தோற்கின்றன. அதன் தோல்விக்கு நாம் காரணமாக இருக்கிறோம் என்பதே உண்மை./<br /><br />/'நீ எப்படி நடந்து கொண்டாயோ, அப்படியே உனக்கும் நிகழும்' என்பது இறைவன் வகுத்த நீதி. இந்த ஜென்மத்தில் தப்பித்தாலும் அடுத்த ஜென்ம நம்பிக்கையை மனத்தில் விதித்திருக்கும் இந்திய தர்ம சாஸ்திர விதிகளின் மேலான நம்பிக்கைகள் தாம் நமக்கு வழிகாட்ட வேண்டும்./<br /><br />/சகிப்பு மனப்பான்மையோடு நமக்கு நிர்ணயித்திருக்கிற வாழ்க்கை நிலைகளைக் கடப்போம். இந்த அளவே இந்த நேரத்தில் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.நல்லபடி இந்த நிகழ் வாழ்க்கையை கடக்க நம்முள் இருந்து நம் இறைவன் வழி காட்டட்டும்/<br /><br />ஆகா . தங்களது அருமையான பதில் கருத்துக்கள் கண்டு மெய் சிலிர்த்து விட்டேன். சிறப்பான கோணத்தில் வாழ்க்கையின் உறவு நிலைகளை, வாழும் வாழ்வியல் முறைகளை அலசி பதிலுரைகள் வழங்கும் தங்களது திறமைக்கு முன் நான் மிக மிக சாதரணமானவள். உங்களது பதில்களை, மனதில் உதிக்கும் கருத்துக்களை நான் என்றும் பணிவுடன் ஏற்கிறேன். கற்கிறேன். மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40002925886823772872020-10-08T18:52:10.324+05:302020-10-08T18:52:10.324+05:30அருமையாக உணர்வு பூர்வமாகச் சொல்லியிருக்கிறீர்கள், ...அருமையாக உணர்வு பூர்வமாகச் சொல்லியிருக்கிறீர்கள், சகோ.<br /><br />'இப்படியாக இருந்தால் எப்படி நன்றாக இருக்கும்?' என்பது பொதுவாக கதைகளுக்கான இயல்பான வழிகாட்டல் தான். ஆனால் நடைமுறை என்பது வேறாக இருக்கும் பொழுது, கதைகள் நாளாவட்டத்தில் தங்கள் வீரியத்தை இழக்கின்றன என்பதே உண்மை. அதாவது வழி வழி வரும் நம் பண்பாட்டு வழிகாட்டல்கள் தோற்கின்றன. அதன் தோல்விக்கு நாம் காரணமாக இருக்கிறோம் என்பதே உண்மை.<br /><br />நம் இதிகாச புராண வேத வழிகாட்டல் மேன்மைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. <br />அவற்றை மனப்பூர்வமாக நம்மால் கடைபிடிக்க முடியவில்லை என்ற நிதர்சனம்<br />அந்த மேன்மைகளை செருப்புக் காலால் தேய்த்து மிதித்துப் புறந்தள்ளி விட்டது.<br /><br />பாக்குவெட்டி இடுக்குக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் பெண்கள் அவர்கள் அந்த நேரத்து மாமியாரும் இருந்தாலும் சரி மருமகளாய் இருந்தாலும் சரி பரிதாபத்திற்குரியவர்களே. இந்த பரிதாபத்தில் யாரும் நேர் x எதிர் இல்லை.<br />இருவரும் பெண்கள் என்ற அம்சத்தில் ஒரு சாராரே.<br /><br />மாமியார்களும் மருமகள்களும் அந்தந்த நேரத்து தம் சுயத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிறார்கள். இந்தப் போராட்டம் நேர்ந்து விடாமலேயே சாதுர்யமாகவோ அல்லது தங்கள் இயல்பான நடவடிக்கைகளாலோ அதைக் கடந்து வந்தவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.<br /><br />பெண்களுக்கு துவிஜ வாழ்க்கை அமைப்பு என்பது இறைவனால் சந்ததி விருத்திக்காக தீர்மானிக்கப் பட்ட ஒன்று. ஒரு வீட்டில் வளர்ந்து இன்னொரு வீட்டில் வாழ்க்கைப்பட்டு வாழ்க்கைப்பட்ட இடத்தையே தன் அதற்கு மேலான வாழ்க்கைக்கான களமாகக் கொள்ள வேண்டும் என்ற வாழ நேர்ந்த வாழ்க்கையின் விதியாக (சட்டமாக) நிர்ணயிக்கப்பட்டு விட்டது. சொல்லப் போனால் இதுவே இயற்கை நியதி.<br /><br />'நீ எப்படி நடந்து கொண்டாயோ, அப்படியே உனக்கும் நிகழும்' என்பது இறைவன் வகுத்த நீதி. இந்த ஜென்மத்தில் தப்பித்தாலும் அடுத்த ஜென்ம நம்பிக்கையை மனத்தில் விதித்திருக்கும் இந்திய தர்ம சாஸ்திர விதிகளின் மேலான நம்பிக்கைகள் தாம் நமக்கு வழிகாட்ட வேண்டும்.<br /><br />சகிப்பு மனப்பான்மையோடு நமக்கு நிர்ணயித்திருக்கிற வாழ்க்கை நிலைகளைக் கடப்போம். இந்த அளவே இந்த நேரத்தில் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.<br />நல்லபடி இந்த நிகழ் வாழ்க்கையை கடக்க நம்முள் இருந்து நம் இறைவன் வழி காட்டட்டும். தங்கள் முதிர்ச்சியான கருத்துப் பகிர்வுக்கு நன்றி, சகோ.<br />மனம் நிறைந்த மரியாதையுடன்,<br />ஜீவி <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66748923105426870442020-10-08T10:07:49.153+05:302020-10-08T10:07:49.153+05:30சும்மா இருப்பது சுகம் - குறிப்பாக ஆண்கள் - தனது அம...சும்மா இருப்பது சுகம் - குறிப்பாக ஆண்கள் - தனது அம்மாவும் மனைவியும் சண்டை போடும்போது! :) பல வீடுகளில் இன்றைக்கும் இந்தப் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. <br /><br />கதைகள் தொடரட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85981111969833407732020-10-07T20:14:29.989+05:302020-10-07T20:14:29.989+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் சொல்படி வாசித்தேன் சகோதரர...வணக்கம் சகோதரரே <br /><br />தங்கள் சொல்படி வாசித்தேன் சகோதரரே. தாங்கள் சொல்வது மிகவும் உண்மைதான். மாமியார் நமக்கு நல்ல ஆசானாக இருக்கிறார் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டது ஒரு காலம். இது அந்த காலத்திற்கு எல்லோருக்குமே உடன்பாடாக ஏன் இருவருக்குமே இசைவாகவே இருந்தது. (நான் சொல்லும் அந்த காலம் எனக்கும் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு.அப்போது ஆண்களும், தன் மனைவியைப்பற்றி அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள்.) அதன் பின் படிப்படியாக நாகரீகங்கள் வளர வளர மாமியாரின் பேச்சுகளுக்கு மதிப்பு கொடுப்பது போல் பேசுவதும், அவர்களைப் பற்றி தன் பிறந்த வீட்டு உறவுகளுக்கு எதிரில் ஒரு மாதிரி பேசுவதும். அது போலவே மருமகளை தன் வீட்டு உறவுகளுக்கு முன் அவள் மனம் புண்படும்படி குறை கண்டு பேசுவதும், என்றெல்லாம் ஒரு வித போர் மனப்பான்மைகள் துவங்கி விட்டன. பிறகு தான் பள்ளியில் கற்று பெற்று வரும் பட்டங்களின் நிறைவால், தன் அடிப்படை வாழ்க்கை கல்வி (தன் அம்மா வீட்டில் கற்று வந்த பழக்க வழக்கங்கள்) போதுமென்ற எண்ணங்களில்,ஆசானாக வேறு யாரையும் ஏற்று போரிட இயலாமல் தனிக் குடித்தனங்கள் உண்டாகத் தொடங்கி விட்டன. ஒருவருக்கொருவர் அனுசரிக்க போராட்டங்கள்தான் முதல் படியாய் இருந்தது. அதை இன்முகங்களுடன் கடந்து வந்த மா.மருமகள்களும் இருந்தார்கள். முதல் படியிலேயே போரிட்டு இரண்டாம் படிக்கு ஏறாதவர்களும் எப்படியோ ஒருவரையொருவர் குறைகளைச் சொல்லிக் கொண்டே வாழ்ந்தார்கள். இந்த போர் கொடூரங்களின் உச்சமாக மருமகள் பற்ற வைக்கும் போது மட்டும் ஸ்டவ்கள் வெடித்தன. அதுபோல் வயதானவர்களுக்கு என்றே முதியோர் இல்லங்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டன. பின்பு அவையெல்லாம் நடைமுறையில், போரடித்துப் போனதில் அயல்நாட்டு மோகங்கள் வந்து குவிந்தன. இப்படியாக மா. ம பிரச்சனைகள் இன்னமும் தலைத் தூக்கியபடிதான் இருக்கின்றன. இதற்கு இருவருமே ஒருவக்கொருவர் விட்டுத்தரும் குணாதிசயங்களோடு இறைவன் அருளால் அமைந்து விட்டால், அந்த குடும்பம் தெய்வ சன்னிதானத்திற்கு ஒப்பானது. அப்படிபட்டவர்களும் இன்றும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை மனம் குளிர நன்றியோடு போற்றுவோம். ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதியுள்ளேன். தவறாக ஏதும் இருந்தால் மன்னிக்கவும். நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72693208230047596852020-10-07T15:04:18.532+05:302020-10-07T15:04:18.532+05:30வாங்க, கோமதிம்மா.
வயதாக வயதாக ஒரு கனிந்த நிலையை அ...வாங்க, கோமதிம்மா.<br /><br />வயதாக வயதாக ஒரு கனிந்த நிலையை அடைகிறோம் என்பது உண்மை தான்.<br /><br />நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதும் அந்த வயதில் ஒருவித தண்டனை தான். அந்தத் தண்டனையை கூடிய மட்டில் அவர்களுக்கு நாம் அளித்து விடாமல் இருப்பதே பிறவி எடுத்த பெரும் பயன்.<br /><br />அவர்கள் ஆசி இருக்கும் வரை எந்தக் கவலையும் இல்லை. நெருப்பாற்றையும் நீந்திக் கடக்கலாம். <br /><br />நன்றி.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9058409347183906792020-10-07T14:55:49.527+05:302020-10-07T14:55:49.527+05:30இருவரின் புரிதலுக்கும் மிக்க நன்றி. மாமியார்களின்...இருவரின் புரிதலுக்கும் மிக்க நன்றி. மாமியார்களின் கபடில்லாத அன்பைப் புரிந்து கொண்டிருக்கும் மருமகள்கள் மனசில் வேற்றுமையான எண்ணங்கள் தோன்றவே தோன்றாது என்பது இன்னொரு பக்க உண்மை.<br /><br />மிஞ்சி மிஞ்சிப் போனால் இவர் யார்?.. தன் அன்பான (அப்பாவியான) கணவனின் தாய் அல்லவோ?' -- என்று ஆழ்ந்து உணர்ந்தால் போதும்.<br />அத்தனை ஈகோக்களும் பஸ்பமாகும். <br /><br />தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் தன் கணவனின் வழியாக மாமியார் அல்லது மாமனார் ஜாடையிலேயே அமைவதை எப்படித் தவிர்க்க முடியும்?<br /><br />ஒரே ஒரு நிமிடம் மனசார நினைத்துப் பார்த்தால் போதும்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4328283807922633502020-10-07T14:46:53.699+05:302020-10-07T14:46:53.699+05:30'ஆணுக்கு மத்தளம் போல இரண்டு பக்கமும் இடி..'...'ஆணுக்கு மத்தளம் போல இரண்டு பக்கமும் இடி..' என்று எனது அந்த மறுமொழி ஆரம்பிக்கும். தங்கள் தகவலுக்காக்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53375784768049418382020-10-07T14:44:51.196+05:302020-10-07T14:44:51.196+05:30தாங்கள் இந்தக் கதையை வாசித்து பகிர்ந்து கொண்ட நல்ல...தாங்கள் இந்தக் கதையை வாசித்து பகிர்ந்து கொண்ட நல்லெண்ணங்களுக்கு நன்றி, சகோ.<br /><br />//ஆனால். மாமியார் ஸ்தானம் வந்த பின் அந்த நிலைபாடு மறந்து போகிறது//<br /><br />இந்த இடத்தில் தான் ஒரு சின்ன ஆனால் ஆழ்ந்த திருத்தம், சகோ.<br /><br />மாமியார் ஸ்தானம் என்பது நல்ல மாமியார்களுக்கு ஒரு ஆசிரிய மனப்பான்மையைக் கொடுக்கிறது. அந்த குடும்ப பழக்க வழக்களில் மருமகளை ஒரு மாணாக்கனாய் வரித்து பயிற்றுவிக்க வேண்டும் என்று நினைக்கிறாள். பயிற்சிகளில் ஆசிரியர்களுக்கே உரிய கடுமை அவ்வப்போது தலையெடுக்கலாம். ஆனால் நல்ல மருமகளாய் வாய்க்கிற மாணாக்கர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள். குடும்பப்பாங்கும் தழைத்தோங்கும்.<br /><br />இது பற்றி மேலே கீதாம்மாவிற்கு நான் போட்டிருக்கிற பின்னூட்ட மறுமொழியை வாசிக்க வேண்டுகிறேன், சகோ.<br /><br />பா.வெ.! மிகச் சிறப்பாக அந்த மாமியார் பாத்திரத்தின் வார்ப்பை எடுத்துரைத்த தாங்களும் மேலே கீதாம்மாவுக்கு மறுமொழியாய் நான் குறிப்பிட்டிருப்பதை வாசித்து விட வேண்டுகிறென். நன்றி.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72084117508041699052020-10-07T14:31:38.771+05:302020-10-07T14:31:38.771+05:30ஆணுக்கு மத்தளம் போல இரண்டு பக்கமும் இடி. ஒரு பக்க...ஆணுக்கு மத்தளம் போல இரண்டு பக்கமும் இடி. ஒரு பக்கம் பெற்ற தாய்; மறு பக்கம் மனைவி. இந்த இரண்டு பேரும் இரட்டை மாடுகளாய் ஒத்துழைத்தால் தான் வீட்டில் சந்தோஷம் தவழும்.<br /><br />இந்த விஷயத்தை இந்த இரண்டு சாராரையும் விட மேலாகப் புரிந்து கொண்டிருக்கும் நுணுக்கம் கொண்டிருப்பவர்கள் தான் ஆண்கள். <br /><br />அவன் பெண்டாட்டி தாசனாகவும் இருக்க வேண்டும், பெண்டாட்டி தாசன் என்று பிறர் சொல்லி விடாத மாதிரியும் இருக்க வேண்டும் என்ற நிலை.<br /><br />வயது மூத்த பெற்றோர்களுக்கு எந்த அவமதிப்பும் நிகழ்ந்து அவர்கள் கண் கலங்கக் கூடாது என்று பாசத்தில் துடித்துக் கொண்டிருக்கும் நெஞ்சமும் அவனதே.<br /><br />இதைத் தான் நிம்மதியான குடும்ப வாழ்க்கை என்று அவன் நினைக்கிறான்.<br />நுணுக்கமாக கவனித்து நீதி வழங்குவதில்லை அவன் வேலை. 'சரி..சரி.. விட்டுத்தள்ளுங்கள்.. ஒண்ணுமில்லாத விஷயத்திற்குப் போய்.. " என்று எதையாவது சொல்லி அந்த நேரத்திற்கு போக்குக் காட்டி இரண்டு பக்கத்தையும் சரி செய்ய வேண்டும். அந்தக் கணம் அவன் நினைப்பது அவ்வளவு தான்.<br /><br />மனைவி முகம் சிணுங்கினால், அது எங்கே பிரதிபலிக்கும் என்று நன்றாக அவனுக்குத் தெரியும். <br /><br />கண் முன்னால் பெற்ற தாயை மனைவி சாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட எங்கேயாவது ஒழிந்து போகலாம் என்று நெஞ்சம் வேகும்.<br /><br />வயது வந்த இந்த இரண்டு பேரையும் அடக்கி ஆளமுடியாத கையாலாகத்தனம்<br />மனசை வாட்டும்.<br /><br />இதையெல்லாம் பற்றி லவலேசமும் கருத்தில் கொள்ளாதவர்களாய் எந்த உயர்ந்த நோக்கமும் இல்லாமல் ஈகோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர்களால் தான் இந்த மா.ம. பிரச்னைகள் தலை தூக்குகின்றன. <br /><br />பெண்கள் மனம் ஒப்பி ஒரு கணம் ஆழ்ந்து சிந்தித்தாலே இதற்கு ஒரு முடிவு காணலாம்.<br /><br />ஆனால் இந்தக் கதை நீங்கள் நினைக்கிற மாதிரியான மா.ம. கதையல்ல.<br /><br />தனக்கு வாய்த்த இந்த மருமகளை பிற்காலத்திற்கான தன் பிரதிநிதியாய் அவள் நினைக்கிறாள். தனக்கு வாய்த்த மாமியாரும் இதே மாதிரியான பயிற்சியில் தான் தன்னையும் பயிற்றுவித்திருக்கிறாள் என்று புரிதலில் விளைவாகவே தன் மருமகளுக்கு அதே மாதிரியான பயிற்சிகளை அறிமுகப்படுத்துகிறாள். அவள் நோக்கம் உயரியது. அதனால் அவள் மருமகளும் தெளிவாக அதைப் புரிந்து கொண்டு மருமகளுக்கு நல்லுபதேசம் பண்ணும் அடுத்த தலைமுறை மாமியாராய் திகழ்வாள். <br /><br />அன்பும், கண்டிப்பும் இருந்தால் தான் தர்மத்தைக் காப்பாற்ற முடியும் என்று இந்து தர்ம சாஸ்திரம் அரசனுக்கும், ஆசிரியருக்கும் உபதேசிக்கிறது.<br /><br />மருமகள்கள் தங்களுக்கு அமையும் நல்ல மாமியார்களை வாழ்க்கைக் கல்விக்கான ஆசிரியர்களாக நினைத்தால் குடும்பம் தழைத்தோங்கும்.<br /><br />இதுவே இந்தக் கதையின் மூலமாக நான் சொல்ல விழைந்தது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19517090127643579232020-10-07T06:27:53.379+05:302020-10-07T06:27:53.379+05:30வணக்கம் சகோதரி.
ஏதோ எனக்குள் தோன்றிய கருத்தை ஏற்...வணக்கம் சகோதரி. <br /><br />ஏதோ எனக்குள் தோன்றிய கருத்தை ஏற்றதற்கு மிக்க நன்றி சகோதரி.<br /><br />அன்புடன் <br />கமலா ஹரிஹரன் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60139379023467936132020-10-06T22:03:32.549+05:302020-10-06T22:03:32.549+05:30ரமணி சார், இங்கு தங்களைப் பார்த்ததில் மிகவும் சந்த...ரமணி சார், இங்கு தங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். நலம் தானே?<br /><br />யுகசந்தி என்றதும் கெளரி பாட்டி நினைவலைகள் நெஞ்சில் மோதின. <br /><br />இந்தக் கதையின் மாமியாரும் கிட்டத்தட்ட முப்பது வருட காலத்திற்கு முந்திய மாமியார். இவர் இன்றைய மாமியாரும் அல்லர். அதனால் தான் இன்றைய மாமியார்களை வைத்துக் குழப்பிக் கொள்ளாமலும் வாசிப்பு அனுபவத்தை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. தங்களின் என் நினைவுகளைக் கிளறிய பின்னூட்டத்திற்கு நன்றி, ரமணி சார்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42944073742658838142020-10-06T21:48:31.836+05:302020-10-06T21:48:31.836+05:30ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து உறவுக்குள் நுழ...ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா...<br />உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா...<br /><br />அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா...<br /><br />அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளை தான் இப்போது தெரிந்ததம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10744659690409359392020-10-06T21:42:59.111+05:302020-10-06T21:42:59.111+05:30அன்பின் தம்பி துரையின் மகிழ்ச்சி என்னிலும் மகிழ்ச்...அன்பின் தம்பி துரையின் மகிழ்ச்சி என்னிலும் மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. நன்றி.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55804424057143154452020-10-06T20:50:06.317+05:302020-10-06T20:50:06.317+05:30//ஒருவொருக்கொருவர் இணக்கம் காட்டி நெகிழ்ந்து போவதே...//ஒருவொருக்கொருவர் இணக்கம் காட்டி நெகிழ்ந்து போவதே இதற்கான நிரந்தரத் தீர்வு என்று தெளிந்து சுநதரேசன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டார்; தான் விலகி இருந்தாலே குடும்ப நிர்வகிப்பிலான விட்டுக்கொடுத்தலும், பெற்றுக் கொள்ளுதலுமான அந்த நெகிழ்வு இயல்பாக அவர்களுக்குள் வந்து விடும் என்கிற நாள்பட்ட சுயபுரிதலில் சும்மா இருந்தார்.//<br /><br />அத்தனை இறைச்சலுக்கு நடுவே, தன் தந்தை எப்படி அந்தக் காலத்தில் மெளனமாக இருந்தார் என்ற கலை, வயசாகி மட்டுமே கிடைக்கும் அனுபவ 'ஞானம்', இப்பொழுது சுந்தரேசனுக்குக் கைப்பட்டுவிட்டது.//<br /><br />சுந்தேரேசன் அவர்களுக்கு ஞானம் கைவரபெற்று விட்டதை ரசித்தேன்.<br /><br />அந்தக்காலத்தில் வயது ஆகி விட்டால் "கிருஷ்ணா ராமா," என்றும் "சிவ சிவா" என்றும் பேசாமல் நடப்பதை பார்த்து கொண்டு இருக்க சொன்னார்கள் போலும். அதுதான் ஞானம் கிடைக்கவழி .<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2238464444917996082020-10-06T20:04:12.736+05:302020-10-06T20:04:12.736+05:30மிக மிக உண்மை அன்பு கமலா.மிக மிக உண்மை அன்பு கமலா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86514925360643088312020-10-06T20:01:48.608+05:302020-10-06T20:01:48.608+05:30:)))))))))):)))))))))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54788579005043245052020-10-06T19:59:04.752+05:302020-10-06T19:59:04.752+05:30ஆமாம் பானு மா. எதையும் யோசித்துச் சொல்லணும் இல்லாவ...ஆமாம் பானு மா. எதையும் யோசித்துச் சொல்லணும் இல்லாவிட்டால் வாயே திறக்கக் கூடாது!,,,, வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21075445465470126932020-10-06T19:58:44.169+05:302020-10-06T19:58:44.169+05:30வணக்கம் ஜீவி சகோதரரே
அருமையான கதையை தந்திருக்கிறீ...வணக்கம் ஜீவி சகோதரரே<br /><br />அருமையான கதையை தந்திருக்கிறீர்கள். காலங்கள் வேறுபட்டாலும், இந்த மாமியார், மருமகள் பிரச்சனை என்னவோ தீரவில்லைதான். மருமகள் தான் மாமியாரிடம் பட்ட இந்த மாதிரி சிரமங்களை (புத்திமதிகளை தினம் ஒருவரிடமிருந்து ஒவ்வொரு மாதிரியாக பெறுவது அந்த காலத்திலிருந்தே அனைவருக்கும் ஒரு சிரமந்தானே..) திருப்பி தன் மருமகளுக்கு தரக்கூடாது என்றுதான் மருமகளாக இருக்கும் போது நினைக்கிறாள். ஆனால். மாமியார் ஸ்தானம் வந்த பின் அந்த நிலைபாடு மறந்து போகிறது. கால்ங்களின் வித்தியாசபடி, அவள் செய்யும் வேறு வேறு செயல்களை குறை கூற ஆரம்பித்து விடுகிறாள். மேலும் தான் மாமியாரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடந்து கொண்டதாய் ஒரு இனம் புரியாத கர்வம் வேறு அவள் பேச்சுக்கு உறுதுணையாய் வந்து ஒட்டிக் கொள்கிறது. இது இயற்கையாகவே மாமியார் எனும் மனுஷிக்குள் புகுந்து விடும் குணம் கொண்டவை போலும். <br /><br />இதில் வீட்டு ஆண்கள் தங்கள் கதைப்படி தலையிடாமல் இருந்தால் இந்தப் பிரச்சனைகள் பெரிதாக வளராமல் கட்டுக்குள் அடங்கி விடும். . ஏனெனில்,அவன்தான் வாழ்வியல் போர் என்ற தீக்கங்குகளை விசிறி தூண்டி விடும் கைவிசிறியை போன்றவன்.இரு பெண்களுமே வளர்த்த/வாழும் முறைகளுக்காக அவன் அன்பை முற்றிலும் இழந்து விடகூடாது என எதிர்பார்ப்பவர்கள். அவன் தன்நிலை உணர்ந்து இருவரிடமும் சமாதானமாக பேசி தன் அன்பு இருவருக்கும் பொதுவாக என்றைக்கும் இருக்கும் என்பதை உணர்த்தி விட்டால், போரின் காரணங்கள் மழை நீரில் நனைந்த தீபாவளி வெடியாக பிசுபிசுத்துப் விடும். ஒரு நல்ல குடும்பத்தின் பெருமை இந்த மூவரின் கையிலும் உள்ளது. உங்கள் கதையும் அதைத்தான் ஆணித்தரமாக உணர்த்துகிறது.<br /><br />இப்போது நாகரீகங்களினால் பழைய சம்பிரதாயங்களை கொஞ்சம் (நிறையவே) அனைவரும் மறக்க ஆரம்பித்து விட்டனர். இந்த சலசலப்பிற்கு தனியான வாழ்க்கை எவ்வளவோ மேல் என்ற எண்ணத்தில், தாங்கள் கருத்தில் சொன்ன மாதிரி, சுயநலங்களின் தாக்கத்தினால், குடும்பங்கள் பிரிந்து வாழும் சுகம் காண ஆரம்பித்து விட்டன. ஒன்றும் சொல்வதற்கில்லை. <br /><br />கதையின் முடிவு நன்றாக உள்ளது. இதுவே ஒரு நல்ல குடும்பத்திற்கு அழகு. நல்ல கருத்துள்ள ஒரு கதையை பகிர்ந்ததற்கு மிக்க நன்றிகள். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com