tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4145179973963700306..comments2024-03-29T17:49:49.590+05:30Comments on எங்கள் Blog: திங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger167125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64966041490783212942018-08-02T12:03:01.887+05:302018-08-02T12:03:01.887+05:30//ஶ்ரீராம்— சப்ஜெக்டை ஜாலியா எடுத்துக்கோங்க. //
ந...//ஶ்ரீராம்— சப்ஜெக்டை ஜாலியா எடுத்துக்கோங்க. //<br /><br />நெல்லை.. அப்பவே ஜாலியாதான் எடுத்துக்கிட்டேன். அது நடக்காது என்று எனக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கை இருந்தது. என்னைத்தவிர மற்றவர்கள் இதுபற்றி பேசும்போது எப்படிச் சொன்னாலும் தவறாகும் என்று சும்மா இருக்க நேரிடும்!<br /><br />தயாரா இருப்பதைப் பற்றி ஒரு கவிதை எழுதி வைத்திருந்தேன். ரொம்பப் பழைய கவிதை. தேடித் தேடிப் பார்க்கிறேன்.. கிடைத்த பாடில்லை! நீங்கள் சொல்லியிருக்கும் குறிப்புகள் எல்லாம் வரும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8038045539455973382018-08-02T12:02:45.092+05:302018-08-02T12:02:45.092+05:30//இதை எல்லாம் நம்பவே கூடாது. //
சரிதான் கீதா அக்க...//இதை எல்லாம் நம்பவே கூடாது. //<br /><br />சரிதான் கீதா அக்கா.. நமக்கு சரி.. நம்பியும், நம்பாமலும் பயத்திலும் சந்தேகத்திலும் இருந்த பாஸை என்ன சொல்லி மாற்ற?!!!! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5370627918264960172018-08-02T11:41:49.929+05:302018-08-02T11:41:49.929+05:30நாம தயாரா இருக்கணும்னா முழு நினைவில் இருக்கணுமே! இ...நாம தயாரா இருக்கணும்னா முழு நினைவில் இருக்கணுமே! இந்த இரண்டு சமயங்களிலும் அப்படி இல்லை. இன்னொருத்தர் கொஞ்சம் உடம்பு முடியாமல் போனதுமே அந்தப் பாட்டியை வரவழைத்து நாடியைப் பார்க்கச் சொல்லணும்னு சொன்னார். பாட்டி வர முடியாதுனு சொல்லிட்டாங்க! அவர் அதன் பின்னர் பல வருஷங்கள் இருந்தார்! :))))) பாட்டியும் கிட்டத்தட்ட செஞ்சுரி அடித்தார்! :))))) ஆனால் கடைசி வரை தானே சமைத்துச் சாப்பிட்டார். இருந்தது பிள்ளையோடு தான் என்றாலும் பாட்டிக்குத் தனிக் கும்முட்டி, தனி வெண்கலப்பானை, எல்லாம் தனி! குளித்துவிட்டுத் தானே சமைத்துக் கொள்வார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68025062975235092912018-08-02T09:23:13.593+05:302018-08-02T09:23:13.593+05:30ஶ்ரீராம்— சப்ஜெக்டை ஜாலியா எடுத்துக்கோங்க. இந்தமாத...ஶ்ரீராம்— சப்ஜெக்டை ஜாலியா எடுத்துக்கோங்க. இந்தமாதிரி ஒருவர் மறைவார்னு சொல்லும்போது, நாம அந்த மனிதருக்காக கவலைப்படுவோமா இல்லை காத்திருக்கும் வேலைகளுக்காக, பண மற்ற ஆதாரங்களுக்காக கவலைப்படுவோமா அல்லது நாம தனியே எப்படி காலத்தை ஓட்டறதுன்னு கவலைப்படுவோமா? நம்ம மனசுல டென்ஷன் உண்டாக்க் காரணி என்னவாயிருக்கும்?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41745366935048322242018-08-02T09:19:19.412+05:302018-08-02T09:19:19.412+05:30இப்பக்கூட, பேங்க் அக்கவுன்ட், ஆன்லைன் பாஸ்வேர்ட் ப...இப்பக்கூட, பேங்க் அக்கவுன்ட், ஆன்லைன் பாஸ்வேர்ட் போன்று பல பென்டிங் ஐட்டம் இருக்குன்னே மனசுல தோணும்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71665688550890967602018-08-02T09:17:17.710+05:302018-08-02T09:17:17.710+05:30கீசா மேடம்.. முன்கூட்டியே தெரிந்தால் preparedஆ இரு...கீசா மேடம்.. முன்கூட்டியே தெரிந்தால் preparedஆ இருக்கலாம். எத்தனை பேருக்கு எமன் வந்து, ‘கிளம்பு, உன் டைம் முடிந்தது’ என்று சொல்லும்போது, ‘நான் ரெடி புறப்பட’ என்று சொல்லமுடியும்? குறைந்த பட்சம், மாடில துணி காயப்போட்டிருக்கேன் எடுத்துவச்சிட்டு வந்துடறேன், இட்லிக்கு ஊறப்போட்டிருக்கேன், அரைச்சிட்டு வந்துடறேன் என்று தாமதப்படுத்தத்தான் தோணும். ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49994440169374824022018-08-02T07:06:50.358+05:302018-08-02T07:06:50.358+05:30அதே சமயம் கிட்டத்தட்ட இந்தச் சம்பவம் நடந்து ஓரிரு ...அதே சமயம் கிட்டத்தட்ட இந்தச் சம்பவம் நடந்து ஓரிரு வருடங்களில் என் அம்மாவுக்குக் கீமோதெரபி கொடுத்தும் குணமாகா நிலையில் படுத்த படுக்கை ஆனார்! மருத்துவர்கள் ஆறு மாசம் என கெடு வைத்திருந்தார்கள். அப்போது அங்கே அம்பத்தூரில் ஒரு பாட்டி (இங்கே திருச்சி பக்கம் குழுமணி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்) இந்த ஜோசியம், கைநாடி பார்த்துச் சொல்லுதல், கை வைத்தியம் செய்தல், மணிமந்திர ஔஷதங்களால் விஷக்கடிக்கு மந்திரித்தல் போன்றவற்றைச் செய்வார். அவருக்கு அப்போது சுமார் எழுபது வயதுக்குள் இருக்கும். அவர் அம்மாவைப் பார்க்க வந்திருந்தப்போக் கைநாடியைப் பார்த்துட்டு மிகச் சரியாக இத்தனை நாட்களுக்கான நாடி பேசுகிறது. இந்த நாள், இந்தக் கிழமை, இத்தனை மணிக்குள்ளாக இந்த ஜீவன் உடலை விட்டுப் பிரியும் என்று சொன்னார். அதே மாதிரி அதே பாட்டி 2002 ஆம் வருடம் என் அப்பாவுக்கும் கெடு வைத்துச் சொன்னார். ஆனால் அப்பாவின் உள் மனம் எதையோ நினைத்து அலை பாய்கிறது என்றும் அதைக் கண்டு பிடித்து நிவர்த்தி செய்யும்படியும் சொன்னார். என் தம்பி அப்போது தாம்பரத்தில் புது வீடு வாங்கி இருந்தார். அந்த வீட்டுக்கு அப்பா போகவே இல்லை. நடமாட்டம் இல்லை! ஆகவே அந்த வீட்டு மண்ணை எடுத்து வந்து நீரில் கரைத்து வடிகட்டி வெறும் நீரை மட்டும் கொடுத்தோம். அன்று ஒரு நாள் போக மறுநாள் இரவில் உயிர் பிரிந்தது. அதுவும் அந்தப் பாட்டி சொன்ன கெடுவுக்குள்ளேயே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54587240210135658082018-08-02T06:59:51.746+05:302018-08-02T06:59:51.746+05:30//ஒன்றும் புரியவில்லை. ஆனால் அந்நேரம் மனதுக்குள் த...//ஒன்றும் புரியவில்லை. ஆனால் அந்நேரம் மனதுக்குள் திகிலாய், கவலையாய் இருந்தது நிஜம். அது கடந்து சில வருடங்கள் வரையும் டென்ஷனும் இருந்தது//<br /><br />இதை எல்லாம் நம்பவே கூடாது. ஏனெனில் எந்தஜோசியரும் அப்படிச் சொல்வாங்களானு தெரியலை. ஆனால் என் மாமியாருக்கு 60 ஆம் வயசு ஆரம்பிக்கையில் இறந்து போவாங்கனு யாரோ சொன்னதை நம்பி என் கடைசி மைத்துனன் எல்லோருக்கும் தகவல் தெரிவித்துவிட எல்லா இடங்களிலிருந்தும் கடிதங்கள்! அவங்க என்னமோ ஆரோக்கியமாத் தான் இருந்தாங்க. சொல்லப் போனால் ஓடி ஆடி வேலை செய்தாங்க! ஆனாலும் இந்த மாதிரிச் சொன்னதில் உள்ளூர ஒரு சந்தோஷமும் இருந்தது. எப்படி உயிர் போகும்னு பார்க்கலாம்னு இரவு 12 மணி வரை என் மாமனார், மைத்துனர் எல்லோரும் முழிச்சுட்டும் இருந்தாங்க! நாங்க போய்ப் படுத்துட்டோம். ஏனெனில் இதை நம்பலை என்பதே காரணம். ஆனால் அம்மாவின் மேல் அக்கறை இல்லைனு மாமியாருக்குக் கொஞ்சம் வருத்தம். நான் எவ்வளவோ சொன்னேன், இதை எல்லாம் நம்பாதீங்கனு! யாரும் கேட்கலை! :))) அக்கம்பக்கம் உள்ளவர்கள் எல்லாம் மறுநாள் விசாரிச்சாங்க. எனக்கென்னமோ நம் தலையில் என்ன எழுதி இருக்கோ அதை மாத்த முடியாது. அதைத் தாங்கும் வல்லமை இருந்தால் போதும் என்றே தோணும். முன்னாடியே தெரிஞ்சுட்டு என்ன செய்யப் போறோம்? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52043879601034602112018-08-01T20:58:44.519+05:302018-08-01T20:58:44.519+05:30ஒன்றும் புரியவில்லை. ஆனால் அந்நேரம் மனதுக்குள் தி...ஒன்றும் புரியவில்லை. ஆனால் அந்நேரம் மனதுக்குள் திகிலாய், கவலையாய் இருந்தது நிஜம். அது கடந்து சில வருடங்கள் வரையும் டென்ஷனும் இருந்தது.<br /><br />இந்த பாணி கமெண்ட் பெட்டியில் இந்த கமெண்ட் எங்கே இருக்குன்னு தேடி பதில் போடறது ஒரு மாதிரி கஷ்டமாவும் இருக்கு!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86745868796703896882018-08-01T20:40:11.311+05:302018-08-01T20:40:11.311+05:30//தனது 38 வது வயதில் மறைந்து விடுவார் என்று ஜோசியம...//தனது 38 வது வயதில் மறைந்து விடுவார் என்று ஜோசியம்// - ஸ்ரீராம்... இது எனக்கும் விளங்கிக்கொள்ளமுடியாத சமாச்சாரமாகத்தான் இருக்கு. எனக்கு ஒரு ஜோசியர் (என் அப்பா மறைந்து 5 வருடங்களுக்குப் பிறகு பார்த்தேன்), என் அப்பா இறக்கும் நேரம் அப்போ வரலை, இப்போதான் போயிருக்கணும் என்று சொன்னார். இன்னொரு ஜோதிடர், 'உங்க அம்மா இதுவரை போகவில்லை என்றால் இன்னும் பத்து வருடம் இருப்பார்' என்றும் சொன்னார். இதெல்லாம் புரிந்துகொள்வது கடினம். ஒருவேளை அவங்க சில கிரகங்களைப் பார்த்துவிட்டு, அந்த நிகழ்வுகளின்போது அந்த ஜாதகரின் ஆயுள் முடியும் வாய்ப்பு இருக்கு என்று கணிக்கிறார்களோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27143479882729578252018-08-01T11:12:44.085+05:302018-08-01T11:12:44.085+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அசோகன் குப்புசாமிவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அசோகன் குப்புசாமிநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42311183071189837332018-07-31T22:02:20.046+05:302018-07-31T22:02:20.046+05:30அருமையான செய்முறை விளக்கம் பாராட்டுகள்அருமையான செய்முறை விளக்கம் பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88869626768510455382018-07-31T17:15:03.808+05:302018-07-31T17:15:03.808+05:30எங்க குடும்ப ஜோசியர் அப்போவே போய்ச் சேர்ந்துட்டார்...எங்க குடும்ப ஜோசியர் அப்போவே போய்ச் சேர்ந்துட்டார். அதையும் எழுதி வைச்சிருந்தார். அப்படியே செத்துப் போனார்! மற்ற இருவரும் எங்கே இருக்காங்களோ, இல்லையோ தெரியாது, ஒருத்தர் என்னுடன் வேலை பார்த்தவர், இன்னொருத்தர் என்னுடன் படித்தவர். ரெண்டு பேருக்கும் என் வயசு தான்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9428606339077454992018-07-31T17:08:38.104+05:302018-07-31T17:08:38.104+05:30எங்களுக்கும் இந்த இந்த ஜோசியர் ரொம்ப நல்லாச் சொல்ற...எங்களுக்கும் இந்த இந்த ஜோசியர் ரொம்ப நல்லாச் சொல்றார்னு கைகாட்டி விடறது. நாங்களும் உங்கள மாதிரி எதிர்காலத்தைப் பற்றித் தெரிஞ்சுப்போமே (இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கீசா மேடம் ரெசிப்பி எ.பியில் வருதா உள்பட)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59405868147181628692018-07-31T16:42:23.684+05:302018-07-31T16:42:23.684+05:30மத்தபடி இந்த ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு அலையறதிலே ...மத்தபடி இந்த ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு அலையறதிலே நம்ம ரங்க்ஸுக்கு ஈடு, இணை இல்லை. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள ஜோதிடர்கள், நாடி ஜோதிடம், பிரச்னம் உட்படப் பார்த்துட்டார். ஆனால் நாடி ஜோதிடம் இங்கே பார்ப்பதெல்லாம் ஜுஜுபி! :( ஏமாற்று வேலை! எனக்கு எதிர்காலம் குறித்துச் சொன்னதும் பலித்துள்ளது, ஒரு பெண், (அப்போ என் பெண் வயிற்றில் இருந்தாள். பெண் தான் பிறக்கும் என நிச்சயமாய்ச் சொன்னார்கள். ) ஒரு ஆண் குழந்தை என்பதைச் சரியாகச் சொன்னார்கள். அதே போல் குழந்தைகள் இருவருமே வெளிநாட்டில் இருப்பாங்க என்பதையும் சொன்னார்கள். நானும் 50 வயசுக்கு மேல் வெளிநாடு போவேன் எனவும் சொல்லி இருந்தாங்க. அப்போ அதை நான் நம்பவில்லை. அதிலும் ரொம்பச் சின்ன வயசு வேறே! ஆகவே யார் சொன்னாலும் அதற்கு மனதிற்குள் ஓர் எதிர்ப்புத் தோன்றும். என்றாலும் அதிகம் வெளிக்காட்டிக்க மாட்டேன். அதன் தாக்கத்தைப் புரிந்து கொண்டதால். ஆனால் என் கணவரின் மாற்றல் பத்தி எங்க குடும்ப ஜோசியர் சொன்னது பலிக்கவும் தான் "அட!" என்று தோன்றியது. பின்னரும் ஓர் ஆர்வம் உண்டு. ஆனால் தேடிக் கொண்டு போனதில்லை. எங்க பொண்ணு எதுக்கெடுத்தாலும் ஜோசியம் பார்ப்பா! அன்றாட நாள்பலன் பார்ப்பா! அவ அப்பா மாதிரி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87365113647341144392018-07-31T16:36:10.180+05:302018-07-31T16:36:10.180+05:30எங்கேயும் பயந்துண்டு ஓடலை. வீட்டில் வேலை இல்லையா எ...எங்கேயும் பயந்துண்டு ஓடலை. வீட்டில் வேலை இல்லையா என்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! என்னைப் பொறுத்தவரை குடும்ப ஜோசியர் கல்யாணம், குழந்தைகள் பத்திச் சொன்னதும் என் நண்பர்கள் புக்ககம் பத்திச் சொன்னதும் அப்படியே பலிச்சிருக்கு. மத்தபடி ஒரு வள்ளுவன், எங்க குடும்ப ஜோசியர் மற்றும் இன்னும் 2 பேர் மறுபிறவி கிடையாதுனு சொன்னாங்க! நான் அதை எல்லாம் ரொம்பத் தீவிரமா எடுத்துக்கறதில்லை. இன்னும் சொல்லப் போனால் அடுத்த பிறவியிலே இந்தப் பிறவி ஞாபகம் வருமா வராதானு எல்லாம் கவலைப்படுவேன். :))) அதே போல் உலகம் அழிந்து மீண்டும் பிறக்கையில் மீண்டும் சத்ய யுகம் அதாவது கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம்னு பிறக்குமானும் ஒரே கவலை! அப்போ என்ன பிறவி எடுப்பேன் என்பதும் தோணும். அப்போதும் கலியுகத்தில் இதே மாதிரி கீதாவாகத் தான் பிறப்பேனா என்றெல்லாம் யோசனைகள் ஓடும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36094187846850761132018-07-31T14:37:08.153+05:302018-07-31T14:37:08.153+05:30நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று எனக்கும் ஆவல் ...நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று எனக்கும் ஆவல் உண்டு. நடந்ததை எல்லோரும் சொல்லி விடுகிறார்கள். எதிர்காலம் குறித்துச் சொல்லப்படுவதுதான் பெரும்பாலும் நடப்பதில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63374133780191713852018-07-31T14:36:01.085+05:302018-07-31T14:36:01.085+05:30// இவ்வளவு நாள் என்று (ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே)...// இவ்வளவு நாள் என்று (ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே) சொல்லிட்டார்./<br /><br />என் பாஸுக்கு கூட அவர் தனது 38 வது வயதில் மறைந்து விடுவார் என்று ஜோசியம் சொல்லி இருந்தார்கள். எனக்கும் முன்னரே சொல்லி இருந்தார். நான் நம்பவில்லை. ஆனால் அவர் அந்த 38 வது வயதைத் தாண்டுவதற்குள் மனதளவில் பட்டபாடு....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40842205660487596492018-07-31T14:09:19.256+05:302018-07-31T14:09:19.256+05:30தாம்பரத்துல நாடி ஜோதிடம் பார்க்கப் போயிருந்தேன் (இ...தாம்பரத்துல நாடி ஜோதிடம் பார்க்கப் போயிருந்தேன் (இருக்கும் 10-14 வருஷம்). என் அப்பா, தானும் என்ன நடக்கிறது என்று பார்க்க வருகிறேன் என்றார். நான் அவர்ட்ட, எதுவும் பேசக்கூடாது, எந்த க்ளூவும் குடுத்துடக்கூடாது என்று சொல்லி கூட்டிப்போயிருந்தேன். மற்றவற்றை மறந்துவிடுவோம், ஒரு ஓலைச் சுவடியில் என் அம்மா பெயரும், அப்பா பெயரும் எழுதியிருந்ததை அவர் சிறிது நேரம் கழித்து எடுத்துவந்துவிட்டார் (நாடி ஜோதிடக்காரர்). அந்தப் பெயர்கள் உள்ள வரிகளைத் தவிர மற்றவை படிக்கும்படியாக இல்லை. இது ஃப்ராடு என்று எண்ணிக்கொண்டாலும், அது எப்படி என்ற கேள்வி வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.<br /><br />வெ.ஆ, ஜோதிடத்தில் பி.எச்.டி வாங்கியவர். மிகத் திறமையாளராம். அதனால்தான் அவர் நம்பர் கேட்டேன். ஹா ஹா. எனக்கு இதிலெல்லாம் ஒரு ஆர்வம்தான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77582256768398799612018-07-31T14:05:39.500+05:302018-07-31T14:05:39.500+05:30ஸ்ரீராம், ஒரு ஜோசியர், என் ஜாதகத்தைப் பார்த்து, இத...ஸ்ரீராம், ஒரு ஜோசியர், என் ஜாதகத்தைப் பார்த்து, இத்தனை வருடம், இத்தனை மாதம், இவ்வளவு நாள் என்று (ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே) சொல்லிட்டார். எனக்கு திக் என்று ஆகிவிட்டது. அது எப்படி அப்படிச் சொல்லமுடியும்? ஒருவர் இப்போ இறப்பார் என்று சொல்லுவதற்கே ரொம்ப நேரம் செலவழித்து கிரகக் கணக்கெல்லாம் பார்க்கணும்.<br /><br />என்னைப் பொறுத்தவரையில், 'இப்போ சொல்றதுக்கே', 'நீங்க சொன்னீங்க, ஆனா நான் பட்னு போய்ட்டேனே' என்று கேட்கமுடியாது, இல்லை நாம அதைத் தாண்டி இருந்தால், 'ஜோசியர் அதுவரை இருப்பாரா', நாம் போய்க் கேள்வி கேட்க என்பதும் சந்தேகம்தான். அதனால இதெல்லாம் நமக்கு டைம் பாஸ்தான். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27265676547373866632018-07-31T14:02:37.737+05:302018-07-31T14:02:37.737+05:30ஸ்ரீராம்.. அப்படி எப்படிச் சொல்றீங்க? தப்பே செய்ய...ஸ்ரீராம்.. அப்படி எப்படிச் சொல்றீங்க? தப்பே செய்யலைனா, எதுக்கு இன்னொரு ஜென்மம்? அந்த ஜென்மத்துல தனிமை எதுக்கு? "திருவாரூரில் பிறக்க முக்தி" என்பதெல்லாம் எந்த அளவு சரி? அப்போ மதுரைல பிறந்தவங்களுக்கு 'முக்தி'யா? இப்படி எழுதி கீசா மேடத்தை வம்புக்கு இழுத்தால், அவங்க பயந்து காணாமல் போய்ட்டாங்க...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84271725415163198312018-07-31T13:39:48.228+05:302018-07-31T13:39:48.228+05:30 //எனக்கு மறு ஜன்மமே இல்லைனு எங்க குடும்ப ஜோசியரும... //எனக்கு மறு ஜன்மமே இல்லைனு எங்க குடும்ப ஜோசியரும் இன்னும் 2,3 பேரும் சொல்லி இருக்காங்க! :)))))//<br /><br />கீதாக்கா.. இந்த ஜென்மத்தைப் பத்தியே ஒண்ணும் தெரியலை... அடுத்த ஜென்மம் பற்றி எப்படிச் சொல்றாங்க?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41843968777570360372018-07-31T13:37:56.872+05:302018-07-31T13:37:56.872+05:30//எனக்கு நாடி ஜோதிடத்தில், அடுத்த ஜென்மம் திருவாரூ...//எனக்கு நாடி ஜோதிடத்தில், அடுத்த ஜென்மம் திருவாரூரில், அதுவும் மணமாகாத வாழ்வு, அதுவே கடைசி என்று சொல்லியிருக்காங்க. //<br /><br />நெல்லை... அப்போ இந்த ஜென்மத்தில் எந்தத் தப்பும் பண்ணவில்லை என்று அர்த்தம். பண்ணப்போவதும் இல்லை என்றும் அர்த்தம்... எனக்கும் அங்க ஒரு ஸீட் போடுங்களேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89180300488377192982018-07-31T13:36:05.774+05:302018-07-31T13:36:05.774+05:30எனக்கும் முதலில் மதுரையை விட்டு வந்தது கஷ்டமாகத்தா...எனக்கும் முதலில் மதுரையை விட்டு வந்தது கஷ்டமாகத்தான் இருந்தது. இப்போ அப்படித் தோன்றவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74956795735083107532018-07-31T13:05:40.898+05:302018-07-31T13:05:40.898+05:30நான் பிறந்து, வளர்ந்து, படிச்சுக் கல்யாணம் பண்ணிண்...நான் பிறந்து, வளர்ந்து, படிச்சுக் கல்யாணம் பண்ணிண்டது எல்லாமும் மதுரை தான்! மதுரையே தான்!:))))) எண்பதுகள் வரைக்கும் அப்பா, அம்மாவும் மதுரையில் தான் இருந்தாங்க. அப்புறமா அண்ணாவுக்குக் கல்யாணம் ஆகிக் குழந்தை பிறந்ததும் சென்னை-மதுரை என்று இருந்துவிட்டுப் பின்னர் தம்பி கல்யாணத்தின் பின்னர் நிரந்தர மதுரை வாசம். நான் எவ்வளவோ சொன்னேன், மதுரையைக் காலி செய்ய வேண்டாம்னு! கேட்கலை! எனக்கு இன்னமும் அந்த வருத்தம் உண்டு! :( ஆனால் அப்போ இருந்த மதுரை இப்போ இல்லை தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com