தேங்காய்ப்பொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேங்காய்ப்பொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.4.16

திங்கக்கிழமை 160418 :: தேங்காய்ப்பொடி



சாம்பார், குழம்பு வகையறாக்கள் செய்து அலுத்துப் போன ஒரு நாளில் கைகொடுப்பவை இது போன்ற பொடிகள்.  அது மட்டுமல்லாது, ஒரே மாதிரி சமையலறையில் வேலை செய்து 'ஒரு நாள் சுலப சமையல் இருக்கக் கூடாதா?  ஓய்வு கிடைக்காதா?' என்று ஏங்கும் இல்லத்தரசிகளுக்கு இது ஒரு அருமையான வரப்ரசாதம்.

இந்த தேங்காய்ப்பொடி ஒரு வகையில் தேங்காய்த் துவையலின் காய்ந்த வெர்ஷன்!

நமக்கும் எல்லாச் சமையலும் அலுத்துப்போன நாளில் இது நம் நாவுக்கு ஒரு தனிச் சுவையைக் கொடுக்கும் பாருங்கள்...  சுவாரஸ்யம்தான்!

ஒரு பெரிய தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும்.  50 கிராம் உளுத்தம் பருப்பையும், உங்கள் காரச் சுவை, அல்லது காரத் தேவையைப் பொறுத்து காய்ந்த மிளகாயும் (நாங்கள் பத்து மிளகாய் எடுத்துக் கொண்டோம். கொப்பரைத் தேங்காயாக இருந்தால் பத்து மிளகாய்ப் போறாது!) பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.  அடுப்பை அணைத்த பிறகு அந்தச் சூட்டிலேயே துருவிய தேங்காயை புரட்டிக் கொள்ளவும்.  பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து இவை அனைத்தையும்  மிக்ஸியிலிட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.  
 
 
 

படத்தில் உருட்டி வைக்கப் பட்டிருப்பது போலத் தெரிந்தாலும் அது பொடிதான் என்று அறியவும்!!!!


கொஞ்ச நாட்களுக்கு வைத்து உபயோகிக்கலாம்.  சூடான சாதத்தில் நெய்யோ, நல்லெண்ணெயோ இட்டுப் பிசைந்து சாப்பிடலாம். பச்சை மோர்க்குழம்பு (மோர்சாறு) இதற்குத் தொட்டுக் கொள்ளலாம். சமயங்களில் தோசைக்கும், மோர் சாதத்துக்கும் கூடத் தொட்டுக் கொள்ளலாம்!