எங்கள்
பேப்பர்க்காரர் பேப்பரைத் தூக்கித் தூக்கித் தண்ணீரில் போட்டுக்
கொண்டிருந்ததாலும், சில வார இதழ்களை போடாமல் விட்டு விட்டு, காசு
வாங்கும்போது நான் போட்டேன் என்று சொன்னதாலும் நிறுத்தி விட்டேன்.
இரண்டு மாதங்களாகிறது. இவையெல்லாம் வாங்காதது பெரிய நஷ்டமாய்த் தெரியவில்லை. இணையத்தில் பார்த்து விட முடிகிறது என்பதும் ஒரு காரணம். சினிமா விகடன், கல்கி, துக்ளக் வாங்கி கொண்டிருந்தேன். தினமணி, இந்து வாங்கி கொண்டிருந்தேன். இப்போது தினசரிகளை இணையத்தில் பார்த்து விடுகிறேன். மற்ற வாராந்திரிகளையும் ஒரு முறை வாங்கி வெள்ளோட்டம் பார்க்கவேண்டும்!
இரண்டு மாதங்களாகிறது. இவையெல்லாம் வாங்காதது பெரிய நஷ்டமாய்த் தெரியவில்லை. இணையத்தில் பார்த்து விட முடிகிறது என்பதும் ஒரு காரணம். சினிமா விகடன், கல்கி, துக்ளக் வாங்கி கொண்டிருந்தேன். தினமணி, இந்து வாங்கி கொண்டிருந்தேன். இப்போது தினசரிகளை இணையத்தில் பார்த்து விடுகிறேன். மற்ற வாராந்திரிகளையும் ஒரு முறை வாங்கி வெள்ளோட்டம் பார்க்கவேண்டும்!
குமுதம் வாங்கியதற்கு வேறொரு காரணமும் இருந்தது. என் தங்கையின் இரண்டாவது பெண்ணின் புகைப்படம், சிறு பேட்டி அதில் வந்திருந்தது.
சினிமாவையே பெரிதும் நம்பியிருக்கின்றன இவை மூன்றுமே.. குமுதத்தில் சாரு நிவேதிதா எழுத்து கண்ணில் பட்டது. குங்குமத்தில் ஜெமோ!
குங்குமம், மற்றும் குமுதம்
அட்டையாவது உள்புறம் மடிந்து படிப்பதில் சிரமம் இல்லாமல் இருக்கிறது.
விகடன் அட்டை வெளிப்புறமாக மூன்றாகப் பிரிந்து கடுப்பேற்றுகிறது. கிழித்து எறிந்து விட்டுத்தான் படிக்க
வேண்டும்!
குமுதத்தில் இன்னும் அரசு பதில்கள் வருகிறது. அரசு வுக்கு இப்போது என்ன விளக்கமோ!
ஆனந்த விகடனில் இந்தப் பக்கங்களை நான் படிப்பதே இல்லை.
ஆனந்த விகடனை ஒரு அரசியல் கட்சிப் பிரமுகர் வாங்கி விட்டார் என்று ஒரு வதந்தி இருந்தது. மறுத்திருந்தார் என்று நினைக்கிறேன்.
பஞ்சு அருணாச்சலம் மறைந்து விட்டார். அவர் சொல்லிய விஷயங்கள் தொடராக இன்னும்...
குமுதத்தில் எம்ஜிஆர், சிவாஜி பற்றிய தொடர்கள், பகோபி
தொடர்கதை, சுரேஷ் கண்ணனின் உலக சினிமா, கேபிள் சங்கரின் கொத்து பரோட்டா,
பாலகுமாரனின் புதிய தொடர்.... இவற்றுடன் சரிதா நாயரின் சுயசரிதை வருகிறது.
இந்த "மெகா சைஸ்" குமுதம் சற்று சுவாரஸ்யம்தான்.
குங்குமம் இதழில் ராஜேஷ்குமார் தொடர்கதை, ஈரோடு கதிர் தொடர்...
மறுபடியும் சொல்கிறேன், மற்ற வாராந்திரிகளையும் ஒரு முறை வாங்கி வெள்ளோட்டம் பார்க்கவேண்டும்!
பொதுவாக இந்தப் புத்தகங்களுக்கு அவைகளின் பழைய கவர்ச்சி போய்விட்டது.