1973 லேயே வாணி ஜெயராம் தமிழில் ஒரு பாடல் பாடி விட்டாலும் (தாயும் சேயும்) படமும் பாடலும் வெளிவராமல் போனது. அந்தப் படத்துக்கு இசை எஸ் எம் சுப்பையா நாயுடு. பின்னர் 'வீட்டுக்கு வந்த மருமகள்' என்கிற படத்தில் டி எம் எஸ்ஸுடன் ' ஓரிடம்... உன்னிடம்' என்கிற பாடல்தான் தமிழில் முதல் பாடல் என்று சொல்லலாம். இசை சங்கர் கணேஷ்.