நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
30.9.10
எந்திரன் - திரைத்துறை தீபாவளி!
29.9.10
அதிசயக் காட்சியின் பின்னணி!
28.9.10
ஹரியுடன் நான் 25-09-10
ஹரியுடன் நான் 25-09-10
மேலே இருப்பது செப்டம்பர் இருபத்தைந்தாம் தேதிய நிகழ்ச்சியின் சுட்டி.
பார்த்து, கேட்டு, ரசியுங்கள்.
அப்பாதுரை அவர்கள் கேட்ட, 'வான் நிலா, நிலா அல்ல' பாடலும் வருகின்றது.
27.9.10
சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?
(நன்றி - தினமலர் 27 -9-2010)
How to build a bird box for house sparrows
Sparrows often nest under the eaves of houses but many modern houses are not 'sparrow friendly'. This bird box will help reverse the decline. | Sparrows are gregarious birds. This home made nest box uses 12mm exterior plywood and will accommodate up to three breeding pairs of house sparrows. |
26.9.10
25.9.10
ஹரியுடன் நான்...NO HURRY!!
இன்றைய நிகழ்ச்சியின் கடைசிப் பாடலாக வந்தது பார்க்கின்ற வகையில் கவிதையாக வந்த பார்கவி பாடிய அவள் ஒரு தொடர்கதை பாடல் 'கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும்' பாடல். எல்லோரையும் போலவே எனக்கும் மிகவும் பிடித்த பாடல். நன்றாகவே பாடினார். ஹரிஹரன் சரணத்தில் தவறு செய்ததாய் சொன்னார். கேபி சொல்லும்போது பொதுவாகவே எல்லா பாடல்களும் தனக்குப் பிடித்ததாகச் சொன்னார். குறைகளை நிபுணர்கள்தான் சொல்ல வேண்டும் என்றார். இயக்குனர் வசந்த்துடன் கலந்துரையாடி கோல்டன் பீச் கட்ட ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் எடுத்ததாகவும், முதன்முறை அங்கு எடுக்கப் பட்ட காட்சிகள் என்றும் சொன்னார். பல நடிகர்களை தான் முதன்முறை நடிக்க வைத்தது போல கோல்டன் பீச்சையும் தான்தான் முதலில் உபயோகப் படுத்தியதாகச் சொன்னது ரசனை. எம் எஸ் வி பேசும்போது கவிஞர் எப்போதும் கேட்கும் 'சப்தத்துக்கா சந்தத்துக்கா' கேள்வி பற்றி சொன்னார். இந்தப் பாடல் வரிகளாய் எழுதப் பட்டு பின்னர் அதற்கேற்ப இசை வடிவம் கிடைத்ததாகச் சொன்னார். ஹரியுடன் நான் 24-09-10
ஹரியுடன் நான் 24-09-10
முதல் நாள் (23-09-10) இருந்த எக்சைட்மெண்ட் மிஸ்ஸிங்?
பார்த்து, கேட்டு, விமரிசனம் எழுதுங்கள்!
24.9.10
ஹரியுடன் நான், கேபி, எம் எஸ் வி..
23.9.10
21.9.10
வாசல் தேடி ..
2) இரண்டாவது சம்பவம் பல வருடங்களுக்குப் பிறகு, வாசலில் வந்த ஒரு பொன் மானைப் பார்த்து, (ஓ சாரி - மைசூர் சில்க் புடவையைப் பார்த்து,) திருமதி ஆசைப்பட்டுக் கேட்க, அதை ஒரு பெரும் விலை கொடுத்து வாங்கி, ஒரு முறை அதை துவைத்த உடனேயே அது காற்றுப் போன பலூனாக சுருங்கி, சுருணைத் துணி போல காட்சி அளித்தது. வழக்கம் போல அந்த புடவை ஆசாமியை அப்பொழுது பார்த்ததுதான் கடைசி. அநேகமாக அவர் வேறு தெருக்களில் அல்லது வேறு பகுதிகளில் அல்லது வேறு ஊர்களில், இருக்கின்ற என்னைப் போன்ற முகத் தோற்றம் உள்ள ஆட்களைத் தேடி சென்றிருப்பார் என்று நினைக்கின்றேன்.
இப்போ எல்லாம் நான் ரொம்ப உஷாராகி விட்டேன். வாசலில் யார் வந்து, எனக்கு என்ன விற்க முற்பட்டாலும், கண்ணை மூடிக்கொண்டு, 'நோ, வேண்டாம், ஒத்து, பேடா, நஹி..' என்று தெரிந்த மொழிகள் எல்லாவற்றிலும் உரத்த குரலில் கூறிவிட்டுத்தான் கண்ணைத் திறந்து பார்க்கிறேன். சென்ற வாரம் அப்படி கூறிய பிறகு கண்ணைத் திறந்து பார்த்தால் 'thank you sir' என்று சொன்னவாறு, இந்த பகுதியை சேர்ந்த தபால்காரர் தெருவில் போய்க்கொண்டிருந்தார், கையில் மணி ஆர்டர் ஃபாரம், பணம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு!19.9.10
16.9.10
யார் அடிச்சாரோ?
14.9.10
பிஹார் முதலமைச்சர் யார்?
12.9.10
11.9.10
மஹாகவி பாரதி நினைவுகள்..

செப்டெம்பர் பதினொன்று. பாரதியார் (நினைவு) தினம்.
பாரதியார் வரகவி. நினைத்த மாத்திரத்தில் நினைத்த பொருள் பற்றி கவி பாடும் வல்லமை பெற்றவர். எதுகை, மோனையுடன் வார்த்தைகள் விழும்போது அவரே ஆச்சர்யப் பட்டுப் போவாராம்.
மவுன விரதம் இருப்பார். சமயங்களில் பதினைந்து நாள் கூட பேசாமல் இருப்பார். ஒரு வினோதம். பேச மாட்டாரே தவிர கவிதை புனைந்தவுடன் வாய் விட்டுப் பாடுவார்.

பாரதியார் நன்கு அறிந்த மொழிகள். தமிழ், ஆங்கிலம், காசிக்குச் சென்ற போது கற்ற சமஸ்கிருதம், ஹிந்தி, புதுவையில் ஃப்ரெஞ்சுப் பாஷை, வஙகாளி, முதல் உலக யுத்தம் தொடஙகியதும் ஜெர்மன் பாஷை, லத்தீன், உருது, சென்னையில் இருந்த போது தெலுங்கு, கடைசி நாட்களில் அரபி, மலையாளம்...! தெலுங்கு பாஷை ரொம்ப்ப் பிடிக்குமாம். சுந்தரத் தெலுங்கு... எனினும் அவர் பாடியது “யாமறிந்த மொழிகளிலே...”
பிடித்த கீர்த்தனைகள்..மாருபல்க, நகுமோமு,சக்கனிராஜ, ஜெயஜெய கோகுலபால...
பெண் விடுதலை பற்றிப் பாடிய பாரதி செல்லம்மாவை அப்படி வைத்திருக்கவில்லை. இவர் சொல் மீறி ஊர் சென்ற செல்லம்மாவின் பட்டுப் புடவைகள் கிழிக்கப் பட்டு தலைப் பாகையாயின! பாத்திரங்கள் கடையில் போடப் பட்டன. செல்லம்மாவை விவாக ரத்து செய்து மறுகல்யாணம் செய்யப் போவதாய் பயமுறுத்தினார்! ஊரிலிருந்து வந்ததுமே செல்லம்மாவின் தந்தை இறந்த செய்தி கேட்டும் முதலில் அவரை விடாமல் பின்னர் ‘பெருந்தன்மையாய்’ மனைவியை ‘மன்னித்து’ஊருக்கு அனுப்பி வைத்தார்.
குள்ளச் சாமியார் போன்ற சிலரால் கஞ்சா போன்ற போதை வஸ்த்துக்கள் உபயோகிக்கும் வழக்கம் வந்தது.

பால்ய விவாகத்துக்கு எதிரி. தன் பெண்கள் இருவருக்கும் அப்படிச் செய்யக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார். அதனால் வீட்டில் பந்துக்களிடையே மனஸ்தாபமும் தோன்றியது. ஆனால் தன் நண்பர் ஸ்ரீ ஸ்ரீ சாரியாரின் புதல்வி யதுகிரி திருமணம் ஆகிச் செல்லப் போகிறாள் என்ற போது அவர் யதுகிரிக்கு புகுந்த வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று 1915 களிலேயே கொடுத்த அறிவுரைப் பட்டியலைப் பற்றி தனிப் பதிவே போடலாம்...!
கடைசி நாட்களில் மருந்தின் மேல் வெறுப்புற்று சாப்பிட மாட்டேன் என்றவரை அவர் பெண் சகுந்தலா கொடுத்தால் சாப்பிடுவார் என்று சொல்லிக் கொடுக்கச் சொன்னார்களாம். மிகுந்த ப்ரயாசைக்குப் பின் அவரும் கொடுத்தாராம். முதலில் மறுத்த பாரதி பிறகு வாங்கிப் பருகி விட்டு, “அம்மா, நீ கொடுத்தது மருந்தில்லை...பார்லி தண்ணீர்..பரவாயில்லை” என்று கண்ணை மூடி விட்டாராம்.
மரணத்தை வெல்ல வழி தேடுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பாராம். 'ஓம்' என்ற வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தையை தயார் செய்ய தேடிக் கொண்டிருந்தாராம்.
மரணத்தை வென்று விட்டார்தான்..





























