faith லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
faith லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.9.11

உள் பெட்டியிலிருந்து ... 9 2011

                       

தத்துப்பித்துவம்...


    
சிறுவயதில்

பென்சில் உபயோகித்த நாம்

இப்போது பேனா

உபயோகிக்கிறோம்...

சிறுவயதில்(ன்)

தவறுகளை

அழிப்பது எளிது...
----------------------------------------
                 
நம்பிக் கெட்டவர் எவரையா? 

ஒருவனை நம்பினால் விளைவு எதுவாயினும் கடைசி வரை நம்புங்கள். கடைசியில் ஒன்று, உங்களுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைப்பான் அல்லது ஒரு நல்ல பாடம் கிடைக்கும்!

---------------------------------------

அறிவுடைமை
     
ஒரு பிசினஸ்மேன் தன்னுடைய மனைவிக்கு ஒரு விலையுயர்ந்த வைர அட்டிகையைப் பரிசாக அளித்தான். அவன் மனைவி அப்புறம் ஆறு மாதத்துக்கு அவனுடன் பேசவில்லை.

ஏன்?

அதுதானே ஒப்பந்தமே...!

------------------------------------------

நட்பின் கோபம்: அன்பின் முகவரி

இனி உன்னுடன் பேசவே மாட்டேன் என்று கோபமாகச் சொல்லிச் சென்ற நண்பன், அவ்வப்போது வந்து சொல்லி விட்டுப் போகிறான்: 

"இன்னும் கோபமாகத்தான் இருக்கிறேன்"

--------------------------------------

என்ன வித்தியாசம்? 

"உனக்கு நீச்சல் தெரியுமா?"

"தெரியாது"

"உன்னை விட நாய் தேவலாம். நாய் கூட நீந்தும்"
   
"சரி, உனக்கு நீச்சல் தெரியுமா?

"தெரியும்"

"உனக்கும் நாய்க்கும் என்ன வித்தியாசம்?"

-----------------------------------------------

ஐயோ பத்திகிச்சு ...!

காதலில் விழுந்த பெண், காதலனை தந்தைக்கு அறிமுகப் படுத்த எண்ணி, மூன்று பேரை அழைத்துச் சென்று தந்தையைச் சந்திக்க வைத்தாள். அவர்கள் சென்றதும் இதில் யாரை அவள் விரும்புகிறாள் என்று அவருக்குத் தெரியுமா என்று கேட்டாள். 


தந்தை சொன்னார்: 

"அந்த ரெண்டாவதா இருந்தானே அவன்தானே..."

ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்த பெண் கேட்டாள் "எப்படி கரெக்டாக் கண்டு பிடிச்சீங்க...?"

"சிம்பிள்... மூன்று பேர்ல அவனைப் பார்த்தாத்தான் எனக்கு அதிகமா பத்திகிட்டு வந்தது.."
    
-------------------------------------------

இதெல்லாம் சகஜமப்பா...

புதிதாய்த் திருமணம் ஆன பெண் தன் அம்மாவிடம் தொலைபேசியில்,

"அம்மா... இன்னிக்கி எனக்கும் அவருக்கும் பயங்கர சண்டை ஆயிடிச்சிம்மா..."

"கண்மணி... புதுசா கல்யாணம் ஆனவங்க நடுல சண்டை சகஜம்தான் கண்ணம்மா... கவலைப் படாதே..."

"அது சரி, புரியுதும்மா...  பாடியை என்ன செய்ய...?"
    
---------------------------------------------