6.2.26

அச்சோ... அப்புறம் என்ன ஆச்சு

 

அப்புறம் என்ன ஆச்சு

JKC

அப்புறம் என்ன ஆச்சு என்ற தலைப்பில் ஒரு சம்பவத்தை பற்றி எழுதி அதேபோன்று மற்றவர்களுக்கும் நடந்த என்ன ஆச்சு சம்பவங்களைப் பற்றி எழுத வேண்டுகோள் விட்டிருந்தேன். ஆனால் இது வரையிலும் நோ ரெஸ்பான்ஸ்.

சரி நாமாவது தொடரலாம் என்றே பின் வரும் நடந்த கதையை 
எழுதுகிறேன்.

அதற்கு முன் ஒரு அரதப் பழைய என்ன ஆச்சு ஜோக்.

இந்தப்பையன் எங்க வீட்டில் ஊதுவத்தி ஸ்டாண்டையே முழுங்கிட்டான்
தெரியுமோ?

ஐயோ அப்புறம் என்ன ஆச்சு?

ஒன்னும் ஆகலை. எங்க வீட்டில் வாழைப்பழம் தான் ஊதுவத்தி ஸ்டாண்ட்.

என்னுடைய பதவி உயர்வு பற்றி தீர்மானிக்கும் நாள் அது.

இன்டெர்வியூவிற்காக காத்திருந்த நான் டென்ஷன் குறைக்க ஒரு சிகெரெட் 
பிடித்தால் தேவலை என்ற முறையில் வெளியில் சென்று ஒரு சிகரெட்டை 
பற்றவைத்துக் கொண்டு தீப்பெட்டியை பேண்ட் பாக்கெட்டில் சொருகியது 
தான் தாமதம். பாக்கெட்டில் இருந்து தீ படலங்கள் வெளி வந்தன.

ஐயோ அப்புறம் என்ன ஆச்சு?

ஏதாவது ஆகியிருந்தால் நான் இங்கு கதையை எழுத முடிந்திருக்காதே.  
ண்ணும் ஆகலை என்று சப்பென்று கதையை முடிக்கவும் விருப்பமில்லை.  

ஆகவே கதையுடன் சம்பத்தப்பட்ட , ஆனால் அவசியம் என்றில்லாத சில 
தகவல்களையும் சேர்த்து கதைக்கு கொஞ்சம் அலங்காரம் செய்து 
கொடுக்கிறேன்.

ரெக்ரூட்மென்ட், ப்ரோமோஷன், அட்மினிஸ்ட்ரேஷன், என்ற துறைகளில் 
தன்னாட்சி உடையது எங்கள் department of space. அதாவது upsc இடபடல் 
இல்லை.

Promotion procedure இரண்டு வகை. administration கேடர் அலுவலருக்கு UPSC 
செய்வது போல் எழுத்து பரீட்ச்சை, நேர்காணல், ரேங்க் லிஸ்ட் என்று 
எல்லாம் உண்டு. இது இல்லாமல் CR எனப்படும் கான்பிடென்ஷியல் 
ரிப்போர்ட், விஜிலென்ஸ் ரிப்போர்ட் ஆகியவையும் பார்க்கப்படும். ஒழிவு 
ஏற்படும்போது ரேங்க் அனுசரிச்சு, ரோஸ்டர் அனுசரிச்சு ரேங்க் லிஸ்டில் 
இடம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வும், பணி இட மாறுதலும் கிடைக்கும்.  
Technical கேடர் அலுவலருக்கு வேறு விதம்.

வழக்கம் போல் CR மற்றும் விஜிலென்ஸ் ரிப்போர்ட் எடுத்துக்கொள்ளப்படும்.  

எழுத்து பரீட்சை என்று ஒன்று இல்லை. Trade test என்ற ஒன்று போஸ்டுக்கேற்ப வைக்கப்படும். டெஸ்டில் பாஸ் ஆனால் DPC (departmental promotion commitee) இன்டெர்வியூக்கு அழைக்கப்படுவர். அதில் ப்ரோமோஷன் கொடுப்பதா வேண்டாமா என்பது தீர்மானிக்கப்படும். ப்ரோமோஷன் கொடுக்கலாம் என்று தீர்மானம் ஆனால் ஜனவரி முதலா, அல்லது ஜூலை முதலா என்பதும் தீர்மானிக்கப்படும். ரேங்க் லிஸ்ட் என்ற ஒன்று கிடையாது.

ஒரு முறை இன்டெர்வியூவில் நிராகரிக்கப்பட்டவர் 1 அல்லது இரண்டு வருடங்களுக்குப்பின் மீண்டும் இன்டெர்வியூவுக்கு அழைக்கப்படுவர்.

எங்கள் டிபார்ட்மெண்டில் technical போஸ்டுகள் எல்லாம் FCP (flexible complementary promotion)க்கு உட்பட்டவை. இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இன்டெர்வியூ recruitment section interview ஹாலில் நடந்தது. நானும் என்னைப் 
போன்று சிலரும் இருந்தோம். டென்ஷன்…. காரணம் ஏற்கனவே சென்ற வருடம் வந்து தோற்ற அனுபவம்.

இன்டெர்வியூவிற்காக காத்திருந்த நான் டென்ஷன் குறைக்க ஒரு சிகெரெட் பிடித்தால் தேவலை என்ற முறையில் வெளியில் சென்று ஒரு சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டு தீப்பெட்டியை பேண்ட் பாக்கெட்டில் சொருகியது தான் தாமதம். பாக்கெட்டில் இருந்து தீ படலங்கள் வெளி வந்தன.

சட்டென்று pant பாக்கெட்டை அமுத்தி பிடித்தேன். தீ நின்று விட்டது.

பேண்டின் பாக்கெட்டில் உள்புறம் ஒரு பெரிய ஓட்டை. தீப்பெட்டியின் 
தீக்குச்சிகள் யாவும் முனைகள் கரிந்த நிலையில். சுதாரிப்பதற்குள் என்னை இன்டெர்வியூக்கு கூப்பிட்டார்கள்.

ஒரு பதட்ட நிலையுடன் உள்ளே சென்றேன். வழக்கமான விசாரிப்புகளுக்கு பின் technical side கேள்விகள் துவங்கின. ஒரு கேள்வி : 

What is the scope of a variable ?

கேட்டவர் பெயர் பூஜாரி. ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர். விடை தெரிந்தவர்கள் விடை சரிதானா என்பதை கடைசியில் சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

அந்த இன்டர்வியூவில் ப்ரோமோசன் கிடைத்தது, 5 வருடங்களுக்குப்பின் 
கிடைத்த அடுத்த grade உயர்வு.

கேள்விக்கு விடை.

A variable can be local or global. Integer, floating point etc. just describe type of variable data.

இந்த கதை 40 வருடங்களுக்கு (1985) முற்பட்டது.

இதற்கு அடுத்த ப்ரோமோஷன் இன்டெர்வியூவுக்கு செல்லும்போதும் இது 
போன்ற ஒரு சம்பவம்/சகுனம் நடந்தது. அது வேறு மாதிரி. அது அடுத்த பதிவில்.

=========================================================================================================

ச்சும்மா  ஜாலி...



========================================================================================

ஃபேஸ்புக்கிலிருந்து...



========================================================================================


சிலிகான் ஷெல்ஃப் RV காந்தி பற்றி எழுதி இருந்த பதிவிலிருந்து சில வரிகள்...

காந்தியை மணந்திராவிட்டால் கஸ்தூரிபா ஒரு சாதாரண குடும்பத் தலைவியாக, உயர் மத்தியதரக் குடும்பத்தவராகத்தான் வாழ்ந்திருப்பார். அப்படி வாழ்வதைத் தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காந்தி படுத்திய பாட்டில் அப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைந்திருக்கக் கூடாதா என்று அவர் நினைத்திருந்தால் வியப்பே இல்லை. உலகத்தினர் அனைவரிடமும் பொறுமை காட்டிய காந்தி, அவர்களால் தான் வளர்ந்த சூழ்நிலையை, தனக்குக் கற்றுத் தரப்பட்ட விழுமியங்களை மீற முடியவில்லை எனறால் அவர்களை nudge மட்டுமே செய்த காந்தி, கஸ்தூர்பா ஒருவரிடம் மட்டும்தான் பொறுமை இல்லாத சராசரி கணவனாக, கொஞ்சம் ஆணாதிக்கத் தன்மை உடையவராக நடந்து கொண்டிருக்கிறார். அவருக்குக் கற்றுத் தரப்பட்ட விழுமியங்களை - கணவனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம் இத்யாதி - அவராலும் தாண்ட முடியவில்லை, கஸ்தூரிபாவாலும் தாண்ட முடியவில்லை.

சுருக்கமாகச் சொன்னால் என் அப்பாவிடம் அன்பும் பாசமும் மரியாதையும் நிறைய உண்டு. அப்பாவிடம் இருக்கும் மரியாதை கொஞ்சம் இடைவெளியை ஏற்படுத்தத்தான் செய்கிறது. அம்மாவிடம் மரியாதை கிரியாதை எல்லாம் எதுவும் கிடையாது. பார்க்கும்போதெல்லாம் அணைத்துக் கொள்ளத்தான் தோன்றும். அப்படித்தான் காந்தியையும் கஸ்தூரிபாவையும் பற்றியும் உணர்கிறேன்.  

கிழவர் யாரையும் நிம்மதியாக வாழவிடமாட்டார். சிறையில் கஸ்தூரிபாவுக்கு ட்யூஷன் எடுத்திருக்கிறார். சரித்திரம், பூகோளம் என்று. பா பூகோளத்தில் வீக்காம். கஷ்டப்பட்டு இடங்களின் பெயர்களை மனப்பாடம் செய்வாராம். எழுபது எழுபத்தைந்து வயதில் இவர் இம்சை வேறு!  

- சிலிக்கான் ஷெல்ஃப் RV -

=============================================================================

பூச்சிகளிடமிருந்து செடியைப் பாதுகாக்க நம்மாழ்வார் தரும் சில யோசனைகள்.  இயற்கையிலிருந்தே அப்படியே..  
=========================================================================================

சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் அறிமுகபப்டுத்திய க்ரானிக்கிள் புத்தகம் உங்கள் நினைவில் ஒரு பயம் கலந்த நினைவாக மிச்சம் இருக்கும்.  இன்று அதன் முன்னுரை!  

க்ரானிக்கிள் புத்தக அறிமுகம்.

இந்த நூற்றாண்டு தொடங்கியபோது ஒரு மனிதன் விண்வெளியில் மிதக்கிறான் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காட்சி. அப்போது விமானங்கள் இன்னும் ஒரு கனவாகவே இருந்தன. பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிக்கும் திறன், மனிதன் அறிவு மற்றும் ஆய்வுகளின் எல்லைகளை எவ்வாறு பின்னுக்குத் தள்ளிவிட்டான் என்பதைக் குறிக்கிறது. ஆயினும் கிரேக்கத்திற்கு விடுமுறை விமானம் எந்த அற்புதமான இடத்தையும் விட அதிகமான உயிர்களை மாற்றியுள்ளது.  

நூற்றாண்டின் தொடக்கத்தில், உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் பிரிட்டனை தங்கள் ஆட்சியாளராகப் பார்த்தார்கள். பெரும்பாலானவர்கள் நம்மைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை, எங்களுக்கும் அவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. பிராட்ஃபோர்டு முதல் பம்பாய் வரை, பெரும்பாலான மக்களின் எல்லைகள் அவர்களின் சொந்த நகரம் அல்லது கிராமத்திற்குள் மட்டுமே இருந்தன. பிரபலமான செய்தித்தாள்கள் ஆரம்ப நிலையில் இருந்தன, மோட்டார் கார் ஒரு ஆடம்பரமாக இருந்தது. 1938 ஆம் ஆண்டு வரை கூட ஒரு பிரிட்டிஷ் பிரதமர் செக்கோஸ்லோவாக்கியாவை "ஒரு தொலைதூர நாடு" என்று பேச முடியும்.

20 ஆம் நூற்றாண்டு உலகத்தை மட்டுமல்ல, நம் வாழ்க்கையையும் புரட்சிகரமாக மாற்றியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் CHRONICLE இந்த வியக்கத்தக்க ஆண்டுகளின் கதையைச் சொல்கிறது. இது ஒரு வரலாற்று புத்தகம் அல்ல; இது ஒரு அனுபவம். CHRONICLE என்பது நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு கதை.  

தொலைக்காட்சி செய்திகளின் இரவுப் பனோரமா வழியாக நாம் பழகி விட்டதைப் போலவே, இந்த பக்கங்களில் நிகழ்வுகள் எவ்வாறு விரிவடைகின்றன என்பதை நீங்கள் அறியலாம். பெரிய மற்றும் சிறிய நிகழ்வுகள் அவை நடக்கும் போதும், நீங்கள் அங்கு இருப்பது போலவும் தெளிவாகப் பதிவாகியுள்ளன. டைட்டானிக் மூழ்கிய அதிர்ச்சியிலிருந்து VE-நாளின் மகிழ்ச்சி வரை, பென்சிலின் தற்செயலான கண்டுபிடிப்பு முதல் கணினிகளின் கண்டுபிடிப்பு வரை, CHRONICLE 20 ஆம் நூற்றாண்டு பற்றிய தனித்துவமான நுண்ணறிவை வழங்குகிறது.

வாசகர்கள் பகுப்பாய்வை வழங்கும் புத்தகம் இது.  இன்றைய நிலையிலிருந்து , நீங்கள் பின்னோக்கிப் பார்த்து இன்று நாம் வாழும் உலகத்தை நன்கு புரிந்து கொள்ளலாம். சில சமயங்களில் இந்தக் கண்டுபிடிப்பு மாயைகளை உடைக்கும்: ஏக்கப் புகைமூட்டத்தின் மத்தியில் இப்போது பெரும்பாலும் மறந்துவிட்ட வாக்குரிமை இயக்கத்தின் வன்முறை; எட்வர்டியன் ஆடம்பரத்தை பொய்யாக்கிய கலைப் புளிப்பு; வாகன ஓட்டிகளின் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் ஏற்பட்ட சாலைகளில் ஏற்பட்ட குழப்பம்; பிரிக்ஸ்டன் மற்றும் டாக்ஸ்டெத் கலவரங்களுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பு பிரிட்டிஷ் தெருக்களில் நிறுத்தப்பட்ட துருப்புக்கள்; மற்றும் முதியோர் ஓய்வூதியங்கள் போன்ற மிதமான சமூக சீர்திருத்தங்களால் தூண்டப்பட்ட ஆர்வங்கள். 

கிரானிக்கிள் இதுவரை நடந்தவற்றை மாதங்களாக, நாள் நாளாக சொல்கிறது. அதன் கவர்ச்சியின் ஒரு பகுதி நிகழ்வுகளின் சுருக்கமாகும்: நடன விருப்பங்கள், மற்றும் பேரழிவுகள், விளையாட்டு வீரதீரங்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்பு. பலருக்கு இந்த புத்தகத்தின் பக்கங்கள் நினைவுகளை மீண்டும் கொண்டு வரும்; இது காலத்தின் நாடகத்தை மீண்டும் கைப்பற்றுவது மட்டுமல்லாமல், காலப்போக்கில் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளையும் அனைவருக்கும் எடுத்துக்காட்டுகிறது. நேற்றைய அடித்தளங்கள் இன்றைய தலைப்புச் செய்திகளாக இருக்கலாம்.

உதாரணமாக, ஜூன் 1963 இல், பிரிட்டன் ப்ரூமோ ஊழலால் வெறி கொண்டது, பெர்லின் சுவர் பற்றிய ஜனாதிபதி கென்னடியின் சொற்பொழிவால் அமெரிக்கா கிளர்ந்தெழுந்தது, ரஷ்யா தனது முதல் விண்வெளிப் பெண்ணை உற்சாகப்படுத்தியது. அப்படியானால், ஈரானிய மதத் தலைவர் கோமெய்னி தெஹ்ரானில் கைது செய்யப்பட்டதை யார் கவனித்தார்கள்? அவருக்கு என்ன முக்கியதத்துவம்? 

ஒரு படகு கார்,  அதன் கதவுகள் திறந்திருந்ததால் இழந்தது அசாதாரணமானது: இருப்பினும் வரலாறு ஜீப்ரூக்கிற்கு வெளியே மீண்டும் நிகழும் 34 ஆண்டுகளுக்கு முன்பு அது ஜனவரி 31, 1953 அன்று ஐரிஷ் கடலில் நடந்தது, .  

நூற்றாண்டு நிறைவடையும் போது, எதிர்கால வரலாற்றாசிரியர்கள் நம்மை என்ன சொல்வார்கள் என்று யோசிக்கத் தூண்டுகிறது. முதல் உலகப் போர் பழைய பேரரசுகளை அழித்து ரஷ்யப் புரட்சியை உருவாக்கிய பெரிய திருப்புமுனையாக இருக்குமா? அல்லது வரலாற்றாசிரியர்கள் ஹிட்லரையும் அட்டூழியங்களின் கதைகளையும் நினைவு கூர்வார்களா?

பெண் விடுதலை போன்ற மாற்றங்கள் அதிகமான மக்களைப் பாதித்துள்ளன என்று சமூக வரலாற்றாசிரியர்கள் வாதிடலாம். இந்த நூற்றாண்டை வெள்ளையர் தனது வரலாற்று ஆதிக்கத்தை இழக்கத் தொடங்கிய நூற்றாண்டாகவும் கருதலாம். அல்லது இந்த நூற்றாண்டை வேறு எந்த நூற்றாண்டிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியா? எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதனுக்கு அனைத்து மனித வாழ்க்கையையும் முடிவுக்குக் கொண்டுவரும் திறனை இது வழங்கியுள்ளது.  

படைப்பின் செயல்பாட்டில் தலையிடும் சக்தியையும் அறிவியல் நமக்கு வழங்கியுள்ளது. சோதனைக் குழாய்களிலிருந்து குழந்தைகள் பிறந்துள்ளன, டிஎன்ஏவின் மர்மங்கள் அவிழ்க்கப்பட்டுள்ளன, வாய்வழி கருத்தடை பொதுவானதாகிவிட்டது. நாம் நீண்ட காலம் வாழ்கிறோம், ஒரு காலத்தில் போலியோ, பெரியம்மை மற்றும் காசநோய்க்கு அஞ்சப்பட்ட நோய்கள் - கிட்டத்தட்ட நீக்கப்பட்டுள்ளன. முன்னேற்றத்திற்கு இரண்டு வாழ்த்துக்கள், ஆனால் மூன்று அல்ல, ஏனெனில் எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் வடிவங்கள் போன்ற புதிய நோய்கள் இன்னும் வெல்லப்பட வேண்டியுள்ளன.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களின் சகாப்தம் நமது தனிமையை விட அதிகமாக மாறிவிட்டது. அது போர்களை நம் வாழ்க்கை அறைகளுக்குள் கொண்டு வந்து, விளையாட்டு வீரர்களை கோடீஸ்வரர்களாகவும், இளைஞர்களின் உதாரண புருஷர்களாகவும் மாற்றியுள்ளது. பொழுதுபோக்கும் கூட, சாப்ளின் முதல் பீட்டில்ஸ் வரை அதன் முதல் உலகளாவிய சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியுள்ளது. இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் கலை வெற்றிகள் பெரும்பாலும் வலுவான இசைக்குழுக்களைத் தாக்கும். பெரும்பாலான செய்தி நிகழ்வுகளை விட, அவைதான் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக ஆக்குகின்றன.  

ஏக்கத்திற்காகவோ அல்லது கண்டுபிடிப்புக்காகவோ, குறிப்புக்காகவோ அல்லது வேடிக்கைக்காகவோ இந்தப் பக்கங்களை நீங்கள் திருப்பினாலும், நம் வாழ்க்கையை வடிவமைத்து மாற்றிய நிகழ்வுகள் இங்கே. புத்தகத்தின் 1360 பக்கங்கள் மனிதனின் அறிவொளி மற்றும் அவனது கொடுங்கோன்மைக்கு ஏராளமான சான்றுகளை வழங்குகின்றன. இந்த நூற்றாண்டு முடிவடைவதற்கு இன்னும் 4,000 நாட்களுக்கு மேல் உள்ளன, மனிதன் நமது கிரகத்தை அழிக்க அல்லது இந்த 20 ஆம் நூற்றாண்டின் இன்னும் முடிக்கப்படாத கதையில் புகழ்பெற்ற புதிய அத்தியாயங்களை எழுத போதுமான நேரம் உள்ளது.

Derrik Mercer

===================================================================================



இசை விமரிசகர் சுப்புடு, விகடனில் இளையராஜா பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், தனக்கு 80 வயது ஆகிவிட்டதையும், இரண்டு ரண சிகிச்சைகள் முடிந்துவிட்டபடியால் வாழ்க்கையின் எல்லையில் இருக்கும் தனக்கு இளையராஜாவின் சிம்பொனி இசையை கேட்க முடியுமா?’ என்றும் ஆதங்கத்துடன் கேட்டிருந்தார்.
விகடன் கடைக்கு வந்த அன்று மாலையே, இளையராஜா என்னை வீட்டுக்கு அழைத்தார்.
“பெரியவர் சுப்புடு மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. எனது ‘சிந்து பைரவி’ இசையைக் கேட்டுவிட்டு செல்லும் இடமெல்லாம் என்னை அவர் பாராட்டிப் பேசியதை நான் அறிவேன். அந்த நேரத்தில் எனக்கு எட்டு பக்கங்கள் கொண்ட கடிதமும் எழுதியிருக்கிறார். இப்போது அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது? அவரது ஆசையை நிறைவேற்றுகிறேன். டெல்லிக்குச் சென்று, நான் தரும் சிம்பொனி சி.டி.யை அவருக்குப் போட்டுக் காட்டிவிட்டு கையோடு கொண்டு வாருங்கள். நான் செய்வது நீங்கள் பத்திரிகையில் எழுதுவதற்காக அல்ல. என் செலவிலேயே டெல்லிக்கு விமானத்தில் சென்று வாருங்கள். விகடன் ஆசிரியரிடம் அனுமதி கேளுங்கள்!” என்றார்.
மறுநாள், அலுவலகம் சென்றதும் வீயெஸ்வி சாரிடம் இளையராஜாவின் விருப்பத்தைச் சொன்னேன். உடனே ஆசிரியரிடம் என்னை அழைத்துச் சென்ற வீயெஸ்வி சார், அவருக்கு விளக்கம் சொல்லி, “பொன்ஸீயை டெல்லிக்கு அனுப்பலாம் சார். அதைப் பற்றி கட்டுரையும் எழுதித்தரட்டும்'”
என்றார்.
பத்து வினாடிகள் கண்களை மூடித்திறந்த ஆசிரியர், “மிக நல்ல விஷயம். ராஜாவைப் பாராட்ட வேண்டும். விகடனில் வந்த விஷயம்தானே... விகடன் செலவிலேயே டெல்லிக்குச் சென்று வரலாமே. கட்டுரை பற்றி ராஜாவிடம் பொன்ஸீயே பேசட்டும்..!” என்று அறுதியிட்டுச் சொன்னார்.
அதற்குள்ளாக டெல்லிக்கு இரண்டு டிக்கெட் போட்டு, இளையராஜா முந்திக் கொண்டார். “என் மூத்த மகன் கார்த்திக் ராஜாவையும் அழைத்துக் கொண்டு செல்லுங்கள். பெரியவரிடம் அவன் கல்யாணத்திற்கு ஆசி பெறட்டும்” என்றார்.
டெல்லி விமான நிலையத்தில் இறங்கியதும் பெரிய பழக் கூடையுடன் எங்களுக்காகக் காத்துக் கொண்டு இருந்தார், அன்றைய டெல்லி ஆனந்த விகடன் நிருபர் ஸ்ரீதர்.
அவரது வழிகாட்டலில் பெரியவர் சுப்புடுவைச் சந்தித்தோம். படு உற்சாகமாகமான சுப்புடு, “நான் எழுதிய ஒரு ஆதங்க வரிக்காக, சிம்பொனி இசையைக் கொடுத்து அனுப்பிய ராஜா கிரேட்தான்! ராஜாவே நேர்ல வந்த மாதிரிதான்!” என்று சொல்லி, கார்த்திக் ராஜாவை அணைத்துக் கொண்டார்.
அமைதியாக சிம்பொனியை ஆற அமரக் கேட்டார். பிற்கு தன் கைப்பட இளையராஜாவுக்கு ஒரு கடிதம் எழுதித் தந்தார்.
தான் வைத்திருந்த கீ-போர்டை எடுத்து வந்து, கார்த்திக் ராஜாவிடம் சினிமா இசை நுணுக்கம் பற்றி மணிக்கணக்கில் பேசினார்.
சென்னைக்கு வந்ததும் எந்த மிகைப் படுத்தலும் இல்லாமல், ஒரு அனுபவக் கட்டுரையாக எழுதி ஆசிரியருக்கு அனுப்பினேன்.
சிறு திருத்தங்களுடன் அது விகடனில் பிரசுரமானது.

- பொன்ஸீ -  நன்றி: விகடகவி ;  நன்றி R. கந்தசாமிசார், FB 
=======================================================================================

மோதிரத்தை எடுத்துக் கொண்ட சோனியா :
இந்திராவின் மூத்த மருமகள் சோனியா; இளைய மருமகள் மேனகா. வீடு, சமையல் உள்ளிட்ட குடும்பப் பொறுப்புகளை, சோனியா கவனித்துக் கொள்வார். இந்திராவின் உரைகளுக்கு, மேற்கோள் தயாரித்துக் கொடுப்பது, மேனகாவின் வேலை. அதை, அவர் மகிழ்ச்சியோடு செய்து வந்தார்.

கடந்த, 1977-ல், இந்திரா ஆட்சி அதிகாரத்தை இழந்தார். ஜனதா அரசு, அவர் மீது, தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இந்திராவின் குடும்பத்தில், எப்போதாவது, பெரிய சண்டை நடப்பது உண்டு. பெரும்பாலும், சஞ்சய் - மேனகா இடையே தான், சண்டை வரும். ஒருமுறை மேனகா, தன் திருமண மோதிரத்தைக் கழற்றி வீசியெறிந்து விட்டார். இந்திரா அதைக் கண்டு வேதனைப்பட்டார். அவருடைய தாய் கமலா நேருவின் மோதிரம் அது. இந்திரா, தன் தாயின் மீது கொண்டிருந்த அன்பின் அடையாளமாக, அந்த மோதிரத்தை பாதுகாத்திருந்தார். வீட்டுக்கு வந்த மருமகள், அதைக் கழற்றி எறிவதென்றால்...

மாமியாரின் மனநிலையை உணர்ந்த சோனியா, அந்த மோதிரத்தை எடுத்து பத்திரப்படுத்தியதோடு, தாம், அதைப் பிரியங்காவிற்காக வைத்துக் கொண்டதாக, இந்திராவிடம் தெரிவித்தார். அந்த மோதிரம், இன்று பிரியங்காவின் கை விரலை, அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

— சி.எஸ்.தேவநாதன் எழுதிய, 'சோனியா காந்தி' நூலிலிருந்து.
[தினமலர் வாரமலர் - திண்ணை]   5-1-2014

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த இரன்டு படங்களுக்கும் வாசகர்கள் கவிதை எழுதலாமே என்கிறார் நெல்லை.  ரெடி ஜூட்...




==================================================================================================

அம்மாவும் அப்பாவும்...

2002 ல் அம்மா காலமாகி விட்டார்.  நான் சென்னையில் குடித்தனம்.  அண்ணன், உள்ளூரிலேயே ஆனால் தனியாகக் குடித்தனம்.  அக்காவும் தங்கையும் முறையே ஊட்டி, சென்னை என்று வெளியூரில்.  அப்பா மட்டும் அந்த வீட்டில் அம்மா நினைவுகளுடன்...  அப்போது அவர் எங்களுக்கு அனுப்பிய தபால் இது.  வீட்டில்  நிறைய பொருள்கள் சேர்த்து வைத்திருக்கிறோம் என்று தோன்றி இருக்கிறது. அதை டிஸ்போஸ் செய்ய எண்ணி எழுதி இருக்கிறார்.  இரண்டாவது பேப்பரில் கடைசி ஐட்டத்தையும் கடைசி வரிகளையும் படியுங்கள். அம்மா நினைவுகளுடன் ஒரு பட்டாம்பூச்சி போல சுற்றி பறந்து வர நினைத்திருக்கிறார்.  முதுமையில் தனிமை கொடிது.





சில பழைய விளம்பரங்கள்...




விலை ஐம்பதுகளிலேயே 1500 ரூபாய் பக்கம்.

106 கருத்துகள்:

  1. ஜேகேசி சாரின் "அப்புறம் என்ன ஆச்சு?" படிக்கச் சுவையாய் இருந்தது. அக்னி பகவானே வந்து இண்டர்வ்யூ நல்ல படியாக முடிய ஆசி கூறினாற்போல் கொள்ள வேண்டியதுதான்.
    /இதற்கு அடுத்த ப்ரோமோஷன் இன்டெர்வியூவுக்கு செல்லும்போதும் இது
    போன்ற ஒரு சம்பவம்/சகுனம் நடந்தது. அது வேறு மாதிரி. அது அடுத்த பதிவில்./
    அடுத்த ப்ரொமோஷனுக்கு வருண பகவான் ஆசீர்வாதமோ? காத்திருப்போம் அடுத்த வாரம் வரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா..   வணக்கம்.  நானும் ஆர்வமாய் காத்திருக்கிறேன்.  நீங்களும் ஏதும் அனுபவம் இருந்தால் எழுதி அனுப்பலாமே...

      நீக்கு
  2. /முதுமையில் தனிமை கொடிது./
    முக்காலும் உண்மை. என் தந்தையும் அப்படித் தவித்ததைப் பார்த்து நான் வேதனை அடைந்ததுண்டு.
    /கண்டதை வாங்கிச் சேர்க்காதீர்கள்?
    நல்ல அறிவுரை. கேட்டு நடந்தால் நன்மை நமக்கு. ஆனால் கேட்கத்தான் மாட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அந்த அறிவுரையை கடைப்பிடிக்கத்தான் முடியவில்லை.  வீட்டில் ஏகப்பட்ட பொருட்கள்!

      நீக்கு
  3. /பெரியவர் சுப்புடு மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. எனது ‘சிந்து பைரவி’ இசையைக் கேட்டுவிட்டு செல்லும் இடமெல்லாம் என்னை அவர் பாராட்டிப் பேசியதை நான் அறிவேன்/
    சுப்புடு இளையராஜவுடன் மோதலில்தான் ஆரம்பித்தார். விகடனுக்கோ அல்லது இதயம் பேசுகிறதுக்கோ சுப்புடு இளயராஜாவுடன் நேர்காணலில் "உங்களுக்குப் பிடித்த இசைக்கருவி எது"? என்று கேட்க ராஜாவும் (சுப்புடு ஒரு வில்லங்கமான பேர்வழி என்பதை உணர்ந்தோ என்னவோ) "தம்புரா" என்று பதிலளித்தார். சுப்புடுவா விடுவார்? "அப்போ ஏன் நீங்கள் தம்புராவை இசைக்கருவியாக வைத்து ஒரு பாடலுக்கும் இசையமைக்கவில்லை?" என்று கேட்டார்.
    இளமையில் எல்லா ஆளுமைகளயும் சுப்புடு கிழித்துத்தான் வழக்கம். ஆனால் தன் கடைசிக்காலத்தில் எல்லாரையும் பாராட்டத் துவங்கினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்புடு ஒரு வித்யாசமான கேரக்டர்.  விமர்சனம் என்றால் கிழிப்பதுதான் என்று வைத்திருந்தாரோ என்னவோ...

      நீக்கு
  4. /சேச்சே...சான்ஸே இல்லை...அவரா இருக்காது/
    எவராய் இருக்காது? புரியவில்லையே...புரிந்தவர்கள் குழப்பத்தைத் தெளிவிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன.. புரியவில்லையா? ஆ....

      நீக்கு
    2. இதற்கான பதிலை அடுத்த வாரம் நான் படத்தோடு பகிர்கிறேன். அவருடைய தாக்கம் இன்னும் இருக்கிறதே என என்றை அன்று யோசிக்க வைத்தது.

      நீக்கு
    3. வாங்க நெல்லை.. இங்கே கொஞ்சமாவது சொல்லக்கூடாதா?!!

      நீக்கு
    4. அவ்ளோதானா? 

      பொன்மனச்செம்மலை புண்படச் செய்தது யாரோ..  அது யாரோ...

      நீக்கு
  5. பாட்டும் மகிழ்ச்சியுமாக -
    பழைய வெள்ளியைப் போல
    இனி அமையாது எனத்
    தெரிகின்றது...

    நேற்றும் இப்படியே...
    இனி நாளையும் இப்படியே

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செல்வாண்ணா..  மாற்றங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.

      நீக்கு
    2. ஸ்ரீராம்.. இன்று என்ன கிழமை என்பதை அன்று எபியில் என்ன படித்தோம் என்பதை வைத்துச் சட் என நினைவுக்குக் கொண்டு வருவேன். அது மாத்திரம் பெரிய குறை. எல்லா நாளும் ஒரு சில தவிர வியாழன் கதம்பமாகிவிட்டது. நன்றாகத்தான் இருக்கிறது

      நீக்கு
    3. இப்படி பாதி அப்படிப்பாதி சொல்வதால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை!!

      நீக்கு
  6. க்ரானிக்கிள்... நடந்தவற்றின் வரிசை... இதனை ஏஐ கொண்டு தமிழ்ப்படுத்தும்கோது (கூகுள் மொழிமாற்றம்), மொழியின் அழகும் அது சொல்லவரும் செய்தியும் அதே நடையில் வெளிவருவதில்லை. உதாரணமாக விளையாட்டு வீர்ர்களை குழந்தைப் பருவச் சிலைகள் என மொழிபெயர்க்கிறது. ஆங்கிலத்தில் Youngster's idols என்று இருந்திருக்கும். இளைஞர்களின் உதாரண புருஷர்கள் என இருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லி இருந்த வார்த்தையை அங்கு பயன்படுத்தி இருக்கிறேன்.  ஒரு அவசரப் பார்வையில் வேறு சில வாக்கியங்களையும் மாற்றியமைத்திருக்கிறேன்!

      நீக்கு
  7. ஜெயகுமார் சாரின் அனுபவங்களைப் படிக்கும்போது என் அனுபவங்களை எழுதும் ஆவல் வருகிறது. ஒரு நாள் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. அப்பாவின் எழுத்து..... மனதை மிகவும் நெகிழ்த்தியது. மூத்தோர் சொல் அமுதம்னு சும்மாவா சொன்னாங்க? அந்த வயதில் அடுத்த தலைமுறை அவற்றை அலட்சியப் படுத்துவதும் இயல்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னையும் விற்க வேண்டிய ஒரு பொருளாக அவர் சொல்லி இருப்பது..  அப்போது சிரித்து விட்டு "ஏன் அப்படி சொல்கிறீர்கள்?' என்று கேட்டோம்.

      நீக்கு
    2. விற்க வேண்டிய என்ற அர்த்தத்தில் அவர் எழுதியிருக்க மாட்டார். Disposable என்ற அர்த்தத்தில் எழுதியிருப்பார். மனைவி இல்லாமல் வாழ்வது கொடுமை.

      நீக்கு
    3. கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுதானே!

      நீக்கு
  9. முதுமையில் தனிமை கொடிது. ///

    வறுமையும் தான்

    பதிலளிநீக்கு
  10. பாடல்களை அலசி ஆராய்வதற்கான
    நாளை ஏன் ஒதுக்கி விட்டீர்கள்?..

    கதம்பம் ஒரு நாளைக்குப் போதும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொக்கிஷங்கள் அல்லது பகிரப்பட்ட வேண்டியவை நிறைய சேர்வது போல தோன்றியது.

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  12. தனித்துவமான பதிவுகளில் வீண் கலப்படம் வேண்டாம்..

    பதிலளிநீக்கு
  13. ஐயே ஷேம் ஷேம்
    இலை மறை காய் மறை
    இல்லாமல் அம்மணமாய்
    நிற்பதேன்?

    மழை என்ற புது துணி வரும்
    அமேசானில் ஆர்டர் கொடுத்திருக்கிறேன்
    இலை, காய், கனி என்று புத்தாடை புனைந்து
    வசந்த ருதுவில் வருவேன் நான்.
    அதுவரை
    கண்ணை மூடிக்கொள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே.. முதல் வாசகர் கவிதை நெல்லை தந்த படங்களுக்கு.. வாங்க JKC ஸார்...

      நீக்கு
  14. பழைய பாடல்களைப் பகிரும் போது
    மனதில் மீண்டும் வசந்த கால நதியலைகள்...

    அவருக்கும் இவருக்கும் கருத்து மோதல் அப்படி இப்படி என்ற
    பழங்குப்பைகளால் யாருக்கு என்ன புண்ணியம்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல்களும் வேண்டும்.  படிக்க சுவாரஸ்யத்துக்கு பழங்குப்பைகளும் வேண்டும் இல்லையோ 

      நீக்கு
  15. உங்கள் அப்பா சேகரித்து வருத்தப்படும் அளவில் பொருட்கள் என்னிடமும் உள்ளன. 3 டிவி (இரண்டு வேலை செய்யாது), 4 கட்டில் 3 பீரோ. 2 பிரிட்ஜ் (ஒன்று சமையல் பொருள் அலமாரியாகிவிட்டது) என்று பட்டியல் நீள்கிறது. பிள்ளைகள் ஒருவர் வெளியூரில், மற்றவர் வெளி நாட்டில். இது தவிர சுமார் 200 புத்தகங்கள். ஆக விடியும் நாளை எண்ணி காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேர்த்தவற்றை வேண்டாம் என்று ஒதுக்க மனம் வரவேண்டும்.  இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும், எதற்காவது உதவும் என்றே தோன்றும்!

      நீக்கு
    2. எங்களிடமும் நிறையப் பொருட்கள் இருந்தன. அவற்றை மெல்ல மெல்லக் குறைத்தோம். ஸ்டீல் டேபிள், நல்ல நிலையில் இருந்தது,, மாமாவின் ஈசி சேர், என்னோட கணினி நாற்காலி, எங்களோட தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி, குளிர்சாதனப் பெட்டி (இரண்டு இருந்ததில் கொஞ்சம் பழையதான ஒன்று. புதுசை வைச்சிருக்கோம்.)அப்புறமா எக்கச்சக்கமாக மருத்துவத்துக்குப் பயன்படும் பொருட்கள், ட்ரிப்ஸ் ஏற்றும் ஸ்டான்ட், கதீடர் வகையறாக்கள், அடல்ட் டயபர், இரண்டு பெரிய அளவுகளில், க்ள்வுஸ்கள், க்ளூகோ மீட்டர், பிபி பார்க்கும் மானிடர், நாடித்துடிப்புக்கு வைக்கும் கருவி, மருத்துவமனையில் பயன்படுத்தும் கட்டில், காற்றுப் படுக்கை, பாத்திரங்கள், சர்வாங்க ஆசனம் செய்யப்பயன்படுத்தும் ஒரு டேபிள், என நிறைய இருக்கு. பழைய பித்தளை, ஸ்டீல் பாத்திரங்கள், மிக்சி, இரும்புக் கடாய்கள், இரும்புச் சட்டிகள், சேவை நாழி, அப்பக்காரை இன்னும் சில பயன்படுத்தியவற்றை எல்லாம் தூக்கிக் கொடுத்தாச்சு.

      நீக்கு
    3. சிரமமான காரியம். மனதில் ஏக தவிப்பு இருந்திருக்கும்.

      நீக்கு
  16. விமர்சகர் சுப்புடு பாராட்டிய ஆட்களும் உண்டு.  பேபி ஸ்ரீநிதி தன் பத்து வயதில் நடன அரங்கேற்றம் செய்தாராம்.   அப்போ ஸ்ரீநிதி கொஞ்சம் குண்டாக இருப்பார்.  அவரை சுப்புடு நிறைய பாராட்டினாராம்.

    "உங்களுக்கு சங்கநிதி வேண்டுமா?  பதுமநிதி வேண்டுமா என்று கேட்டால் ஸ்ரீநிதிதான் வேண்டும் என்று சொல்வேன்" என்று  பாராட்டி இருந்தாராம்.

    - என் அக்கா சசிகலா...  ஃபோனில் தகவல்.

    பதிலளிநீக்கு
  17. ஜெ கே அண்ணா, நல்ல காலம் தப்பிச்சீங்க. டென்ஷன்ல தீக்குச்சி சரியா அணைக்கலை போல!!! அதான் தீயோடு கபக்குன்னு அணைச்சிக்க வேண்டியதா போச்சு!! அதுவும் ஐ எஸ் ஆர் வோ வளாகம் வேறு!

    எப்படியோ எல்லாம் நல்லபடியாக சென்றது மகிழ்ச்சி!

    இப்படி வீட்டில் நடந்ததுண்டு. முன்ன எல்லாம் தீப்பெட்டி தானே...இப்ப கூட விளக்கு ஏற்றும் போது ரொம்பக் கவனமாக ஏற்றுவேன் ஒரு முறை இப்படித்தான் கைத்துடைக்க வைத்திருந்த டிஷ்ஷுவில் அது பட்டு டிஷ்ஷு எரியத்தொடங்கி நல்ல காலம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​தீக்குச்சிகள் டைட் பேக்கிங். இரண்டு குச்சிகள் தலை உரசினால் போதும் தீ உண்டாகிவிடும்.

      Jayakumar

      நீக்கு
    2. இங்கே தீப்பெட்டி கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கு. வந்த புதுசில் இருந்த தீப்பெட்டி நன்றாக இருந்தது. அது தீரும் சமயம் பையர் லைட்டரைக் கொடுத்தார். ஆனால் எனக்கு அது சரியாக வேலை செய்யலை. பின்னர் ஒவ்வொரு சூப்பர் மார்க்கெட்டாகப் பார்த்து ஒரு இந்தியன் ஸ்டோரில் தீப்பெட்டி வாங்கி வந்தார். அதில் வெளியே இருக்கும் உரசும் இடம் சீக்கிரம் வீணாகி விடுகிறது. ஒரு தீப்பெட்டியின் இருபக்கங்களும் வீணாகிவிடக் குச்சிகள் இருந்தன. வேறொரு பெட்டியில் உரசினால் அதுவும் மேற்சொன்னாப்போல் தான். ஒவ்வொரு தரம் விளக்கேற்றும்போதும் பிள்ளையாருக்குத் தேங்காயை நினைச்சுட்டுத் தான் ஏத்த வேண்டி இருக்கு. :)

      நீக்கு
    3. மூன்றாவது படிக்கும்போது அம்மா சாமி கிட்ட விளக்கு ஏத்தச் சொல்ல, நான் ஒரு குச்சியைப் பற்ற வைத்து, அது ஜிவ்வென பற்றியதும் பயந்து அப்படியே விட, அது மூடி பாதி திறந்திருந்த தீப்பெட்டிக்குள் விழுந்து மொத்த குச்சியும் தீபாவளி வாணம் போல புஸ்ஸ்ஸ் ஆனது!

      நீக்கு
  18. காந்தி பற்றிய விஷயம் முன்னரே வாசித்திருக்கிறேன் வேறு எங்கோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் எழுதி இருக்கேன். திரு பரணீதரன் அவர்களால் எழுதப்பட்ட "கஸ்தூரி திலகம்" தொடரிலும் அப்படி, இப்படினு கொஞ்சம் ஜாடையாக எழுதி இருப்பார். முழு விபரங்களும் எழுபதுகளிலேயே Freedom at Midnight Book படிக்கையில் தெரிந்து கொண்டேன்.

      நீக்கு
    2. பரணீதரணுமா?  ஆனால் இது பல இடங்களில் பேசப்படும், படிக்கப்பட்ட விஷயங்கள்தானே..

      நீக்கு
  19. ஸ்கூட்டருக்கு இப்படி ஒரு தலைப்பைக் கொடுத்து எல்லாரும் மண்டைய குடைய வைச்சிட்டீங்களே!!! ஸ்ரீராம்...யாராக இருக்கும் யாரைச் சொல்கிறார் ஸ்ரீராம் என்று அட்லீஸ்ட் ஒரு சிறு துளி நொடியாச்சும் ஒரு கேள்வி மண்டைக்குள் சுடர் விட்டிருக்கும்தானே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்கூட்டருக்கு இல்லை கீதா..  பில்லியனில் அமர்ந்து செல்பவருக்கு!

      நீக்கு
  20. தாஸேட்டன் விஷயம் அவர் பல இடங்களில் இப்படிச் சொல்வதுண்டு என்பது வாசித்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. க்ரோனிக்கிள் புத்தகம் போன்று ஒன்று நம் வீட்டில் முன்னர் இருந்த நினைவு. வருடம் முழுவதுமான உலகம் முழுக்க நடந்தவை தொகுக்கப்பட்டு ....

    கீதா

    பதிலளிநீக்கு
  22. சுப்புடு - ராஜா விஷயம் புதியது. இதுவரை கேட்டதில்லை. ராஜாவை சுப்புடு விமர்சித்திருக்கிறாரோ தெரியவில்லையே...

    கீதா

    பதிலளிநீக்கு
  23. சிம்ஃபொனி கேட்டு சுப்புடு என்ன சொல்லியிருப்பார் என்று யோசனை வருகிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதாவது சொல்லி இருப்பார்..  சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசு பற்றி லட்சுமி சொல்வது போல...!

      நீக்கு
  24. நம்மாழ்வார் பேச்சுகள் அவரது இயக்கம் பற்றி முன்பு நிறைய கேட்டதுண்டு வாசித்ததுண்டு. ஒரு முறை அவர் என் நாத்தனாரின் மகன் மருமகள் இவரோடு தொடர்பு கொண்டிருந்ததால் அவங்க வீட்டுக்கு வந்தப்ப சென்றதுண்டு பேசியதுண்டு கொஞ்சம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. புடைவைகள், எல்லாம் அந்தக்காலத்து ஒரிஜினல் பட்டுப் புடைவைகள், வருஷங்கள் ஆனாலும் மங்காமல் இருப்பவை, புதிய நவயுக ஆடம்பரப்பட்டில் உள்ளவைனு இருக்கு. மடிக்கணினி மட்டும் 2 அல்லது 3 இருக்கு. டெஸ்க்டாப்பை நல்லவேளையா தானமாக் கொடுத்துட்டோம். புத்தகங்கள் தனிப் பட்டியல். பாத்திரங்கள் இன்னமும் இருக்கின்றன. பெண்ணால் எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல முடியாது. பையரோ எதுவும் வேண்டாம் என்னும் கருத்து உடையவர். பரிசாக வந்த பல விலை உயர்ந்த பொருட்களை உறவினர்களின் விசேஷங்களில் வைச்சுக் கொடுத்துட்டேன். பலவும் அமேசானில் வாங்கி நேரடியாக எனக்கு வரும்படி செய்து எனக்குக் கொடுத்திருந்தாங்க. தோசைக்கல் மட்டுமே நான்கு. ஒரு இரும்புக்கல்லையும், தண்டவாளக்கல்லையும் ஸ்ரீரங்கத்தில் வைச்சுட்டு இன்னொரு ஸ்டீல் கல்லைப் பாத்திரப் பெட்டியில் போட்டிருக்கேன். சப்பாத்தி பண்ணும் பிடி வைச்ச தோசைக்கல்லை இங்கே கொண்டு வந்து வைச்சிருக்கேன். ஆனால் மருமகளோ, பையரோ அதைப் பயன்படுத்தவில்லை. :( இங்கே உள்ள மின் அடுப்பில் அதை இன்னும் பழக்கவில்லை. இதைத் தவிர உம்மாச்சிகள். சாளக்கிராமம், விக்ரஹங்கள், ஸ்ரீராமர் படம்.எழுத எழ்துதிக் கொண்டே இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி..   ஒரு முழுமை பெற்ற தாம்பத்தியத்தின் சேமிப்பு.  ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் மேற்கொண்டு எதுவும் சேர்க்காமலும், இருப்பவற்றை மெதுவாக கழிக்கவும் தொடங்க வேண்டும்.  

      நீக்கு
    2. உண்மையைச் சொன்னால் ஆச்சரியப் படுவீர்கள். எங்கே போனாலும் ஷாப்பிங் போக/ஷாப்பிங் செய்ய மாமாதான் முன்னுக்குப் போவார். என் மாமியாருக்கே முதலில் இதெல்லாம் புரியலை. ஏனெனில் மாமா பத்து வயசில் அப்பா/அம்மாவைப் பிரிந்து சிதம்பரத்துக்குப் படிக்கப் போனவர் அங்கே இருந்து கும்பகோணம், பின்னர் மறுபடி ஒன்றரை வருடம் கருவிலி(பதினேழு, பதினெட்டில்) உடனே கோவை, பின்னர் அங்கிருந்து புனே என்று பயணித்துப் பத்தொன்பது வயதில் இந்த வேலைக்குச் சென்றவர் சுமார் 41 வருடங்கள் செர்வீஸ். பின் பணி ஓய்வு. ஆகவே மாமா அதிகம் வீட்டில் யாருடனும் பழகியதில்லை. ஆகவே என் நாத்தனார்களில் இருந்து எல்லோருமே ஆச்சரியப் படுவாங்க அவர் எங்கே போனாலும் சாமான்கள் வாங்கிக் குவிப்பது பற்றி. புத்தகங்களையும் எனக்கு வந்த பரிசுப் பொருட்களையும் தவிர்த்து பாத்திரங்கள் கூட மாமா வாங்கியது தான். எனக்குச் சீராக வந்த பாத்திரங்கள் பலவும் இன்னமும் எடுக்காமல் புதிதாக இருக்கு. ஏனெனில் மாமா அத்தனை பாத்திரங்கள் வாங்கியதோடு அல்லாமல் அவற்றைப் புழங்கணும்னு கண்டிஷன். இப்போ எனக்கு அதெல்லாம் தேவையே இல்லை.

      நீக்கு
    3. புடைவைகள் எப்போவுமே என்னிடம் தேவைக்கு மேலேயே இருக்கும். அதிலும் என் பிறந்த வீட்டில் எதுக்கெடுத்தாலும் பட்டு எடுப்பாங்க என்பதால் அதுவே நாலைந்து நல்ல பட்டுப் புடைவைகள் இருக்கின்றன. அதைத் தவிர்த்து பையர் கல்யாணம், எங்க சஷ்டி அப்த பூர்த்தி, கல்யாண நாளுக்கு எடுத்ததுனு சில பட்டுப் புடைவைகள். மற்றவை எல்லாம் அண்ணா, தம்பி அவங்க வீட்டு விசேஷங்களில் கொடுத்தவைனு இருக்கு. இதிலே ஏழெட்டுப் புடைவைகளுக்கும் மேலே வேலை செய்யும் பெண், துணிகளை இஸ்திரி போட்டுத் தரும் பெண் ஆகியோருக்குக் கொடுத்திருக்கேன். சில புடைவைகளை அம்மாமண்டபம் வாசலில், அமலாசிரமம் வாசலில் அமர்ந்திருக்கும் பெண்களிடம் கொடுத்திருக்கேன். ஒன்பது கஜம் புடைவைகள் மட்டும் ஏழெட்டுப் புடைவைகளாக கஷ்டப்படறவங்களுக்குக் கொடுத்திருக்கேன். என்ன பிரச்னைனா ஒரு புடைவை தானம் செய்தால் 3 புடைவையாகத் திரும்பி வந்துட்டு இருந்தது. இனிமேல் அப்படி வராதுனு நினைக்கிறேன். :)))))

      நீக்கு
    4. ஜவுளிக்கடைக் கட்டைப்பைகள், நகைக்கடைகளின் குட்டிக் குட்டிப் பர்ஸ்கள் என மாமாவின் சேமிப்பு பிரமிப்பாக இருக்கும். இந்த அழகில் அவங்க கொடுக்கிறது இவருக்குப் பிடிக்கலைனா மாத்தித் தரச் சொல்லிக் கேட்டு வாங்கிட்டு வருவார் வெற்றி வீரர் என நினைத்துக் கொண்டு.

      நீக்கு
  26. பெரீயீயீயீயீயீயீயீய வீட்டு விஷயம்! பெரிய வீடாயிருந்தால் என்ன ஏழைகளாக இருந்தால் என்ன...இல்லையா!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. நெல்லை கொடுத்திருக்கும் படங்கள் நல்லாருக்கு!

    கோடுகளாய்
    வானில் ஓர் ஓவியம்
    மரத்தின் கிளைகள்.

    மரம் தன் கிளைகளால்
    வான் கேன்வாஸில்
    வரைந்த ஓவியம்.

    எதிரிலிருக்கும் மரத்தைக்
    கவ்வ நினைக்கும்
    கிளைக்கைகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. அப்பாவின் லிஸ்ட் பிரமிப்பு. வாங்கிய தேதி விலை பயன்பாட்டில் என்று மெட்டிகுலஸ்,

    கடைசில சொல்லியிருக்கார் பாருங்க குறிப்பு! அதை கன்னாபின்னான்னு ஆதரிப்பேன்.

    அந்தக் கஷ்டம் எனக்கு ரொம்பவே அனுபவம்! அதனால் நம் வீட்டில் யாரிடமும் தயவு செய்து எதுவும் வைச்சுக் கொடுக்காதீங்கன்னு சொல்லிவிடுகிறேன். துணியாக இருந்தாலும் சரி, பாத்திரம் பண்டமானாலும் சரி, வேறு பொருட்களாக இருந்தாலும் சரி. ....கல்யாணங்களிலும் மென்மையாக மறுத்துவிடுகிறேன். இது பல வருஷங்களாகச் செய்து வருகிறேன். தவிர்க்க முடியாமல் வந்தவற்றை அவர்களின் அனுமதியோடு, வேறு யாருக்கேனும் கொடுத்தும் விடுகிறேன். கொடுக்கும் போதும் அவங்ககிட்ட பயனாகுமான்னு கேட்டு உண்மையைச் சொல்லிக் கொடுக்கிறேன் இல்லைனா பயன்படுவோருக்குக் கொடுத்துவிடுகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவின் பட்டியலில் உள்ள கடைசி வரிகளைக் "கன்னாபின்னா"வென ஆதரிக்கிறேன். இப்போ என் நிலைமையும் அது தான். காத்துட்டு இருக்கேன் அழைப்பு வர! :)))) ஆனால் இன்னுமும் வர சுவடே தெரியலை. அது ஏமாற்றமாயும் இருக்கு.

      நீக்கு
    2. கீசா மேடம்.... எதையும் எதிர்பாராதீர்கள். ஏமாற்றமளிக்கும். ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என ஒன்று உண்டு. அது நிம்மதியானதாக இருக்கணும் என்ற பிரார்த்தனையே போதும். நம் மனதைக்கு ஏற்றபடி எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

      நீக்கு
    3. நெல்லை சொல்வதையே நானும் சொல்கிறேன். உங்கள் பாணியில் 'நெல்லை சொல்வதை கன்னாபின்னான்னு ஆதரிக்கிறேன்'!

      நீக்கு
    4. ஸ்ரீராமும், நெல்லையும் சொல்லுவது சரிதான். எதையுமே எதிர்பார்க்கக் கூடாதுங்கறச்சே, இதை மட்டும் ஏன் எதிர்பார்க்கணும்? நடந்தாலும் எனக்குத் தெரியப் போறதா? :))))))

      நீக்கு
    5. அச்சச்சோ...கீதாக்கா நான் சொன்னது கண்டதையும் சேர்க்கக்கூடாதுன்னு அப்பா சொன்னதை....

      நெல்லை மற்றும் ஶ்ரீராம் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன்.

      கீதா

      நீக்கு
  29. ஓவல் டின் நம்ம வீட்டில் ரொம்ப சின்ன வயசுல அதுதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டுக்கும் சிலநேரம் விஜயம் செய்தது!

      நீக்கு
  30. ஜேகேசியின் அனுபவங்கள் சுவாரசியம். இது தொழில் நுணுக்கம் சம்பந்தப்பட்ட துறை என்பதால் ஒவ்வொரு ப்ரமோஷனுக்கும் நேர் காணல் வைச்சிருக்காங்க போல. பொதுவாக மத்திய அரசு அலுவலகங்களில் ஐஏஎஸ் தேர்வு போல எஸ்.ஏ.எஸ் என்னும் இரு கட்டத் தேர்வு வைச்சு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் ப்ரமோஷன் கிடைக்கும். அதுவும்பாஸ் செய்தவர்கள் அதிகம் செர்வீஸ் போடாவிட்டாலும் உடனடியாக ப்ரமோஷன் கிடைச்சுடும். பாஸ் பண்ணிய தேதியிலிருந்து/அல்லது பரிட்சை எழுதிய தேதியிலிருந்தோ என்னமோ நினைவில் இல்லை. ஓர் இடைக்கால உயர்வு சம்பளத்தில் கொடுப்பாங்க. பின்னர் எந்த க்ரேடுக்குத் தகுதியோ அந்த க்ரேடில் எங்கு பணியிடம் காலி எனப் பார்த்து அல்லது பொதுவாக அட்மினில் எனப் போஸ்ட் கொடுப்பாங்க. உடனடி சம்பள உயர்வு தான். க்ரேடும் மாறிடும். இப்போ நம்மவர் பணிஓய்வு பெற்று வந்த பின்னரும் இதே நடைமுறையா எனத் தெரியலை. பாஸ் செய்த க்ரேடில் உள்ள பதவிக்கு மாறச் சில மாதங்கள் அல்லது வருடங்கள் ஆவதாகக் கேள்வி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கு சம்பள கமிஷன் வரும்போது சமயங்களில் க்ரேட் மாற்றும்.  மற்றபடி வழக்கமான இன்க்ரிமெண்ட் இத்யாதிதான்! 

      நீக்கு
  31. எம்ஜி ஆர் மாதிரி வேடமிட்ட யாரோ ஸ்கூட்டரில் உட்கார்ந்து போகிறார். யாருனு தெரியலை. ஆனால் இப்படி ஓர் நிகழ்ச்சியைப் படித்த மாதிரி அரை குறை நினைவு. காய்ந்த மரங்களைப் பார்த்துக் கவிதை எழுதும் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை. சின்ன வயசில் அடிக்கடி ஜூரம் வந்தால் ஓவல்டின் தான் கொடுப்பார்கள். உண்மையோ/பொய்யோ அதில் முட்டை கலப்பு இருக்கும்னு சொன்னதால் நான் குடிக்கவே மாட்டேன். உள்நாட்டுத் தயாரிப்பான போர்ன்விடாதான் குடிச்சிருக்கேன். ஓவல்டின்னெல்லாம் அப்போது வெளிநாட்டில் இருந்து தான் வந்துட்டு இருந்தது. குழந்தைகளுக்கான க்ளாக்சோ பால் பவுடர் உள்பட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம் ஜி ஆர் வேடமிட்டவர் வாழ்க்கை முறையே அதுவாக இருக்கலாம்.  அல்லது அதிமுக கூட்டத்துக்கு வேடமிட்டு சென்றிருக்கலாம்.  முன்னர் பேஸ்புக்கில் பகிர்ந்ததுதானே?  கவிதை, எழுதினால் வரும்!  நாம் அதை கவிதை என்று சொல்லி வெளியிட வேண்டும்!!

      நீக்கு
    2. /கவிதை, எழுதினால் வரும்! நாம் அதை கவிதை என்று சொல்லி வெளியிட வேண்டும்!!/

      உதாரணத்திற்கு... என்னைப் போல.. :))

      நீக்கு
    3. ஹா.. ஹா.. ஹா.. நான் என்னைச் சொன்னேன்!

      நீக்கு
    4. உங்களைப் போய் அப்படி சொல்லி விட்டு பிறகு நானெல்லாம் எங்கு போவது?

      நீக்கு
  32. அதிகமாய் ஹார்லிக்ஸ். அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்துட்டு இருந்தது தான். பின்னர் இந்தியத் தயாரிப்புக்கள் வர ஆரம்பித்தது அறுபதுகளில்னு நினைக்கிறேன். என் அப்பா வீட்டில் அதிகம் ஹார்லிக்ஸ் பயன்பாடு உண்டு. அதோடு அப்போல்லாம் கலக்கும் ஹார்லிக்சில் பாலே சேர்க்க மாட்டார்கள். வெந்நீரைக் கொதிக்க வைத்து ஹார்லிக்ஸ் பவுடரை அதற்கென இருக்கும் நீண்ட குழாய் போன்ற பாத்திரத்தில் போட்டுச் சூடான வெந்நீரை விட்டு நன்கு அடித்துக் கலப்பார்கள். அப்படியே குடிக்கத் தருவார்கள். பாலெல்லாம் சேர்த்துப் பார்த்தது பின்னாட்கள்/ எண்பதுகளில் இருக்கலாமோ என்னமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களை பொறுத்தவரை ஜுரம் வந்தால் தான் ஹார்லிக்ஸ்!  ரசம் சாதமே அப்படிதான் தோன்றும்.  எப்போதும் காஃபிதான்!

      நீக்கு
    2. எங்களுக்கு உடம்பு சரியில்லைனால் ப்ரெட் அல்லது பன். பால் நிறையத் தருவாங்க. பாலில் முக்கி பன் அல்லது அப்போதெல்லாம் விற்கும் ப்ரெடைச் சாப்பிடுவோம். அந்த ருசி பிடித்துப் போகவே பின்னாட்களில் அந்தப் பால் ப்ரெட் சாப்பிடவேண்டியே உடம்புக்கு வரணும்னு வேண்டிப்போம். :)))) இப்போ என்னன்னா தினம் ப்ரெட் தான். :( எங்க குழந்தைங்களுக்கே பள்ளிக்குப்போகும் முன்னர் சாப்பிடும் உணவாக ப்ரெட், பட்டர், ஜாம் வைச்சுக் கொடுப்போம். டிஃபன் பாக்சில் சப்பாத்தி, கலந்த சாதம், இட்லி, வகையறா.

      நீக்கு
  33. அமுல் தயாரிப்பான குழந்தைகளுக்கான பால் பவுடர் அறுபதுகளில் வர ஆரம்பிச்சதுனு நினைக்கிறேன். அது வந்தப்புறமா க்ளாக்சோவின் பயன்பாடு மெல்ல மெல்லக் குறைந்தாலும் எழுபதுகளில் பிறந்த எங்க பெண்ணுக்கு மாற்று உணவில் க்ளாக்சோவும், ஃபாரெக்ஸும் தான் கொடுத்தோம். க்ளாக்சோ அப்போ உள்நாட்டுத் தயாரிப்புனு நினைக்கிறேன். ஆனால் எளிதாகக் கிடைக்காது. சொல்லி வைச்சு 2 டப்பா, 3 டப்பானு அதிகம் விலை கொடுத்து வாங்கி வைச்சுப்போம். 60 ரூபாய் ஒரு டப்பான்னா சுமார் எண்பது ரூபாய் வரை கொடுக்கணும். அதிலும் அப்போ சுத்தமான காங்கிரஸ் ஆட்சி வேறேயா! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பையனுக்கு சர்க்கரை சேர்க்கக்கூடாது என்று சொன்னதால் சர்க்கரைக்கு மாற்று ஒன்று இரண்டு சொட்டு விடச் சொல்லி டாக்டர் JV கொடுத்தார்.  பெயர் மறந்து விட்டது.  நியோஸோபீ . இன்னும் ஏதோ ஒன்றெல்லாம் கொடுத்தோம்.  இரண்டாமவனுக்கு அப்படி ஒன்றும் கட்டுப்பாடெல்லாம் இல்லை!

      நீக்கு
    2. பொதுவாகவே நாங்க அதாவது எங்க பிறந்த வீட்டில் வெள்ளைச் சர்க்கரைப் பயன்பாடு ரொம்பக் குறைவு தான். பழுப்புச் சர்க்கரை தான் அப்போல்லாம் பக்ஷணங்களுக்கு வாங்குவாங்க. நானும் குடித்தனம் வைச்சப்போ ராஜஸ்தான் போகும்வரை பழுப்புச்சர்க்கரை வாங்கித் தான் பக்ஷணங்கள் பண்ணினேன். ஐந்தாறு வருடம் கழிச்சு சிகந்திராபாதிலும் கிடைச்சது. ஆனால் சென்னையில் கிடைக்கலை என்பதோடு அதன் பெயரே யாருக்கும் தெரியலை. குழந்தைகளுக்குப் பாலிலோ அல்லது இம்மாதிரி ஹார்லிக்ஸ், போர்ன்விடா, ஓவல்டின் போன்றவற்றிலோ சர்க்கரையே சேர்க்க மாட்டோம். கஞ்சிக்கு மட்டும் நாட்டுச் சர்க்கரை இல்லைனால் வெல்லம்.

      நீக்கு
  34. அநேகமாக எங்களுக்கு எங்கே போனாலும் சுத்தமாய் அப்போக் கறந்த பசும்பால் கிடைத்துக் கொண்டிருந்ததால் இதெல்லாம் மாற்று உணவுப் பயன்பாட்டுக்குத் தான் வைச்சுப்போம். வெளியே போகும்போது கையில் எடுத்துப் போவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டு வாசலில் பசும்பால் வாங்கி என்பது என் மூன்றாவது நான்காவது வகுப்போடு நின்று போனது.  அப்புறம் ஆவின்தான்!

      நீக்கு
  35. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி சிதறல்கள் பதிவு அருமை.சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களது நேர்காணல் அனுபவங்கள் நன்றாக உள்ளது. ஏற்கனவே பதட்டமாக இருக்கும் மனநிலையில், தீப்பெட்டியின் செயல் வேறு மேலும் பதட்டத்தை உண்டு பண்ணியிருக்கும் . நல்லவேளை..! எல்லாம் நல்லபடியாக நடந்து பதவி உயர்வும் கிடைத்தது ரொம்ப சந்தோஷம்.

    வண்டியில் செல்பவரின் ஜாடை தெரிகிறது. ஆனால், அவராக இருக்க முடியுமா என்ற ஐயமும் வருகிறது. அவர் சட்டென யாருக்காவது உதவும் எண்ணத்துடன், ஆடம்பரங்கள் (படை, பந்தோபஸ்பத்து) ஏதுமின்றி செல்கிறாரோ என்னவோ என்ற லேசான சந்தேகமும் வருகிறது. ஏனெனில் உதவும் மனப்பான்மையில், நடந்த அப்படி ஒரு நிகழ்வை இங்குதான் படித்த நினைவும் வருகிறது. பார்ப்போம். "ஸ்கை" யார் என்பதுடன் இவரும் யார் என்ற புதிரையும் விடுவித்து விடுங்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "அவரா"க இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் இது இப்போது நான்கு வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டது!!!  ஸ்கையா?  யார் அது?

      நீக்கு
    2. /ஸ்கையா? யார் அது?/

      அவர் யாரென்று இதுவரை தெரியாமல்தானே இங்கு இத்தனை விவாதங்கள். என்னைக் கேட்டால் "வானத்தைப்போல" நாயகன் எனச் சொல்லி விடுவேன். :)) நூறாவதையும் எழுத வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  36. வணக்கம் சகோதரரே

    பாடகர் திரு. யேசுதாஸ் அவர்களின் கண்ணியமான உரையாடல் நன்றாக உள்ளது. அவருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும். அது எந்த நாளாக இருந்தாலும் நாம் அனைவருமே தினமும் பிறந்து எழுபவர்கள்தானே..!

    இசை விமர்சகர் சுப்புடு அவர்களின் செய்தியும் சுவாரஸ்யமாக இருந்தது.

    இந்திராகாந்தியின் மோதிர செய்தியையும் ஏற்கனவே படித்துள்ளேன். அவரின் திருமண பட்டுப்புடவையை கூட பாரம்பரியமாக கருதி, சோனியாகாந்தி அவர்கள் தன் திருமணத்திற்கு உடுத்திக் கொண்ட செய்தியும் எங்கோ படித்த நினைவு வந்தது.

    உங்கள் அப்பாவின் பொருட்களின விற்பனைக் கடிதம் மன வருத்தத்தைத் தந்தது. (அதுவும் அந்த இறுதி வரிகள்.) அதுவும் "நல்ல நிலையில் இல்லை" என்ற வாசகத்தை அவர் எழுதும் போது அவர் மனதில் எவ்வளவு வேதனை உண்டாகியிருக்கும். ஆனால், எல்லோருக்கும் வயதான பின் இதே நிலைதான் என்ற நிதர்சனமும் புரிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றையும் படித்து உறை செய்து விட்....   அதான் கவர் செய்து விட்டீர்கள்.  நன்றி கமலா அக்கா.  

      பேத்தி நலமா?

      நீக்கு
  37. வணக்கம் சகோதரரே

    பழைய விளம்பரங்கள் அப்போது எங்கள் அம்மா பைண்டிங் செய்து வைத்த புத்தகங்களில் பார்த்த நினைவு வருகிறது. அந்த புத்தகங்கள் எல்லாம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை.

    அப்போதைய படங்களில், கதாநாயகிகள் எங்காவது வழி மாறி வந்த வீடுகளில் காலை கண் விழித்து எழுந்ததுமே வந்து தங்கியிருக்கும் இடம் மறந்து போய் "ஓவல்" என "அறைக்கூவல்" விடுவார்கள். இங்கு திரையரங்கமே கேலிகளில் சிரிப்பலைகள் எழும்.

    பேத்தி இறைவன் துணையால் நலம். நன்றி விசாரித்தமைக்கு.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  38. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  39. JKC சாரின் அப்புறம் என்ன ஆச்சு? நன்றாக இருக்கிறது.
    அலுவலக அனுபவங்களும் நன்று.
    சும்மா ஜாலி, முகநூலிருந்து பகிர்வுகள்நன்றாக இருக்கிறது.
    பயிரை காக்க நம்மாழ்வார் தரும் சில யோசனைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  40. க்ரானிக்கிள் புத்தக அறிமுகம்படித்தேன்.
    கந்தசாமி சார் பகிர்வு படித்தேன்.

    நெல்லைத் தமிழன் படத்துக்கு சும்மா கருத்துரைதான் கவிதை இல்லை.

    வான் முட்டும் மாளிகையும்,
    வான் உயர்ந்த மரங்களும் அழகு.

    இலையுடன் இருக்கும் மரம் அழகு
    இலையுதிர்ந்த மரமும் அழகு
    நீலவானமும் அழகு.

    பதிலளிநீக்கு
  41. அம்மாவின் இழப்புக்கு பின் அப்பாவின் தனிமை கொடிதுதான்.
    வீட்டில் விற்பட வேண்டிய சாமான்கள் லிஸ்ட் ப்டித்தேன்.
    கடைசியில் அப்பா சொன்னதையும் படித்தேன் கண்டதை எல்லாம் வாங்கி சேர்க்காதீர்கள் என்ற அறிவுரையை .

    நாம் இருக்கும் வரை நமக்கு உதவும் பொருட்கள் வேண்டும். அப்புறம் நமக்கு பின் உள்ளவர்கள் வேண்டியதை எடுத்து கொண்டு வேண்டாதவற்றை கழித்து விட்டு போகட்டும்.

    பதிலளிநீக்கு
  42. பழைய விளம்பரங்கள் அம்மாவின் தொகுப்புகள் நான் தொகுத்தவையில் எல்லாம் இப்படி விளம்பரங்கள் இருக்கிறது பகிர வேண்டும்.
    அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!