Vivek லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Vivek லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.4.12

T N சேஷகோபாலன், கர்ணன், விவேக், ரத்தக்காட்டேரி...வெட்டி அரட்டை.



'அவர்' பார்ப்பதற்கு மிக எளிமையாக இருப்பாராம். கதர் சட்டை, சாதாரண வேஷ்டி என்று. ஆனால் அவர் மிருதங்கத்தை மிகப் பிரமாதமாக வைத்துக் கொள்வாராம். அதற்கு அவ்வப்போது புத்தம் புது ஜிகினா உறைகள் வாங்கிப் போடுவாராம். பார்த்து பார்த்து போஷிப்பாராம். அதற்கு செலவு செய்யத் தயங்க மாட்டாராம். ஒரு முறை திருவையாறில் அவர் வருவதற்கு முன் அவரின் இரண்டு மிருதங்கங்களைப் பையோடு தோளில் சுமந்து வந்து மேடையில் ஒருவர் வைத்தாராம். அதற்கே அந்த இடமே அதிருமளவு கிளாப்ஸாம் . இத்தனைக்கும் 'அவர்' இனிமேல்தான் வரவேண்டும்! நேரில் கண்ட இவருக்கு புல்லரித்துப் போனதாம். 

'அவர்'..பாலக்காட்டு மணி.


கல்யாணி ராகத்தில் அமைந்த ஒரே ஒரு சோகப் பாடல் "துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே.."

இரண்டையும் சொன்னது மதுரை டி என் சேஷகோபாலன். ஜெயா டிவி மனதோடு மனோ நிகழ்ச்சியில். (கொஞ்ச நாள் முன்பு)



அவர் நடித்த (ஒரே) படமான 'தோடி ராகம்' பற்றியும் பேசினார். அதிலிருந்து போட்டுக் காட்டிய ஒரு பாடல் கேட்க நன்றாக இருந்தது.

உடனே நினைவுக்கு வரும் இன்னொரு தகவல் முகாரியில் அமைந்த ஒரே பழைய காதல் பாடல்! (இதற்கான விடையை பின்னூட்டத்துக்கு வாய்ப்பாக வைத்து விடுகிறேன்)

======================================

ஒரு பொதுவான தகவல்...

நான் எந்த ப்ளாக் படித்தாலும் அங்கு தமிழ்மணம், இன்டலி, தமிழ் 10, யுடான்ஸ் உட்பட (அங்கு இணைத்திருக்கும் ) என்னால் போட முடியக் கூடிய எல்லா வோட்டும் போட்டு விடுவது வழக்கம். தவற விடுவது இல்லை! சும்மா ஒரு தகவலுக்கு...

=====================================

சென்ற வாரம் படித்த இரண்டு செய்திகள். ஒன்று சுவாரஸ்யம், இன்னொன்று 'கடுப்பேத்தறார் மை லார்ட்" டைப்! படித்து விட்டு எது எந்த டைப் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

1) வடநாட்டில் (ஊர் பெயர் மறந்து விட்டதால் பொதுவாகப் போடுகிறேன்...படித்துக் கொஞ்ச நாட்களாகி விட்டது...ஹி...ஹி....) ஒரு டாக்டர் தம்பதி வெளிநாடு செல்லும்போது தன் வீட்டில் வேலை செய்யும் (செய்த?) சிறுமியை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டு சென்று விட்டார்களாம். 

2) ஆம்பூர் பக்கம் ரத்தக்காட்டேரி நடமாட்டமாம். இரவு நேரங்களில் வீட்டிலுள்ள பொருட்கள் அந்தரத்தில் பறக்க ஆரம்பிக்க, காற்று பலமாக வீச, வெளியே ஓடிவந்து பார்த்தால் நிறைய வீடுகளில் இது போலவே நடந்திருப்பது தெரிய வந்ததாம். அந்த ஊர் ஆஸ்தான மந்திரவாதியின் ஆலோசனைப்படி 'இன்று போய் நாளை வா...' என்று தமிழில் பாடி, ச்சே, எழுதி திரிசூலம் படம் போட்டிருக்கிறார்களாம்..

உள்ளே உறங்கிக் கொண்டிருந்த ரத்தக் காட்டேரியை எங்கள் ப்ளாக் பதிவு தட்டி எழுப்பி விட்டு விட்டதோ....! மூன்றாம் சுழியிலும் உலவப் போயிருக்கிறதே....!

===================================

சமீப காலத்தில் அடிக்கடி முணுமுணுக்கும் வரிகள்....  
"முத்தமிட்ட இதழே பாலாக,
முன்னிடை மெலிந்து நூலாக,
கட்டி வைத்த கூந்தல் அலையாக,
கன்னங்கள் இரண்டும் விலையாக..."

======================================

யாரிடமும் சொல்லாமல் (யார் கிட்ட சொல்றது??!!) உள்ளேயே நடத்திய மௌனப் போராட்டத்துக்கு இறுதியில் வெற்றி!

சமீப கால சந்தோஷங்களில் ஒன்றாக கூகிள் பின்னூட்டங்களைத் தொடரும் வசதியைத் திருப்பி அளித்திருப்பது! எனக்கும் கீதா மேடத்துக்கும்தான் ரொம்ப சந்தோஷம் என்று நினைக்கிறேன்!! 

நன்றி கூகிள்...!

===============================


டிஜிட்டலில் வெளியான கர்ணன் திரைப் படம் தமிழ்நாடு முழுக்க அரங்கு நிறை காட்சிகளாக ஓடுகிறதாம். நல்ல செய்தி! இது பற்றியும், அந்தப் படத்தின் பாடல்கள் பற்றியு ஒரு விரிவான அலசலாகவும் திரு நெல்லை கண்ணனின் புதல்வர், 'மூங்கில் மூச்சு', மற்றும் 'அம்மன் சன்னதி' புகழ்,   குஞ்சுவின் நண்பர் (!) சுகா தன் வேணுவனம் வலைத் தளத்தில் எந்தெந்தப் பாடல்கள் என்னென்ன ராகம் என்று சொல்லி அவற்றைக் கேட்கப் பாடல்களுக்குச் சுட்டியுடன் எழுதியிருக்கும் பதிவு வெகு சுவாரஸ்யம்.  சுகாவின் எழுத்துகளுக்கு இருக்கும் சுவையைக் கேட்கவும் வேண்டுமோ...'சுகா'னுபவம்!

==============================


பொதுவாக விவேக் நகைச் சுவைகளை அதிகம் ரசிப்பதில்லை.  ஜெயா டிவி ஆட்டோகிராஃபில் விவேக்குடன் உரையாடினார் நிகழ்ச்சியை அளிக்கும் சுகாசினி. விவேக் பற்றி அறியாத தகவல்கள் சில அறிந்து கொள்ள முடிந்தது. அவரது நட்பு பற்றி, மனிதம் பற்றி, சிறுவயது சேட்டைகள், திறமைகள் பற்றி.... .  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடகர் மனோ கர்ணனில் கிருஷ்ணராக நடித்த என் டி ராமராவ், 'க்ளோசப்' ஷாட்களில் முகத்தை வைத்துக் கொள்ளும், அல்லது முகத்தில் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்த போது தத்ரூபமாக இருந்தது. சிரிப்பும் வந்தது!


படங்களுக்கு நன்றி கூகிள்.