11.4.15

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) "சாகும்வரை சேவை செய்யணும்!" - வசந்தி.
 

 
2) மீனாவைப் பாராட்டுங்கள்.
 

 
3) வேலையிலேயே முடிந்தவரை சேவை. பாராட்டுவோம் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வனை.
 

 
4) நீதிபதியின் மனிதாபிமானம்.
 

 
5) ஒரு பள்ளியின் கதை.
 

 
6) கடனுக்குச் செய்யாமல் பணியில் செம்மை.  தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்.
 


 
7) "எல்லாம் சரி இருபது ரூபாய்க்கு எப்படி கட்டுப்படியாகிறது என்றால் கடை வாடகை இல்லை சம்பள ஆள் இல்லை சமையல் கூலி இல்லை எல்லாம் நானும் என் வீட்டாம்மாளும்தான் அதனால கட்டுப்படியாகிறது விற்றது தானம் செய்தது எல்லாம் போக ஒரு நாளைக்கு ஐநுாறு ரூபாய் மிஞ்சும் இதுக்கு மேலே வயதான எனக்கும், என் சம்சாரத்திற்கும் என்ன வேணும்?" தஞ்சாவூர் கணேசன்.
 


8) திருமணம் எனது சேவைக்குத் தடையானால் திருமணமே வேண்டாம். பாராட்டப்பட வேண்டிய பெண்மணி.






9) 1மணிநேரத்தில் மின்சாரத்திலோ, சூரிய ஒளியிலோ சார்ஜ் செய்து கொண்டால் 400 கிலோமீட்டர் ஓட்டலாமாம்.  சபாஷ் மணிகண்டன். 

 


 

8.4.15

நாய்களின் துக்கம், மிரண்ட குழந்தை, டிமென்ஷியா - டிட் பிட்ஸ்.


1)  மெக்ஸிகோவில் வசித்த மார்கரிடா சுவாரெஸ் நாய்கள், பூனைகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். தினமும் அவரது வீட்டு வாசலில் தெரு நாய்களும் பூனைகளும் உணவுக்காகக் காத்துக்கொண்டிருந்தன. சமீப காலமாக உடல்நலமின்றி இருந்த மார்கரிடா இறந்து போனார். அவரது இறுதிச் சடங்கு வீட்டில் நடைபெற்றது. திடீரென்று மார்கரிடா உணவளித்த நாய்கள் எல்லாம் வரிசையாக வீட்டுக்குள் நுழைந்தன. 


தெரு நாய்கள் உள்ளே நுழைவதை அதிர்ச்சியோடு அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். மார்கரிடா வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு அருகில் சில நிமிடங்கள் அமைதியாக நின்றன. பிறகு சோகமாகப் படுத்துவிட்டன. உடலை எடுத்துச் சென்றபோது, நாய்கள் குதித்து எட்டிப் பார்த்துவிட்டு, அங்கிருந்து அமைதியாகக் கிளம்பின. “நாய்கள் அஞ்சலி செலுத்துவதை இதுவரை பார்த்ததில்லை. மிகவும் அதிசயமான நிகழ்வாக இருக்கிறது’’ என்கிறார்கள் இறுதிச் சடங்கு நடத்தியவர்கள். 

                       Image result for dogs mourn the death of its owner  Image result for dogs mourn the death of its owner


நாய்களுக்கு நுண்ணறிவு உண்டுதான்… ஆனால் இதெல்லாம் அதிசயமாதான் இருக்கு!

யானைகள் செலுத்திய மரியாதை நினைவுக்கு வருகிறதா?





2)  பிஞ்சு முகத்தில் பயம். அழுகை வெடிக்கும் நிலை. கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை.
 

இந்தக் காட்சியைப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான். 



 
சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டு பழகிய இக்குழந்தை, படம் பிடிக்க கேமராவை சரி செய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில் பலரையும் பரிதாபப்பட வைத்துள்ளது.



3)  டெமென்ஷியா



மனச்சிதைவு நோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்தில் முத்திரை பதித்து வரும் ஸ்கார்ஃப் (scarf), முதியவர்களுக்கு ஏற்படும் டெமென்ஷியாவை (ஞாபக மறதி நோய்) கையாள, இன்ஃபோசிஸ்  பவுண்டேஷன் நிதியுதவியுடன் புதிய மையத்தைச் சென்னையில் தொடங்கி இருக்கிறது.  மனநல மருத்துவர் ஸ்ரீதர் வைத்தீஸ்வரன் இது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.  அவரைச் சந்தித்தபோது...


அது என்ன டெமென்ஷியா?
 
                                                                           Image result for dementia images


எல்லோருக்கும் ஞாபக மறதி ஏற்படும்.  அது டெமென்ஷியா கிடையாது.  ஆனால் வார்த்தைகளை மறந்து விடுவதும், பேச்சு சரியாக வராததும், மற்றவர்கள் பேசும்போது புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவதும், உறவினர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போவதும், சமையலறைக்குள் நுழைவதாக நினைத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைவதும், பல வருடங்களாக ஒரே இடத்தில் வசித்தும் கூட வெளியில் சென்று வீடு திரும்பும்போது வழி தெரியாமல் தவிப்பதும், வயதானவர்களுக்கு ஏற்பட்டால் அது கவனிக்க வேண்டிய நிலையாகும்.  இது டெமென்ஷியவின் ஆரம்ப அறிகுறிகளாகக் கூட இருக்கலாம்.


டெமென்ஷியாவுக்கு முதுமைதான் காரணம்.  மறதிநோய் தொடர்பான ஒரு கணக்கெடுப்பின்படி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 சதவிகித ரிஸ்க், 75 க்கு மேல் 10 சதவிகித ரிஸ்க்,  85 வயதுக்கு மேல் 20% ரிஸ்க், 95 வயதுக்கு மேல் 40% ரிஸ்க் இருப்பதாகத் தெரிகிறது. 
 
                                             Image result for dementia images

ஆனால் எல்லா முதியவர்களையும் டெமென்ஷியாதாக்கும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.  இது வராமல் தடுப்பதற்கு நிறைய முறைகள் உள்ளன.  இதயத்தையும், மூளையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன செய்கிறீர்களோ, அவற்றை முறையாகக் கடைப்பிடித்தாலே போதும்.  எப்போதும் க்ரியேட்டிவ்வாக, சுறுசுறுப்பான முறையில் இயங்கினாலே இந்த நோய் வருவதைத் தவிர்க்கலாம்.

டெமென்ஷியாவை எப்படி அடையாளம் காண்பது?

கேட்ட கேள்வியையே திருப்பித் திருப்பிக் கேட்பார்கள்.  உணவு சாப்பிட்ட பிறகும் கூட உடனே வந்து மறுபடியும் சாப்பாடு போடச் சொல்வார்கள்.  இரவு பகல் தெரியாமை, நேரத்தை உணர முடியாத நிலை போன்ற அறிகுறிகள் அடிக்கடித் தென்பட்டால் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை.

சில வகையான டெமென்ஷியாக்கள் அல்லது டெமென்ஷியாவின் சாயலை ஒத்த நோய்கள் ஒருவருக்கு இருந்தால், அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து இந்த மையம் சிகிச்சை அளிக்கும்.  இந்த நோய்க்கான தீர்வு முறைகளையும், நோய் வந்தவர்களுக்கு உதவும் வகையில் செயல் முறைகளை வகுப்பதும் இங்கு மேற்கொள்ளப்படும்.  விட்டமின் பற்றாக்குறையாலும், தைராய்ட் பிரச்னை போன்ற ஹார்மோன் குறைபாடுகளினாலும் இது போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.  அந்த மாதிரியான தருங்கங்களில் மருந்து மாத்திரைகள் தரலாம்.  டெமென்ஷியாதான் என்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் வேகமாக மோசமான நிலைக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் மருத்துவ சிகிச்சைகளும் இங்கு உண்டு. 

இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நோய் வராமல் தடுக்கும் முறைகள், வந்து விட்டால் நோயாளிகளைப் பொறுமையுடன் எப்படிக் கையாளுவது ஆகியவற்றையும் இம்மையம் சொல்லித் தரும்  (சென்ற மாதம் கல்கியில் வெளிவந்தது - ஃபேஸ்புக்கில் ஏற்கெனவே பகிர்ந்தது.



படங்கள்   :   இணையம்

7.4.15

போராட்டங்கள்


யவனராணியும், கடல்புறாவையும் எழுதிய சாண்டில்யனின் பன்முகத் திறமையைச் சொல்லும் நூல்.  அவரது போராட்டங்களை அவரே சொல்லியிருக்கிறார் - நகைச்சுவை மிளிர.
 

Image result for yavanarani images                           Image result for yavanarani images
 
76 இல் குமுதத்தில் வந்த தொடர்.  அவ்வப்போது நிறைய எதிர்ப்புக் கடிதங்களும் வந்திருக்கின்றன என்று தெரிகிறது.  என் வீட்டில் பைண்டிங் கலெக்ஷனில் முன்பே பார்த்த நினைவு.  ஆயினும் இந்தப் பு.க.காயில் வாங்கி விட்டேன்!

கொஞ்சம் வளைத்து நீட்டி, சுருக்கமாகச் சொல்ல வேண்டிய விஷயங்களையும் சுற்றி வளைத்துச் சொல்கிறார் என்று தோன்றியது.  அதுதானே அவர் பாணி!
ஆனாலும்,

ஆங்கிலப் பத்திரிகைக்கு மட்டுமே மதிப்பு என்று இருந்த நாளில் சுதேசமித்திரன், ஹிந்துஸ்தான் போன்ற பத்திரிகைகளின் விற்பனையை உயர்த்த வெகுவாக உதவியது,

பத்திரிகையாளர்களுக்காகச் சங்கம் என்ற ஒன்றை நிறுவ முதன் முதலில் குரல் கொடுத்து, பாடுபட்டு, தான் மதிப்பு வைத்திருந்த பெரியவர்களுடனேயே கருத்து மோதல் ஏற்பட்டு அவர்கள் கருத்துகளையும் ஜெயித்து, சங்கம் அமைத்த வரலாறு,

பத்திரிகையாளர்களுக்காக முதன் முதலில் ரிட்சி ஸ்ட்ரீட்டில் ஒரு இடத்தை விலைக்கு வாங்கி, (நண்பர்களான மகாராஜபுரம் சந்தானம், நாகையா, சித்தூர் சுப்பிரமணியம் போன்ற பெரும் வித்வான்களை வைத்து கச்சேரிகள் நடத்தி) அதில் வசூலான பணத்தைக் கொண்டு கட்டிடம் கட்டியது,

தியாகையா, அம்மா போன்ற படங்களுக்கு வசனம் எழுதி அந்தப் படங்கள் பெரும் வெற்றி பெற்றது, ('என் வீடு' என்ற படத்தைப் பற்றியும் சொல்கிறார்.  பெரும் வெற்றி பெற்ற படம், நாகையா நடித்தது என்றும் சொல்கிறார்)

புத்தகத்தின் பெரும்பாலான பகுதிகள் 'மனிதன்' என்கிற அவ்வை டி கே ஷண்முகம் அவர்களின் நாடகம், பின்னர் அதே நாடகம் திரைப்படமாக வந்தபின்னும் அதன் கதைக் கருவை விமர்சனம் செய்து, அதனால் வந்த பதில்களுக்கு பதில் சொல்லி என்று அந்தச் சண்டை பற்றியே எழுதி, பாதி புத்தகம் அதிலேயே போய்விடுகிறது.

நிறைய இடங்களில் ராஜாஜியை வம்புக்கு இழுத்திருக்கிறார்! 

1935 களில் ஆங்கிலப் பத்திரிக்கை நிருபர்களின் ஆரம்பச் சம்பளம் 250 ரூபாயாம்.  தமிழ்ப் பத்திரிக்கை என்றால் தினமணியில் 60 ரூபாயாம்.

மகாத்மா காந்தியுடன் ஒரு பத்திரிகையாளராக ஒரு வாரம் தங்கியிருந்திருக்கிறார்.
 
தீரர் சத்தியமூர்த்தி - ராஜாஜி பனிப்போர் பற்றி லேசாக சொல்லி இருக்கிறார். இதற்கும் மறுப்பு வந்து பதில் அளிப்பதில் சில பாராக்கள்!  சத்தியமூர்த்தி இவர் எழுதிய முதல் அரசியல் நாவல் 'பலாத்காரம்' என்கிற புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறாராம்.  விற்பனை வரியை தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை ராஜாஜிக்குத்தானாம்! 
 
 
      Image result for sandilyan images                      Image result for sandilyan images
'உதயபானு'வும், 'இளையராணி'யும் அவர் எழுதிய முதல் சரித்திரக் கதைகள் என்று தெரிகிறது.  அவை சுதேசமித்திரன் ஞாயிறுமலரில் வெளியிட்டிருந்திருக்கிறார்!  (அவர்தான் அந்த இதழுக்குப் பொறுப்பு.  வார அனுபந்தம் என்று இருந்த பெயரை ஞாயிறு மலர் என்று மாற்றியதும் இவர்தானாம்)
 
இப்படிச் சுவாரஸ்யங்கள் இருந்தாலும், அவர் எழுதிய புகழ் பெற்ற சரித்திர நாவல்களான யவனராணி, கடல்புறா, ஜலதீபம் காலத்துக்கு எல்லாம் அவர் வருமுன்னரே போராட்டங்களை முடித்து விடுகிறார்.
 
 
 

 
 
 
போராட்டங்கள்
வானதி பதிப்பகம்,
174 பக்கங்கள்,
32 ரூபாய்.

6.4.15

'திங்க'க்கிழமை : எண்ணெய்ப் பழையது.


வெய்யில் காலம் வருகிறது.  வருகிறது என்ன, வந்து விட்டது.  வெய்யில் கொளுத்துகிறது, அனல் அடிக்கிறது.  வேலூர், திருச்சி மாவட்டங்களில் அதற்குள் 107 டிகிரி பதிவாகத் தொடங்கி விட்டது.  அக்னி நட்சத்திரம் எப்படி இருக்குமோ!  தேவை ஒரு (கோடை) மழை!

இப்போது பதிவு வெய்யில் பற்றியல்ல என்பதால் விஷயத்துக்கு வருகிறேன்.  'திங்கற' பதிவு ஆச்சே...

இது நிறைய பேர் வீட்டில் செய்வதுதான்.  மறந்திருக்கலாம்.  நினைவு படுத்தலாம் என்று இதைப் பதிவிடுகிறேன்!  இந்தக் காலத்தில் யார் இதை எல்லாம் செய்கிறார்கள்?!  யாராவது ஒரு வாசகராவது இந்த எண்ணெய்ப் பழையது அல்லது ஓமப் பழையது பற்றிக் கேள்விப் பட்டதில்லை என்று சொன்னால் அது இந்தப் பதிவின் வெற்றி.  (ஆமாம், பெரிய சமூகச் சீர்திருத்தப் பதிவு!!)

மறுபடியும் வெட்டிக் கதை நீளுகிறது.  விஷயத்துக்கு வருகிறேன்.
 


Image result for பழைய சாதம் images  Image result for ஓமம் images

வீட்டில் பழையது மிஞ்சும் அல்லவா?  கொஞ்சம் புளித்திருந்தால் நலம்.  இல்லாவிட்டாலும் செய்யலாம்.  உண்மையில் புளித்த பழைய சாதத்தில் பூஞ்சைக் காளான் படியுமே, அதை வீணாக்காமலும், பாதுகாப்பாகவும் சாப்பிட அந்தக் காலத்தில் அதில் சில நகாசு வேலைகள் செய்து சாப்பிட்டார்கள்.  கொஞ்சம் கடுகையும், ஓமத்தையும் நல்லெண்ணையில் தாளித்து, நீரைச் சுத்தமாகப் பிழிந்து வைத்திருக்கும் பழைய சாதத்தில் இட்டுப் பிசைவார்கள்.  இன்னும் இரண்டு கை நல்லெண்ணெய் கூட சேர்த்துப் பிசைவார்கள். உப்புப் போடவேண்டும் என்று சொல்லத் தேவையில்லை!   ஆனால் சிலபேர் உப்பே கூட சேர்க்க மாட்டார்கள். தேவையானால் கொஞ்சம் பெருங்காயமும் சேர்த்துத் தாளிக்கலாம்.  மிளகாய், கரி, கொத்.எல்லாம் போடத் தேவையில்லை. (அப்போது போட்டதில்லை.  இப்போது போட்டாலும் தப்பில்லை!  ஹிஹிஹி...)

சாதத்தைப் பிசைந்து வைத்துக் கொஞ்சம் ஊற விட்டு விட்டு அப்புறம் சாப்பிடக் கொடுப்பார்கள்.  ஓம வாசனையுடன், லேசாகப் புளித்த அந்தப் பழைய சாதம் தனிச்சுவைதான்!  தொட்டுக்கொள்ள சின்ன  வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நசுக்கிக் கொள்ளலாம்! இல்லை, பழங்குழம்பு இருந்தால் தொட்டுக் கொள்ளலாம்.  உப்பு மிளகாய் வறுத்துத் தொட்டுக் கொள்ளலாம்.
 
 

Image result for பழைய சாதம் images     Image result for பழைய சாதம் images


சில சமயம் இதில் தயிரோ, மோரோ கூடச் சேர்த்துப் பிசையலாம்.





படங்கள் :  இணையம்.