கொத்துமல்லித் தழைகளை என் அப்பா சும்மாவே வாயில் போட்டு மெல்லுவார்!
சாம்பார், ரசத்தில் போடும்போது சற்றுப் பொடியாக நறுக்கிக் கூடப் போடுவோம்!
ஆய்ந்த இலைகளை சுத்தமான நீரினில் நன்கு அலசி,
ஒரு செய்தித் தாளில் பரவலாக இட்டு, காய வைக்கவும். காய வைக்கவும் என்கிற வார்த்தையை விட 'உலர வைக்கவும்' என்கிற வார்த்தைப் பொருத்தமாக இருக்கும். எனவே சென்ற வரியை அழித்து விடவும்!
இப்போது தோசை வார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை, இட்லிதான் அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். அட, வேண்டாமப்பா, 'இன்று நான் மோர்சாதம்தான் சாப்பிடப் போகிறேன்' என்கிறீர்களா? அதற்கெல்லாம் இது நல்லபடி துணை நின்று உள்ளே அனுப்பி வைக்கும்!