சமீபத்தில் நியூயார்க் பரதேசி பதிவில் ஆலைக்கரும்பு, பொங்கல் விற்பனைக்கு கரும்பு பற்றி எழுதி இருந்தார். அவர் அந்த ஊரில் வளர்ந்தவர் என்பதால் ஆலைக்கரும்பு அவருக்கு கேட்காமலேயே கிடைத்து விட்டது. ஆலைக்கரும்புதான் சுவையாக இருக்கும் என்று எழுதி இருக்கிறார். இது கருப்பு நிறமாக இல்லாமல் சற்று வெளுத்தாற்போல இருக்கும்.