kettadhu kettapadi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kettadhu kettapadi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.9.15

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம். + கேட்டது கேட்டபடி 6/7




1)  ஆறு வயதில் கிராமத்துக்கே ரோல் மாடலாக இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்!  சானியாவின் பெருமையில் அர்த்தம் உண்டு.




2)  சுய அனுபவம் சமுதாயத்துக்குப் பாடுபடும் எண்ணத்தை விதைக்கிறது.  மும்தாஜ் போல!  அதையும் செயல்படுத்த வேண்டுமே..  நாலுபேருக்கு நல்லது செய்யும் மனுஷி.





 
3)  A 4,818 வயது மனிதர்,  120வயது மனிதர்...  இதெல்லாம் எங்கு?  வாக்காளர் பட்டியலில்!  18 வயதுக்குக் கீழ் இருப்பவர்களாகவும் பலரைச் சொல்லி இருக்கிறார்களாம்.  இதைச் சரிப்படுத்த முனைந்திருக்கும் 66 வயது P G பட்.





 
4)  நடனமாடிய குழந்தைகளின் பாதங்களை அவ்வப்போது குத்தியது, இது அவர்களுக்கு வலியை ஏற்படுத்தியதோ இல்லையோ மேடையில் விழா தலைவராக அமர்ந்திருந்த ஒருவருக்கு வலியை ஏற்படுத்தியது.




அவர் யாரையாவது கூப்பிட்டு நடனத்தை நிறுத்திவிட்டு கற்களை அப்புறப்படுத்தச்சொல்லி இருக்கலாம், யாராக இருந்தாலும் அப்படித்தான் செய்து இருப்பார்கள் ஆனால் அவரே விறுவிறுவென எழுந்துவந்து குழந்தைகளை ஒரு ஒரமாக இருக்கச்சொல்லிவிட்டு துருத்திய கற்களை எந்த கவுரவமும் பார்க்காமல் குனிந்து பொறுக்கி ஒரு
ரமாக போட்டுவிட்டு தரையை செம்மைப்படுத்திவிட்டு பிறகு குழந்தைகளை ஆடவைத்தார்.   பி.சங்கர் மகாதேவன்.



5)  எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் மனைவி திருமதி சீதாலட்சுமி.





6) விதைக் kalaam குழுவினருக்கு நம் பாராட்டுதல்களைத் தெரிவிப்போம்.





7)  நல்ல மனம் வாழ்க.. உலகம் போற்ற வாழ்க.. எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற தொலை தொடர்பு நிறுவன அதிபர், தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதில் அகதிகளை குடியேற்ற திட்டமிட்டுள்ளார். அத்தீவுக்கு, இறந்த துருக்கி சிறுவன் 'அயலான்' பெயரை சூட்டவும் அவர் முடிவு செய்துள்ளார்.






9)  இலவசமாகத் தருகிறார் என்றதும், நான் கூட மக்கள் இதை உபயோகப் படுத்திக் கொள்வார்களே தவிர, இதனால் அர்த்தமில்லை என்றுதான் நினைத்தேன்.  நல்லெண்ணத்தைப் பரப்பச் சொல்கிறார்,  தேவையில் இருப்போருக்கு உதவச் சொல்லி, அதைத்தான் விலையாகக் கேட்கிறார் என்றதும் மதிப்பு வந்தது.  மிராஜுதின் சையத்.






 
10)  சென்னபுரி அன்னதான சமாஜத்தைப் பாராட்டுவதா?  அறியத்தந்த நடராசன் அவர்களை பாராட்டுவதா?





11)  இப்படியும் ஒரு அடேடே பள்ளி!  மதுரை அவனியாபுரம் அரசு நடுநிலைப் பள்ளி.




12)  விளையும் பயிர்.  அனிருத் கதிர்வேல்




 

13)  நெகிழ வைக்கிறார் திவ்யா.  பாராட்டுகளும், வாழ்த்துகளும்.







======================================================================





கேட்டது கேட்டபடி 6/7 





அந்த மறுநாளும் இதோ வந்துவிட்டது. 
              
அது சனிக்கிழமை. 
            
மா ஜா எண்டர்ப்ரைசஸ் நிறுவனத்திற்கு அரை நாள் வேலை, அரை நாள் லீவு. மறுநாள் ஞாயிறு என்பதால் அலுவலகத்தில் எல்லோருமே ரொம்ப உற்சாகமாகக் காணப்பட்டனர். 
           
மூன்று மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று. 
            
'முகுந்தன் எப்போது வருவான்?  அவனிடம் நாமே பேச்சை ஆரம்பிப்பதா அல்லது அவன் பார்த்து மன்னிப்புக் கேட்கட்டும் என்று இருந்துவிடுவதா? ' ஜானகிக்கு ஒரே குழப்பம். 
              
மாலை நாலரை மணிக்கு டாக்சி வந்தது. அதிலிருந்து கோட் சூட் அணிந்து, டை, கூலிங் கிளாஸ் சகிதம் இறங்கிய முகுந்தனை மாடி பால்கனியிலிருந்து நோட்டமிட்ட ஜானகியின் மனம், 'அட ஆள் எப்படி மாறிப் போயிட்டான்! முந்தி இருந்த முகுந்தன் எங்கே? இப்போ இருக்கின்ற இந்த முகுந்தன் ஹிந்தி சினிமா ஹீரோ மாதிரி ஆயிட்டானே! ' என்று எண்ணியது. 
               
மாடி அறையிலிருந்து கீழே முகுந்தன் பேசியது எல்லாம் நன்றாகக் கேட்டது. அந்த வெண்கலக் குரல் மட்டும் மாறவே இல்லை. 
              
"நாராயணன் ! வெந்நீர் ரெடியா இருக்கா? முதல் விஷயமா குளிக்கணும். பார்க் ஹோட்டல் பாத் டப் குளியல் பிரயோசனமே இல்லை. சின்னம்மா எங்கே? " 

"சின்னம்மாவை ஏன் தேடறீங்க?" 
     
(தொடரும்)

10.9.15

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் & கேட்டது கேட்டபடி 4/7



வாரப் பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பி அந்தந்தப் பத்திரிகாசிரியரின் பதிலுக்காய்க் காத்திருப்போம்.  இங்கு நாமே ராஜா... நாமே மந்திரி!  எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லிக் கலக்கலாம்!


முன்னர் 'எங்கள் ப்ளாக்'கில் வந்து கொண்டிருந்த ஒரு பகுதிதான் இது.   பயப்பட வேண்டாம்!  மீண்டும் தொடங்கவில்லை.  அவ்வப்போது கேள்விகள் வரும்..  ஆனால் வாரா வாரம் தொடராக வராது!  ஏனென்றால், ஏற்கெனவே, திங்கள், வெள்ளி, சனி, ஞாயிறு தொடர்களால் நிரம்பி இருக்கிறது!
 
ரெடியா....  ஜூட்....!
 

கேள்விகள் :


1)  முதலாளிகளிடம் இருக்கும் பணம் அல்லது தொழிலாளிகளிடம் இல்லாத பணம் - எதற்கு சக்தி அதிகம்?
 
 
2)  இரண்டு நண்பர்கள்.  ஒருவர் ஈஃபில் டவர் உச்சியில்.  மற்றவர் அதன் அடியில், அல்லது பத்து மீட்டர் உயரத்தில்.  இருவருக்கும் சூர்யோதயம் ஒரே நேரத்தில் தெரியுமா?
 
 
3)  ஹர்திக் படேல்?
 
 
 
====================================================================

 கேட்டது கேட்டபடி 4/7


டிரைவர் நாராயணன் வந்தார். 

" நான் ஏர் போர்ட் போகின்றேன். முகுந்தன் ஐயாவை அழைத்து வருவதற்கு. நீங்க வரீங்களா?"  

"நான் வரவில்லை. ஒரே தலைவலியாக இருக்கு. நீங்க போய் கூப்பிட்டு வாருங்கள். எத்தனை மணிக்கு கோலாலம்பூர் பிளைட் அரைவல்?" 



"இரவு மணி எட்டு பத்துக்கு என்று சொன்னார்கள்." 

"எந்தக் கார் எடுத்துக்கிட்டுப் போகப்போறீங்க? " 

" ஸ்விப்ட் கார்." 

"இருங்க கார் சாவியைக் கொண்டு வந்து தருகிறேன்." 
      
கார் சாவி வளையத்தில்,  மிக விரைவாக அந்த ரெக்கார்டிங் டிவைஸ் மாட்டப்பட்டு, ஆன் செய்யப்பட்டு,அது நாராயணனிடம் கொடுக்கப்பட்டது.  
நாராயணன் அதை கவனிக்கவில்லை. சாவிக்கொத்தில் இருக்கின்ற பிளாஸ்டிக் பட்டை என்று நினைத்தாரோ என்னவோ. 
         
"முகுந்தன் வீட்டுக்கு வந்து சேரும்பொழுது, நான் தூங்கிக் கொண்டிருந்தால் என்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம். கார் சாவியை, இந்த கீ ஸ்டாண்டில் மாட்டிவிட்டு, நீங்க வீட்டுக்குப் போகலாம்." 
             
"சரி" என்று கூறியபடி, காரை நோக்கிச் சென்றார் நாராயணன். 
                
(தொடரும்)