இந்த நீண்ட லாக் டவுன் காலங்களில் முதல் சில நாட்கள் டிப்ரெஷனிலேயே கழிந்தன. பின்னர் சில த்ரில்லர் வகையறா படங்கள் அவ்வப்போது அமேசான் ப்ரைமிலும் நெட்ப்ளிக்சிலும் சில படங்கள் பார்த்திருக்கிறேன். அப்புறம் படங்கள் பார்க்கவும் மூட் வரவில்லை!
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
சாண்டில்யன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாண்டில்யன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10.9.20
27.11.10
சொல்ல முடியுதா பாருங்க...
பிரபல எழுத்தாளர்கள் எழுதிய எத்தனையோ கதைகளைப் படித்திருப்போம். கதைகள், எழுத்தாளர்களை மறக்க முடியாதது போலவே கதா பாத்திரங்களையும் மறக்க முடியாது. பெர்ரி மேசன், சி ஐ டி சந்துரு துப்பறியும் சாம்பு, சங்கர்லால், இன்ஸ்பெக்டர் வகாப், கணேஷ் - வசந்த், போன்ற கேரக்டர்களை மறக்க முடியாது. படைத்த எழுத்தாளர்களையும் சொல்லி விடுவீர்கள். கீழே உள்ளவற்றைப் படித்து, யார் எழுதியது, எந்தக் கதை என்று நினைவு படுத்த முடிகிறதா என்று பாருங்களேன்....
!) அரை ப்ளேடு அருணாசலம், பீமா ராவ், ரசகுண்டு.... இந்த துணைக் கேரக்டர்களும் மிக பிரபலமானவர்களே...உங்களுக்குத் தெரியாததா...!யார் எழுத்தாளர்?
2) "அச்சமே கீழ்களது ஆசாரம்" என்று அடிக்கடி சொல்லும், அதுவும் மாதவியிடம் சொல்லும் கோபக்கார நாடகாசிரியர் - கதா நாயகன் - முத்துக் குமரன்...அவனது பினாங்கு நண்பன் மற்றும் ஸ்பான்சர் கோபால்..எந்தக் கதையில்? யார் எழுதியது?
3) சுஜாதா கதைகளிலிருந்து ஒன்றிரண்டு கேள்விகள்..
(அ).ஒரு குறிப்பிட்ட வார்த்தையைச் சொல்லும் போது குண்டு வெடித்து குற்றம் நிகழ்வது போல இரண்டு கதைகள் (எனக்குத் தெரிந்து!)... என்னென்ன?
(ஆ) சென்னையையே கலக்கிய அந்த மாபெரும் குற்றவாளியை, கொலைகாரனை கணேஷ் வசந்த் பிடித்தும் கூட 'நீ ஒன்றுமே செய்யவில்லை' என்று சொல்லி விட்டு விடுகிறார்கள். வசந்த்தே கூட எதிர் பாராத திருப்பம் அது... எந்தக் கதையில்?
(இ) சுஜாதா சினிமாவுக்காகவே எழுதிய முதல் கதை எது? அவரது எந்தக் கதை படமாக்கப் பட்ட விதத்தின் அதிருப்தியில் 'இவைகளை திரைப் படமாக எடுக்க யாரும் கேட்க முடியாது' என்று என்னென்ன கதைகள் எழுதினர்?!! அதில் ஒரு கதையில் வரும் வசனம் "ஆச்சாரியாருக்கு வடை வாங்கிக் கொடுத்தால் நம்ம கட்சிக்கு வந்துடுவார்"
4) இப்போது பாலகுமாரன் பற்றி சில புதிர்கள்...! தெரு விளக்கு என்று எழுதாமல் மிக அழகான கவித்துவமான தலைப்பு. என்னது?
(ஆ) தரிசனம் திரைப் படத்தில் டி எம் எஸ் - ஈஸ்வரி பாடிய பாடலின் ஆரம்ப வரிகளில் ஒன்று, என்ன தவம் செய்தேன் படத்தில் எஸ் பி பி சுசீலா பாடிய அழகா...ன பாடலின் ஆரம்ப வரிகளில் ஒன்று என தலைப்பு.
(இ) தொடர்கதைகளில் எழுத்தாளர்கள் உபயோகப் படுத்தும் வரியில் ஒரு கதைத் தலைப்பு ..!
5) மணியனின் கதை. மறக்க முடியாத தலைப்பு. . மாயாவின் அழகிய ஓவியங்களுடன் விகடனில் வந்தது.. உமா, ஆனந்தன் கதா நாயகி, நாயகன். சந்தர்ப்பத்தால் பிரிந்த காதலர்கள், குழந்தை பெற்ற பிறகு இணையும் கதை.
6) பெயர் இல்லாமல் அல்லது சொல்லாமல் இடையில் புள்ளி வைத்த (!) இரண்டு மூன்று எழுத்துக்கள் மட்டுமே கொண்ட எழுத்தாளர்கள்.
7) பிரபல எழுத்தாளர் ராஜேந்திரகுமார் இந்தக் கதையில் தான் முதன் முதலில் அவரது அடையாள வார்த்தையான "ஙே" உபயோகப் படுத்தினார்.
8) ராஜாஜி, மகரிஷி, புஷ்பா தங்கதுரை எழுதிய எந்த நாவல்கள் படமாகி உள்ளன?
9) இதயச்சந்திரன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், பூவழகி, ப்ரம்மானந்தர்...எந்தக் கதை மாந்தர்கள்?
10) பல வருடங்களாக தமக்குச் சமையல்காரனாக இருந்தவரையே கைது செய்யச் சொல்லும் சங்கர்லால், வீட்டில் உள்ள கிழவியின் முகத்திரையை அகற்ற.... உள்ளே அழகிய இந்திராவின் முகம்..... எந்தக் கதையில்...யார் எழுதியது?
இந்தக் கால எழுத்தாளர்கள் என்று யாரையும் சேர்க்கவில்லை. இப்போது கேட்டிருப்பதும் எப்போதோ படித்ததை நினைவில் வைத்துதான்.. பொழுது போக வேண்டுமில்ல!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)