அலார்ம் இல்லை போல இருக்கு!
எறும்புகள் தூங்குவதே இல்லை.
இது சரியான போட்டி!
போலார்க் கரடிகள் இடது கைப் பழக்கம் கொண்டவை.
அதற்காக இடது கைப் பழக்கம் கொண்டவர்கள் எல்லாம் போலார்க் கரடி அல்ல!
வண்ணத்துப் பூச்சிகள் கால்களால்தான் சுவையை உணர்கின்றன.
வர்ணபேதம் இங்கு இல்லை போலேருக்கு..
நாய்வகைகளில் German shepherd நாய்கள்தான் மனிதர்களை அதிகம் கடிக்கின்றன.
மற்ற நாய்கள் குரைப்பதோட சரியா?
கொசுவால்தான் அதிகபட்ச மரணங்கள் உலகில் நிகழ்கின்றன.
சின்ன Size... பெரிய Result...!
பாம்பிற்கு அதன் விஷம் அதை ஒன்றும் செய்யாது!
அப்போ தன் வினை தன்னை சுடாதா?
பூனைகள் நூறு வகையாகவும் நாய்கள் பத்துவகையாகவும் கத்தும் தன்மை கொண்டவை.
மனிதர்கள் எத்தனை வகையாக ...?
உடலமைப்பு வகையால் பன்றியால் ஆகாயத்தைப் பார்க்க முடியாது.
என்ன நஷ்டம்?
யானைகளால் குதிக்க முடியாது.
அப்போ யானையால் கிரிக்கெட் விளையாட முடியாது!
ஹைட்ரா என்ற நீர் உயிரி சாவதில்லை. அதன் செல்களை அது அவ்வப்போது புதுப்பித்துக் கொள்கிறது.
மனிதன் இப்போது கண்டுபிடித்துள்ள 'நானோ டெக்னாலாஜி'
Shrimp எனப்படும் உயிரினத்துக்கு இதயம் அதன் தலையில் உள்ளது.
ரெண்டும் ஒண்ணா இருக்கறதால 'மனசுக்கு தெரியுது, புத்திக்கு தெரியலையே...; என்று வசனம் பேச முடியாது!
எலி மிக, மிக மிக, மிக மிக மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யக் கூடிய உயிரினம்.
சீக்கிரமே தனி நாடு கோரிக்கை எழலாம்..
உலகின் மிகப் பொதுவான பெயர் முஹம்மத்.
பொதுவான ஆசை..?
ஆல்பர்ட் ஈன்ஸ்டீன்க்கு கார் ஓட்டத் தெரியாது.
வீணாகப் பொழுதை ஓட்டவும்தான்...
குதிரை வீரன் சிலை தத்துவமும் : குதிரையின் முன் இரண்டு காலும் அந்தரத்தில் இருந்தால் அவன் போர்க்களத்தில் இறந்தான் எனவும், ஒருகால் நிலத்திலும், ஒருகால் அந்தரதிலும் இருந்தால் போரினால் ஏற்பட்ட காயத்தால் இறந்தான் எனவும், இரண்டு காலும் தரையில் இருந்தால் அந்த வீரன் சாதாரணமாக ஏதோ நோயுற்று இறந்தான் எனவும் கொள்ள வேண்டும்.
குதிரை உட்கார்ந்திருந்தால்...?
மா சே துங் தன் வாழ் நாளில் பல்லே தேய்ததில்லை!
---------------- --------- ------------- -------- (பின்னூட்டத்தில் பூர்த்தி செய்வீர்களா?)