அத்தியாயம் 08: "யாரும் இல்லை"
(அய்யா / அம்மா பதிவாசிரியரே - ரொம்ப இழுக்காம சுருக்கமா ஒரு அத்தியாயம் எழுதுங்க!)
கார்த்திக்கின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று. வீட்டை, கார்த்திக் தன்னுடைய சாவிக்கொத்திலிருந்து சாவியை எடுத்துத் திறந்தார்.
சோபனா: "போன பதிவுல, செல்லுல உங்க மனைவியோட பேசினீங்களா?"
கார்த்திக்: "அட எப்படித் தெரியும்?"
சோபனா: "நீங்க பேசினது எல்லாமே ஒரு வார்த்தையில் பதில் சொன்னீங்க. ஆமாம், இல்லை, உம், ஊஹூம். இதெல்லாம்தான் அதிகமாக சொன்னீங்க. செல் ஃபோனை அவசரம் அவசரமாக - நான் எடுப்பதற்குள் எடுத்துப் பேசியதால், என் குரலை மறுமுனையில் இருப்பவர் கேட்டால் உங்களுக்குப் பிரச்னை ஆகிவிடும் என்று நீங்கள் பயந்தது போலத் தெரிந்தது. மேலும் ....."
கார்த்திக்: "மேலும் என்ன? சொல்லுங்க."
சோபனா: "அதில் H.A calling என்று வந்ததால், அநேகமாக நீங்க 'Head ache' என்று நினைப்பது உங்கள் மனைவியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்."
கார்த்திக் உண்மையிலேயே திகைத்துப் போனார். "நீங்க என் மனைவியை சந்திக்கும் சந்தர்ப்பம் எதுவும் வாய்த்துவிடக் கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளப் போகின்றேன். மேடம் எப்பிடி இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க! என் மனைவி பெயர் அர்ச்சனா. அவங்க ஹைதராபாத்ல என் பையன் கூட இருக்காங்க. நான் H.A என்பதற்கு விளக்கமாக ஹைதராபாத் அர்ச்சனா என்று கூட சொல்லலாம் இல்லியா?"
எ சா : "உம்ம்... சொல்லலாம். ஆனால் எந்த ஊரில் இருந்தாலும் உங்க மனைவி அர்ச்சனாதான். ஹைதராபாத் அர்ச்சனா என்று ஸ்பெஷலா ஏன் போட்டுக்கணும்?"
கார்த்திக்: "சார் நம்ப வேற சப்ஜெக்ட் பேசலாமா?"
எ சா : "சரி, சரி! நீங்க என்னை மன்னிக்கவேண்டும். நீங்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சமயத்தில், உங்க விலாசத்தை ரங்கன் சாரிடம் ஃபோனில் தெரிந்துகொண்டு , நான் முன்பே இங்கே வந்து, உங்கள் வீட்டுப் பக்கம் வந்த மனிதர்களை, என் செல் காமிராவால் படம் எடுத்துள்ளேன். அந்தப் படங்களை உங்களுக்கு இப்போ காட்டுகின்றேன், அவர்கள் எல்லோரையும் உங்களுக்குத் தெரியுமா என்றும், அதில் உங்கள் காரை வாங்கிய இருவர் போல யாராவது இருக்கின்றார்களா என்பதைக் கூறுங்கள்."
கார்த்திக், எ சா காட்டிய படங்களைப் பார்த்தார். அடையாளம் தெரிந்த சிறு வியாபாரிகள், கார் துடைப்பவர், காய்கறிக்காரர், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரை அடையாளம் காட்டினார். "இந்தப் படங்களில், கார் வாங்கிச் சென்ற இருவரில் யாரும் இல்லை." என்றார்.
(வர வர, 'கே யைத் தேடி' பதிவுக்கு, வோட்டும் விழமாட்டேங்குது, கமெண்ட்ஸ் எண்ணிக்கையும் குறைகிறது. எனவே இது, இனிமேல் ...
தொடருமா? )