GOOD MESSAGES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
GOOD MESSAGES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24.10.09

என் 'உள்பெட்டி'யிலிருந்து......2


வாழ்க்கையில் ஒரு வாய்ப்பை இழக்கும் போது கண்களில் கண்ணீரைத் தேக்கினால் அது அடுத்து உங்கள் முன்னால் வரும் வாய்ப்பை மறைத்து விடும்.

கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல ; தூங்க விடாமல் அடிப்பது.


தீவிரவாதியை மன்னிப்பது கடவுளாக இருக்கட்டும். கடவுளுடனான அவர்கள் சந்திப்பை தீர்மானிப்பது நாமாக இருப்போம்.


   உங்கள் சிறிய தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் மலைகள் தடுக்கி யாரும் விழுவதில்லை. சிறு கற்கள் இடறிதான் விழுகிறோம்.


    நயாகரா நீர்வீழ்ச்சியின் குறுக்கே இறுக்கமாகக் கட்டப் பட்ட கயிறில் நடப்பது திறமையாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம்.


    எதிரிகளை வெறுக்காதீர்கள். சிலர் உங்களுக்கு அனுபவங்களைக் கொடுக்கிறார்கள். சிலர் பிரச்னைகளை சமாளிக்க கற்றுத் தருகிறார்கள்.


  வாழ்க்கையின் மிக ஆழமான உணர்வுகள் மௌனத்தில் வெளிப் படுகின்றன. உங்களின் மிக்க அனுக்கமான நபரே அந்த மௌனத்தின் ஆழமான அர்த்தத்தை உணர்வார்கள்.


    வாழ்க்கையில் என்னவாக இருக்கிறீர்கள் என்பதற்கு கோபமோ மனவருத்தமோ, பெருமையோ படாதீர்கள். சதுரங்க ஆட்டத்தில் வெட்டுப் பட்ட வீரனும் அரசனும் ஒரே பெட்டிக்குள்தான் போகிறார்கள்.


    எல்லா சரியான விஷயங்களும் எப்போதும் சாத்தியமாவதில்லை. சாத்தியமாகும் எல்லா விஷயங்களும் சரியானவையும் அல்ல.


  வாழ்க்கையின் கடின தருணங்களில் யாருக்கும் எந்த விளக்கமும் அளிக்காதீர்கள். ஏனென்றால் உங்களைத் தெரிந்தவர்களுக்கு அது அவசியமில்லை. உங்களைப் பிடிக்காதவர்கள் அதை நம்பப் போவதில்லை.

7.10.09

'உள்பெட்டி'யிலிருந்து.....

காரணத்தோடு கண்ணீர் வந்தால் அமைதியை Miss செய்கிறீர்கள். காரணமே இல்லாமல் கண்ணீர் வந்தால் 'யாரையோ' Miss செய்கிறீர்கள். கண்ணீர் அமைதியான மொழி.
உங்களை சிரிக்க செய்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களை அழ செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் கண்ணில் கண்ணீர் வரும்போது புன்னகைக்க வைப்பவர்களை நேசியுங்கள்.
சொர்க்கத்தில் அடிமையாக இருப்பதைவிட, நரகத்தில் தலைவனாக இருங்கள். உங்கள் பிறப்பு சாதாரணம் ஆக இருந்தாலும் உங்கள் இறப்பு வரலாறாக இருக்கட்டும்.
எதற்கும் கவலைப் படாதீர்கள். ஆனால் எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
வாழ இரு வழிகள் : உங்களால் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏற்க முடியாததை மாற்றி விடுங்கள்.
உணர்வுகள் இதயத்திலிருந்து வந்தாலும் ஆழமான உணர்வுகள் கண்ணீராக வெளிப் படுகின்றன. அவை தகுதி உள்ளவர்களுக்காக மட்டுமே வெளிப் படட்டும்.
யாரும் கடந்த காலத்துக்கு சென்று தவறான ஆரம்பத்தை மாற்ற முடியாது. ஆனால் எல்லோராலும் இப்போது தொடங்கி ஒரு நல்ல முடிவை ஏற்படுத்த முடியும்.
சில சமயங்களில் நமக்கு இப்போது யாரும் வேண்டாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் பல சமயம் நமக்கு தேவை இருக்கும்போது நமக்கு யாரும் இல்லாமல் போகலாம்.
வாழ்க்கை உங்களை எடுத்து செல்லும் வழியில் போவதை விட நீங்கள் நினைக்கும் பாதையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் வாழப் பிறந்தவர்கள். பிறந்ததால் வாழ வேண்டுமே என்று எண்ணாதீர்கள்.
மனிதர்களை நேசிக்கவும் பொருட்களை உபயோகிக்கவும் வேண்டிய இந்த உலகத்தில் நாம் பொருட்களை நேசித்து மனிதர்களை உபயோகப் படுத்துகிறோம்.