வாழ்க்கையில் ஒரு வாய்ப்பை இழக்கும் போது கண்களில் கண்ணீரைத் தேக்கினால் அது அடுத்து உங்கள் முன்னால் வரும் வாய்ப்பை மறைத்து விடும்.
கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல ; தூங்க விடாமல் அடிப்பது.
தீவிரவாதியை மன்னிப்பது கடவுளாக இருக்கட்டும். கடவுளுடனான அவர்கள் சந்திப்பை தீர்மானிப்பது நாமாக இருப்போம்.
உங்கள் சிறிய தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் மலைகள் தடுக்கி யாரும் விழுவதில்லை. சிறு கற்கள் இடறிதான் விழுகிறோம்.
நயாகரா நீர்வீழ்ச்சியின் குறுக்கே இறுக்கமாகக் கட்டப் பட்ட கயிறில் நடப்பது திறமையாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம்.
எதிரிகளை வெறுக்காதீர்கள். சிலர் உங்களுக்கு அனுபவங்களைக் கொடுக்கிறார்கள். சிலர் பிரச்னைகளை சமாளிக்க கற்றுத் தருகிறார்கள்.
வாழ்க்கையின் மிக ஆழமான உணர்வுகள் மௌனத்தில் வெளிப் படுகின்றன. உங்களின் மிக்க அனுக்கமான நபரே அந்த மௌனத்தின் ஆழமான அர்த்தத்தை உணர்வார்கள்.
வாழ்க்கையில் என்னவாக இருக்கிறீர்கள் என்பதற்கு கோபமோ மனவருத்தமோ, பெருமையோ படாதீர்கள். சதுரங்க ஆட்டத்தில் வெட்டுப் பட்ட வீரனும் அரசனும் ஒரே பெட்டிக்குள்தான் போகிறார்கள்.
எல்லா சரியான விஷயங்களும் எப்போதும் சாத்தியமாவதில்லை. சாத்தியமாகும் எல்லா விஷயங்களும் சரியானவையும் அல்ல.
வாழ்க்கையின் கடின தருணங்களில் யாருக்கும் எந்த விளக்கமும் அளிக்காதீர்கள். ஏனென்றால் உங்களைத் தெரிந்தவர்களுக்கு அது அவசியமில்லை. உங்களைப் பிடிக்காதவர்கள் அதை நம்பப் போவதில்லை.