("இலக்கியப் பீடம் ('ப்' வருமோ?!!) '2/2012 இதழில் படித்ததை, நடுவில் ஓரிரு
இடைச்செருகல்களுடன் பகிர்கிறேன் - பாஹே.)
@@@@@@@@@@@@
கவிதையை மொழி பெயர்க்கும்போது நம் மொழி பெயர்ப்பில் வந்திருப்பவை
எல்லாம் உரை..
எவை விடுபட்டனவோ அவைதான் கவிதை. (ராபர்ட் ஃப்ராஸ்ட்)
அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
என்ன செய்து கிழித்தாய்?
நாள் தோறும் கேட்கும்
நாட்காட்டி - (பல்லவன்.)
வரிகளுக்கிடையில்
ஒளிந்துகொண்டிருக்கிறது
கைகுலுக்கியபின்
எண்ணிப்பார்த்து விடுங்கள்
இஸ்திரிப் போடுபவனின் வயிற்றில்
ஏன் இத்தனைச் சுருக்கங்கள்?
கஞ்சி போடாததால். (லிங்குசாமி).
ஊரெல்லாம் 'பவர்கட்'
என்றாலும் இயந்திரங்கள் இயங்குகின்றன.
இரண்டு அடி கொடுத்தால்தான்
நீ திருந்துவாய்!
உடைந்த வளையல் துண்டைக்
குளத்தில் எறிந்தேன் -
பேருந்துகள் மட்டுமே
இங்கே நிற்கும் -
நேரம் அல்ல.- (ஜப்பானியப் பழமொழி).
வீட்டின் பெயர்
'அன்னை இல்லம்!'
அன்னை இருப்பது
அநாதை இல்லம்!- (யாரோ).
வயலை விற்ற இரவு
உறக்கமே இல்லை
தவளைகள் இரைச்சல்.- (ஹொ கூஷி)
எச்சரிக்கை!
எரிவது எண்ணெயல்ல
முதியோர் விடுதி மரக்கிளையில்
தாய் பார்த்தாள்
இரையூட்டும் குருவி!- (கருமலைப்பழம்நீ).
குப்பைத்தொட்டிக்குள் குழந்தை
எட்டிப் பார்த்தது நாய்
தன குட்டிகளுடன்.- (கருமலைப்பழம்நீ).
வெறுங்கை நானென்ன செய்ய?
கையைப் பிசைந்தவனைப் பார்த்து
நகைத்தன விரல்கள்.- (கருமலைப்பழம்நீ).
வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்.- (தாராபாரதி?)
காடு விளைஞ்சென்ன மச்சான்
நமக்குக்
கதவைச் சாத்தி விளக்கை அணைத்து
அப்படி என்ன தண்டனை -
திரையில் படம்.- (ஏர்வாடி எஸ். ராதாக்ருஷ்ணன்).
உருகிக் கொண்டிருந்த மெழுகுவர்த்திதான்
ஊதி அணைத்ததில் பெரிதும் மகிழ்ந்தது
பிறந்தநாள் விழாவில். -( ஏர்வாடி எஸ். ராதாக்ருஷ்ணன்).
ஒவ்வொரு வெற்றி பெற்ற
மனிதனுக்குப் பின்னாலும்
'பல' பெண்கள்! -( ஏர்வாடி எஸ். ராதாக்ருஷ்ணன்).
எவருடைய நினைவுதினமோ
பிரியமாய்ச் சாப்பிடுகிறார்கள்
தள்ளு வண்டியில் ரோஜாச் செடிகள்
வாங்கியதும் பூத்தது
விற்றவன் முகம்! - (சென்னிமலை தண்டபாணி.)
ஒரு இலை உதிரும்
வேதனை அறிய
மரமாக வேண்டும்.- (சென்னிமலை தண்டபாணி).
கணினிக்குள் தேடுகிறான்
தொலைந்துபோன
வாழ்க்கை எங்கென்று! - (சென்னிமலை தண்டபாணி.)
பூனை வயிற்றில் எது பிறந்தாலும் -
அது எலிபிடிக்கும்.-( சீனப் பழமொழி).
ஏசுவாக எல்லோருக்குமே ஆசை!
சிலுவை தூக்க மட்டும்
யாரும் இல்லை.- (யாரோ).
ஓநாயின் உயிரைக் காக்க
ஆடுகளே
அர்ச்சனை செய்கின்றன-( யாரோ).
வேகத் தடைகள் எதற்கு
நத்தைகளுக்கு? -( யாரோ).
கரும்பலகை கதறியது
நீ கற்றுக் கொள்ள
மரம் நடுவிழா
மேடை அமைக்கணுமே -
பத்துமரம் வெட்டினோம்.- (ஆலந்தூர் மோகனரங்கன்).
கலப்பை -
குடியானவன் சிலுவை. - (கவிஞர் மீரா.)
"படுபாவிப் பசங்களா!
எங்கே தொலைஞ்சீங்க?"
சாந்தமூர்த்தி அலறினார்.-( பாஹே).