15.3.25

உரியவரிடம் சேர்ந்த நகைகள், பணம், சாதித்த சிறுமி மற்றும் நான் படிச்ச கதை

 

பிரிட்டன் 'டிவி' நிகழ்ச்சியில் சாதித்த சிறுமிக்கு பாராட்டு

குவஹாத்தி: பிரிட்டனில் மிகவும் பிரபலமான, 'டிவி' நிகழ்ச்சியில், இந்தியா சார்பில் பங்கேற்று, வியத்தகு நடன சாதனை படைத்துள்ள, 8 வயதே நிரம்பியுள்ள பினிதா சேத்ரி என்ற அசாம் மாநில சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  'பிரிட்டன்ஸ் காட் டேலன்ட்' என்ற ரியாலிட்டி, 'டிவி' நிகழ்ச்சி, உலகம் முழுதும் மிகவும் பிரபலமானது.

அந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பாடகர்கள், நடனக்கலைஞர்கள், மேஜிக் கலைஞர்கள், காமெடியன்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். வெற்றி பெறுபவர்களுக்கு ஏராளமான பணமும், பிரிட்டன் அரச குடும்பத்தினர் முன் நிகழ்ச்சியை நடத்திக் காண்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த பிரபலமான நிகழ்ச்சியில், இந்தியா சார்பில் பங்கேற்ற, 8 வயதான பினிதா சேத்ரி என்ற சிறுமி, 3 நிமிடங்களே நடந்த நடன நிகழ்ச்சியில் அற்புதமாக நடனமாடி, பார்வையாளர்கள் மட்டுமின்றி, அந்த நிகழ்ச்சியின் நடுவர்களையும் ஆச்சர்யத்தில் கலங்க அடித்தார். உடலை வில்லாக வளைத்தும், முன்னும், பின்னும் காற்றில் பறந்தும் அந்த சிறுமி ஆடிய நடனங்கள் அற்புதமாக இருந்தன. அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள், ''வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு நடன அசைவுகளை செய்தார் அந்த சிறுமி'' என பாராட்டினர். சிறுமிக்கு உலகம் முழுதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. எவ்வித அச்சமும் இன்றி, சிறப்பாக ஆடிய அந்த சிறுமி, அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார். அவரை, அசாம் பா.ஜ., முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், ''அந்த சிறுமிக்கு என் பாராட்டுகள். அவளின் விருப்பப்படி, பரிசுத்தொகையிலிருந்து விளையாட்டு சாதனங்களை வாங்குவார்,'' என்றார். இந்திய தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, ''இந்தச் சிறுமியின் நடனம் உலக தரத்தில் இருந்தது. அவளின் உடல் அசைவுகள், இரும்பு இதயத்தை போலிருந்தன. மக்களின் அன்பு : ''அந்த அளவுக்கு அவர் சிறப்பாக தன் உடலை வளைத்தது, தீவிர பயிற்சியால் தான் முடியும்,'' என தெரிவித்துள்ளார். தனக்கு கிடைத்துள்ள வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அந்த சிறுமி, ''கடின உழைப்புடன் திறமையும் சேரும் போது, ஒரு மேஜிக் சந்தேகமே இல்லாமல் ஏற்படும். ''இந்தியா சார்பில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது பெருமையாக உள்ளது. நாட்டு மக்களின் அன்பு மற்றும் ஆதரவால் தான் இதை சாதிக்க முடிந்தது,'' என கூறியுள்ளார்.

=============================================================================================


\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\




திருநெல்வேலி: திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய், லேப்டாப் ஆகியவற்றை, மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., மாடசாமி கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்தார்.  திருநெல்வேலி மாவட்டம், புதிய பஸ் நிலையத்தில், மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., மாடசாமி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பஸ் நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த பையிலிருந்து ரூ.1,42,396 மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை, மாடசாமி போலீசாரிடம் ஒப்படைத்தார்.  இது குறித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு பையை உரிமை கோரி வந்த தென்காசி மாவட்டம், வீராணத்தை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். பின்னர் விசாரணையில் பணம், மடிக்கணினி பேச்சிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.  நேர்மையான முறையில் பணத்தை, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., மாடசாமியை, பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். மாடசாமியை காவல் துணை கமிஷனர்கள் கீதா, வினோத் சாந்தாராம், விஜயகுமார் மற்றும் மேலப்பாளையம் குற்றப்பிரிவு எஸ்.ஐ., ரசிதா ஆகியோர் பாராட்டினர்.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\




Thanks JKC Sir
=============================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

அவன் செய்த குற்றம்

 கதையாசிரியர்: ஆர்.கே.நாராயண்

ஆசிரியரைப் பற்றி : 

ஆங்கிலம் ஒரு பாடமாக கல்லூரியில் பயின்றவர்களுக்கு இக்கதையாசிரியரைப் பற்றி தெரியாமல் இருக்க முடியாது. சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலத்தில் (indian English) எழுதிய இந்திய எழுத்தாளர்களில் முதன்மை எழுத்தாளர் R K நாராயண். முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் ராஜா ராவ் இவ்ருடைய சமகாலத்திய ஆங்கில எழுத்தாளர்கள். 

ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணசாமி (1906 –  2001)  என்ற R K நாராயண் மைசூரில் பிறந்தவர். வளர்ந்தது சென்னையில் தாய் வழி பாட்டி வீட்டில் எட்டாம் வகுப்பு படிப்பு முடியும் வரை.  மைசூர் மன்னர் கல்லூரி உயர் நிலைப்பள்ளி, மன்னர் கல்லூரி ஆகியவற்றில் மேற்படிப்பு. 

R K லக்ஷ்மன் என்ற பிரபல கார்ட்டூனிஸ்ட் இவரது கடைசி தம்பி. 

காதலித்து 1934இல் மணமுடித்த மனைவி ராஜம் 5 வருட தாம்பத்திய வாழ்க்கைக்கு பின் ஒரு பெண் ஹேமா வை தந்து விட்டு 1939 இல் மேலுலகம் சென்றார். அதன் பின் எழுத்தே வாழ்வு என வாழ்ந்தார் நாராயண். 

பெற்ற விருதுகள் பல. கடைசியாக பத்ம விபூஷண் விருது பெற்றார். 

அக்காலத்தில் இந்தியர், இந்திய கலாச்சாரம், பற்றி ஆங்கிலம் பேசுபவர்கள் அறிந்திருந்தது குறைவு. எளிய ஆங்கிலத்தில் இவற்றை பிரதிபலிக்கும் வண்ணம் இவர் எழுதிய படைப்புகள் மால்குடி டேஸ், ஸ்வாமி அண்ட் பிரெண்ட்ஸ், போன்ற கதைகள் ஒரு இந்திய கலாச்சார அறிமுகமாக அமைந்தன. ஆங்கிலம் கற்கும் இந்தியர்களிடையேயும் இவை பிரபலம் ஆயின. 

இவரது எழுத்து நடை, ஆங்கில எழுத்தாளர் வில்லியம் பால்க்னெரின் நடையைப் ஒட்டி உள்ளதாக விமரிசகர்கள் கருதினர், கருதுகின்றனர்.

கதையை பற்றி: 

இவரது படைப்புகளின் தனித் தன்மையான வாசகரின் மனதில் ஒரு ஆர்வத்தை உருவாக்க சாதாரண நிகழ்வுகளைப் பயன்படுத்தும் திறன்பின்வரும் கதையில் புலப்படும். 

ஒரு சாதாரண சம்பவம் விரிவாக்கப்பட்டு சிறுகதையாக வளர்கிறது. சம்பவத்தை ஒரு சக்கர வியூகத்தின் மையத்தில் நிறுத்தி அதை காட்ட அந்த வியூகத்தினோடே பல காட்சிகளையும் காண்பித்து அழைத்து செல்கிறார் ஆசிரியர். ஆக சம்பவம் மறந்தாலும் காட்சிகள் மறைவதில்லை. குற்ற உணர்வு திருடர்களுக்கு இல்லை, அது அவரது தொழில்என்றே அவர் கருதுகின்றனர் என்பதே கதையின் கருத்து.  

=====> ஆசிரியர் பற்றிய மேலதிக விவரங்களுக்கு<=======

அவன் செய்த குற்றம்

பச்சை ஜிப்பா, நீலவானம் பொழிந்து கொண்டிருந்த சூரிய ஒளியிலே தனித்து இனம் கண்டு கொள்ளும்படியாகத் தகதகவெனப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அத்தகைய பெருங்கூட்டத்திலும், அந்தப் பச்சை ஜிப்பாவினால் மட்டும் யாருடைய கவனத்திலிருந்தும் தப்ப முடியாது. சொக்காயும் தலைப்பாகையும் அணிந்த நாட்டுப்புறத்தார்கள், கோட்டும் தொப்பியும் தரித்த நகர்ப்புரத்தார்கள், உடலை மறைக்கத் துணியின்றி வெற்றுடம்புடன் காட்சி அளித்த பிச்சைக் காரர்கள், வண்ண வண்ணப் புடவைகள் உடுத்திய பெண்மணிகள் எல்லோரும் கடை களுக்கிடையே இருந்த குறுகலான பாதை வழியே நெருக்கியடித்துக் கொண்டு நகர்த்து கொண்டிருந்தார்கள். 

எள்ளுப் போட்டால் எள்ளு விழாதபடி நெரித்த அந்தக் கும்பலில் சேர்ந்து போகிறவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து விட்டால், திரும்பக் கண்டு பிடித்துச் சேருவது சிரம சாத்தியமான காரியம். ஆனால் அந்தப் பச்சை  ஜிப்பாவைப் பொறுத்த வரை அந்தக் கவலை எழவே நியாயம் இல்லை. ஏனெனில் அதை அடையாளம் கண்டு கொள்ளாமல் தவற விடுவதுதான் சிரம சாத்தியமான காரியம். சந்தை இரைச்சல் என்று சொல்வது எவ்வளவு பொருத்தம்! ஒருபுறம் பொருளைப் பற்றிய வர்ணனை; இன்னொரு புறம் விலை பற்றிய பேரம்; மற்றொருபுறம் தர்க்கம்: வேறொரு புறம் குசலப் பிரச்னம்.

இத்த சந்தை இரைச்சலிலும் கூவாமல் கூவி, கவராமல் கவர்ந்து, அழையாமல் அழைத்தது அந்தப் பச்சை ஜிப்பா. எத்தனயோ முயன்றும் ராஜுவினால் அதை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை. ‘வருந்தி அழைத்தாலும் வாராத வாராஎன்பதுபோல் அலட்சியம் செய்யும் குணம் ராஜுவுக்கு என்றுமே இருந்ததில்லை. அவன் அந்தக் கும்பலிலிருந்து கொஞ்சம் விலகியே இருந்தான். முழுக்க முழுக்க விலகி யிருப்பது என்பதும் அவனால் முடியாத காரியம். அதேபோல்  பகிரங்கமாகக் கூட்டத்தோடு கலந்து கொள்வது என்பதும் அவனால் ஆகாத காரியம். அவன் எங்கு இருந்தாலும், எங்கு சென்றாலும் போலீஸ்காரர்களின் பார்வையில் பட்டு விடக் கூடாதே என்ற பயம் அவனை வாட்டிக் கொண்டே இருக்கும். அன்று அவன் முழங்கால் தெரியும்படி மூலைக்கச்சம் கட்டிக் கொண்டிருந்தான், சட்டை ஏதும் அணியவில்லை. தலையிலே பெரிய முண்டாக ஒன்று சுற்றி இருந்தான். அது முகத்தையே மூடி மறைத்தது. பார்ப்பவர்கள் தன்னைப்  பட்டிக்காட்டிலிருந்து வந்த குடியானவன் என்று எண்ணுவார்கள் என்றே அவன் நம்பினான்.

அவன் ஒரு கடைக்குப் பின்னே , வீசியெறியப் பட்டிருந்த வாழைக் கட்டைகளின்மீது உட்கார்ந்து கொண்டு. போய் வரும் ஜனத்திரளைக் கவனிக்கலானான்.

அவன் எதைக் கவனித்தாலும், உன்னிப்பாகவேதான் கவனிப்பான். அதுவே அவன் தொழில் முறையுங்கூட.. சுபாவமாகவே அவன் சோம்பேறி. ஆனால் கும்பலைக் கண்குத்திப் பாம்பாகக் கவனிப்பதிலும், பிறர் பையில் கைபோடுவதிலும் அவன் ஆற்றல் பெற்றிருந்தான். அவன் மேற்கொண்டிருந்த அந்தத் தொழில் பெரியதொரு சூதாட்டம் என்பதில் ஐயம் இல்லை. சிலசமயம் அவனது துணிச்சலுக்கேற்ற பலன் கிட்டுவதில்லை. பைக்குள் போய் வரும் விரல்கள் பத்திரமாகத் திரும்பி வந்தாலே பெரும் பாக்கியம் என்று கூடத் தோன்றுவதுண்டு. சில சமயம் அவன் கையோடு பவுண்டன் பேனா வருவதுண்டு. நகராண்மைக் கழகத்துக்குப் பின்னால் இருந்து கொண்டு அதை வாங்குபவன். நான்கணா தரக்கூட மீன மேஷம் பார்ப்பான். அதோடு அந்தப் பேனாவின் உதவியைக்கொண்டே அவனைக் கண்டு பிடித்து விடக் கூடும் என்ற பீதி வேறு இருந்து கொண்டே இருக்கும். ராஜு ஒரு நாள் தனக்குத்தானே, ‘பேனாவை மட்டும் தொடுவதில்லை. அப்படி யாராவது தட்டில் வைத்து வெற்றி, பாக்கு, பழம், தட்சினையோடு கொடுத்தால்கூடக் கண் நிமிர்ந்தும் பார்ப்பதில்லைஎன்று உறுதி பூண்டான். இந்தப் பேனா வியாபாரமே ரொம்பத் தொல்லை தரும் வியாபாரம். மசி கசியும், ஒழுகும், நிப்பு குத்தும். அதை வாங்கிக் கொள்பவன் இன்னும் என்ன என்ன வெல்லாம் கோளாறுகள் சொல்வானே. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். கடிகாரங்கள் கூடப் பேனாவுக்கு வளப்பந்தான்.

ராஜுவுக்கு ரொம்பப் பிடித்தமான பொருள், மெத்தப் பருமனான பர்ஸ். எங்கேயாவது பார்த்து விட்டால், அதை அவன் எடுத்துக் கொள்ளும் பணிக்கே அலாதிதான். அதில் உள்ள பணத்தை எடுத்துக் கொண்டு, அதைத் தூர எறிந்து விட்டு, அன்றைய வேலையை நன்றாகச் செய்த  திருப்தியுடன் வீட்டுக்குப் போவான். முகத்தை ஒரு செம்பு நீர் விட்டுக் கழுவித் தலையை வாரிவிட்டுக் கொள்வான். வீட்டுப்படி இறங்கி நாகரிக மனிதனாக உலாவப் போகுமுன், குழந்தைகளுக்கு மிட்டாய், புஸ்தகம், சிலேட்டு என்று வாங்குவான். ஆடிக்கொரு நாள், ஆவணிக் கொரு நாள் தன் மனைவிக்கும் நல்ல ரவிக்கைச் சீட்டியாக வாங்கி வருவான். அவனுக்கு எப்பொழுதுமே தன் மனைவியைக் கண்டால் அவ்வளவாக ஆகாது. அவன் எப்பொழுதாவது கையில் கொஞ்சம் அதிகமாகப் பணம் புரள வீட்டுக்குச் சென்றால், முன் ஜாக்கிரதையாக உறையில் இட்டுக் கூரை ஓட்டுக்குள் மறைத்து வைக்கும்படி ஆகும். இல்லாவிட்டால் அவள் இல்லாத பல கேள்விகள் கேட்டு அவனைத் தொணதொணத்து எடுத்து விடுவாள். அவன் திருந்தி விட்டான், நல்ல முறையில் தரகுத் தொகையாகச் சம்பாதித்துள்ளான் என்று காணவே அவள் பிரியப்பட்டாள். தரகு தொகை எப்படிக் கிடைத்தது. எங்கு கிடைத்தது என்று அலட்டிக் கொள்வதில்லை. தரகிலே வந்த சம்பாத்தியம் என்றாலே அது தனி என்று மகிழ்ந்து வந்தாள்.

ராஜு சட்டென்று வாழைக் கட்டை மீதிருந்து குதித்துப் பச்சை ஜிப்பாவைப் பின் தொடர்ந்தான். ஆனால் மூன்றடி பின் தங்கியே நடந்தான். அது மிக நேர்த்தியான, கணக்கான தூரம்: இயற்கை உணர்வும் அனுபவமும் தேடித் தந்த அருஞ் செல்வம். அந்தத் தூரம், முன் செல்லும் ஆசாமியின் கை பாக்கெட்டுக்கு போய் வருவதை மறைக்காது. அதோடு பார்ப்போருக்குச் சந்தேகத்தை எழுப்பித் தொல்லை தரும்  கிட்டமும் இல்லை. தூரமும் இல்லாமல் கிட்டமும் இல்லாமல், ஆகா என்ன கணக்கு வேடன் தன் வேட்டையின் அடிச்சுவட்டைப் பின்பற்றிப் போனாலும் உயிருக்கு ஊறு நேராவண்ணம் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று கணக்கிட்டு நடப்பானே, அப்படி இருந்தது. அவன் நடத்து கொண்ட முறை. ஆனால் இவ்வேடனின் வேலை முறை கொஞ்சம் சிக்கலானது. காட்டிலே வேட்டையாடச் செல்பவன், தான் தொடர்ந்து செல்லும் பிராணியை ஒரே போடாகப் போட்டு அடித்து வீழ்த்திவிட்டால் தனக்கு வெற்றி கிட்டி விட்டதாக முடிவு கட்டிவிடலாம். ஆனால் இங்கோ ? உயிரை வைத்துத் தோலை உரிப்பது என்பார்களே, அதுபோல, இவ்வொருவரின் உடலைப் புண் படுத்தாமலே, உள்ள பொருளைக் கவர்ந்து விட வேண்டும்.

ராஜு பொறுமையாகக் காத்திருந்தான். பச்சை ஜிப்பா தேங்காய்க் கடையில் இளநீர் அருந்த நீண்ட நேரத்தைச் செலவிடவே, அவனும் ஏதோ பாய்ச் சுருள்களைப் பார்வை இடுபவன் போலப் பொழுதை ஓட்டினான். அவன் இளநீர்க் கடையில் நின்றதைப் பார்த்தால், அங்கு விட்டு நகரவே மாட்டானோ என்று கூடத் தோன்றியது. இளநீரை யெல்லாம் குடித்து முடித்தும், அவன் அந்தத் தேங்காயைப் பிளந்து, அதற்குள் இருக்கும் வழுக்கையைக் கடைக்காரன் கத்தியால் கீறித் தரும் வரை காத்திருப்பான்  போலத் தோன் றியது. அவன் நினைத்தது போலவே, தேங்காய் வழுக்கை அவன் வாய்க்குள் விழுந்து மறைவதை கண்டபொழுது, ராஜுவுக்கும் நாக்கிலே நீர் ஊறிற்று. அந்த ஆசையை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான் ராஜு, ஒருவன் தன் தொழிலிலே ஈடுபட்டிருக்கும் பொழுது. இன்னொருவன் எதையாவது தின்பதிலும் அருந்துவதிலும் பொழுதைச் செலவிட்டால், அது நியாயமா? காரியத்தில் கண்ணாயிருப்பவன் அதைக் கண்ணுற்றுத் தன் காரியத்தில் தவறி விடலாம். அல்லது அவன் கைக்கு எட்டிய பழம் வாய்க்குக் கிட்டாமல் போய்விடலாம்.

பச்சை ஜிப்பாக்காரன் தன் பையிலிருந்து கருத்த பர்ஸ் ஒன்றை எடுப்பதைப் பார்த்தான் ராஜு, தேங்காய் வியாபாரியுடன் இளநீரின் விலையைப் பேரம் பேசுவதையும் கண்டான். அப்பப்பா! என்ன கனத்த கரகரப்பான குரல்! ராஜுவின் கவனத்தைக் கலைத்தது அது. புலி உறுமுவதுபோல் அல்லவா உறுமுகிருன்!

காட்டிலே வேட்டையாடச் சென்று பழக்கப்பட்டவன் உள்ளம் துணுக்குற திடுமெனப் புலி உறுமுகிறதே என்பதற்காகப் பயந்து பின் அடி எடுத்து வைப்பானா? பச்சை ஜிப்பா கடைக்காரனுடன் நடந்து கொண்ட முறை ராஜுவுக்குப் பிடிக்கவில்லை. அல்பன்! என்ன கஞ்சத்தனம்.  காசிடம் இத்த ஆசையா? இம்மாதிரிக் காசாசை கொண்டவர்கள் குறுகிய உள்ளம் படைத்தவர்களா யிருப்பார்கள், பெரும் தொல்லைக் காரர்களாக யிருப்பார்கள்! பர்ஸ்  தொலைத்து விட்டால் ஊரைக் கூட்டி விடுவார்கள். குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டு.

 அப்பாடா! பச்சை ஜிப்பாக்காரன் ஒரு வழியாக இடம் பெயர்ந்து நகர்ந்தான். பறக்கும் வண்ண வண்ணப் பலூன் விற்கும் கடைக் கெதிரே போய் நின்றான். கடைக்காரனுடன் முடிவில்லா விவாதம் தொடங்கி முடித்துக் கொண்டு அவன் ஒரு பலூன் வாங்கினான். அவனுடைய அற்பத்தனத்துக்கு இன்னுமோர் அத்தாட்சி அது!  “இது ஒரு தாயில்லாக் குழந்தைக்கு அப்பா நான் கட்டாயம் வாங்கி வருவதாகச் சொல்லி விட்டேன், தான் வீட்டுக்குப் போவதற்கு முன்னால் இது உடைந்து போனலும் கெட்டுப் போனாலும், அவன் இரவு முழுவதும் அழுது தீர்த்துவிடுவான். அவன் முகம் சிணுங்குவதை நான் சகிக்கமாட்டேன்என்றான் அவன்.

அவன் ஒரு குறுகிய நடப்பு வழியே நடந்து கொண்டிருந்த பொழுது, ராஜுவுக்கு அவன் எதிர்பார்த்திருந்த அந்த அரிய வாய்ப்பு கிடைத்தது. மகாத்மா காந்தி பத்திரிகை படிப்பது போல சமைக்கப்பட்டிருந்த மெழுகுச் சிலையைக் காண்பதற்காக மக்கள் முண்டியடித்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். கிடைத்தற்கரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை ராஜு.

***

பதினைந்து நிமிஷங்களுக்குப் பிறகு ராஜு அந்தப் பர்ஸுக்குள் இருந்ததைச் சோதனை இட்டுக் கொண்டிருந்தான். உபயோகத்திலிராத பாழுங் கிணறு ஒன்றுக்குப் பின்னால் போய்த் தனியாக அமர்ந்து கொண்டான், அதன் இடிந்து போன கைப்பிடிச் சுவர் அவன் அலுவல்களுக்கு நேர்த்தியான மறைவிடமாக அமைந்தது. அந்தப் பர்சில் பத்து ரூபாய் ரூபாய் நாணயமாகவும் இருபது ரூபாய்கள்  நோட்டாகவும், சில அணாக்காசுகள் நிக்கலிலும் இருத்தன. ராஜுஅந்த அணாக் காசுகளை எடுத்து மடியில் செருகிக் கொண்டான். யாராவது பிச்சைக்காரர்களுக்குப் போட்டு விடலாம் இவற்றை என்று அவன் தாராள மனதுக்குத் தோன்றியது. பொருட் காட்சியின் நுழைவிலே குருடன் ஒருவன் கண்ணில்லாக் கபோதி ஐயாஎன்று கதறிக் கொண்டிருந்தான். யாருமே அவளை இலட்சியம் செய்ய வில்லையே என்பது அவனுக்கு நினைவு வந்தது. இந்த நாட்களில் மக்களுக்கு அநுதாப குணம் என்பது அறவே மரத்துப் போய் விட்டது போலும்! அவன் தன் முண்டாசுத் துணியை எடுத்து முப்பது ரூபாயை ஒரு முனையில் முடி போட்டுப் பழைய படியே முண்டாசைக் கட் டிக் கொண்டான். மாதத்தின் மீதி நாட்களை ஓட்ட அது போதுமெனத் தோன் றியது. பதினைந்து நாட்களுக்காவது அவன் நல்ல படியாக உண்டு உடுத்து வாழலாம். மனைவியையும் குழந்தைகளையும் ஒரு படத்துக்குக் கூட அழைத்துச் செல்லலாம். அப்பொழுது அவன் கைக்குள்ளே அந்தப் பர்ஸ் முடங்கிக் கிடந்தது. அதைத் தலையைச் சுற்றிக் கிணற்றுக்குள் வீசியெறிந்து விட்டுக் கையைத் தட்டிக் கொண்டு, ராஜா மாதிரி மிடுக்காக அவன் புறப்பட்டு விட வேண்டியது தான். கிணற்றுக்குள்ளே எட்டிப் பார்த்தான். அடி மட்டத்திலே ஏதோ கொஞ்சம் தண்ணீர் இருந்தது. பர்ஸ் மிதக்கலாமே! மிதக்கும் பர்ஸ், உலகத்தில் இல்லாத தொல்லைகளை யெல்லாம் கொணர்ந்து சேர்க்கக் கூடுமே! விட்டெறிவதற்கு முன்னால், அதில் கூழாங்கற்கள் இட்டு நிரப்பலாமே என்று எண்ணிப் பர்ஸைத் திறந்தான். அதன் ஒரு புறத்து அறையிலே பலூன் ஒன்று மடித்துச் செருகி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான், ‘அட!  இது அவன் வாங்கியதல்லவா? தாயில்லாக் குழந்தையைப் பற்றி அவன் பேசியதெல்லாம் ராஜுவுக்கு நினைவு வந்தது. ‘ கத்த மடையன். இதைக் கொண்டு போய்ப் பர்ஸுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறானே!’ என்று உள்ளம் கூறியதை உதடுகள் எதிரொலித்தன. ‘என்ன அஜாக்கிரதை இந்தப் பெற்றோர்களுக்கு? குழந்தைகளை இப்படியா அல்லலுக்கு உள்ளாக்குவது?- என்று மனத்துள் கடித்து கொண்டான். ஒரு கணம் அவன் கண்ணெதிரே சலனப்படம் ஒன்று ஓடியது. புலி போல் உறுமும் தந்தை வீடு திரும்புகிறான். வாங்கி வருவதாக அவன் சொல்லிச் சென்ற பலூனை எதிர்பார்த்து வாசல் படியிலேயே தாயில்லாக் குழந்தை அவனுக்காகக் காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது. அவனோ பர்ஸ் பறிபோன ஆத்திரத்தோடு திரும்புகிறான்.. அப்பப்பா தினத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறதே!

 குழந்தையின் ஏமாற்றத்தை எண்ணிப் பார்க்கவே, ராஜுவுக்கு இதயம் விம்மி வெடித்துவிடும் போலாகி விட்டது. அந்தக் குழந்தையைத் தேற்றுவார் யாருமே கிடையாது. பலூன் வாங்கி வராததால் ஏமாற்றமுற்ற அந்தக் குழந்தை நீண்ட நேரம் அழுமேயானால், அந்தக் கிராதகன் கண் மண் தெரியாமல் அடித்தாலும் அடித்து விடுவான். அந்தப் பச்சை ஜிப்பாக்காரனைப் பார்த்தால், சின்னஞ் சிறு பிள்ளைகளின் மழலை மொழியைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவனாகத் தோன்ற வில்லை. அந்தக் குழந்தையை எண்ணி ராஜு வின் மனம் பாகாக உரு கியது. ஒருவேளை அவனுடைய இரண்டாவது மகனை யொத்தவனாக இருக்கலாமோ அந்தச் சிறுவன்? அந்தச் சிறுவனின் தாயார் இறந்தது போல் அவன் மனைவியும் இறந்து விட்டால்

தனிப்பட்ட முறையில் பார்க்கப்போனால் அவனுக்கு அதனால் பல அனுகூலங்கள் கூட ஏற்படலாம். முதலாவதாகப் பணம் காசைக் கூரையில் ஒளித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படாதல்லவா?

இந்தத் தகாத எண்ணம் நமக்கு எதற்கு என்று அதை மனத்திலிருந்து கிள்ளியெறிய முயன்றான். அவன் மனைவி இறந்துவிட்டால், அவனுக்கு வேண்டாத பல தொல்லைகளும் துயரங்களும் வந்து சேரும். சின்னஞ் சிறு குழந்தைகளைச் சமாதானப்படுத்தி வைத்துக் கொள்வதற்குள் அவனுக்குப் போதும், போது மென்றாகிவிடும். புத்தியே பேதலித்து விடக் கூடும். அவனது விரோதிக்குக்கூட அந்த அவல நிலை வேண்டாம். அந்தத் தாயில்லாக் குழந்தைக்கு எப்படியாவது இந்தப் பலூன் கிடைத்துவிட வேண்டும் என்று ராஜு முடிவு செய்தான். ஆனால் சேர்ப்பிப்பது எப்படி? இடிந்த கைப்பிடிச் சுவரின் இடுக்கு வழியே தூரத்திலிருந்த கூட்டத்தை எட்டிப் பார்த் தான், பலூனைக் கொண்டு போய்த் திருப்பிக் கொடுக்க முடியாது. வெற்று மணிபர்ஸில் பழைய படியே வைத்து முடியுமானால் அவன் சட்டைப் பைக்குள் போட்டு விடலாம். – பச்சை ஜிப்பாக்காரன் அங்கே நடை பெற்றுக் கொண்டிருந்த தர்மோபதேசத்தைக் கேட்டுக்கொண்டிருந்தான். பிரசங்கி தாம் எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றிக் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார். அரை வட்டம் ஒன்று எங்கே உன் கடவுள்?’ என்று கேட்கவே, அங்கே பேரிரைச்சல் எழுந்தது. ராஜூ பச்சை ஜிப்பாவை அணுகி நின்று கொண்டான். பலூன் மட்டுமே திணிக்கப்பட்டிருந்த பர்ஸ் அவன் கையில் இருந்தது. அவன் அதை அந்தப் பச்சை ஜிப்பாவின் பையில் மெதுவாகப் போட்டான்.

அடுத்த கணமே ராஜுவுக்குத் தன் தவறு விளங்கிவிட்டது. பச்சை ஜிப்பாக்காரன் அவன் கையை இறுகப் பற்றிக் கொண்டு. ‘திருடன், திருடன்என்று உரக்கக் கத்தி விட்டான். தர்மோபதேசம் கேட்டுக் கொண் டிருந்தவர்கள் அதன் சுவையை மறந்தனர். எல்லோருடைய கவனமும் ராஜுவின் பக்கம் திரும்பியது. அநாவசியமாகத் தன்னை அவமானப் படுத்துவதுபோலத் திமிறி அவன் தன்னை விடுவித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தான். ‘என்னை விடுஎன்றும் கூவினான். அவன் என்ன செய்யப்போகிறான் என்பதை ராஜுஅறிவதற்கு முன்னதாகவே, பச்சை ஜிப்பாக்காரன் கையை ஓங்கிக் கன்னத்தில் பலமாக ஓர் அறை விட்டான். கண்ணெதிரே கும்மிருட்டுச் சூழ்ந்தது. அரைக் கணம் ராஜுவின் பொறி கலங்கியது. ‘நாம் யார், எங்கு இருக்கிறோம்?’ என்பதையெல்லாம் மறந்தான். இருள்பனி மூட்டம் பிரித்து அவன் மீண்டும் தன் பார்வையைப் பெற்ற பொழுது, தன்னெதிரே முதன் முதலாகப் பார்த்தது பச்சை ஜிப்பாக்காரனைத் தான். தொடுவானத்தையும் தாண்டிக் கொண்டு தூர நிற்பது போன்று தோன்றினான் அவன். அவன் கைகள் மீண்டும் அடிக்கத் தயாராக எழும்பியிருந்தன. அதைக் கண்டதும் ராஜு வெல வெலத்துப் போய்த் தலைகுனிந்தான்.

நான்நான் உன் பர்ஸைத் திரும்பவும் உன் பைக்குள் போடத்தான் முயன்றேன்என்றான். அதைக் கேட்டதும் பச்சைஜிப்பாக் காரன், பற்களைக் காட்டிப் பேயெனக் கட கடவென்று சிரித்துக் கைகளை நெறித்தான். கட்டம் பேரொலி எழுப்பிக் கெக்கெலி கொட்டி நகைத்து அவனைத் துன்புறுத்தலாயிற்று. சிலர் மீண்டும் அவன் தலையில் தங்கள் பலம் கொண்ட மட்டிலும் ஓங்கிச் சாத்தினார்கள்.

நீதிபதிக்கு முன்னிலையிலும் கூட ராஜு, நான் பர்ஸைத் திரும்பவும் பைக்குள் போடத்தான் முயன்றேன்என்று திரும்பத் திரும்ப அதே பல்லவியைத்தான் பாடினான், கேட்ட  யாவரும் சிரித்தார்கள். அது போலீஸ் உலகத்திலே நிரந்தர நகைச்சுவைத் துணுக்காகக் கூட நிலைத்து விட்டது. ராஜுவின் மனைவி அலிகார் சிறைச்சாயிைல் பார்க்க வந்தாள். ‘ எங்களைத் தலை தூக்க வொட்டாமல் அவமானப்படுத்தி விட்டாயே  என்று கூறி அழுது தீர்த்து விட்டாள்,

ஏன்? நான் திரும்பவும் போடத்தானே முயன்றேன்”-ராஜுஅதே பதிலை அவளுக்கும் அமைதியாகச் சொன்னான்.

அவன் பதினெட்டு மாதங்கள் சிறைவாசம் செய்துவிட்டு மீண்டும் இவ்வுலகுக்குத் திரும்பி வந்தான். என்ன செய்வது. ஏது செய்வது என்று ஒன்றும் புரியாமல் கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டவனாகத் தான் வந்தான். ஆனால் தனக்குள் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டான். ‘என்றைக்காவது எதையாவது நான் எடுக்க நேர்ந்தால், அதைத் திரும்பவும் போடக் கூடாது. இதை மட்டும் நான் உறுதியாகக் கடைப்பிடித்தே ஆக வேண்டும்என்பதுதான் அந்த ஒன்றே ஒன்று. அன்று முதல் அவன் கடவுள் தனக்கு ஒரே ஒரு விதத்தில் மட்டும் சாமர்த்தியத்தை அளித்திருப்பதாக நம்பினான். தன் விரல்கள். எடுக்கும் பழக்கம் உள்ள விரல்கள் எடுத்தது எதையும் திரும்பப் போடுவதற்காக ஏற்பட்டவை அல்ல என்பதே அவன் முடிவாகக் கொண்ட நம்பிக்கை.

பின்னுரை.

பர்ஸை திரும்பப்போட முயற்சித்ததே அவன் செய்த குற்றம்’  எடுத்தது அல்ல.

நான் அறிந்த வரையில் நாராயண் தமிழில் கதைகள் எழுதியதாக தெரியவில்லை. இக்கதை https://www.sirukathaigal.com/ தளத்திலிருந்து பெறப்பட்டது. கல்கியில் வெளி வந்தது. வாசித்தபோது கதை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டதாக தோன்றுகிறது. அதுவும் கூகிள் translate மூலம்.

வாக்கிய அமைப்பு, வார்த்தைகளின் மறை பொருள் போன்றவற்றில் ஆங்கிலமும் தமிழும் வேறுபடும். He is a pot head என்பதை தமிழில் அவன் ஒரு பானைத் தலையன் என்று மொழி பெயர்க்கலாமா? அவன் ஒரு மாங்காய் மடையன் என்பதை ஆங்கிலத்தில் He is a mango fool என்று சொல்ல முடியுமா. இது போன்ற குளறு படிகள்  பலவும் கதை மொழி பெயர்ப்பில் உள்ளன. அதனால்தான்  மொழிபெயர்ப்பு சரியில்லை என்று கூற வைக்கிறது

கதையின் சுட்டி

13 கருத்துகள்:

  1. பகிர்ந்த கதை நன்று.

    திருடனுக்கு எதுக்கு மற்ற எண்ணங்கள் கவலைகள்?

    பேசாம அரசுக்கணக்கில் இந்த இடத்தில் ரோடு போட்டேன் 50 லட்சம் என்று அடித்துவிடாமல் பாவம் போய்த்தொலையறாங்க ஜனங்க என்று நினைத்து ஐந்து லட்ச ருபாய்க்கு ரோடு போட்டால் அவனவன் கேள்விகேட்கத்தான் செய்வான்

    பதிலளிநீக்கு
  2. ஜார்க்கண்ட் சீமாகுமாரியின் வளர்ச்சி ஆச்சர்யப்பட உத்திகள் ஒரு. வாழ்க வளர்க

    பதிலளிநீக்கு
  3. கடவுள் 9:30க்குப் பிறகான காலப் ப்ரார்த்தனைகளை கவனிப்பாரா? மதியம் சுடச்சுட சாதம் சாம்பார் கறி என தட்டில் கொண்டுவந்து வைப்பதற்குப் பதில் இட்லி சட்னி கொடுப்பதுபோல ஆகிவிடாது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை ஹிஹிஹி..யாரைக் கலாய்க்கறீங்கன்னு தெரியுது...அதுசரி

      இதென்ன கேள்வி!!! கடவுள் எப்பவுமே பிஸி. அவருக்கு நேரம் பத்தலையாம்!!!! உங்ககிட்ட நேரம் இருந்தா கொடுங்க அவருக்கு.

      கீதா

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. /நெல்லை ஹிஹிஹி..யாரைக் கலாய்க்கறீங்கன்னு தெரியுது../

      நல்லாவே தெரியுது. ஹா ஹா ஹா. அந்த இட்லி சட்னி உவமானம் நன்றாக உள்ளது. ரசித்தேன்.

      நீக்கு
  4. சீமாகுமாரி கண்ணில் நீர் நிறைத்தார். டாப் செய்தி. ஆச்சரியத்துடன்...
    அவரது பெற்றோருக்கு என்னவென்றே தெரியாத சூழல் பாருங்க. அந்தக் குழந்தை நல்ல நிலையில் வர வேண்டும். வாழ்த்துவோம்.

    பினிதா சேத்ரியை பார்த்த நினைவு இருக்கிறதே யுட்யூபில்? அல்லது வாட்சப்பில்....அசாத்தியமான நடனம் இவரது நடனம்.

    ஆனந்த் மகிந்த்ரா இன்ஸ்டாவில் என்று நினைக்கிறேன் ரொம்ப ஆக்டிவ். நிறைய இப்படியான விஷயங்களை நல்ல விஷயங்களைப் பகிர்கிறார். நான் இன்ஸ்டாவில் இல்லை என்றாலும் பகிரப்படுவதில் பார்த்ததுண்டு.

    பினிதாவையும் வாழ்த்துவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இந்த நாட்களில் மக்களுக்கு அநுதாப குணம் என்பது அறவே மரத்துப் போய் விட்டது போலும்! //

    காலம் காலமாக இந்த வசனத்தைப் பல கதைகளில் பார்க்கிறோமே...இப்பவும் சொல்லிக் கொண்டிருக்கிறோமெ..

    கீதா

    பதிலளிநீக்கு
  6. சில வரிகள் - திருடனுக்கும் நெஞ்சில் ஈரம் இருக்கிறது என்பதைச் சொல்கிறது.

    பர்சை திரும்பப் போடாமல் இருந்திருந்தால் தப்பித்திருப்பான்.

    கதை ஒரு திருடனைப் பற்றிய அவன் எண்ணங்கள் உணர்வுகளைப் பற்றி நுணுக்கமாக எழுதியிருக்கிறார் ஆர் கே.

    மொழிபெயர்ப்பில் அலல்து ஸ்கான் செய்து போட்டதில் பிழைகள் உள்ளன,...ஸ்கான் செய்தாலும் சில இடங்கள் சரியாக இல்லாமல் நாம் அதைச் சரி செய்ய வேண்டியிருக்கும். கூகுள் பிக்சர்ஸ் ஸ்கான் செய்த்ய் எடுக்கலாமே டெக்ஸ்ட், புத்தகங்களில் இருந்து...ஆனால் அதை கவனிக்க வேண்டியிருக்கும். அதுதான் அங்கும் பிரச்சனைகள் வருகின்றன என்று தோன்றுகிறது.

    கீதா


    பதிலளிநீக்கு
  7. என்னவோ எனக்குத் தோன்றுவது, திருட்டுத்தொழில் தப்புதான் என்றாலும் ராஜு போல உள்ளவங்க என்னவோ சின்ன அமௌன்ட் தான் ...ஆனா பாருங்க நம்ம கண்ணு முன்னாலேயே திருட்டு நடக்கலையா? கேட்க முடியுதா இல்லை போலீஸ் நெருங்க முடியுமா? அதுவும் கோடி கோடியா...அதுக்கு ராஜு போன்றவர்கள் பாவம் போனா போகுதுன்னு விட்டுவிடலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன் க்கா வுக்கு இரக்க மனசு. இவன் வெறும் பத்துபேரைத்தானே கொலை பண்ணினான், இப்படீல்லாம் ஒப்பீடு செய்து சிறையில் யாரும் வாடாம பாத்துக்குவாங்க

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. அனைவரையும் பாராட்டுவோம்.

    இன்றைய கதை பகிர்வும் நன்றாக உள்ளது. திருடனுக்கு சற்று இரக்கம் வந்ததால், அவன் மாட்டிக் கொண்டான். அதை ஆசிரியர் விளக்கிய விதம் அருமை. இறுதியில் அவன் எடுத்த முடிவு சரிதான்.

    ஒரு படத்தில் நடிகர் வடிவேலு ஒருவருடைய பர்ஸை எடுக்கும் போது பேண்ட் பாக்கெட்டில் அவர் கை மாட்டிக்கொண்ட நகைச்சுவையும் நினைவுக்கு வந்தது. நல்லதோர் கதை பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. வெற்றியாளர்கள் அனைவரையும் வாழ்த்துவோம்.

    கதை திருடனின் மனத்தில் எழும் குழந்தை மீதான இரக்க உணர்வை நன்கு தருகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!