மதியம் இரண்டரை மணிக்கு காலி செய்துகொண்டு கிளம்பி விடலாம் என்று சொல்லி இருந்தார்கள். அறைக்குச் சென்று ஓய்வெடுத்துக்கொண்டு நாங்கள் இரண்டு மணிக்கு வந்தபோது யாரும் கிளம்பும் அறிகுறியையே காணோம். ஆனால் எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். மஃப்டியில் இருந்தார்கள்! பேக்கிங் செய்த அறிகுறியே இல்லை. யாரோ நான்கு பேர் அறைச் சாவியைத் தராமல் கொண்டுபோய்விட்டார்களாம். 'ஐயாயிரம் ரூபாய் கீழே வை' என்று கேட்டுக்கொண்டிருந்தார் தங்குமிடத்தின் பொறுப்பாளர்!