சுகுமார்
22 வருடங்களுக்கு முன்னால் எங்களுக்குச் செய்து கொடுத்தார் இந்தக்
கல்கண்டு சாதத்தை. நடுவில் ஒருமுறை முயற்சிக்கப் போய் சரிவரவில்லை. இந்த
வாரம் செய்து விடுவது என்று முடிவெடுத்து அவரிடம் கேட்டுக் குறித்துக்
கொண்டேன்.
"சர்க்கரையா? கல்கண்டு வேண்டாமா?"
"கல்கண்டும் வேணாம்.. குமுதமும் வேணாம்... சர்க்கரையைப் போடு"
பாலுக்கு
பதிலா சர்க்கரை சேர்க்காத கோவா கூடச் சேர்க்கலாம். தளும்பாது பாரு! அடி
பிடிக்கக் கூடாதுன்னு நெய் சேர்த்துடக் கூடாது. சாதம் முறுக்கிக் கொண்டு
அரவனப் பாயசம் மாதிரி ஆகி விடும். சாதம் விரை விரையாப் போயிடும்.
கொஞ்சம்
ஓரளவு கெட்டியானதும் நெய் விட்டுக் கீழே இறக்கிடு. முந்திரி பாதாம்,
குங்குமப்பூ அப்புறம் வாசனைக்கு ஏலக்காய் சேர்க்கலாம். பாலோடு குங்கமப்பூ
சேரும் வாசனைதான் முக்கியம். பச்சை கற்பூரமோ, ஜாதிக்காயோ சேர்த்துட
வேண்டாம். இதோட தனி டேஸ்ட்ட அது கெடுத்துடும். இறக்கி வச்சதும் கெட்டி
ஆயிடும்.
பேஸ்ட் போல இருக்கும் சாதம் விறைத்துக்
கொண்டு வருமுன் இறக்கி விட வேண்டும். சர்க்கரை ஜாஸ்தி சேர்க்கறோம்
இல்லையா, அது சாதத்தை விறைக்கச் செய்து அரவனப் பாயசம் மாதிரிச் செய்யுமுன்
இறக்கி விட வேண்டும். முக்கியமான விஷயம் எதையும் வறுத்துப் போடக்
கூடாது. அந்த வாசனை இதற்குச் சரியாய் வராது.."
படங்கள் : இணையம்.