tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7018410317509471202..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: பிரபலங்களின் எழுத்துகளில் வர்ணனைகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41962105819786712122014-07-26T08:19:41.857+05:302014-07-26T08:19:41.857+05:30அருமையான வர்ணனைகள்.....
கொஞ்சம் தாமதமாக வருவதில...அருமையான வர்ணனைகள்..... <br /><br />கொஞ்சம் தாமதமாக வருவதில் ஒரு சௌகரியம். அற்புதமான ஒரு கவிதை படிக்கக் கிடைத்ததே....... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5681297500714850642014-07-25T19:21:29.668+05:302014-07-25T19:21:29.668+05:30GS: உங்கள் உண்மையான நிலைப்பாட்டை அழகாகப் புரிந்துக...GS: உங்கள் உண்மையான நிலைப்பாட்டை அழகாகப் புரிந்துகொண்டேன். I was only "kidding". I must admit it was a "bad joke" at this time as you were describing a "real glitch" you encountered in a "funny way". I should not have misinterpreted in the name of "joke". My apologies. On a serious note, I would never quote you anywhere as I "promised" :). I completely understand your HONESTY. Take it easy, madam!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47931089967182440942014-07-25T16:30:51.053+05:302014-07-25T16:30:51.053+05:30@வருண், நான் சமாதானமெல்லாம் சொல்லவில்லை. உண்மையில...@வருண், நான் சமாதானமெல்லாம் சொல்லவில்லை. உண்மையில் என் லாப்டாப்பில் தட்டச்சுகையில் ஏற்படுவதையே சொல்கிறேன். இதனால் ஜிமெயில் பாஸ்வேர்ட் போடுகையிலும் கணினி பாஸ்வேர்ட் போடும்போதும் பல சமயம் பாஸ்வேர்ட் சரியில்லை என வந்து பின்னர் திறக்கவே திறக்காது. ஜிமெயில் வார்னிங் மெசேஜ் அனுப்பும். நீங்கள் நம்பவில்லை என்றால் அது உங்கள் விருப்பம். அதற்காக என்னால் பொய் சொல்ல முடியாது. இன்னும் என் நட்பு வட்டத்தில் ஓரிருவருக்கும் இந்தப் பிரச்னை இருப்பதாகத் தெரியவும் வந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22851893086700897392014-07-25T02:25:23.023+05:302014-07-25T02:25:23.023+05:30***பொதுவாகவே நான் எழுத்துப் பிழைகளைப் பார்த்தால் த...***பொதுவாகவே நான் எழுத்துப் பிழைகளைப் பார்த்தால் தனி மடலிலாவது கூப்பிட்டுச் சொல்லி விடுவது வழக்கம். ஆனால் இப்போது என் கீ போர்டில் தட்டச்சுகையில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் சரியாக விழுவதில்லை. இரண்டு, மூன்றுதரம் அழுத்த வேண்டி உள்ளது. வேகமாய் அழுத்தினால் நிறைய எழுத்துக்கள் ஓடி வருகின்றன. :)))) கீ போர்டுக்கும் ஓய்வு கொடுக்கணுமோ என்னமோ! :))))) ***<br /><br />Beautiful excuse! I am going to "use" this everywhere. Let me make sure to "quote" you properly to give full credit to you! LOLவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49619379356733700932014-07-24T21:50:31.685+05:302014-07-24T21:50:31.685+05:30பொதுவாகவே தவறில்லாமல் எழுத்துப் பிழைகளற்ற தமிழ் எழ...பொதுவாகவே தவறில்லாமல் எழுத்துப் பிழைகளற்ற தமிழ் எழுதப் பழகிக் கொள்வது நல்லது.<br /><br />அதுவும் ஒரு போட்டிக்கு நமது படைப்பை அனுப்புகிறோம் என்றால் ஒருதடவைக்கு இருதடவை சரிபார்த்து அனுப்புவது இன்னும் நல்லது. <br /><br />பிழையில்லாமல் எழுதினால் தான் நாம் எழுதி அனுப்புவதற்கும் மதிப்பு கூடும் என்பது பத்திரிகை அனுபவத்தில் நான் கற்றுக் கொண்ட பாடம்.<br /><br />http://gopu1949.blogspot.in/2014/07/blog-post.html<br /><br />இந்த என் சிறுகதை விமர்சனப் போட்டிக்கு வந்திருக்கும் கட்டுரைகளில் கூட எவ்வளவு எழுத்துப் பிழைகள் மலிந்திருக்கின்றன என்பதை சொல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. <br /><br />விமர்சனதாரர்கள் மெயிலில் அனுப்பும் கட்டுரைகளை அப்படியே நான் பிரசுரிக்க வேண்டியிருப்பதால் நான் கூட அந்த எழுத்துப் பிழைகளை/தவறுகளைத் திருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. <br /><br />பிழைகளுடன் பரிசுக் கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டியிருக்கிறேதே என்று வருத்தமாகவும் இருக்கிறது. <br /><br />அதனால் இறுதியில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விமர்சனங்களில் மட்டும், அதுவும் என் கண்களில் பட்டு உறுத்தும் தவறுகளை மட்டும், ஆங்காங்கே திருத்தி அதன் மேல் மஞ்சள் பூசி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமாவது தெரியட்டும் என நான் காட்டி விடுவதும் உண்டு.<br /><br />அவசரத்தில் எழுதும் பொழுது பிழைகள் வருவது சகஜம் தான். அதற்காக எழுதியதை இரண்டு மூன்று தரம் படித்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்ப்பது என் வழக்கம். <br /><br />அதே மாதிரி என்னை மீறி ஏற்படும் எழுத்துப் பிழைகள் பற்றி யாராவது எடுத்துச் சொன்னால் சந்தோஷத்துடன் 'நல்ல வேளை இந்த மட்டும் சொன்னார்களே' என்று ஏற்றுக் கொண்டு உடனே அந்தத் தவறுகளைத் திருத்தி விடுவேன். <br /><br />அந்த என் வழக்கத்தை நீங்களும் பின்பற்றினால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். உங்களுக்கும் மிகவும் நிம்மதியாக இருக்கும் என்று என் அனுபவத்தில் நான் உணர்ந்ததை உங்களுக்கும் மற்ற அனைவருக்கும் சொல்ல ஆசைப்படுகிறேன்.<br /><br />ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3260642314813159572014-07-24T20:35:25.994+05:302014-07-24T20:35:25.994+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72415606567330808762014-07-24T14:18:49.220+05:302014-07-24T14:18:49.220+05:30//Geetha Sambasivam said...
*****தங்களைப்போன்ற [தி...//Geetha Sambasivam said...<br />*****தங்களைப்போன்ற [திரு. ஜீவி ஐயா போன்ற] பழுத்த அனுபவசாலிகள், ஆங்காங்கே இது போல கண்களில் தென்படும் எழுத்துப்பிழைகளை, சம்பந்தப்பட்ட பதிவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து, திருத்தினால் மிகவும் நல்லது.*****<br /><br />//பொதுவாகவே நான் எழுத்துப் பிழைகளைப் பார்த்தால் தனி மடலிலாவது கூப்பிட்டுச் சொல்லி விடுவது வழக்கம். //<br /><br />சந்தோஷம். மிக்க நன்றி.<br /><br />//ஆனால் இப்போது என் கீ போர்டில் தட்டச்சுகையில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் சரியாக விழுவதில்லை. இரண்டு, மூன்றுதரம் அழுத்த வேண்டி உள்ளது. வேகமாய் அழுத்தினால் நிறைய எழுத்துக்கள் ஓடி வருகின்றன. :)))) கீ போர்டுக்கும் ஓய்வு கொடுக்கணுமோ என்னமோ! :)))))//<br /><br />அன்புடையீர், வணக்கம். <br /><br />புத்தம் புதிய கணினியாக இருப்பினும் இந்தக் கீ போர்டு பிரச்சனை எனக்கும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. <br /><br />அதற்குக்காரணம் ஒவ்வொரு கீக்கும் இடையே சேர்ந்து வரும் தூசிகளும் அழுக்குகளும் மட்டுமே. <br /><br />தினமும் கீ போர்டை ஒரு முறை துணியால் நன்கு துடையுங்கோ.<br /><br />வாரம் ஒருமுறை அதைத் தலைகுப்பறக் கவிழ்த்து படுக்க வைத்து, நன்றாகத் தட்டுங்கோ. பின்புறம் நன்றாக தட்டிக்கொடுங்கோ. அப்போது புழுதிகள் + தூசிகள் ஓரளவுக்கு வெளியேறிவிடும்.<br /><br />அதற்கென தனியாக ஒரு <br />வேக்கும் க்ளீனர் சின்னதாக உள்ளது. பேட்டரியில் இயங்கக்கூடியது. அதன் நுனியில் ஒரு ப்ரஷ் இருக்கும். அதன் மூலம் இண்டு இடுக்குகளில் உள்ள தூசிகளை உறிஞ்சி எடுத்து விடலாம்.<br /><br />இதையெல்லாம் செய்தும் பயனில்லை என்றால், அந்தக் கீ போர்டை விட்டெறிந்து விட்டு, மாமாவைக் கடைக்கு அனுப்பி வேறு புதிய கீ போர்டு வாங்கிவரச்சொல்லுங்கோ. ;)))))<br /><br />பணம் இன்று போகும் .....<br />நாளை வரும் ............. ;)))))<br /><br />நமக்கு உயிர் மூச்சாக இன்று விளங்கும் கணினி தான் முக்கியம்.<br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55647513219671045572014-07-24T14:11:55.683+05:302014-07-24T14:11:55.683+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91893512429832063902014-07-24T13:58:05.396+05:302014-07-24T13:58:05.396+05:30மிக அருமையான வர்ண்னைகள்...அதுவும் எஸ்ரா மிக அழகாகத...மிக அருமையான வர்ண்னைகள்...அதுவும் எஸ்ரா மிக அழகாகத் தன் அனுபவங்களை எழுதுவார்....<br /><br />சார் நீங்க சொல்லியிருக்கும் தட்டச்சு பிரச்சினை எங்களு ரொம்பவே இருந்துச்சு......நிறைய அடிச்சுருப்போம்...கடைசில பார்த்தா....பாத் காணாமப் போயிருக்கும்,,,,வரதுக்கே ரொம்ம்ப நேரம் எடுக்கும்.....பப்ளிஷ் பண்ண முடியாது.....தொல்லை தாங்கலை அதனாலதான் இங்கும் தாமதம்....பப்ளிஷ் ஆக பிரம்மப்யத்தனம்.......<br /><br />தாம்தமாக வந்ததது நல்லது...நடப்பது எல்லாமே நல்லதற்கே...ஆமாங்க ஜீவி சாரின் அருமையான மழைக் கவிதையை வாசிக்க முடிந்ததே.....இப்பொழுது நிம்மதியாய்<br />வானத்திற்கும் பூமிக்கும்<br />நீள நீள கம்பி நட்டு நடுவில்<br />தன்னில் தானே கரைந்து<br />நிச்சலனமின்றி நீராடல்<br />தேரோடும் வீதியிலே<br />தெய்வமாய் வந்தாளென்று<br />ஊரெங்கும் பூக்கோலம்<br />தெருவெங்கும் மாக்கோலம்// மிகவும் ரசித்தோம்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21049201639902467462014-07-24T07:57:46.402+05:302014-07-24T07:57:46.402+05:30
பொதுவாக ஒருவரின் பதிவைப் படித்துக் கருத்திட்டபிற...<br /> பொதுவாக ஒருவரின் பதிவைப் படித்துக் கருத்திட்டபிறகு இன்னும் ஒரு முறை ஒரு நாள் கழித்து வந்து அந்தக் கருத்து ஏதாவது reaction ஏற்படுத்தி இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். இன்று வழக்கத்துக்கு மாறாக இன்னும் ஒருமுறை வந்தது நல்லதாய்ப் போய்விட்டது. இல்லையென்றால் ஜீவியின் இந்த அருமையான மழைக் கவிதையை ரசித்திருக்க முடியாது. இதில் இருந்து என்ன தெரிகிறது.? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23313241825052231352014-07-24T05:58:52.951+05:302014-07-24T05:58:52.951+05:30//தங்களைப்போன்ற [திரு. ஜீவி ஐயா] போன்ற பழுத்த அனுப...//தங்களைப்போன்ற [திரு. ஜீவி ஐயா] போன்ற பழுத்த அனுபவசாலிகள், ஆங்காங்கே இது போல கண்களில் தென்படும் எழுத்துப்பிழைகளை, சம்பந்தப்பட்ட பதிவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து, திருத்தினால் மிகவும் நல்லது.//<br /><br />பொதுவாகவே நான் எழுத்துப் பிழைகளைப் பார்த்தால் தனி மடலிலாவது கூப்பிட்டுச் சொல்லி விடுவது வழக்கம். ஆனால் இப்போது என் கீ போர்டில் தட்டச்சுகையில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் சரியாக விழுவதில்லை. இரண்டு, மூன்றுதரம் அழுத்த வேண்டி உள்ளது. வேகமாய் அழுத்தினால் நிறைய எழுத்துக்கள் ஓடி வருகின்றன. :)))) கீ போர்டுக்கும் ஓய்வு கொடுக்கணுமோ என்னமோ! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70901133607652692812014-07-24T05:55:52.445+05:302014-07-24T05:55:52.445+05:30இங்கே அடிக்கும் ஆளைத் தூக்கும் காற்றில் மழைச்சரம் ...இங்கே அடிக்கும் ஆளைத் தூக்கும் காற்றில் மழைச்சரம் இப்படித் தான் நெளிந்து வளைந்து போராடும். காற்றுக்கும் அதற்கும் ஒரு போட்டியே நடைபெறும். பல சமயங்களிலும் வாயுவுக்குத் தான் வெற்றி. எப்போதாவது வருணன்! :)))) ஜீவி சாரின் கவிதையைப் படித்ததும் இங்கே பால்கனிக் கம்பி வழியாக மழையைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகள் இப்போதும் ஏற்பட்டன. மழையில் நனைந்தேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35448152274453563462014-07-24T01:17:36.579+05:302014-07-24T01:17:36.579+05:30வர்ணனைகள் குறித்த உங்கள் வர்ணனைகள் அருமை !
ஜே கே ...வர்ணனைகள் குறித்த உங்கள் வர்ணனைகள் அருமை !<br /><br />ஜே கே சில குறிப்புகள் பற்றி...<br /><br />தத்வார்த்தமான அவரது எழுத்துகளில் வர்ணனை கிடையாதுதான் என்றாலும் அவரது வாழ்வியல் தத்துவம் ஜாதி,மத, நாடு எல்லைகளையெல்லாம் தாண்டியது ! " காதலுக்காக காதலையே விட்டுக்கொடுக்கும் " அவரது தத்துவம் மகத்துவமானது.<br /><br />தாங்கள் அவரது ஆங்கில மூலத்தை படித்தீர்களா அல்லது தமிழாக்கமா என்று தெரியவில்லை. தமிழாக்கம் என்றால் சில பிழைகள் உள்ளன. அவரது Freedom from known தமிழாக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள்... " உண்மையிலிருந்து விடுதலை " என மொழி பெயர்க்கிறார்கள். அது " அறிந்தவைகளிலிருந்து விடுதலை "என இருக்க வேண்டும் !<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.fr<br /><br />எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு ! <br /><br />http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html<br /><br />( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46131412120579368952014-07-24T00:23:28.735+05:302014-07-24T00:23:28.735+05:30அன்பு ஸ்ரீராம்!
இங்கு இப்போது பகல் 2:50 என்றால் அ...அன்பு ஸ்ரீராம்!<br /><br />இங்கு இப்போது பகல் 2:50 என்றால் அங்கு நட்ட நடு நிசி. 00:18 மணி.<br /><br />நீங்கள் அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில், உங்கள் ப்ளாக் வந்து பின்னூட்டம் போடுவது என்பது பூட்டில்லா வீட்டில் உரிமையாளர் அறியாமல் உள்ளே நுழைவது போலிருக்கு.<br /><br />மாடரேஷனுக்கு பின்னூட்டங்களை உட்படுத்தினால், சுடும் இந்த தன்னுணர்வு இல்லாமல் இருக்கும்.<br />அது உங்கள் அனுமதியுடன் உள்ளே வந்த மாதிரி இருக்கும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60485722607959590502014-07-23T23:19:03.550+05:302014-07-23T23:19:03.550+05:30தங்கள் ரசனையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, கோபு ச...தங்கள் ரசனையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, கோபு சார்!<br /><br />துரை சாரைத் தான் காணோம்! ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22240722734196798742014-07-23T21:50:51.897+05:302014-07-23T21:50:51.897+05:30//இப்பொழுது நிம்மதியாய்
வானத்திற்கும் பூமிக்கும்
ந...//இப்பொழுது நிம்மதியாய்<br />வானத்திற்கும் பூமிக்கும்<br />நீள நீள கம்பி நட்டு நடுவில்<br />தன்னில் தானே கரைந்து<br />நிச்சலனமின்றி நீராடல்//<br /><br /><br />வானத்திற்கும் பூமிக்கும் நீள நீள கம்பி நட்டு ;))))))<br /><br />அருமையான கவிதை மழையில் என்னையும் அப்படியே கரைய வைத்து விட்டீர்கள். <br /><br />மிகவும் சந்தோஷமாக உள்ளது. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39762316336608851112014-07-23T21:44:48.461+05:302014-07-23T21:44:48.461+05:30//மேலிருந்து கீழ் என்றதனால்
மேலாடை விசிறித் தடுமாற...//மேலிருந்து கீழ் என்றதனால்<br />மேலாடை விசிறித் தடுமாறினாள்<br />இடது வலது என்று மாறி மாறி<br />இழுத்த இழுப்புக் கெல்லாம்<br />இம்சை பொறுக்காது இழுபட்டாள்//<br /><br />அடடா, அட்டகாசம் ! அமர்க்களம் !!<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90358790925104251462014-07-23T21:41:20.619+05:302014-07-23T21:41:20.619+05:30அன்புள்ள ஜீவி ஐயா,
நமஸ்காரம். வணக்கம்.
தாங்கள் க...அன்புள்ள ஜீவி ஐயா,<br /><br />நமஸ்காரம். வணக்கம்.<br /><br />தாங்கள் கவிதையும் எழுதுவீர்கள் என்பதை இன்று தான் அறிந்து கொண்டேன்.<br /><br />மிக மிக ரஸித்துப்படித்தேன். மீண்டும் மீண்டும் பலமுறை படித்து ரஸித்து மகிழ்ந்தேன். கவிதை மழையில் நனைந்தே போய்விட்டேன்.<br /><br />யார் யாரோ கவிதை என்ற பெயரில் எதை எதையோ கிறுக்கி வருவதை காண சகிக்காமல் இருக்கும் வரண்ட வேளையில் இந்த மழை எனக்கு மிகவும் இதமாக உள்ளது.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72674245905566279822014-07-23T21:04:43.287+05:302014-07-23T21:04:43.287+05:30கொசுறாய் உங்கள் ஆழ்ந்த ரசனைக்காய் 'மழை' பற...கொசுறாய் உங்கள் ஆழ்ந்த ரசனைக்காய் 'மழை' பற்றிய என் கவிதை ஒன்று.<br /><br /><br /> மழை மங்கை<br /><br />சடசடவென சப்தம் கேட்டு<br />சந்தோஷம் தாங்கவில்லை<br />எவ்வளவு காலமாச்சு என்கின்ற<br />ஏக்கம் மனசில் முட்டி மோதியது<br />அந்தி மாலை பொன்னுருக்கு வெயிலில்<br />மங்கையவளுக்கு மஞ்சள் கொடுத்து வரவேற்பு<br /><br />திண்ணைக் கம்பியூடே பார்க்கையில்<br />கண் நிறைத்து கன்னியவள் களிப்பாய்<br />கூத்தாடியது நிறைவாய்த் தெரிந்தது<br />பாளம் பாளமாய் நில வெடிப்பு பார்த்து<br />பரிதவித்த வானத்துக் கண்ணீரோவென<br />நினைப்பும் வந்து மலைப்பு ஏற்பட்டது<br /><br />முதலில் சாய்ந்து சன்னமாய்<br />பின் நெட்டக்குத்தலாய் நேராய்<br />தாரையாய் தளிராட்டமாய்<br />ஒயிலாய் ஓரத்தில் ஒசிந்து<br />மயிலாய் நர்த்தனமிட்டது<br />பார்க்கப் பார்க்கப் பரவசம்<br />நோக்க நோக்க களியாட்டம்<br /><br /><br />சோவென்று பாடிய பாட்டில்<br />சொகுசாய் ஆடிய ஆட்டத்தில்<br />திடும்மென ஒரு மாறுதல்<br />ஒதுங்கி ஒதுங்கி ஓரமிட்டதில்<br />பதுங்கிய பரிதாபம் புரிந்தது<br />வீசி வீசியவள் விரவிச் சிதறி<br />கூசிக் குன்றியது தெரிந்தது<br />உற்றுப் பார்த்ததில்<br />உண்மை உறைத்தது<br /><br /><br />அகல அகல கைவிரித்தவளை<br />அள்ளிப் போக ஆலாய்ப் பறந்த<br />காமுகன் காற்றின் குறும்பு தான்<br />பாடாய்ப் படுத்தியது இவளை<br />விடாது பின்னாடி துறத்தினான்<br />மேலிருந்து கீழ் என்றதனால்<br />மேலாடை விசிறித் தடுமாறினாள்<br />இடது வலது என்று மாறி மாறி<br />இழுத்த இழுப்புக் கெல்லாம்<br />இம்சை பொறுக்காது இழுபட்டாள்<br /><br /><br />படபடவென்று இடி இடித்து<br />பளிச் சென்று கீற்றாய் வானில்<br />பளீரிட்டது மின்னல் வெளிச்சம்<br />தடதடவென்று சீறி சிடுசிடுத்ததில்<br />தளிர்கொடி தப்பித்தாள் பாவம்<br />ஒலித்த ஒலியிலும் ஒளியிலும்<br />காணாமல் போனது காற்று<br /><br />இப்பொழுது நிம்மதியாய்<br />வானத்திற்கும் பூமிக்கும்<br />நீள நீள கம்பி நட்டு நடுவில்<br />தன்னில் தானே கரைந்து<br />நிச்சலனமின்றி நீராடல்<br />தேரோடும் வீதியிலே<br />தெய்வமாய் வந்தாளென்று<br />ஊரெங்கும் பூக்கோலம்<br />தெருவெங்கும் மாக்கோலம்<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31330553241740287942014-07-23T20:47:41.708+05:302014-07-23T20:47:41.708+05:30//உதாரணமாக எஸ்ரா எழுதி இருப்பது கதை அல்ல. அது அனுப...//உதாரணமாக எஸ்ரா எழுதி இருப்பது கதை அல்ல. அது அனுபவம். மழை பற்றிய அனுபவம். மனதில் நிற்கிறது. //<br /><br />எஸ்ராவின் எழுத்து எப்பொழுதும் அவர் பெறும் உணர்வில் எழுவது. பல சமயங்களில் இன்னும் திறம்பட அவர் எழுத்தை கையாண்டிருக்கலா மோ என்று தோன்றும்.<br /><br />உதாரணத்திற்கு இந்த மழை பற்றியே எடுத்துக் கொள்ளுங்களேன்.<br /><br />//வெளியே மழை பெய்துகொண்டிருந்த சப்தம் கேட்டது. மின்விசிறி சுழலும் ஓசைதான் அப்படி இருக்கிறதா அல்லது மழைதானா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஜன்னல்கள் அடைத்து சாத்தப் பட்டிருந்தன.<br /><br />மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சம் சுவர்களில் ஊர்ந்து கொண்ருந்தது.//<br /><br />வெளியே மழை பெய்து கொண்டிருந்தது போலும். மின்விசிறி சுழலும் ஓசை தான் அப்படி இருக்கிறதா அல்லது மழை தானா என்று உறுதியாகத் தெரியவில்லை.<br />ஜன்னல்கள் அடைத்து சாத்தப் பட்டிருந்தன.<br /><br />மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சம் சுவரில் படிந்திருந்தது.<br /><br />-- பின் வரியிலே வெளியே மழைதான் பெய்கிறதா என்று அவருக்கே நிச்சயப்படாத பொழுது<br />முதல் வரியில் மழை தான் பெய்து கொண்டிருப்பதாக அறுதியிட்டுச் சொல்லியிருக்கக் கூடாது.<br /><br />வெளிச்சத்தில் ஊர்தலுக்கு என்ன இருக்கிறது?.. சுவரில் அது படிதலே அந்த இரவு வேளைக்கு அழகாக இருக்கும்.<br /><br />அது சரி, எம்.வி.வி.யின் 'மழை' கதை படித்திருக்கிறீர்களோ?.. சென்னையில் அவர் தி.ஜானகிராமன் வீட்டு மாடியில் சில நாட்கள் தங்கியிருக்க நேர்ந்த பொழுது,<br />தி.ஜா.வின் விருப்பப்படி எழுதி,<br />தி.ஜா.விடமே கொடுத்து 'கல்கி'யில் பிரசுரமான கதை!<br /><br />அந்தக் கதையில் என்னமாய் 'மழை' பெய்யும் உணர்வை நாமே நேரிடையாக அனுப்பவிக்கிற மாதிரி எழுதியிருப்பார்?..<br /><br />ஹூம்.. எப்படியிருந்த தமிழ் கதையுலகம்! நெட்டுயுர்ப்பு தான் மிஞ்சுகிறது!<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70757942243353571562014-07-23T20:23:05.297+05:302014-07-23T20:23:05.297+05:30//அதை இத்தனை சீக்கிரம் மறுபரிசீலனை செய்ய வேண்டி வர...//அதை இத்தனை சீக்கிரம் மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் என்று நினைக்கவில்லை. வாசகர்களில் நக்கீரர்களும் உண்டு.//<br /><br />அன்புள்ள ஜிஎம்பீ சார்,<br /><br />இந்த என் பின்னூட்டத்தை எழுதி முடித்த பொழுது நானும் உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன். நீங்களே வந்து இந்த மறுமொழியைக் கொடுத்ததில் மனசு நிறைந்தது.<br /><br />You are GREAT GMB Sir!<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85464584707679835852014-07-23T20:13:46.337+05:302014-07-23T20:13:46.337+05:30மோதிவரும் மேக அலைகளை ஒதுக்கி ஒதுக்கி விட்டு வெளிக்...மோதிவரும் மேக அலைகளை ஒதுக்கி ஒதுக்கி விட்டு வெளிக்கிளம்பி நீந்திக் கொண்டு இருக்கும் நிலாவின் ஒளி மரக்கிளை இடுக்குகள் வழியே நழுவிச் சாலை எங்கும் //<br /><br />மரக்கிளை வழியாக கசியும் நிலாவின் ஒளியை நானும் ரசிப்பேன்.<br /><br />ஏதோ இவ்வுலகத்தையே, கோளத்தையே சுழற்றி எறிவதுபோல் அது எழும்பிய வேகத்தில் நீல மெத்தையில் வைர நகை உருண்டாற்போல், அதன் வெண்மை வானில் ஜ்வலித்தது. நான் பரவசமானேன். என் கைகள் என்னையறியாமல் வானை ஆலிங்கனம் செய்ய விரிந்தன//<br /><br />மேகத்தில் இது போன்ற வெண்மை திட்டுகளை ரசிப்பது உணடு. அருமையான வர்ணனைகள்<br /><br />பகல் சொற்களின் விளைநிலம், இரவு சொற்களற்ற தியானவெளி. ஒரு மாலைக்கு எவ்வளவு பேசுகிறோம், எவ்வளவு சொற்கள் உதட்டிலிருந்து உதிர்ந்துபோகின்றன, பேச்சு துவங்கி பேச்சு ஓயும் வரை பகலெல்லாம் வீடு உருமாறிக் கொண்டேயிருக்கிறது.//<br /><br />உண்மை, பேசும் பேச்சால் வீடு உருமாறுவது உண்மை.<br /><br />மூவர் எழுத்துகளும் மிக அருமை.<br />பகிர்வுக்கு நன்றி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26946503947406610372014-07-23T18:47:17.426+05:302014-07-23T18:47:17.426+05:30****தமிழ் எழுத்தினில் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்...****தமிழ் எழுத்தினில் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்பவர்களும், துணிந்து அதைச் சுட்டிக்காட்டி திருத்தாமல் செல்பவர்களும், தமிழ்மொழிக்கே துரோகம் புரிபவர்கள் என்றுதான் நினைக்க வேண்டியதாக உள்ளது.<br /><br />இன்றைய பதிவர்களில் எழுத்துபிழை ஏதும் இல்லாமல் மிக அழகாக எழுதுபவர்கள் ஒரு 5% to 10% இருந்தாலே ஆச்சர்யம் தான். ***<br /><br />சார்: வலைபதிவில் எழுதுவது பொதுவாக "முதல் ட்ராஃப்ட்" போலதான் என்பது என் புரிதல். பிரபல எழுத்தாளர்கள் வலை தளங்களிலும் எழுத்துப்பிழையைப் பார்க்கலாம்.<br /><br />மற்றபடி உங்க கோபமும், ஆதங்கமும் தங்கள் தமிழ் மொழிப்பற்றின் வெளிப்பாடே என்பதை சரியாகப் புரிந்து கொள்கிறேன்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82578128747495115352014-07-23T17:32:43.184+05:302014-07-23T17:32:43.184+05:30அனைத்து வர்ணனைகளும் அருமை! இருந்தாலும் உன்ர்வுகளை ...அனைத்து வர்ணனைகளும் அருமை! இருந்தாலும் உன்ர்வுகளை வர்ண ஜாலமாக அள்ளித்தெறிப்பதில் லா.சா.ரா தனித்துத் தெரிகிறார் மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61285589284172222012014-07-23T17:16:28.227+05:302014-07-23T17:16:28.227+05:30பெரிய எழுத்தாளர்களின் வர்ணணைகளை ரசிக்க வைத்தமைக்கு...பெரிய எழுத்தாளர்களின் வர்ணணைகளை ரசிக்க வைத்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com