Mock fire drill லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Mock fire drill லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5.3.12

படித்ததும் ரசித்ததும் பதைத்ததும் - வெட்டி அரட்டை


                
சுகா எழுதிய 'மூங்கில் மூச்சு'த் தொடருக்குப் பின் விகடனில் தற்சமயம் ராஜு முருகன் எழுதும் தொடர் வட்டியும் முதலும் என்ற பெயரில் வருகிறது. சுகா அளவு சுகமில்லை. எனினும் ராஜு முருகன் தஞ்சைக்காரர் என்றதும் ஒரு சுவாரஸ்யம் வந்தது. தஞ்சையைப் பற்றிச் சொல்லும்போது சுகமாகப் படிக்கத் தோன்றியது.. தஞ்சையில் பதின்மப் பருவம் கடந்ததால் இந்த ஆர்வம்! கடைசி இதழில் 'ஞானம் வொயின்ஸ் கடையில் நின்று....' என்று படித்த போது அங்கிருந்த ஞானம் தியேட்டர் என்ன ஆனது என்ற கவலை வந்து விட்டது!  எத்தனை படம் பார்த்திருக்கிறேன் அங்கு... தஞ்சையை விட்டு வந்த பின் மீண்டும் அங்கு செல்லச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதால் இப்போது எப்படி இருக்கும் என்று சென்று பார்க்க ஆவல். யாகப்பா திரையரங்கம், மங்களாம்பிகா ஹோட்டல், சாந்தி ஸ்டோர்ஸ், ஆனந்த் பவன்.... எல்லாம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 
                      
அதே இதழில் கீழே உள்ள வரிகளையும் எழுதி இருக்கிறார்.
    
"சிரிப்பு, அழுகை, பிறப்பு, இறப்பு எனப் பாடல்களாலேயே ஆகிவிட்டது இந்த வாழ்க்கை. அதுவும் நாலு தலைமுறைக் கண்ணீரையும் புன்னகையையும் இந்தப் படுபாவி இளையராஜா எடுத்துக் கொண்டார்"
                
எனக்கும் இளையராஜா பிடிக்கும். என்றாலும் முதல் முறை இந்த வரிகளைத் தாண்டிய உடன் தடுக்கி, மறுபடி படித்தேன். பிடிக்கிறது என்று சொல்லத்தான் அந்த வார்த்தைப் பிரயோகம் என்றாலும்.............. கொஞ்சம் நெருடுகிறது.
                       
சுகாவும் இளையராஜா பற்றி சிலாகித்து எழுதி இருக்கிறார். அவரை அவரின் இரண்டாம் வாத்தியார் என்னும் வகையில் அவரின் வயலின் ஆசான் சொல்வது போல, தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரைக் கண்டதும் அங்கிருந்த அதிகாரி - ஜி ராமனாதனின் உறவினர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு மரியாதை செய்ததோடு காலில் விழுந்து வணங்கியதாக எழுதி இருக்கிறார். 
-------------
    
சென்ற வாரம் பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் பற்றிப் படித்த போது, செய்திச் சேனல்களில் பார்த்த போது பதைத்தது.        
                    
ஒரு தனியார் நிறுவனத்தில் தீயணைப்புத் துறை நடத்திய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒத்திகையில் நடந்த அசம்பாவிதம். ஆபத்து நேரத்தில் நடந்து கொள்ள வேண்டிய ஒத்திகை என்று சொல்லி அந்த நிறுவனத்தின் ஒரு பெண் அதிகாரியை அவருக்கு விருப்பமில்லாத போதும் வற்புறுத்தி பலவந்தமாக மாடியிலிருந்து கயிறு வழியாக இறங்கச் சொல்லி ஒத்திகை தொடங்க, பலமில்லாத அந்தக் கயிறு அறுந்து விழுந்து தலையில் அடிபட்ட அந்த பெண் அதிகாரி அங்கேயே இறந்து போனார்.
                     
என்ன அநியாயம்.... என்ன பொறுப்பின்மை... இது பச்சைக் கொலை இல்லை...? இதை நடத்தியவர்களுக்கு தண்டனை ஏதும் உண்டா?   
-------------------      
                 
விகடன் பற்றி இன்னொரு தகவல். சென்னையில் மட்டும் வெளியாகும் விகடனின் இனிப்பான 'என் விகடன்' புத்தகத்தில் சென்னைப் பதிவர்களை (மட்டும்) அறிமுகப் படுத்தத் தொடங்கி உள்ளார்கள். கேபிள் சங்கர், ஆதிஷா, சென்ற வாரங்களில் அறிமுகப் படுத்தப் பட்டிருந்தனர். இந்த வாரம் லக்கிலுக் யுவகிருஷ்ணா.
                  
நீங்கள் சென்னைப் பதிவராக் இருக்கும்பட்சத்தில் "வாரம் ஒரு வலைப் பதிவர்" நீங்களும் உங்கள் ப்ளாக்கும் இடம்பெற உங்களைப் பற்றிய சுய குறிப்பு, உங்கள் வலைப் பதிவின் முகவரி, உங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை chennai@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் தட்டச் சொல்கிறது விகடன்.
        
ரெடி...ஜூட்...    
====================
                
அரசியலிலேயே குளிக்கும் துக்ளக் பத்திரிகையில், சமீபத்தில் இரண்டு தொடர்கள்  ஆரம்பம். ஆன்மீகப் பிரியர்களுக்கு வேளுக்குடி கிருஷ்ணனின் 'ஸ்ரீமத் பாகவதம்', வாலி எழுதும், எம் ஜி ஆருடனான தன் அனுபவங்களைச் சொல்லும் தொடர் ஒன்று. 
     
துக்ளக்கில் வந்த கேள்வி பதிலில் ஒரு சுவாரஸ்யம்.
    
பெங்களூர் மல்லேஸ்வரம் மர்கொசா சாலையில் ராஜ்போக் என்ற ஹோட்டலில் தங்கம் கலந்த தோசை 1011 ரூபாய்க்கும் வெள்ளி கலந்த தோசை 151 ரூபாஈகும் விற்கப் படுவது குறித்து ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். 
    
எம் ஜி ஆர் தங்கபஸ்பம் சாப்பிடுவார் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். தங்கத்தை அப்படியே தோசையில் போட முடியுமா, அதையும் சாப்பிடுவார்களா, இவ்வளவு விலை கொடுத்து, என்ன பயன் என்றெல்லாம் தோன்றியது.

தகவல் உண்மையா பொய்யா என்று கே ஜி கௌதமன், ராமலக்ஷ்மி, ராம்வி போன்ற பெங்களூரு வாசிகள்தான் சொல்லவேண்டும்! (R. கோபியைக் கேட்கலாம். அவரும் பெங்களுருதான். ஆனால் அவர் இதையெல்லாம் படிப்பதில்லையே...!!)     
==========================================
        
கல்கியில் ஆறு வாரங்களாக நாகூர் ரூமி எழுதும் தியானம் பற்றிய தொடர் ஆரம்பித்திருக்கிறது. சுவையாகச் செல்கிறது. நாகூர் ரூமி எழுதிய 'அடுத்த வினாடி' யும், 'செலவைக் குறைங்க சார்' புத்தகமும் படித்திருக்கிறீர்களோ...    
==========================================
     
மார்ச் இரண்டாம் வாரத்தில் வெளியிடப் பட இருக்கும் 'டிஜிடல்' கர்ணனுக்கு ட்ரெயிலர் எல்லாம் வெளியிட்டு விளம்பரப் படுத்தப் படுவதை இட்லி வடை பதிவுகளில் பகிர்ந்திருந்தார்கள். அதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிவாஜியின் நண்பர் திரு வி என் சிதம்பரம் பேசியதாக 'ஜூவி'யில் படித்ததன் பகிர்வு. 
      
புட்டபர்த்தி பாபா ஒரு முறை திரு வி என் சிதம்பரத்திடம் சிவாஜி கணேசனை தான் பார்க்க விரும்புவதாகக் கூறினாராம். இவரும் சிவாஜியிடம் அதைச் சொல்ல அவரும் சந்தோஷமாகச் சம்மதித்து, இருவரும் சந்திக்க ஏற்பாடானதாம். பாபாவைச் சந்திக்க வருபவர்கள் வர இரண்டு வழி உண்டாம்., முக்கியமானவர்களுக்கு குறுகிய நடைவழி. மற்றவர்களுக்கு நீண்ட நடை வழி.  வி என் சி யுடன் சென்ற சிவாஜியை பாபா நீண்ட நடை வழியில் வரச் சொன்னாராம். ஒரு மாதிரி உறுத்தினாலும் காட்டிக் கொள்ளாமல் அந்த வழியிலேயே நடந்து போய் பாபாவைச் சந்திக்க, அவர் சிவாஜியைத் தழுவிக் கொண்டு விட்டுச் சொன்னாராம்..."உங்கள் நடையைப் பார்த்து ரசிப்பதற்காகத்தான் நீண்ட வழியில் வரச் சொன்னேன்..!"  
=========================================