சென்ற மார்ச் இருபத்தேழாம் தேதி. (2013).
காலை மணி நாலரை.
சென்னை பூங்கா இரயில் நிலையம்.
இரண்டாவது பிளாட்ஃபார்ம்.
(குரோம்பேட்டை செல்ல) இரயிலுக்காகக் காத்திருந்த போது, இரயில் நிலைய சிற்றுண்டி சாலையில், ஒருவர், பாக்கு இடிக்கும் சிறிய கல் உரல் ஒன்றில் எதையோ பொடி செய்து கொண்டிருந்தார். அது என்ன என்று ஆராய அருகில் சென்றேன். கண்டுபிடிக்க முடியவில்லை. அவரிடமே, அது என்ன என்று கேட்க நினைத்த மறுகணம், அவரை காபி, டீ விற்பவர் கூப்பிட, அவர் அவசரமாக அங்கே சென்று விட்டார்!
அதற்குள் நான் செல்லவேண்டிய இரயிலும் வந்துவிட்டது.
வேறு வழியில்லாமல், இந்த மர்மத்தை படம் எடுத்துக்கொண்டு, ஓடிச் சென்று வண்டியில் ஏறி உட்கார்ந்தேன்.
எதை பொடி செய்திருப்பார்?
கற்பனைக் குதிரை ஓட்டுபவர்கள் ஓட்டுங்கள். கருத்துரை பதியுங்கள்!