சொல்லாதே யாரும் கேட்டால் ... 3/7
ஒருவேளை ... முன்பே எங்காவது பார்த்து, பேசி இருப்பேனோ?
சில சமயங்களில், தபால்காரரை அவருடைய யூனிஃபாரம் அல்லாத உடையில் அல்லது சலவைக்கடைக்காரரை சலவைக்கடை அல்லாத பிற இடங்களில் பார்த்தால் எனக்கு சட்டென்று ஞாபகம் வராது.
இவருக்கு விதவிதமாக யூனிஃபாரம் மனதால் போட்டுப் பார்த்தேன். சிரிப்புதான் வந்தது. வேறு ஏதும் ஞாபகம் வரவில்லை.
'அடுத்த ரவுண்டில் அவரையே கேட்டுவிடுவோமா?' என்று எண்ணமிட்டபடி, நடந்தேன்.
(தொடரும்)

