29.4.25

சிறுகதை : நண்பேன்டா... - ஸ்ரீராம்

 



உளியால் செதுக்கிய(து போன்ற) சிறு சிறு பள்ளங்கள்.  அவற்றில் ஒவ்வொரு காலாக வைத்து மேலே இருக்கும் உளிப்பள்ளத்தில் கையை வைத்து செங்குத்தாக ஏறிக் கொண்டிருந்தார்கள். 

கீழே சற்று அகலமாகவும் மேல் நோக்கிப் போகப்போக குறுகும் பகுதியும் கொண்ட உயரமான அந்தப் பாறை​மலை மீதுதான் ஏறிக் கொண்டிருந்தார்கள் சுரேஷும், மகேஷும்.

கீழே நின்றிருந்த நண்பர்கள் " டேய்..   வேணாண்டா...  உயரம்டா...   வந்துடுங்கடா...  இறங்கிடுங்க" என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஏற்கெனவே மேலே ஏறியிருந்த சூசையும், சலீமும் "அவ்வளவுதான்டா...  இன்னும் கொஞ்ச தூரம்தான்...  வாங்க வாங்க... "  என்று உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

​கொஞ்சம் கீழே பார்த்த சுரேஷுக்கு தலை சுற்றியது.  'அம்மாடி...   எவ்வளவு உயரம்...  சப்போர்ட்டே இல்லாமல் ஏறிக்கொண்டிருக்கிறோம்....' 

கைப்பிடி நழுவுவது போலிருந்தது.  கால்கள் பஞ்சு போல ஆனதாக உணர்ந்தான்..  முதுகில் கீழ்த்தண்டு வடத்திலிருந்து மேல் தண்டுவடம் வரை சுர்ரென்று ஓடியது.  உடலிலிருந்து பலமெல்லாம் வடிந்துவிட்டது போல தோன்றி, மனதிலும் பலவீனம் புகப் பார்த்தது.

:"கீழே பார்க்காதடா... முட்டாள்..  மேலே மட்டும் பார்.  கையை கவனி..  ஸ்ட்ராங்கா பிடி...  கால் மேல கவனம் வை"  மேலிருந்து குரல் வந்ததது.  

மகேஷ், "கமான் சுரேஷ்..  கீழே பார்க்காத...   பீ கான்சன்ட்ரேட்டட் ...  பீ ஸ்ட்ராங்... "என்றான்.

கீழே இறங்குவதாக இருந்தாலும், மேலே ஏறுவதாக இருந்தாலும் கிட்டத்தட்ட சம தூரம்தான்.

"டேய் வந்துடுங்கடா...   எங்களுக்கு பயமாயிருக்கு..  உங்களால முடியாது"  கீழேயிருந்து குமார் குரல் சத்தமாகக் கேட்டது.  கூடவே ரம்யா  குரலும் கீச்சுக்கீச்சென்று கேட்டது.

"கமான்...  கமான் சுரேஷ்..  கமான் மகேஷ்...   இன்னும் கொஞ்ச தூரம்தான்.  உங்களால் முடியும்"  மேலேயிருந்து சலீமின் குரல்.

கடைசி பகுதிகளில் பாறைப்பகுதியில்  குறுகிய கால் வைக்கும் இடங்களுடன் ஏறுவது ரொம்பவே சிரமமாக இருந்தது.   

(JKC ஸார்...   சிரமப்பட்டு ஓரளவுக்கு பொருத்தமாக ஒரு படம் சேர்த்திருக்கிறேன்.  மற்ற மூன்று பேர் எங்கே,   கதையில் வருவது போல வளைந்து இல்லை என்றெல்லாம் சொல்ல தயாராக வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!)

விடாப்பிடியாக இருவரும் மேலே ஏறி ஒரு வழியாக உச்சியை அடைந்து விட்டார்கள்.

மிகவும் குறுகலாக ஒரு ஆள் நடக்கும் அளவுதான் அகலம் இருந்தது மேலே.  சலீமும், சூசையும் கைகொடுத்தார்கள்.  சுரேஷ், மகேஷ் இருவருக்கும் பெருமையாக இருந்தது.  

கீழிருந்து நண்பர்கள் கத்துவது தெளிவாகக் கேட்காமல் ஏதோ காற்றில் வரும் இரைச்சல் போல கேட்டது.

அலைபேசியை எடுத்து இயக்கினான்.

"சிக்னல் இருக்காது, கிடைக்காது.  டவரே கிடைக்கலை...   அப்பவே பிடிச்சு ட்ரை பண்றோம்.  சுத்தமாக டவர் கிடைக்கலை"  - சலீம்..  

சுரேஷ் சொன்னான்"  தேங்க்ஸ்டா...  சூசை, சலீம் நீங்கள் சொன்னதைவிட கீழே இருப்பவர்கள் டிஸ்கரேஜ் செய்ததை வைத்துதான் 'எங்களால முடியாததா' என்று மேலே ஏறினோம்"

அவர்கள் இருவரும் பேசவில்லை.  ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். 

கொஞ்சம் இங்கும் அங்கும் நகர்ந்து சுற்றுப்புறத்தையும், உயரத்தையும் ரசித்துக் கொண்டார்கள்.  சும்மா நின்றிருந்த சூசையைப்  பார்த்து சுரேஷ் கேட்டான்..

"என்னடா..  ஏற்கெனவே என்ஜாய் பண்ணிட்டீங்களா? கம்முனு நிக்கறீங்க?"

"நகர்றதுக்கே பயப்படறாங்கடா ரெண்டு பேரும்.."  மகேஷ் சிரித்தான்.

சுரேஷ் அலைபேசியை எடுத்து சில போட்டோக்கள் எடுத்தான்.  மகேஷும் எடுத்தான்.  ஜாக்கிரதையாக கால்வைத்து எச்சரிக்கையாக நகர்ந்தார்கள். ஒருவரை ஒருவர் எடுத்துக் கொண்டார்கள்.  செல்பி எடுக்க வந்தார்கள்.

"டேய்..  காலை பார்த்து வைங்கடா.."  மகேஷ்.

ஏனோ சலீமும் சூசையும் செல்பியில் ஆர்வமில்லாமல் இருந்ததை கவனித்தான் சுரேஷ்.

"சரி..  இறங்கலாமாடா?"

மகேஷ் ஆயத்தமானான்.  மெதுவாக நகர்ந்து விளிம்புக்கு சென்று எட்டிப்பார்த்தான்.  கீழே நண்பர்கள் புள்ளிகளாகத் தெரிந்தார்கள்.  சற்றே பயமாக இருந்தது.

அதைவிட,

கீழே இறங்க, இவர்கள் மேலே ஏறும்போது உதவிய அந்த துளைகள் கண்ணில் படவில்லை.  எது துளை, எது சரிவு என்று புரியவில்லை.

திரும்பி மற்றவர்களை பார்த்தான். 

சொன்னான்.

சுரேஷ் சொன்னான்.  "அவங்களுக்கும் அதே பிரச்னைதானாம்..  அதனால்தான் துணைக்கு நம்மளையும் மேலே ஏற்றி இருக்கிறார்கள்.

99 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கமும் நன்றியும்.

      நீக்கு
  2. இந்தக் கதை ஒரு முடிவில்லாமல் முடிந்த கதையோ? ஆனாலும் வித்தியாசமான களம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  யூகங்களுக்குட்பட்டது!  அதுவும் ஒரு ஸ்டைல்தானே!

      நீக்கு
  3. இந்த மாதிரி மலை (பாறைக் குன்று) ஏற்றப் படங்களைப் பார்த்திருக்கிறேன். ஏறும்போது விழுந்து மரணம் ஏற்படுவதாக அமைத்திருப்பார்கள்.

    இதில் என்ன விளையாட்டு, மகிழ்ச்சி இருக்கு என்று நினைத்துக்கொள்வேன்.

    இமயமலை போன்ற பனிபடர்ந்த மலையில் ஏறுபவர்களைப் பார்க்கும்போது எனக்கு அப்படித் தோன்றுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கும்போது மலை ஏறும் காணொளி ஒன்று பார்த்தேன்.  அதில்தான் நான் சொல்லி இருப்பது போல உளியால் செதுக்கிய ஓட்டைகளில் கால் வைத்து ஏறுவது போல காட்சி பார்த்தேன்.  ட்ரோன் வைத்து காணொளி எடுத்தது போல இருந்தது.  உண்மையா AI உபாயமா, தெரியாது.  

      வலைத்தள நண்பர் ஆர் வி சரவணன் பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார்.  அதையும் உபயோகப் படுத்திக் கொண்டு இதை எழுதினேன்!  

      நீக்கு
  4. திருவண்ணாமலையில் பதின்ம வயதில், மாலை ஐந்து மணிக்கு, மலைச் சரிவில் கிடுகிடுவென ரொம்ப உயரம் ஏறிவிட்டேன். ஆளரவமற்ற மலைச் சரிவு. மாலை மயங்கப் போகிறது. இறங்க முயற்சித்தால் ரொம்ப கடினமாக இருந்தது. தெய்வாதீனமாக கஷ்டப்பட்டு வேர்த்து விறுவிறுத்து இறங்கிவிட்டேன்.

    இனி ரிஸ்க் எடுக்கக்கூடாது என நினைத்துக்கொண்டேன்.

    கடல் ஓரத்தில் குளிக்கும்போதும் இப்படியான நிலைமை நேர்ந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஏறியிருக்கும் ஒரே உயரம்  செயின்ட் தாமஸ் மலைதான்! ஆனால் சில திடுக்கிடும் கனவுகள் இந்த ஜானரில் கண்டதுண்டு!

      நீக்கு
    2. 25, 30 வருடங்களுக்கு முன்பு, எங்கள் மைத்துனர் (கணவரின் அண்ணா) திருவண்ணாமலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் வீட்டுக்கு எங்கள் குழந்தைகளின் பள்ளி விடுமுறையை ஒட்டி சென்றிருந்தோம். அப்போது திருவண்ணாமலையில் ரமண மகரிஷி ஆஸிரமத்திற்கு செல்ல மலை மீது ஏறிச் சென்று தரிசித்து வந்த அனுபவம் மலரும் நினைவாக இக்கதையை ப் படித்ததும் நினைவுக்கு வந்தது. அப்போது இளமை பருவம். கால்கள் வழுக்காமல் எங்கள் குழந்தைகளையும் சில இடங்களில் சுமந்தபடி சென்றேன்.சிறு வயதென்றால் பயமும், ஒரு பதட்டமும் இயல்பாக அருகில் எட்டிக்கூட பார்க்காது. அப்போது முதல் தடவையாக சென்றதுதான் திருவண்ணாமலை. இன்னுமும் மறுதடவை சென்று வர இறைவன் அழைக்கவில்லை. நாங்களும் கோவிலுக்கு செல்ல நினைத்துக் கொண்டேதான் உள்ளோம்.

      இப்போது கதையை படிக்கையில் இந்த மலை ஏறுவது என்பது மனதுக்குள் ஒரு பதட்டம் தானாகவே உருவாகிறது நம் வயதின் காரணந்தான் என தோன்றுகிறது. ஆனாலும், இப்போதும இந்த மாதிரியான வேறு சில ரிஸ்க்கான பயணங்கள் குழந்தைகளுடன் மேற் கொள்ளும் போது வந்து விடுகிறது. போய் விட்டு வந்த பின்" நாமா" என்ற பிரமிப்பு வருகிறது.

      நீக்கு
    3. '' அப்போது முதல் தடவையாக சென்றதுதான் திருவண்ணாமலை. இன்னுமும் மறுதடவை சென்று வர இறைவன் அழைக்கவில்லை. ''

      விடுங்க... என்னை இன்னும் முதல் தடவையே அழைக்கலை. நான் இன்னும் திருவண்ணாமலை பார்த்ததே இல்லை!

      நீக்கு
    4. உங்களைப் போன்றவர்களுக்குத்தான் நினைக்க முக்தி என்ற சொலவடை வந்திருக்கிறது. நான் சில முறை சென்றிருக்கிறேன் சில வாரங்கள் இருந்திருக்கிறேன்

      நீக்கு
    5. ஆஆஆ நெ தமிழன் ஹனிமூன் ட்ரிப் முடிச்சு திரும்பிட்டார்ர் :).. நீங்க வடக்கே கால் வச்சதும்தான் கலவரமே ஆரம்பிச்சுட்டுது பாருங்கோ:)))

      நீக்கு
    6. கடற்கரை என்றதும்தான் சொல்கிறேன், எங்கள் ஒன்றுவிட்ட அக்கா முறையானவ, ஒஸ்ரேலியாவில் இருக்கினம், இப்போ ஒருகிழமையாகுது, அவவின் மகன் நண்பர்களோடு கடற்கரையில் போனபோது பெரிய அலைவந்து, எல்லோரையும் தூக்கிப்போய் விட்டது, 24 வயசு, இவரின் உடல் இன்னும் கிடைக்கவில்லை:(.
      நண்பர்கள் வடிவில் வந்து அழைச்சுப்போவதும் விதிதான்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    தங்களின் இன்றைய சிறுகதையும், நன்றாக உள்ளது. திக், திக் தருணங்களாக கதை படிக்கையில் மனதில் திகில் குடி கொள்கிறது .

    /சூசை, சலீம் நீங்கள் சொன்னதைவிட கீழே இருப்பவர்கள் டிஸ்கரேஜ் செய்ததை வைத்துதான் 'எங்களால முடியாததா' என்று மேலே ஏறினோம்"/

    தன்னம்பிக்கையான வரிகள். ஆனால், மேலேயேறியவர்களின் நிலைமை புரிந்த பின் இந்த தன்னம்பிக்கை தொடர்ந்தால் நல்லது. இப்போதய கால இளைஞர்களின் விபரீதமான வீர தீர விளையாட்டை ஒரு சிறு கதையாக முயற்சித்திருப்பது அருமை. சிறுகதை மன்னன் என தங்களுக்கு பட்டம் தரலாம். பாராட்டுக்கள்.

    கதைக்கு தகுந்தாற் போல படங்கள் நன்றாக உள்ளது. கதையின் தலைப்பும் நன்றாக உள்ளது. முடிவில் இவர்களை மீட்க மீட்பு குழுவினர் மேலேறி வர கீழேயுள்ள நண்பர்கள் உதவ வேண்டுமென மனம் பிரார்த்தித்துக் கொள்கிறது. தொடர்ச்சியாக அப்படி ஒரு கதையையும் எழுதி விடுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சிறுகதை மன்னன் என தங்களுக்கு பட்டம் தரலாம். //

      ஹா.. .ஹா. ஹா...

      கதையை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்திருப்பதற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  6. ஒரு கதை வெறும் டெக்ஸ்டாக மாத்திரம் இல்லாமல் ஓரிரு படம் இருப்பது பதிவுக்கு அழகு.

    ஓவியரைக் கொண்டு படம் வரையச் சொல்லைம் பத்திரிகைகளைப்போல, இதனை போஸ்ட்மார்ட்டம் செய்து, பெண்ணின் கண், கதையில் உள்ளதுபோல இல்லை, நீள ஜாக்கெட் என்றெல்லாம் விமர்சிப்பது தேவையில்லாத்து. மலை ஏறும் படத்தைக் குறைசொல்ல வேண்டியதில்லை. படம் சேர்ப்பதே பெரிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  அது ஒரு சுவைதான்.  உங்களையே கூட நான் முன்பு ஒருமுறை படம் வரைந்து தரமுடியுமா என்று கேட்டிருந்தேன், நினைவிருக்கிறதா?  ஏதாவது படம் இருந்தால் அதைப் பார்த்து அப்படியே வரைவேன்.  நானாக வரைவதில்லை என்று சொல்லி இருந்தீர்கள்!

      நீக்கு
  7. இந்தக் கதை சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நினைவுபடுத்தியது. சிரபுஞ்சியில் சுண்ணாம்புப் பாறை குகை உள்ளது. நுழைவுக்கட்டணம் ஒருவருக்கு ஐம்பது ரூ. உள்ளே நுழைய, நடக்க ரொம்பக் கஷ்டம். இதில் அவ்வப்போது நின்னு மனைவியின் கையை வேறு பிடித்து இறக்கணும். ஐந்து நிமிடத்தில், வேண்டாம் இந்த ரிஸ்க், திரும்பிடலாம் என நினைத்தபோது, குழுவில் முன்னால் போய்க்கொண்டிருந்தவர், 80 சதம் வந்தாச்சு இன்னும் கொஞ்ச தூரம்தான் என்று சொல்லிச் சொல்லி மிகுதி 80 சதம் செல்ல வைத்துவிட்டார். கஷ்டம், ஏண்டா அவரை நம்பினோம் என்றெல்லாம் தோன்றினாலும் கடைசியில் கைகையின் வெளிச்சம் வந்துவிட்டது, வெளியேறும் பகுதி அருகில்தான் என்று தோன்றியதும் மகிழ்ச்சி. இருந்தாலும் கொஞ்சம் சகதி மண் பாறையில் உட்கார்ந்து உட்கார்ந்து குகைக்குள் பயணித்தது தனி அனுபவம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்து வைத்தவர்தான் நெல்லை நீங்கள்.  தைரியமாக உள்ளே சென்று வந்து விட்டீர்கள்.  நிறைய இடங்கள் சென்று வருகிறீர்கள்.  புதிய அனுபவங்களை அடைகிறீர்கள்.  உங்கள் சுவாரஸ்யம் வாழ்க.  உங்கள் முன்னெடுப்பு என்னிடம் இல்லை!

      நீக்கு
    2. ஆஹா நெல்லை சூப்பர்!!!!

      எனக்கும் இப்படியான பிரயாணங்கள் ரொம்பப் பிடிக்கும். ஆனால் வாய்ப்புதான் இல்லை.

      கீதா

      நீக்கு
  8. ஒரு திறமையான கதாசிரியர் உருவாகிக்கொண்டிருக்கிறார். சிறப்பாக சொல்லப்பட்டிருக்கும் கதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானு அக்கா.

      நீக்கு
    2. பானுக்கா, ஸ்ரீராம் முன்னரே எழுதியிருக்கிறார். இடையில் தான் ரொம்ப எழுதலை. கே வா போ தொடங்கினாலும் கூட இடையில் ஸ்ரீராம் கதைகள் எழுதியிருக்கிறாரே!

      நாம கே வா போ க்கு அனுப்பாததும் கூட ஒரு விதத்தில் நல்லதுதான். பாருங்க, ஸ்ரீராம் இப்ப ஆக்டிவ்!!! கதைகள் செதுக்குவதில்.

      கீதா

      நீக்கு
    3. அனுப்பாம இருந்துட்டு அதுக்கு இப்படி ஒரு சமாளிப்பா.... ம்ம்ம்ம்!

      நீக்கு
  9. ஸ்ரீராம் கதை நல்லாருக்கு. முடிவு பல யூகங்களுக்கு விடுகிறது. இது போன்ற முடிவுகள் எனக்குப் பிடித்தமான ஒன்று. முடிவை அப்படி முடித்தது நல்லாருக்கு.

    சாதாரணமாக இப்படியான கதைகளில் முடிவு பெரும்பாலும் நெகட்டிவாக இருக்கும்.

    இப்ப கீழ இறங்குவது எப்படினு யோசிச்சிட்டிருப்பாங்க. அது இன்னும் பெரிய சவால்.

    இப்ப கீழ உள்ளவங்க, ஏறினவங்களை கீழே இறக்க என்ன செய்யப் போறாங்க....இதுவும் பல யூகங்களுக்கு வழி வகுக்கும் வகையில்.

    மேலே ஏறினவங்க ஏன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்? மௌனமாக இருக்கிறார்கள்? இதுவும் யூகங்களுக்கு வழி வகுக்கும் ஒன்று.. திகில் இல்லை என்றால் பயம். அல்லது அவங்க ஏறும் போது எதையேனும் பார்த்திருக்கிறார்களா? அதனால் இறங்க பயமா? இறந்க வேறு வழி இருக்கான்னு யோசனையா? இப்படி பயல யூகங்களுக்கு வழி வகுக்கும் கதை அடுத்த கதை பிறக்க உதவும் வகையில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா.  கதையை எங்கு நிறுத்துவது என்பது தெரிந்து விட்டால் போதும்.  நன்றி.

      நீக்கு
  10. சலீமும் சூசையும் உற்சாகப் படுத்தியவர்கள் இவங்க மேலே போனதும் ஏன் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்? துணைக்கு ஆள் சேர்த்தாச்சு ஆனா இனி எப்படிக் கீழே போவது என்ற பயமோ?!!!

    கீழே உள்ளவங்களைத் தொடர்பு கொள்ள முடியாது நோ நெட். அப்ப கீழ உள்ளவங்கதான் இனி நடவடிக்கை எடுக்க வேண்டுமோ? அவர்களுக்கும் குழப்பமாக இருக்கும்.

    இப்படியான மலைகளில் ஏறுவதை விட இறங்குவது தான் மிகப் பெரிய சவால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹியூஹிஹி...  வுட்டா நீங்களே ஹெலில போயி காப்பாத்திக்கிட்டு வந்துடுவீங்க போல!

      நீக்கு
  11. எனக்குப் பர்வதமலை ஏறிய அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன. பதிவும் போட்டிருந்தேன். பர்வதமலை ஏற்றத்தில் முதல் 1/2 - 3/4 மணி நேரம் ஓகே. அதன் பின் பாறைகளும் இடுக்குகளும் சறுக்கிவிடும் துகள்களும். அப்புறம் ஒரு பாறை நிஜமாகவே வழுக்கும் அதுவும் ஒடுங்கிய பகுதி அங்கு கம்பி எல்லாம் இப்ப போட்டிருக்காங்க. அப்பகுதி ஏறுவதும் கீழே பார்க்காம ஏறணும். அப்படி ஏறும் போதும் கூட எனக்கு என்னவோ பயம் தோன்றவில்லை. ஏறிவிடலாம் இதென்ன பிரச்சனை என்று ...

    இறங்கும் போது நல்ல சவால். பல இடங்களில் உட்கார்ந்து உட்கார்ந்து இறங்க வேண்டியதாக இருந்தது.

    நம் கால்களின் பலத்தை பரிசோதிக்கும் மலையேற்றம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ஹும்..  எனக்கு இந்த மாதிரியான அனுபவங்கள் எல்லாம் இல்லை.  சரியான கிணற்றுத்தவளை நான்!  

      அடடா..  நெல்லைக்கு சொன்னது தாமஸ் மலைன்னு மட்டும் சொன்னேன்.  திருப்பதி மலை ஏறியிருக்கேனே 

      நீக்கு
    2. ஸ்ரீராம் மேலேயும் பார்த்தேன் உங்க கருத்துகளை. ரீல்ஸ் இக்கதை எழுத உதவியது பற்றியும். இப்படி ஏறுகிறவர்கள் இருக்காங்க. ஒரு கொக்கி போன்ற நீளமான கம்பி எல்லாம் கூட வைத்து தூக்கு வீசிப் போட்டுச்சிக்க வைத்து அதைப் பிடித்துக் கொண்டு கூட செங்குத்தான பாறைகளில் ஏறுவாங்க ஆனா பயிற்சி வேண்டும்.

      கிணற்றுத் தவளை // இது நீங்க அனுபவங்கள் அடிப்படையில் சொல்லியிருக்கீங்க, ஸ்ரீராம்.
      ஆனால், வெளிய போகாமலேயே, அந்த அனுபவங்கள் இல்லாமலும் கூடக் கதை எழுத முடியும் ஸ்ரீராம்.

      எனக்கு அலுவலக அனுபங்கள் சுத்தமாகக் கிடையாது. ஆனால் ஒரு வேளை அதை ஒட்டி நான் எழுத நினைத்தால் சேகரித்து எழுத முடியும், இப்ப நீங்க ஒரு ரீல் பார்த்து எழுதிருக்கீங்களே நல்லாதானே எழுதியிருக்கீங்க.

      பாருங்க, கண் பார்வைத் திறன் இல்லாதவங்க (உம் திருப்பதி மகேஷ்) கூடசுற்றுலா போய் அனுபவங்களை எழுதுவதைப் பார்க்கறப்ப, நம் மனக்கண் தான் மிக முக்கியம் என்பது என் கட்சி!!!

      ஸ்ரீராம், இன்னொன்று. கிணற்றுத் தவளை என்பதில் பெரிய தத்துவமே இருக்கு. எனவே அதை சும்மா யாராய்யாச்சும் ஒன்னும் தெரியலைன்னு திட்டுவதற்கு இதைப் பயன்படுத்தினால் எனக்கு வருத்தமா இருக்கும்.

      ஒரு சின்ன இடத்துக்குள்ளும் வாழ்கிறதே....மனித வாழ்க்கைக்குப் பொருந்தும் நல்ல தத்துவம் இதில் இருக்கு

      கீதா

      நீக்கு
    3. ஹாஹாஹா சிரித்துவிட்டேன் ஸ்ரீராம், திருப்பதி மலை//

      ஆனா அதுவும் கடினம் தான் முட்டி நல்லாருக்கணும் படிகள் எற. படிகள் எல்லாம் அப்புறம் வந்தவை முதலில் படிகள் கிடையாதே. அது இன்னும் த்ரில்லிங்காக இருந்திருக்கும். இப்பவும் அப்படியான பாதை இருக்கோ?

      கீதா

      நீக்கு
    4. நல்ல ஊக்கம்தான்.  நானும் பல விஷயங்கள் அப்படி செய்து கொண்டுதானே இருக்கிறேன்!

      நீக்கு
  12. இங்கு மைசூர் செல்லும் வழியில் பெங்களூருக்கும் மைசூருக்க்கும் இடையில் மலையேற்றப் பகுதிகள் இருக்கின்றன. அதில் ஒன்றில் பல சமயங்களில் ஏறியவர்கள் நடுவில் தொலைந்து போன சம்பவங்களும் உண்டு. அவர்களுக்கு என்ன ஆச்சு என்று கூடத் தெரியாமல். தொலைந்து போய், போனவர்களின் நண்பர்களோ அலல்து உறவினர்களோ தொடர்பு கொள்ள (அவங்களுக்கு இவங்க ஏறினது தெரிந்தால்) வனத்துறை வந்து கஷ்டப்பட்டுக் காப்பாற்றிய சம்பவங்களும் உண்டு. ட்ராக் பண்ண முடியாமல்....பாறைகள் என்றாலும் இடையில் வனப்பகுதி இருப்பதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .ஓ...  நான் அறியாத செய்தி.   இங்கே பக்கத்திலேயே இப்படி எல்லாம் இடமிருக்கா?  (அடுத்த வாட்டி அந்தப் பக்கம் போகணும்னா வேற பக்கம் சுத்திகிட்டு போகணும்.  நாம காணாமப் போனா நம்மள யாரும் தேடமாட்டாங்க பாருங்க...)

      நீக்கு
    2. வியாழன் வெள்ளி அன்று தேடுவோம். அதனால காணாமல் போனா புதன் ராத்திரி காணாமல் போங்க

      நீக்கு
    3. ஆ.... ஆக, காணாமல் போகணும்ங்கறீங்க!

      நீக்கு
    4. இனி செவ்வாய்தோறும் தேடுவோம் என்று சகோதரர் நெல்லைத் தமிழர் சொல்வார் என எதிர் பார்த்தேன். ஏழு நாட்கள் கொண்ட வார்த்தில் அதிக பட்சமாக மூன்று நாட்கள் எனும் போது நீங்கள் மெனக்கெட்டு காணாமல் போவது கொஞ்சம் கஸ்டந்தான்.ஸ்ரீ ராம் சகோதரரே.

      நீக்கு
  13. ​கதை மஞ்சும்மேல் பாய்ஸ் உல்டா? சஸ்பென்ஸ் நல்லது என்றாலும் இந்த மாதிரி கூடையில் இருக்கும் நண்டுகளை போல் கூப்பிட்டு சிக்க வைப்பது பிடிக்க வில்லை.
    செவ்வாய்க்கு இனியும் யாரும் உதவ முன் வரவில்லையா?
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைக்கான காரணம் மேலே நெல்லைக்கான பதிலில் சொல்லி இருக்கேன் பாருங்க JKC சார்...   

      நானா சிக்க வச்சேன்?  அவங்களா சிக்கிக்கிட்டாங்க..  இளவயசு...

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. கதையை படிக்கும்போது 'மேலே' இருந்து அழைத்தவர்கள் ஒருவேளை ஆவி ரூபர்களோ என்ற பயத்துடன் படித்தேன். இவர்கள் ஏறி மேலே வந்தவுடன் அவர்கள் மிதந்தபடி கீழே சென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னது போலவும் கதையை கொண்டு போகலாம்.திகில் கதை கிடைக்கும்.

      //அவர்கள் இருவரும் பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். //

      எனக்கும் அந்த நினைப்பு வந்தது, ஆனால் கீழே உள்ள வரிகளை படித்ததும் அப்படி இல்லை என்று புரிந்து விட்டது.



      //கீழே இறங்க, இவர்கள் மேலே ஏறும்போது உதவிய அந்த துளைகள் கண்ணில் படவில்லை. எது துளை, எது சரிவு என்று புரியவில்லை.

      திரும்பி மற்றவர்களை பார்த்தான்.

      சொன்னான்.

      சுரேஷ் சொன்னான். "அவங்களுக்கும் அதே பிரச்னைதானாம்.. அதனால்தான் துணைக்கு நம்மளையும் மேலே ஏற்றி இருக்கிறார்கள்.//

      நீக்கு
    2. // ஒருவேளை ஆவி ரூபர்களோ என்ற பயத்துடன் படித்தேன். இவர்கள் ஏறி மேலே வந்தவுடன் அவர்கள் மிதந்தபடி கீழே சென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்! //


      ஹா...  ஹா..  ஹா..  கே ஜி ஜி...

      நீக்கு
    3. கௌ அண்ணா உங்க கற்பனை சூப்பர்!!!!!

      கீதா

      நீக்கு
  16. கதை நன்றாக இருக்கிறது. கதையின் முடிவை வாசகர்களிடம் விட்டு விட்டீர்கள்.

    நண்பர்கள் கீழே அவர்களே இறங்கினார்களா? மீட்பு குழு வந்து இறக்கினார்களா என்று தெரியவில்லை.

    நாங்கள் மலையேறியது நார்த்தன்மலை கடினம், கைபிடியே , படிகளோ இல்லாத சாய்வான மலை , நிறைய இடங்களில் நான்கு கால்களால் நடந்து போனேன். (இரண்டு கைகளையும் , இரண்டு கால்களையும் சொல்கிறேன்.)

    அடுத்து போனது திடியன் மலை அதுவும் கஷ்டமாக இருந்தது.
    சார் இருந்து இருந்தால் மதுரையில் உள்ள சமண மலைகள் எல்லாம் முடித்து இருப்பேன் பசுமை நடை குழுவினருடன்.
    மகனுடன் சில மலை ஏறி வந்தேன். இப்போது படியேறுவதே கடினமாக உள்ளது.

    மலையேற வேண்டும் என்று ஆசை பட்டால் மலையேற்ற குழுவோடு செல்வதுதான் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.

      நீங்கள் நினைப்பது போலான மலையேற்றம் போல இல்லாமல் பாதை இல்லாத, பாறையில் துளையிட்டு அதில் கால் வைத்து, கைவைத்து  ஏறும் மலையேற்றம்.  

      நீங்கள் சொல்லும் மலைகளுக்கு உச்சியில் கிலோமீட்டர் கணக்கில் பரந்த இடம் இருக்கும்.  இங்கு அது போல இல்லை!

      நீக்கு
  17. மதுரையில் மலைகோயில் ஏறி விட்டேன், எப்படி இறங்க போகிறேன் என்று கவலைபட்டேன் என்று பதிவு போட்ட போது நெல்லைத்தமிழன் சொன்னார் "ஏற்றி விட்டவன் இறக்கி விடமாட்டானா?" என்று பின்னூட்டத்தில் போட்டு இருந்தார்.

    அது போல எந்த நம்பிக்கையில் ஏறினார்களோ அதே தன்னபிக்கையோடு இறங்க முயன்றால் எப்படியாவது வழி கிடைக்கும்.

    படங்கள் நன்றாக இருக்கிறது.

    மலையேற்றத்திற்கு தைரியம் மிக முக்கியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நீங்கள் சொல்வது.  ஆனாலும் அந்த வகை மலையேற்றம் இல்லை இது!!

      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  18. கதை என, ஏதோ அவசரமாக எழுதி நம்மைப் பேய்க்காட்டிப்போட்டார் ஶ்ரீராம் ஹா ஹா ஹா.... ஆனாலும் ஒரு அனுபவப்பகிர்வுமாதிரி எடுத்துக்கொள்ளலாம் போல இருக்கு.
    எந்த ஒரு விசயமும் விரும்பிச் செய்யும்போது தைரியம் வரும், ஆனா இன்னொருவரின் உந்ந்துதலில் செய்தால் கஸ்டம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா..  விரும்பிதானே ஆரம்பிச்சிருப்பாங்க...    ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது நூறு சதவிகிதம் உண்மை.

      //ஏதோ அவசரமாக எழுதி நம்மைப் பேய்க்காட்டிப்போட்டார் ஶ்ரீராம் //

      அப்போ 'அருண்' கதை படிக்கவில்லையோ நீங்கள்?

      https://engalblog.blogspot.com/2025/03/blog-post_11.html

      நீக்கு
    2. அருண் கதையோ.. போய்ப் படிக்கிறேன்..

      நீக்கு
  19. எதிலும் ஏறுவது கொஞ்சம் ஈசிதான் ஆனா இறங்குவதுதான் பெரிய கஸ்டம்... வாழ்க்கையிலும் அப்படித்தானே, கஸ்டப்பட்டு ஏறிடலாம் ஆனால் இறங்குவதை ஆராலும் ஏற்றுக்கொள்ள முடியாதெல்லோ .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..  தத்துவம் நம்பர்.....  ஆனாலும் இதுவும் உண்மைதான்.

      நீக்கு
  20. இங்கும் சுற்றிச் சுற்றி மலைகள்தானே, விடுமுறை நாட்களில்... ஹைக்கிங் போகிறோம் எனச் சொல்லிக் கொண்டே மக்கள் போய் ஏறி வருவார்கள்.. நம் பிள்ளைகளும் நண்பர்களோடு போய் வருவார்கள்... ஆனா பெரிய குத்துண்ட மலைகள் இல்லை கொஞ்சம் சரிஞ்சு ஏறுவதுபோலத்தான் இருக்கும்... கொஞ்சம் பனி இருக்கும் அதுதான் பயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வவுனியாவையும், ஸ்காட்லேண்டையும் சுற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!  மலைகளையே காட்டுவதில்லை!

      நீக்கு
    2. ​சென்ற சனியன்று வெளியான இலங்கை எழுத்தாளர் அ ந கந்தசாமியின் குருட்டுவாழ்க்கை கதைக்கு பின்னூட்டம் விடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் அதிரா

      Jayakumar​

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 ஶ்ரீராம்:).. என் குட்டி வீடியோக்களில் மலைகள் போடுகிறேனே:)).. மக்களுக்கு மலை எல்லாம் பிடிக்காது என்பதால் அதுபற்றிப் போடுவதில்லை, இங்கு வீடுகளே மலையிலதானே இருக்குது.

      நீக்கு
    4. ஜே கே ஐயா, நாந் போனகிழமை வரவில்லை, இன்றுதான் வந்திருக்கிறேன், அதனால தெரியாது, படிச்சிருந்தால் கொமெண்ட் போட்டிருப்பேன், இனிப்போட்டால் ஒரு சிட்டுக்கூடத் திரும்பிப் பார்க்காது ஹா ஹா ஹா ஆனாலும் படிச்சுக் கொமெண்ட் போடுகிறேன்... நன்றி.

      நீக்கு
  21. காக்க காக்க
    கனகவேல் காக்க..

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம் அவர்களுக்கே உரித்தான நடை...

    வித்தியாசமான களம்...
    எபிக்கு புதிய பொலிவு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கே உரித்தானவா?  எனக்குன்னு ஒரு நடை இருக்கா என்ன! 

      நன்றி செல்வாண்ணா.. 

      நீங்கள் இப்போதெல்லாம் கதை அனுப்புவதில்லை!  என்ன வருத்தம் என்று தெரியும்.  

      நீக்கு
    2. ///ஸ்ரீராம்.29/4/25 1:34 PM
      எனக்கே உரித்தானவா? எனக்குன்னு ஒரு நடை இருக்கா என்ன!///

      இல்லையா பின்ன??:) ஹா ஹா ஹா

      நீக்கு
  23. எழுதிய ஒரு வார்த்தையே அடுத்த வரியிலும் வராத மாதிரி ( உபயம்: பேராசிரியர் சுஜாதா வழிகாட்டல்) பார்த்துக் கொண்டிருக்கலாம்.
    பார்க்க: ஏறிக்கொண்டிரும்தார்கள். கதை ஆரம்பத்திலேயே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி ஸார். பத்திரமாக அமெரிக்காவை அடைந்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
    2. நெகிழ்ச்சியான நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  24. உளியால் செதுக்கியது போன்ற பள்ளங்கள். கூடாதா என்ன?
    ஆரம்ப எழுத்தாளர் போல எதற்கு அந்த பிராக்கெட்? (...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழமையைத் துறந்து பல நாட்கள் புதுமை என்ற பெயரில் உலாவிய பிறகு சில சமயங்களில் பழமையே புதுமையாகிவிடும் இல்லையா?

      நீக்கு
  25. போகப்போக பிரமாதம். நீங்கள் நினைத்த அந்த பய உணர்வை எழுத்தில் ஏற்படுத்துவதில் வெற்றியடைந்து விட்டீர்கள். இதற்கு சர்வ சாதாரணமாக
    நிறைய வார்த்தைகள் உதவியிருக்கின்றன. சொல்லப் போனால் இதன்
    இந்தக் கதையின் வெற்றியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. நன்றி ஜீவி சார். எழுதும் போது என்னை அங்கு கற்பனை செய்து கொள்கிறேன்!

      நீக்கு
  26. சமீபகாலமாக கதாபாத்திரங்களுக்குப் பெயரிடுவதை ரசிக்கிறேன்.
    இது வரை வந்த பெயர்களும் (மார்ட்டீன் வாத்தியார் உட்பட) இனிமேல்
    வரப்போகிற பெயர்களும் என்று பட்டியல் ஒன்று மனசில் ஓடியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபடியும் ஆச்சரியப்படுகிறேன். நான் முனைந்து செய்தவைகளில் சில விஷயங்கள் இவை. நன்றி ஜீவி சார்.

      நீக்கு
  27. ஒரு விஷயம் நடக்கிற மாதிரி எதிர்பார்ப்புடன் போக்குக் காட்டி அதை நடக்கவிடாமல் அடிப்தில் அது என்ன திடீர் தொடர் ஆசை உங்களுக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னமோ எழுதும் போது வருவது தான்! ஆனால் இதுதான் என் பாணியோ...

      நீக்கு
  28. மொத்த நாலு பேரும் பத்திரமாக கீழே இறங்கி தரைப்பக்கம் கால் வைத்த பொழுது சிலுசிலுவென்று வீசிய தென்றல் அவர்களை வரவேற்பது போல
    இருந்தது -- என்று மனசில் கதையை நிறைவு செய்து கொண்டேன்.

    ஹி..ஹி.. ஒரு அல்ப திருப்தி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விபரீத முடிவுகளை மனம் ஏற்றுக் கொள்வதில்லை, எதிர்பார்ப்பதில்லை. சட்டென்று ஒரு சுமுக முடிவை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டு, திருப்தி அடைந்து விடுகிறோம். கரெக்டு தான்.

      நீக்கு
  29. "டே மகேஷ்! சூசை! இறங்கிடாதிங்கடா!.." என்று
    அடிவாரப் பகுதியிலிருந்து திடுமென எழுந்த குரலும் தொடர்ந்த
    ஆரவாரமும் மேலே இருந்தவர்களை திகைக்கச் செய்தது.

    சிவப்பும் மஞ்சளுமாய் சட்டையணிந்திருந்தவர்கள் தனித்து
    கூட்டத்திலிருந்து விலகிய மாதிரி...

    அட! ராபர்டும், ராகவனுமா!

    மேலே இருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்று யூகிக்க முடியவில்லை.

    '"உங்களாலே தான் முடியுமா, என்ன? இதோ நாங்களும் வந்திட்டோம்டா.."

    இரு உருவங்கள் சரசரவென்று கீழ் பகுதியில் ஏற முயற்சித்து கொஞ்சம் கொஞ்சமாக ஏறி வருவதையும் பார்த்து ஏற்கனவே தடுமாற்றத்திலிருந்த நால்வருக்கும் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

    கதைத் தலைப்பு? நால்வரோடு அறுவரானோம்

    சரியா?.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சிவப்பும் மஞ்சளுமாய் சட்டையணிந்திருந்தவர்கள் தனித்து
      கூட்டத்திலிருந்து விலகிய மாதிரி...// த வெ க - அணில்களா !

      நீக்கு
    2. சிவப்பு கேரளாவாகவும் மஞ்சள் குஜராத்தாகவும் இருக்கக் கூடாதா எனப்?

      நீக்கு
    3. கிரிக்கெட் அணிகளாகக் கொள்ளுங்கள்.

      நீக்கு
  30. நல்ல நண்பேர்கள் :)!! முடிவு புன்னகைக்க வைத்தது. மலையேற்றத்தில் உள்ள சிரமங்களைக் கதையாக்கிய விதம் அருமை. நண்பர்கள் தட்டுத் தடுமாறி பத்திரமாகக் கீழே வந்து சேர்வார்களாக :)!

    பதிலளிநீக்கு
  31. எங்களால் இயன்ற மலை ஏற்றங்கள் நாங்களும் போயிருக்கோம். முக்கியமாய் அஹோபிலம், பின்னர் கர்நாடகாவில் கிஷ்கிந்தா, சித்திரகூடத்தில், பின்னர் நாசிக் அருகே கோதாவரியின் ஆரம்பத்திற்கு என ஏறி இருக்கோம். இதில் கடினம் என்பது கிஷ்கிந்தாவில் ராமர் தங்கி இருந்த குகைக்குப் போவது தான், உயரமான மலைப்பாறையில் சுற்றிக் கால் பாதம் மட்டுமே வைக்கும்படியான இடத்தில் சுற்றிச் சுற்றிப் போய்க் குகைக்குள் போகணும். குகை ஏர்கண்டிஷன் போட்டால் கூட அவ்வளவு ஜில்லிப்பு வராது. மலைப்பாறை செங்குத்தாய் மேலே போய்க் கொண்டிருக்கும். நாம் அந்தப் பாதம் வைக்கும் இடத்தில் நின்று கொண்டு பாறையைப் பிடித்துக் கொண்டு (கிட்டத்தட்டக் கட்டிக் கொண்டு) மெதுவாக நகரணும். நகர்ந்து எல்லோருமே போனோம். குகையில் ஒரு தமிழரான சித்தர்,. இளைஞர். பேசலை. அவர் சிஷ்யர் வயதானவர் கு/ரிப்பிட்டுச் சிலரை மட்டும் கூப்பிட்டு ஜோசியம் சொன்னார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // குறிப்பிட்டுச் சிலரை மட்டும் கூப்பிட்டு ஜோசியம் சொன்னார். //

      உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா?  

      //மலைப்பாறை செங்குத்தாய் மேலே போய்க் கொண்டிருக்கும். நாம் அந்தப் பாதம் வைக்கும் இடத்தில் நின்று கொண்டு பாறையைப் பிடித்துக் கொண்டு (கிட்டத்தட்டக் கட்டிக் கொண்டு) மெதுவாக நகரணும் //

      அம்மாடி..  நினைத்தே பார்க்க முடியவில்லை.

      நீக்கு
  32. அஹோபிலமும் அப்படித்தான். பாறைகளைத் தாண்டிக் குதித்து நதி நீரில் இ/றங்கினு போகணும். ஒரு இடத்தில் சுவர் போல் உயரமான பாறைகள். வழுக்கும். அவற்றில் ஏறி மறுபக்கம் போகணும். எங்க கோ ஆர்டினேட்டர்கள் இருவரும் முதலில் ஏறி இரு பக்கமும் நின்றவண்ணம் எங்களை எல்லாம் கை தூக்கி ஏற்றி விட்டார்கள். ஏற்றும்போதே கீழே பார்க்காதீங்க என்றனர். ஆனால் கண்களும் மனசும் கீழே தான் இருந்தன. கயிலையில் கேட்கவே வேண்டாம். முக்திநாத்தில் படிகள், படிகள், படிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லி இருக்கும் இடமெல்லாம் எனக்கும் போக ஆசைதான். நடக்கவில்லை!

      நீக்கு
    2. 2018 ஆம் ஆண்டில் கடைசியாய்க் கோலாப்பூர் போனது தான். அதன் பின்னர் அம்பேரிக்கா போயிட்டு 2020இல் திரும்புகையில் நாங்க திரும்பின உடனே லாக் அவுட் அறிவிப்பு. அதைத் தொடர்ந்தே என்னோட உடல் நிலையில் இயலாமை அதிகரித்துக் கொண்டே போய் விட்டது.

      நீக்கு
  33. இப்போதைய ஆசை குலதெய்வம் கோயிலுக்குப் போகணும் என்பதே. 2022 ஆம் ஆண்டிலேயே என்னால் போக முடியலை. ஆனால் மாமா போனார். 23இல் ரொம்பக் கஷ்டப்பட்டுக் கொண்டு போனோம். ரொம்ப முடியாமல் போச்சு. பின்னர் போகவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமாக, சிரமமில்லாமல் குலதெய்வம் கோவில் நீங்கள் சென்றுவரவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      அதுசரி, கதை பற்றி அபிப்ராயம்?

      நீக்கு
    2. எழுதினேன் போகலை போல. நண்பர்கள் நால்வரையும் கீழிருப்பவர்கள் தீயணைப்பு வீரர்களை வைத்துக் காப்பாற்றி இருப்பார்கள். நல்லபடியாக இருக்கட்டும் அனைவரும். சொல்லப்போனால் அஹோபிலத்தில் ஏறிட்டுக் கீழே இறங்கறச்சே எனக்கும் கொஞ்சம் கவலை/பயம் இருந்தது.

      நீக்கு
    3. உங்கள் அனுபவத்தின் நினைவுகளை கிளறி விட்டிருக்கிறது கதை.  ஆனால் அங்கெல்லாம் சென்று வந்திருக்கிறீர்கள் என்று கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!