Karnan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Karnan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24.4.12

கர்ணனும் பட்டாக்கத்தி பைரவனும் - ரத்தக் காட்டேரி, நம்பிக்கைகள்.... வெட்டி அரட்டை.

                          
புதுக்கோட்டை இடைத் தேர்தல் ஆளும் கட்சி சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கி விட்டது என்றும் கம்யூனிஸ்ட் பார்ட்டி திகைத்து முதல்வரிடம் பேசுவோம் என்றும் சொல்வதாகச் செய்தி! எங்களுக்குத் தோன்றுவது...
                 
ஆளும் கட்சி: விட்டுக் கொடுக்க வேண்டும்
                            
ஏற்கெனவே போட்டியிட்டு வென்றிருந்த கட்சி : ஆளும் கட்சியைக் கூட்டணிக்குக் கெஞ்சாமல் மறைந்த தன் கட்சி வேட்பாளரின் எளிமையை நம்பி தைரியமாக தனியே நிற்க வேண்டும். 
                            
முக்கிய எதிர்க் கட்சி : இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் ஆகாமலிருக்க எதிர்த்து வலுவான ஆளை நிறுத்த வேண்டும். ...
                             
தேர்தல் ஆணையம் : ஆளும் கட்சி உட்பட எந்தக் கட்சி விதிமுறைகளை மீறினாலும் பணம் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.    


(இந்தப் பதிவு வலையேற்றிய பின் ஆளும் கட்சி வேட்பாளரையே அறிவித்து விட்ட செய்தி வந்துள்ளது!)
--------------------------------------------------------------------------------------

வெட்டி அரட்டையில் கர்ணன் செய்தி வராவிட்டால் எப்படி?

கர்ணன் திரைப்படம் தமிழகமெங்கும் அரங்குநிறைக் காட்சிகளாக ஓடுவது ஆங்காங்கு படிக்கும் செய்திகளில் தெரிகிறது.  
  
கர்ணன் திரைப் படத்தின் நவீனக் கதையாக 79 களில் வந்த படம் சிவாஜி நடித்த 'பட்டாக் கத்தி பைரவன்'  
  
மறுபடியும் அதே கதையை மணிரத்னம் எடுத்தார் 'தளபதி'யாக. இந்த இரண்டு நவீன கர்ணனுக்கும் இசை இளையராஜா... பட்டாக் கத்தி பைரவன் பாடல்கள் இனிமையானவை. (எங்கெங்கோ செல்லும், யாரோ நீயும் நானும் யாரோ, தேவதை ஒரு தேவதை) பொதுவாகச் சொல்லப் போனால் மூன்று படங்களிலுமே பாடல்கள் பெரிய ஹிட்.     
========================================================

ரத்தக்காட்டேரி விஜயம்...
  
செய்தித்தாள் செய்தி.... அப்பாதுரை கவனிக்கவும்.  வேலூர், ஆம்பூர் என்று முன்னேறிக் கொண்டிருந்த ரத்தக் காட்டேரி காஞ்சிபுரம் வந்து விட்டது. . சென்னைக்குள் புக சில நாட்களே உள்ளன போலும்.... கதவில் எழுத வேண்டும்...

அதைத் தடுக்க நடந்த பூஜையில் நாற்பது பவுன் நகையுடன் பெண் கடத்தல் என்றும் செய்தி மேலும் கூறுகிறது!               
====================================================

நம்பிக்கைகள்...
 
   
நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பேசிக் கொண்டிருந்தோம். திடீரென அவர் அலைபேசி உள்ளே எங்கேயோ அடிக்கும் சத்தம் கேட்டது. விரைந்து எழுந்து சென்றவர் வழியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த  அவர் மகனைத் தாண்டிக் குதித்துச் சென்று அலைபேசியை எடுத்துப் பேசினார். 

அவர் தாண்டிச் செல்லும்போதே "அப்பா" என்று குரல் கொடுத்த மகன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். 

பேச்சு நீண்டு கொண்டே போனது. அப்போது மகனின் நண்பன் வந்து இவனை அழைக்க, அவன் சற்றுத் தயங்கி தன் அப்பாவைப் பார்த்துக் கொஞ்சம் காத்திருந்தவன் அப்புறம் அவனிடம் பேசப் போனான். 

நண்பர் பேசி முடித்து விட்டு என்னிடம் வந்து விட, தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நண்பனிடம் பேசி விட்டுப் பழைய இடத்துக்குத் திரும்பிய அவர் மகன் அங்கிருந்தே தன் அப்பாவுக்குக் குரல் கொடுத்தான். 

இவர் கவனிக்காது பேச்சில் ஈடுபட்டிருந்தார். போதிய இடைவெளிகளில் அவர் மகன் அழைத்துக் கொண்டே இருந்தான். 

"பையன் கூப்பிடறான் போலேருக்கே.." என்றேன்.

"அவன் கிடக்கான்.." என்றவர், அவன் பக்கம் திரும்பி "உதைக்கப் போறேன்" என்று குரல் கொடுத்தார். 

அவன் எழுந்து வந்து விட்டான். 
          
"வாப்பா.... ஒரு தரம் தாண்டிட்டே.... போய் அங்கேயே உட்கார்றேன் மறுபடி அந்தப் பக்கத்துலேருந்து தாண்டிடுப்பா..." என்றான்.
            
விஷயம் இதுதான்...... உட்கார்ந்திருக்கும் நபர்களின் காலைத் தாண்டக் கூடாதாம். தாண்டினால் மறுபடி இந்தப் பக்கம் தாண்டி விட வேண்டுமாம்! 
                   
அவன் மறுபடி பழைய இடத்தில் உட்கார்ந்து,  நண்பர் மறுபடி அந்தப் பக்கத்திலிருந்து தாண்டும் வரை அவன் அவரை விடவில்லை! 
                 
அப்புறம் இதற்கு விளக்கமாக நண்பர் சொன்ன தகவல் இது. சிரிப்பாய் வந்தது.
                         
"எங்கேருந்துதான் கிடைக்குதோ இவனுக்கு இது மாதிரி விஷயங்கள்.... இது பரவாயில்லை.... கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும், 'மிதிச்சிட்டேன், கால் பட்டிடுச்சி'ன்னுட்டு தாண்டிட்டுப் போற எல்லாத்தையும், எல்லாரையும் தொட்டுத் தொட்டுக் கும்பிடுவான்...நிறுத்தவே முடியாது. பேசும்போது எச்சல் தெறிச்சிடுச்சின்னுட்டு அவங்களை ஸாரி கேட்டே கொன்னுடுவான்...   அவங்களைத் தொட்டுத் தொட்டு தன்னோட தாவாங்கட்டையைத் தொட்டுக்குவான்.... அப்புறம் ஏதாவது வேலையைத் தொடங்குமுன் கழுத்தில் இருக்கும் டாலரை ஆயிரம் முறை தொட்டுத் தொட்டுக் கண்ல ஒத்திக்குவான்... ஐயோ திட்டித் திட்டி இப்போ இது மட்டும்தான் மிச்சம்..."  
=========================================
   
கல்விமுறையில் மாற்றம் செய்ய வேண்டுமா, மாணவர்களுக்கு மனவுறுதிப் பாடம் எடுக்க வேண்டுமா தெரியவில்லை... இந்த வாரம் இன்னொரு மாணவி கல்வியின் கனத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை. செய்த செயலுக்கு பொருத்தமில்லாத பெயர். தைரியலட்சுமி. 
   
இவ்வாறு செய்பவர்கள் மற்ற மாணவ, மாணவியருக்கு மோசமான முன்னுதாரணம் ஆகிறார்களா, தெரியவில்லை. கல்விக் கூடங்களும் பெற்றோர்களும் உடனே கவனிக்க வேண்டிய விஷயம்.
      
நன்னெறி வகுப்புகள் இப்போதெல்லாம் நடக்கின்றனவா தெரியவில்லை. பள்ளிக் காலத்திலிருந்தே மாணவர்களின் மனவுறுதியைக் கூட்ட முயற்சிகள் எடுக்க வேண்டிய நேரம் இது.


இந்தப் பதிவு எழுதி நான்கைந்து நாட்கள் ஆன நிலையில் இன்றைய செய்தித் தாள் செய்தி உட்பட எல்லா நாட்களிலும் பத்தாம் வகுப்பு மாணவர், பொறியியல் கல்லூரி மாணவர் (பைக் வேகமாக ஓட்டக் கூடாது என்று மாமா சொன்னாராம்) ப்ளஸ் டூ மாணவி என்று தினமுமே ஒரு தற்கொலையாவது நடந்து வருகிறது. இதற்கு எப்படி உடனே முற்றுப் புள்ளி வைப்பது?
                   

7.4.12

T N சேஷகோபாலன், கர்ணன், விவேக், ரத்தக்காட்டேரி...வெட்டி அரட்டை.



'அவர்' பார்ப்பதற்கு மிக எளிமையாக இருப்பாராம். கதர் சட்டை, சாதாரண வேஷ்டி என்று. ஆனால் அவர் மிருதங்கத்தை மிகப் பிரமாதமாக வைத்துக் கொள்வாராம். அதற்கு அவ்வப்போது புத்தம் புது ஜிகினா உறைகள் வாங்கிப் போடுவாராம். பார்த்து பார்த்து போஷிப்பாராம். அதற்கு செலவு செய்யத் தயங்க மாட்டாராம். ஒரு முறை திருவையாறில் அவர் வருவதற்கு முன் அவரின் இரண்டு மிருதங்கங்களைப் பையோடு தோளில் சுமந்து வந்து மேடையில் ஒருவர் வைத்தாராம். அதற்கே அந்த இடமே அதிருமளவு கிளாப்ஸாம் . இத்தனைக்கும் 'அவர்' இனிமேல்தான் வரவேண்டும்! நேரில் கண்ட இவருக்கு புல்லரித்துப் போனதாம். 

'அவர்'..பாலக்காட்டு மணி.


கல்யாணி ராகத்தில் அமைந்த ஒரே ஒரு சோகப் பாடல் "துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே.."

இரண்டையும் சொன்னது மதுரை டி என் சேஷகோபாலன். ஜெயா டிவி மனதோடு மனோ நிகழ்ச்சியில். (கொஞ்ச நாள் முன்பு)



அவர் நடித்த (ஒரே) படமான 'தோடி ராகம்' பற்றியும் பேசினார். அதிலிருந்து போட்டுக் காட்டிய ஒரு பாடல் கேட்க நன்றாக இருந்தது.

உடனே நினைவுக்கு வரும் இன்னொரு தகவல் முகாரியில் அமைந்த ஒரே பழைய காதல் பாடல்! (இதற்கான விடையை பின்னூட்டத்துக்கு வாய்ப்பாக வைத்து விடுகிறேன்)

======================================

ஒரு பொதுவான தகவல்...

நான் எந்த ப்ளாக் படித்தாலும் அங்கு தமிழ்மணம், இன்டலி, தமிழ் 10, யுடான்ஸ் உட்பட (அங்கு இணைத்திருக்கும் ) என்னால் போட முடியக் கூடிய எல்லா வோட்டும் போட்டு விடுவது வழக்கம். தவற விடுவது இல்லை! சும்மா ஒரு தகவலுக்கு...

=====================================

சென்ற வாரம் படித்த இரண்டு செய்திகள். ஒன்று சுவாரஸ்யம், இன்னொன்று 'கடுப்பேத்தறார் மை லார்ட்" டைப்! படித்து விட்டு எது எந்த டைப் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

1) வடநாட்டில் (ஊர் பெயர் மறந்து விட்டதால் பொதுவாகப் போடுகிறேன்...படித்துக் கொஞ்ச நாட்களாகி விட்டது...ஹி...ஹி....) ஒரு டாக்டர் தம்பதி வெளிநாடு செல்லும்போது தன் வீட்டில் வேலை செய்யும் (செய்த?) சிறுமியை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டு சென்று விட்டார்களாம். 

2) ஆம்பூர் பக்கம் ரத்தக்காட்டேரி நடமாட்டமாம். இரவு நேரங்களில் வீட்டிலுள்ள பொருட்கள் அந்தரத்தில் பறக்க ஆரம்பிக்க, காற்று பலமாக வீச, வெளியே ஓடிவந்து பார்த்தால் நிறைய வீடுகளில் இது போலவே நடந்திருப்பது தெரிய வந்ததாம். அந்த ஊர் ஆஸ்தான மந்திரவாதியின் ஆலோசனைப்படி 'இன்று போய் நாளை வா...' என்று தமிழில் பாடி, ச்சே, எழுதி திரிசூலம் படம் போட்டிருக்கிறார்களாம்..

உள்ளே உறங்கிக் கொண்டிருந்த ரத்தக் காட்டேரியை எங்கள் ப்ளாக் பதிவு தட்டி எழுப்பி விட்டு விட்டதோ....! மூன்றாம் சுழியிலும் உலவப் போயிருக்கிறதே....!

===================================

சமீப காலத்தில் அடிக்கடி முணுமுணுக்கும் வரிகள்....  
"முத்தமிட்ட இதழே பாலாக,
முன்னிடை மெலிந்து நூலாக,
கட்டி வைத்த கூந்தல் அலையாக,
கன்னங்கள் இரண்டும் விலையாக..."

======================================

யாரிடமும் சொல்லாமல் (யார் கிட்ட சொல்றது??!!) உள்ளேயே நடத்திய மௌனப் போராட்டத்துக்கு இறுதியில் வெற்றி!

சமீப கால சந்தோஷங்களில் ஒன்றாக கூகிள் பின்னூட்டங்களைத் தொடரும் வசதியைத் திருப்பி அளித்திருப்பது! எனக்கும் கீதா மேடத்துக்கும்தான் ரொம்ப சந்தோஷம் என்று நினைக்கிறேன்!! 

நன்றி கூகிள்...!

===============================


டிஜிட்டலில் வெளியான கர்ணன் திரைப் படம் தமிழ்நாடு முழுக்க அரங்கு நிறை காட்சிகளாக ஓடுகிறதாம். நல்ல செய்தி! இது பற்றியும், அந்தப் படத்தின் பாடல்கள் பற்றியு ஒரு விரிவான அலசலாகவும் திரு நெல்லை கண்ணனின் புதல்வர், 'மூங்கில் மூச்சு', மற்றும் 'அம்மன் சன்னதி' புகழ்,   குஞ்சுவின் நண்பர் (!) சுகா தன் வேணுவனம் வலைத் தளத்தில் எந்தெந்தப் பாடல்கள் என்னென்ன ராகம் என்று சொல்லி அவற்றைக் கேட்கப் பாடல்களுக்குச் சுட்டியுடன் எழுதியிருக்கும் பதிவு வெகு சுவாரஸ்யம்.  சுகாவின் எழுத்துகளுக்கு இருக்கும் சுவையைக் கேட்கவும் வேண்டுமோ...'சுகா'னுபவம்!

==============================


பொதுவாக விவேக் நகைச் சுவைகளை அதிகம் ரசிப்பதில்லை.  ஜெயா டிவி ஆட்டோகிராஃபில் விவேக்குடன் உரையாடினார் நிகழ்ச்சியை அளிக்கும் சுகாசினி. விவேக் பற்றி அறியாத தகவல்கள் சில அறிந்து கொள்ள முடிந்தது. அவரது நட்பு பற்றி, மனிதம் பற்றி, சிறுவயது சேட்டைகள், திறமைகள் பற்றி.... .  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடகர் மனோ கர்ணனில் கிருஷ்ணராக நடித்த என் டி ராமராவ், 'க்ளோசப்' ஷாட்களில் முகத்தை வைத்துக் கொள்ளும், அல்லது முகத்தில் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்த போது தத்ரூபமாக இருந்தது. சிரிப்பும் வந்தது!


படங்களுக்கு நன்றி கூகிள்.