Mohammad Rafi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Mohammad Rafi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24.12.10

டிசம்பர் 24




சிலருக்குதான் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் இந்த கொடுப்பினை வாய்க்கிறது.

டிசம்பர் 24.

ஆயிரமாயிரம் மக்கள் மனதை கொள்ளை கொண்ட இரண்டு சாதனை இந்தியர்கள் இந்த தினத்தோடு சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்.

எம் ஜி ஆர்

டிசெம்பர் 24 தேதியில் மறைந்தவர்.

இவர் அரசியல் வாழ்வை விட்டு விடுவோம். 1935 இல் சதிலீலாவதியில் தொடங்கிய இவர் திரை வாழ்வு எந்த உயரத்துக்கு வந்தது என்பதை நாடறியும்.

எம் ஜி ஆர் ஃபார்முலா என்ற ஒன்று பின்னாளில் ஸ்பெஷலாக அறியப் படும் அளவு இவரது திரைப் படங்கள் அமைந்தன. இவர் பாடல் காட்சிகளில் நடிக்கும் ஸ்டைலே தனிதான்...இரண்டு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் வைத்து தொடங்கி வானத்தைக் காட்டி இவர் பாடும் ஸ்டைல் தனி. பெரிய நடனம் என்று கிடையாது. பெரிய நடிப்பு என்று கூட ஒன்று கிடையாது. எது இவரை தமிழக மக்களின் மனம் கவர்ந்த வெற்றி நாயகனாக வைத்திருந்தது என்பது ஆச்சர்யம்.


அவர் படங்களில் அவர் சொன்ன ஸ்பெஷல் ஹீரோயிசம். அவர் பட ஹீரோ குடிக்க மாட்டார்...தவறு செய்ய மாட்டார். தவறு செய்பவர்களை சும்மா விட மாட்டார். பகுத்தறிவுப் பாசறையில் வந்த இவர் படத்தில் கடவுள் என்றால் என்ன என்று விளக்கம் கொடுக்கும் பாடல் ஒன்று உண்டு. "கடவுள் இருக்கின்றார் கண்ணுக்குத் தெரிகின்றதா..." காற்று கண்ணுக்குத் தெரிகின்றதா, உணர முடிகிறது இல்லையா அதே போலதான் கடவுள்' என்ற கருத்தில் வரும் பாடல்.

இவர் பாடல்களில் பலப்பல நல்ல பாடல்கள். எல்லாவற்றையும் சொல்ல முடியாது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்கலீல் ஒன்று
"கண் போன போக்கிலே கால் போகலாமா..."

அதிலும் குறிப்பாக,
"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்.."

அடுத்த இரண்டு வரிகளையும் எனது நோட்டில் எல்லாம் எழுதி வைத்திருந்தேன்...

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்..."

நிறைய நல்ல பாடல்கள் சொல்லலாம்...ஆனால் அடுத்த ஆளைப் பற்றி சொல்ல வேண்டுமே...!

முஹம்மத் ரஃபி.


டிசம்பர் 24 தேதியில் பிறந்தவர்.

இவர் குரல் கடவுளின் கொடை.

1924 ஆம் ஆண்டு பிறந்து 1980 ஆம் ஆண்டு மறைந்தவர்.

இவரைப் பற்றி சொல்ல வேண்டுமானால் இவர் பாடல்கள் கேட்டிருக்க வேண்டும். ரொம்பப் புகழ் பெற்ற பாடல்களாக சொல்ல வேண்டுமென்றால்,


சுராலியா ஹை தும் மேரே தில் கோ ...யாதோன் கி பாராத் பாடல்
கியாஹுவா தேரா வாதா .......................ஹம கிசிசே கம் நஹீன் பாடல்.
குங்குநாரஹிஹை ..................................ஆராதனா படப் பாடல்

தமிழ் நாட்டில் கூட தெரிந்திருக்கக் கூடிய பாடல்களைச் சொல்ல மேலே சொன்ன பாடல்கள். இவர் பாடிய நல்ல பாடல்கள் லிஸ்ட்டைச் சொல்ல இந்தப் பதிவு போதாது. தோஸ்த் படத்தில் இவர் பாடிய 'ஆவாஜ் மேன தூங்கா...' பாடல் கேட்டுப் பாருங்கள்.


எல்லோரும் கேட்டிருக்கக் கூடிய ஒரு பாடல் "ராமையா ஒஸ்தாவையா..."

பாடல் இணைக்க முடியவில்லை. சில தொழில் நுட்பக் கோளாறுகள்! பாடல்களை மனதில் நீங்களே பாடிப் பாருங்கள்! தெரிந்த பாடல்களை மனத்திலும் பின்னூட்டத்திலும் அசை போடுங்கள்!

படங்கள் உதவி - நன்றி கூகிள், விக்கி, சுலேகா.காம்.