5.4.20

ஞாயிறு : மலர்களே, மலர்களே!




அம்பயர்கள்  பிட்ச்  இஸ்பெக்ஷனுக்குப் போவது போல ....



மழை விட்ட மாதிரி இருக்கு ... வாங்க..



நந்தவனத்தைப் பார்த்து விடுவோம்.



ஒரு செடியில் த்னை நிறங்கள்!


குழந்தைகள் இருக்குமிடத்தில் வேண்டாம் ரொம்பத்தான் குத்துது.


இந்த மஞ்சள் பூ எங்கும்...



என்ன பூ?



த்யானமெல்லாம் பண்ணவேண்டாம்.. ஒரு சுற்று போதும்.






ஈரமான ரோஜா


சிறார் மனத்தைக் கவரும் காட்சி?



இதுவா?


ஊ ம் ஹூம்


இதே... இதே ...


மஹா ஜனங்களே.....பந்துக்களே




நிஜமா? சிலையா?



ஒற்றை செம்பருத்தி



ஒரு மலரில் இரு கலர்கள்.



என்னே ஒரு பாதுகாப்பு!






போட்டோகிராஃபர் ஏன் மறைந்து கொள்கிறார்?


ஓஹோ!


============================================

விடுமுறைதின பொழுதுபோக்கு : 

வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள் : சுட்டிகளின் மீது சொடுக்கி, படங்களைப் பாருங்கள். 

படம் A  (சுட்டி) 

படம் B (சுட்டி) 

============================================

83 கருத்துகள்:

  1. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்

      துரை செல்வராஜு சார்.... இதுவும் மேலே உள்ள குறளும் முரண்படுதா?

      நீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜு ஸார்... வாங்க..

      நீக்கு
  3. எங்கே போனாலும் நமக்கென்று ரெண்டு செல்லங்கள் கிடைக்காமலா போகும்!.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே... அவைகளுக்கும் நம்மை விட்டால் யார் இருக்கா?

      நீக்கு
  4. சுட்டி எல்லாம் முன் அனுமதி இல்லாம தெறக்காதாமே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப சுட்டியா இருக்கும் போலேருக்கே்.்

      நீக்கு
    2. இப்போ திறக்கும் என்று நினைக்கிறேன். google drive sharing option சரி செய்திருக்கிறேன்.

      நீக்கு
  5. அன்பு ஸ்ரீராம், அன்பு துரை இன்னும் வரப்போகிறவர்களுக்கு இனிய காலை வணக்கம்.

    பூக்களின் படங்கள் அத்தனையும் அருமை.
    நல்ல போஸ் கொடுக்கிறாரே அந்தப் பெண்.
    மழைத்தரை மிக அருமை./
    செல்லங்களும் நன்றாகப் போஸ் கொடுக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா... வாங்க.. செல்லங்களின் ஒவ்வொரு அசைவுமே நல்ல போஸ்தான்... இல்லை?

      நீக்கு
  6. கையைத் தூக்கிக் காண்பிப்பது சிலைதான். இல்லையா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையா? ஆமாமா?

      நீக்கு
    2. விரலில் உள்ள மோதிரமும், துப்பட்டா வழியாகத் தெரியும் செடியும் பார்த்தவர்களுக்கு சிலையா இலையா என்று தெரிந்திருக்கும்.

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், நிலைமை விரைவில் சரியாகப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா..்். வணக்கம், நல்வரவு, நன்றி.

      நீக்கு
  8. சுட்டியின் மீது சொடுக்கினால் இதான் வருது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் You need permission

    Want in? Ask for access, or switch to an account with permission.
    Learn more

    You are signed in as sivamgss@gmail.com.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ சொடுக்கிப் பாருங்க. வரவில்லை என்றால் எனக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்புங்க.

      நீக்கு
  9. இரண்டுக்கும் இதான் பதில். இது இரண்டாவதுக்கான பதில், அதே, அதே, சபாபதே! You need permission

    Want in? Ask for access, or switch to an account with permission.
    Learn more

    You are signed in as sivamgss@gmail.com.

    பதிலளிநீக்கு
  10. கூகிள் ட்ரைவ் ஆக்செஸ் டினைட் என்கிறது.

    பதிலளிநீக்கு
  11. காசு சோபனாவின் விடுமுறை தினப் பொழுது போக்குப் பதிவும் வரவில்லை. நேற்றே சொல்ல நினைத்து மறந்துட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சோதனை... அதாவது சோதிக்கப்பட்ட முயற்சி!

      நீக்கு
  12. படங்கள அழகு ஜி
    சுட்டி இயக்கமில்லையே...

    பதிலளிநீக்கு
  13. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. அதுவும் செல்லங்கள் மற்றும் பூக்கள் படங்கள் அழகு!

    வலது புற க்ரோட்டன்ஸ் இலைகள் அதற்கு மேல் இருக்கும் அந்தப் பூ படம் மிக அழகாக எடுக்கப்பட்டிருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. பி படத்தில் ஒரு கறுப்புக் கலர் வளையல் உள்ளது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவுதானா?

      நீக்கு
    2. கௌ அண்ணா நெட் படுத்தல் இருங்க வரேன் இன்னும் இருக்கான்னு பார்த்து வரேன்..

      கீதா

      நீக்கு
    3. பாருங்க, பாருங்க !

      நீக்கு
  15. Out of focus படங்கள் ஏராளமாகத் தெரிவது என் கண்ணுக்கு மட்டும்தானா?

    ஒற்றைச் செம்பருத்தி என்ற தலைப்பில் உள்ள படத்தில் மூன்றுக்கு மேல் செம்பருத்திகள் தெரிவதும் எனக்கு மட்டும்தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தானா ? தானா ? யாமறியோம் பராபரமே!

      நீக்கு
    2. எனக்கும் இதே கேள்வி தோன்றியது. சும்மா குற்றமே கண்டுபிடித்து கொண்டிருக்க வேண்டாம் என்று நினைத்தேன். நீங்கள் என் தொண்டையிலிருந்து வார்த்தையை பிடுங்கி விட்டீர்கள்.

      நீக்கு
    3. இந்த பா.வெ மேடம் (சாரி சாரி பெங்களூர் பானுமதி வெங்கடேச்வரன் அவர்கள்) பின்னூட்டத்தில் எனக்குச் சொல்கிறாரா இல்லை எ.பி. ஆசிரியர்களுக்கா?

      நீக்கு
    4. பதிவாசிரியரின் விளக்கம்:

      ஒற்றை செம்பருத்தி relates to the variety and *NOT*a single flower.

      நீக்கு
    5. நெல்லை மீ க்கும் தோன்றியது. இருந்தாலும் நல்லதைச் சொல்லிவிட்டுப் போவோமே!!! அந்தக் க்ரோட்டன்ஸ் இலைக் கொத்து வலது புறம் படமும், அதன் மேலே உள்ள பூ படமும் ஃபோக்கஸ் கவனம் இன்னும் இருந்திருக்கலாம் என்றாலும் கூட மற்ற படங்களை விட அழகாக எடுக்கப்பட்டிருக்கின்றன. பளிச்!

      முதல் படமும் கூட இன்னும் சற்று ஃபோக்கஸ் செய்து எடுத்திருக்கலாம் என்று தோன்றியது.

      கீதா

      நீக்கு
    6. பதிவாசிரியர் மேலும் சொல்வது :
      ஒற்றை மஞ்சள் செம்பருத்தி.

      நீக்கு
    7. //..ஒற்றை மஞ்சள் செம்பருத்தி..//

      அது செம்பருத்தியா, மஞ்சள்பருத்தியா !?

      நீக்கு
    8. பொருத்திப் பாருங்கள் ஐயா!

      நீக்கு
    9. ஒற்றை செம்பருத்தி தானே இருக்கிறது.
      இன்னொன்று இட்லி பூ என்று சொல்வார்கள் அதுதான் இருக்கிறது.

      நீக்கு
    10. கீழே மூன்று செம்பருத்தி இருக்கிறது.

      நீக்கு
    11. நிஜமா சிலையா என்ற படத்தில் ஒற்றை செம்பருத்தி மஞ்ச்சள் பூ இருக்கிறது.

      வரிகள் படங்களின் கீழ் சரியாக வரவில்லை.

      நீக்கு
  16. இந்த வார புதிரும் நல்லால்லை. தேதியில் 0 வின் குறுக்கே கோடு, இரண்டு வெள்ளை மலர், காவி சிவப்பு சாயத்தில் (இடது புறம்) என்னவோ வரைந்திருப்பது, அதன் அருகிலேயே பச்சைச் சாயம், மாவிலை மேல் பகுதியில் பூ என்று சரியா ஐடென்டிஃபை பண்ணிச் சொல்லக்கூடிய குமுதம் புதிர் (இரண்டாவது படத்தில் கிழவர் மீசை, அவருக்கு மேல் வால்கிளாக்கில் ஒரு முள் இல்லை என்பது போன்று). மாதிரி இல்லாத்து ஏமாற்றமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் வாரங்களில் இன்னும் மெருகூட்ட முயற்சிக்கிறோம். நன்றி.

      நீக்கு
  17. நிஜமா சிலையா படத்தில் ஜெ.ஜெயல்லிதா போன்று (அவருக்குப் பிறகு தீபா) வலது கையை யார் வைத்துக்கொள்ள முயன்றிருக்கிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைக் கண்டுபிடிப்பது ராக்கெட் சயன்ஸா? கிட்டத்தட்ட 6 வருடங்களாக (ஹா ஹா ஹா) ஞாயிறு படங்களில் வருபவர்தானே. ஒன்று அவர், இல்லைனா அவரோட பசங்க ஹா ஹா

      நீக்கு
    2. 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

      நீக்கு
  18. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    அனைத்துப் படங்களும், அதன் பொருத்தமான வாசகங்களும் எப்போதும் போல் அழகு.. அருமை.

    முதல் படமே நன்றாக மனதுக்கு அமைதி தரும் சூழலாக உள்ளது.

    அழகான மலர்களின் படங்களும், ஒரு செடியிலேயே அழகான நிறங்களையுடைய படமும், பாதுகாப்பான மலரின் படமும் அருமை.

    சுட்டிகளுக்குள் சென்றால், எனக்கு இப்போதைக்கு ஒரு கறுப்பு வளையல்தான் வித்தியாசத்தை காட்டுகிறது. இன்னமும் கவனிக்க வேண்டும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. எத்தனை நிறங்கள் (படம்) ஆகா...!

    வரையப்பட்ட ஒரு கருப்பு வளையம்(ல்) போல் ஒன்று, அதே போல் இன்னொன்று - கைப்பேசியில் அவ்வளவு தான் தெரிகிறது...

    கடைக்கு சென்று கணினியில் பார்க்க, இன்று வீட்டு நிர்வாகம் அனுமதித்தால், மேலும் சொல்லலாம்...!

    பதிலளிநீக்கு
  21. முதல் படம் அருமை. படங்கள் அதிகம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  22. கருத்துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. அந்த வளையல் போல இருக்கற படத்துல கீழ புழு போல ஒன்னு கறுப்புல...அப்புறம் மச மசன்னு ஒரு ப்ரௌன் மேல மஞ்சளா ஏதோ ஒன்னு அப்புறம் எக்ஸ்ற்றா வெள்ளைப் பூக்கள்...ஆரஞ்சு (கனகாம்பரம்??) பூக்கள் அப்புறம் அது என்ன பூஜ்ஜியத்துக்கு நடுக்கால ஒரு கோடு?!!! ஹா ஹா ஹா

    கௌ அண்ணா இப்படிப் படத்துல பெயின்ட் ஊஸ் சென்ஞ்சு போட்டுட்டு வித்தியாசம் எல்லாம் கேட்டா ஈசியாக்கும் அதுவும் ரெண்டு படத்தையும் மாத்தி மாத்தி பாக்கறப்ப பளிச் பளிச்சுன்னு இன்னொன்னு காட்டிக் கொடுக்குதே!!! ஹா ஹா ஹா ஹா.....ஒரே ஃபோட்டோ இரு வேறு வகையில் எடுத்திருந்தா கூட வித்தியாசங்கள் வருமே அப்படியாச்சும் போட்டு விடுங்க அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  24. எல்லா பூக்களும் அருமை ... அதிலும் அந்த கடைசி படத்தில் இருக்கும் மஞ்சள் சுடி "ரோசாப்பூ" .... பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு.. ஹி ...ஹிஹி!!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
  25. இரண்டு படத்தையும் பக்கத்தில் பக்கத்தில் திறந்து வைத்து, இரண்டு மூன்று முறை மாற்றி மாற்றி உடனே சொடுக்கிப் பார்த்தால்...

    எத்தனை வித்தியாசம்...?

    ஐயோ... இதற்கு தானா...?

    பாரதம் இன்றிரவு வல்லரசு ஆவது உறுதி...! ஹா... ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா !! நகைச்சுவையை இரசித்தேன். நன்றி!

      நீக்கு
  26. படங்கள் எல்லாம் அழகு
    அதற்கு கொடுத்து இருக்கும் வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  27. படங்கள் அனைத்தும் அழகு.ரசித்தேன்.
    இப்படி கண்ணுக்கு விருந்தை கொடுத்துட்டு, மூளைக்கு வேலை வச்சுட்டீங்களே நியாயமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா உண்மையா .... சொல்லப்போனா மூளைக்கு வேலை இல்லை கண்ணுக்கும் உற்றுநோக்கும் திறனுக்கும்தான்.

      நீக்கு
  28. அழகான படங்கள் சிறப்பான தொகுப்பு

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

    பதிலளிநீக்கு
  29. அழகான படங்கள்.

    படப் புதிர் - :) நான் வரல இந்த விளையாட்டுக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஏனுங்கோ இப்படி புதிர் என்று கேள்விப்பட்டாலே ஓடறீங்க!

      நீக்கு
  30. புதிர் தெரிகிறது.வித்தியாசங்கள் வரையப் பட்டிருப்பதால் பளிச்.

    பதிலளிநீக்கு
  31. ஏப்ரல் 5 இரவு 9 மணி Status Report :
    மின்விளக்குகள் அணைக்கப்பட்டு, உடன் தீபங்கள் ஏற்றப்பட்டன எங்கள் வீட்டு வளாகம் முழுவதும் உற்சாகமும் உத்வேகமும் ஒரு சேர. சிலவீடுகளின் பால்கனிகளில் வரிசையாக அகல் விளக்குகள் - பெண்கள், குழந்தைகளின் ஆர்வமான பங்களிப்பு - கார்த்திகைதான் முன்னரே வந்து சேர்ந்ததுபோல !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா மனக்கண்ணில் பார்த்து உங்களைப் போன்றே சந்தோஷப்படுகின்றேன். நான் இருக்கின்ற பகுதியிலும் அதே பங்களிப்பு.

      நீக்கு
  32. பூக்கள் எல்லோரையும் ஈர்க்கும் சுட்டி களில் ஒன்றில் புழு போல் தெரிகிறதே

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!