பழையாறை வடதளி
பழையாறை வட தளிக்கும் திருநாவுக்கரசருக்கும் என்ன சம்பந்தம் என்று சென்ற வாரம் கேட்டிருந்தேன். இதைப் புரிந்துகொள்வதற்கு முன்பு, மிகச் சுருக்கமாக, உங்கள் எல்லோருக்கும் தெரிந்த திருநாவுக்கரசர் வரலாற்றைப் பார்த்துவிடலாம்.
மருள்நீக்கியார் (எவ்வளவு அழகான பெயர் பாருங்கள்) தந்தை புகழனாருக்கும் தாயார் மாதினியாருக்கும் திருவாரூரில் பிறந்தார். அவருடைய சகோதரி திலகவதியாருக்கு, கலிப்பகையார் என்பவரை மணம் பேசி முடித்திருந்தார்கள். பல்லவர் படையில் வாதாபி போருக்குச் சென்ற கலிப்பகையார் போரில் உயிர் நீத்தார். நிச்சயம் செய்தவர் மறைந்த தைக் கண்டு, புகழனாரும் மாதினியாரும் உயிர் விட்டனர். திலகவதியார் உடன்கட்டை ஏறுவார் என்பதை உணர்ந்த மருள்நீக்கியார், தாம் தனியாக வாழவேண்டுமே என்பதால், திலகவதியாரின் மனத்தை மாற்றினார். தமக்கையாரால் வளர்க்கப்பட்ட மருள்நீக்கியார், நன்றாகப் படித்து, பாடலிபுரத்திற்குச் சென்று சமண நூல்களைக் கற்று, சமண சமயத்தைத் தழுவி தருமசேனர் என்ற பெயர் பெற்றார். தமிழகம் வந்து சமண சமயப் பரப்புரையில் ஈடுபட்டார். சிவபெருமான் ஆட்கொள்ளும் காலம் கனிந்தது. தருமசேனருக்கு சூலை நோய் தோன்றியது (வயிற்றுவலி). சமணசமயத்தின் ஔடதங்களும் மந்திரங்களு பலிக்கவில்லை. வயிற்றுவலி தாள முடியாமல், தமக்கைக்கு ஆளனுப்பி மருந்து கேட்டார்.. திலகவதியார் இது கண்டு மனம் பதைத்து சிவபெருமானை வேண்டினார். தமக்கையாரோ தான் சமண மடத்திற்கு வரமுடியாது என்றும் அவரை தன் இருப்பிட த்திற்கு அழைத்தார். அவரை அடைந்த தருமசேனருக்கு, விபூதி அளித்து, வீரட்டானம் கோயில் இறைவனை வேண்டுவாயாக என்று திலகவதியார் கூற, தருமசேனரும், வீரட்டானம் உறை சிவபெருமானை நோக்கி பதிகம் பாடுகிறார்.
கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே.
என்று தொடங்கும் பதிகத்தைப் பாடுகிறார்.
வீரட்டானத்தில் உறையும் சிவனே, என்னால் பொறுக்க ஒண்ணாத வயிற்று வலியை நீக்குவாயாக என்று வேண்டுகிறார்.
சிவபெருமான் அருளால் சூலை நோய் நீங்கியது. அசரீரி வாக்குக்கு ஏற்ப அவருக்கு நாவுக்கரசர் என்ற பெயர் ஏற்பட்டது. இது கண்டு பாடலீபுத்திர சமணர்கள், அரசன் மகேந்திரவர்ம பல்லவனிடம் புகார் கூற, அரசன் நாவுக்கரசரை அழைக்கின்றான். அவருக்கு பல்வேறு துன்பங்கள் அளிக்கின்றான். சுண்ணாம்புக் காளவாயில் போடுகின்றான், நாவுக்கரசரோ மாசில் வீணையும் பதிகம் மூலம் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கின்றார். அடுத்து விஷத்தைக் கொடுக்கிறான். அதுவும் நாவுக்கரசரை பாதிக்கவில்லை. பிறகு மதம் பிடித்த யானையை ஏவிவிடுகிறான். அப்பொழுதும் பதிகம் பாடியதால், யானை இவரிடம் வந்ததும் மதம் நீங்கிவிடுகிறது. அரசன் பிறகு இவரை கல்லில் கட்டி கடலில் போட்டுவிடச் சொல்கிறான். அப்போதும் அவர் மனதில் சிவனைப் பற்றிய பதிகம் பிறக்கிறது.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நல் துணை ஆவது நமச்சிவாயவே.
வேதங்களின் நடுவாக இருப்பது யஜுர் வேதம். அதில் இருக்கும் ருத்ரம், நமசிவாய எனும் மந்திரத்தைச் சொல்கிறது. அப்படிப்பட்ட புனிதமான வேதங்களை அருளியவனும், ஜோதி வடிவமாக இருப்பவனுமாகிய சிவ பெருமானின் பொன் போன்று இருக்கும் திருவடி இணைகளை நமது மனத்தில் வைத்து கையால் தொழுது வழிபட்டால், கல்லில் நம்மைக் கட்டிவைத்து கடலில் தள்ளினாலும், நமக்குப் பெரிய துணையாக ஆவது நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரமே என்று பாடல் சொல்கிறது.
அந்தக் கல்லோ மிதந்து திருப்பாதிரிப்புலியூர் அருகே கரைமீள்கிறது.
இந்த அதிசயங்களைக் கண்ட அரசன் மகேந்திர வர்ம பல்லவன், சைவ சமயத்தைத் தழுவுகிறான். திருநாவுக்கரசர் நாடெங்கும் திரிந்து சைவ சமயத்தைப் பரப்புகிறார், பல பதிகங்கள் இயற்றுகிறார். அப்படி இருக்கையில் பழையாறைப் பகுதியில் சமணர்கள் மிகுந்து சிவன் கோயிலை மறைத்து (லிங்கத்தை) அந்த இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றனர். அதற்காக உண்ணாவிரதம் இருந்து அரசனின் படைவீரர்களின் உதவியைப் பெற்று சமணர்களை அங்கிருந்து விரட்டி, சிவன் கோவிலை மீட்கிறார். (நான் ரொம்பவே சுருக்கமாக எழுதுகிறேன். ஆனால் வரலாற்றைப் படிக்கப் படிக்க வியப்பு. எப்படி சிவன் கோயிலை அவர்கள் சமணப் பள்ளியாக ஆக்கிக்கொண்டார்கள் என்பதெல்லாம்)
தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள்
நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே
அலையினால் பொழில் ஆறை வடதளி
நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே
இது பழையாறை வட தளியைப் பற்றிய பதிகம். வடதளி இறைவனின் அடியை நினைத்து நாம் உய்வோம் என்பது பாடல். (தலை எல்லாம் பறிக்கும் – சமணர்கள் மீண்டும் முடி வளரக்கூடாது என்று ஒவ்வொன்றாகப் பிடுங்கி எறிவார்கள். வலி பொறுத்துக்கொண்டு இதனைத் தவம் போலச் செய்வார்கள். ஆனால் பௌத்தர், கத்தியைக் கொண்டு மழித்தெடுப்பார்கள்)
என்னடா இது… துரை செல்வராஜு சாரின் தளத்திற்கு வந்ததுபோலத் தோன்றுகிறதா?
திருநாவுக்கரசர் வரலாற்றைப் படிக்கப் படிக்க மிக வியப்பாக இருக்கிறது. நான் கும்பகோணத்திலிருந்து திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருநாகை என்று பல தலங்களுக்குச் சென்றபோது வழியில் திருப்புகலூர் என்ற நுழைவாயிலைப் பார்த்தேன். அதில் அப்பர் முக்தியடைந்த தலம் என்று இருந்தது. அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ளவர்களிடம், அப்பரின் பிருந்தாவனம் என்பதுபோல இருக்கிறதா என்று கேட்தற்கு, அப்பர் இங்குள்ள இறைவனை வணங்கும்போது அப்படியே உடலோடு கருவறையில் மறைந்துவிட்டார் என்று சொன்னார்கள். அந்தத் தலத்தின் படங்கள் இன்னொரு சமயம். ஆனால் எனக்கு அந்தத் தலத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியமே.
இந்தப் பழையாறை வடதளி, மிகப் பழமையானது. சோழர் காலத்தில் நன்கு சீர் செய்யப்பட்டது.
நரசிம்மரின் உக்கிர கோலம் ஏன் அம்மன் கோவிலின் மண்டபத்தில் செதுக்கியிருக்கிறார்கள்? பொதுவாக நரசிம்மர் மற்றும் அனுமான் சிற்பங்கள் காவல் தெய்வங்களாகச் செதுக்குவது வழக்கம்.
சிறிய இடத்தில் அழகுறச் செதுக்கப்பட்டுள்ள விநாயகர்.
அவர் தம்பிக்கு இடம் இல்லாமலா? சிறிய இடத்தில் அழகுறச் செதுக்கப்பட்டுள்ள மயிலேறும் மரகதம்.
பழையாறை கோயிலுக்கு ஒரு முறை சென்றிருந்தபோது (பல முறை இந்தக் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். அதில் ஒரு முறை மிக மிக வயதான ஒரு பெண்மணி, உள்ளே கருவறை வரை சுத்தம் செய்து சிறிய விளக்கினை ஏற்றுவதைப் பார்த்தேன். பக்தி மனதிலிருந்து அதுவாகவே வரணும். நமக்கெல்லாம் எங்க?)
மண்டபத்தில் நின்றுகொண்டு என்னைப் பார்க்கிறாய். இருள் சூழ்ந்த பாதையில் உனக்கு ஒளியாக நான் இருக்கிறேன் என்கிறாரோ?
எங்களிடம் அனுமதி பெற்றுத்தானே இறைவனை தரிசிக்கச் செல்கிறாய்? நந்தி அப்படிச் செய்ய மறந்ததனால் எவ்வளவு வருடங்கள் தவம் செய்து தன் கஷ்டத்தை நீக்கிக்கொள்ள வேண்டி வந்தது என்பதை நந்திபுர விண்ணகரத்தைச் சேவித்துமா நீ அறிந்துகொள்ளவில்லை?
பழையாறை வட தளி சோமநாதஸ்வாமி தரிசனம்.
மங்கையற்கரசியின் பிறந்த ஊர் பழையாறைப் பகுதி. முதல் படம் பிற்காலத்தைய ஓவியம்போலத் தோன்றுகிறது.
இது கர்ணனின் தேர் அல்ல…. சாபத்தினால் மண்ணில் அமிந்துபோக. இது காலம் செய்த கோலம்.
கல்லின் ஓரங்களை எவ்வளவு அழகாக வளைத்துச் செதுக்கியுள்ளார்கள் பாருங்கள்.
நான் ஓடத் தயார்… ஆனால் சக்கரம் மண்ணில் புதையுண்டிருக்கிறதே.. என்ன செய்ய?
கற்றளிக்கு மேல் உள்ள கோபுரம் அதிலுள்ள சுதைச் சிற்பங்கள் மிகவும் பிற்காலத்தவை (சமீபகாலத்தைச் சேர்ந்தவை).
திருநாவுக்கரசர் வரலாற்றை மிகச் சுருக்கமாகப் பார்த்தோமல்லவா? (அதில் எனக்குத் திருப்தி இல்லை. அவருடைய வரலாற்றை மிக விரிவாகப் பார்த்தால்தான் அவருடைய பெருமை, சைவ சமயத்தை வளர்த்ததில் அவருடைய பங்கு என்பதெல்லாம் நமக்குப் புரியும். அவர் சமண நூல்களைக் கற்று முழுமையான சமண சமயத்தவராக மாறி, தருமசேனர் என்ற பெயர் பெற்று சமணக் கல்வியைப் பிறருக்குக் கற்றுக்கொடுத்து பிறகு இறைவன் திருவருளால் சைவ சமயத்தைத் தழுவியதுமல்லாமல் பல்லவ அரசன் மகேந்திரவர்மனையும் சைவ சமயத்தைத் தழுவச் செய்தார். மகேந்திரவர்மனும், சும்மா சைவ சமயத்தை ஒத்துக்கொள்ளவில்லை. சமணர்களின் வேண்டுகோளை ஏற்று எவ்வளவு இடர்கள் திருநாவுக்கரசருக்குச் செய்யமுடியுமோ அவற்றைச் செய்து, அனைத்தையும் இறைவன் அருளால் வென்று வந்தபிறகு இது மனித யுக்தி அல்ல, தெய்வ சக்தி என்று புரிந்து சைவத்திற்கு மாறினான். இது போல, முதலில் சைவராக இருந்து, பிறகு மற்ற மதங்களையும் கற்று, கடைசியில் வைணவராக மாறி திருமாலே முழுமுதற் கடவுள் என்று திருமால் மீது பதிகங்கள் பாடியவர் திருமழிசை ஆழ்வார். அவரின் ஆரம்பகால வாழ்க்கை, அதன் மூலமாக அவர் பெற்ற சிவவாக்கியர் என்ற பெயர் என்ற வரலாறெல்லாம் மிகவும் ரசமானவை).
நிற்க… இதைத் தொடர்ந்து நாம் காணப்போவது அதே பழையாறை பகுதியைச் சேர்ந்த வைணவக் கோயில் ஒன்று. அதனால் பல்லவர்கள் வரலாற்றை இந்தச் சமயத்தில் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.
ஏற்கனவே பதிவு வெகு நீளமாக ஆகிவிட்டபடியால், அடுத்த வாரம் தொடரலாம்.
(தொடரும்)
இன்றைய பதிவு பிரமாதம்.
பதிலளிநீக்குதிருநாவுக்கரசரின் வாழ்க்கை மேன்மையை ஓரளவுக்கு எடுத்தோதினும் வெகு சிறப்பாக எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள். திருப்புகலூர், பழையாறை வடதளி என்று தொடர்ந்த படங்களின் தரிசனம் இன்று அற்புதம். இந்த மாதிரி இடங்களுக்கு நேரில் சென்று பார்க்க வாய்ப்பில்லாதவர்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கும் அரிய பேறு இதெல்லாம். இதையெல்லாம் சேமித்து வைத்திருந்து காட்சிப்படுத்தும் புண்ணியம் உங்களுக்கு சேரட்டும்.
சிவனடியார்கள், ஆழ்வார்கள் பெயர்களையெல்லாம் குழந்தைகளுக்குச் சூட்டி தலைமுறை தலைமுறையாக வரும் சமுதாயம் மறக்காமல் இவர்கள் வரலாற்றை நெஞ்சில் பதித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை சட்டென்று இந்தப் பதிவை வாசித்ததும் என் மனத்தில் தோன்றியது.
காஞ்சீபுரம் சைவ முதலியார்களில் திருநாவுக்கரசர் நாயனாரின் பெயர்
வெகு பிரசித்தம். இறைவனின் திரு நாமத்தையே நேரடியாக சூட்டி விடுவது இன்னொரு வகை.
நன்றி, நெல்லை. அடுத்த பதிவில் பார்க்கலாம்.
வாங்க ஜீவி சார். முதலாக வந்து, பதிவினைப் படித்துக் கருத்தளித்தமைக்கு நன்றி.
நீக்குஇதற்கான வரலாற்றுத் தகவல்களையும் அது குறித்த பாடல்களையும் படிக்கும்போது எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. மிக்க் குறைந்த அளவே பகிர இங்கு இடம் இருந்தது. சில நேரங்களில் இறைவனின் தரிசனம் எதிர்பாராமல் கிடைக்கும். அக்னீஸ்வர்ர் தரிசனமும் அப்படித்தான். கோயில், சுற்றுச் சூழல் பார்த்தாலே அதன் பழைமை தெரியும்.
திருநாவுக்கரசு, நாவுக்கரசு என்ற பெயர்கள் நிறைய பேர்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் (முந்தைய தலைமுறைகளில். அறுபதுகளில் தமிழில் பெயர் வைக்கும் ஆர்வம் இன்னும் அதிகரித்தது. தமிழ்செல்வி, தமிழினியன் என்றெல்லாம் ஏகப்பட்ட திராவிடச் சிந்தனை ஏற்பட்ட குடும்பங்களில் பெயர் வைக்கும் வழக்கம் பெருகிற்று). தற்காலங்களில் சமஸ்கிருதப் பெயருக்குத்தான் டிமான்ட். ஜோஸ்யர்களிடம் கேட்டு முதல் எழுத்து என்னவாக இருக்கணும் எனக் கேட்டுக்கொள்கிறார்கள். பிறகு சமஸ்கிருதப் பெயர் தேடல்.
நீக்குநம் கோமதி அரசு மேடம் கணவரின் பெயர் திருநாவுக்கரசு என்றே நினைவு.
ஆமாம். வானதி திரு நாவுக்கரசு தொடங்கி என் பல பழைய நண்பர்களும் நினைவுக்கு வந்தார்கள்.
நீக்குசார்... நிஜமாகவே காலையில் குழப்பமாகிவிட்டது. பாஜக தலைவர் வானதி சீனிவாசனா இல்லை வானதி திருநாவுக்கரசா என்று. பிறகுதான் அடடா வானதி பதிப்பகத்தையல்லவா ஜீவி சார் குறிப்பிட்டுள்ளார் என்று தோன்றியது. ஒருவேளை திருநாவுக்கரசின் மனைவியார் பெயர் வானதியா (நான் பதிப்பகத்தைச் சொன்னேன்)
நீக்குஅது என்னமோ நாவுக்கரசர் என்றவுடன் முதலில் கண் முன் தோன்றுவது சிவாஜியின் நாவுக்கரசர் கோலம் (மிகைப்பட்ட நடிப்பு என்றாலும்) நாவுக்கரசர் சரித்திரத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக கூறியிருக்கலாம். நான் பிறந்த கடலூர் இன்றைய பதிவில் இடம் பெற்றது மகிழ்ச்சி. மற்ற புகைப்படங்கள் நன்றாக உள்ளன .
பதிலளிநீக்கு
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். எனக்கும் சிவாஜி அவர்களின் நடிப்பு கண்ணில் நிழலாடியது. அவர் மாத்திரம் உடலைப் பேணியிருந்தால், ஓவர் ஆக்ட் என்றாலும் இப்போதும் அவரின் சிறந்த படங்களை ரசித்திருக்கமுடியும்.
நீக்குகிடைத்த சரித்திரமே அவரது வாழ்நாள் சுருக்கம். அவரது வாழ்க்கையில் இன்னும் எவ்வளவு நிகழ்வுகள் நடந்திருக்குமோ, எத்தனைபேரின் கொலை முயற்சிகளிலிருந்து தப்பினாரோ... நீங்கள் சொல்வதை நானும் யோசித்து இரண்டு மூன்று வாரங்களாக அவரது முழு வரலாறையும் அத்துடன் திருப்புகலூர் படங்களையும் இணைக்கலாமா எனவும் யோசித்தேன்.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
நீக்கு///தந்தை புகழனாருக்கும் தாயார் மாதினியாருக்கும் திருவாரூரில் பிறந்தார்.///
பதிலளிநீக்குதிருநாவுக்கரசர் அவதார தலம் திருவாமூர்...
வாங்க துரை செல்வராஜு சார். தவறினைக் குறிப்பிட்டதற்கு நன்றி. ஒரு எழுத்து தவறு, ஊரையே மாற்றிவிட்டது.
நீக்குதிருநாவுக்கரசர் தனி மனிதராக அடைத்துக் கிடந்த கோயில் வாசலில் முதன் முதலாக முற்றுகைப் போராட்டம் நடத்துயிருக்கின்றார்...
பதிலளிநீக்குஅதுவும் ஒரு விதத்தில் சரிதான். அவரது முயற்சியால்தான் சமணர்கள் கோயிலை விட்டு வெளியேறினார்கள்.
நீக்குஅழகிய படங்கள்
பதிலளிநீக்குசிறப்பான வரலாறு..
எளியேனையும் நினைவு கூர்ந்த பெருந்தன்மை..
மகிழ்ச்சி நன்றி..
வாழ்க நலம்..
செல்வராஜு சார், பதிவு எழுதும்போது நடந்தவைகளையும் மிகைப்படுத்தாமல் எழுதுவதுதானே சரியாக இருக்கும். தஞ்சை பற்றி எண்ணும்போது, நீங்கள், கரந்தை ஜெயகுமார் சார், முனைவர் ஜம்புலிங்கம் சார் போன்றோர் என் நினைவுக்கு வருவார்கள்.
நீக்குஅப்பர் வரலாற்றை சுருக்கமாக சொன்னாலும், சொல்ல வேண்டிய விஷயங்களை கூறி விட்டீர்கள். படங்கள் அழகு!
பதிலளிநீக்குவாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம். மிக்க நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி
நீக்குதிருவாமூர் கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அருகிலுள்ளது..
பதிலளிநீக்குஅங்கெல்லாம் போவதற்கு எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ. பண்ருட்டிக்குச் சென்று முந்திரிச் செடிகள், அதனை முந்திரியாக்கும் விதம் மற்றும் பலாப்பழம் வாங்கணும் என்றெல்லாம் ஆசை உண்டு.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கோவில் தரிசன பதிவு நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் எப்போதும் போல மிக அழகாக இருக்கிறது. திருநாவுகரசரின் வரலாற்றை அவர் ஈசனை தொழுது பாடிய பதிகங்களோடு நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். பழையாறை கோவில் படங்களை பார்த்து ஈஸ்வரரையும், அம்பாளையும் வணங்கி கொண்டேன்.கூடவே அவர்களின் செல்ல குமாரர்கள் அழகான கணபதியையும் கந்தனையும் வணங்கி அனைவரும் நலமாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொண்டேன்.
சிறிய இடத்தில் கணபதியையும், மயிலேறும் கந்தனையும் செதுக்கி வார்த்தது சிறப்பு. இருள் சூழ்ந்த இடத்தில் ஒளி வீசும் சிவபெருமானின் அழகிய உருவம் கண்டு மெய்மறந்தேன். காலையில் நல்ல தெய்வ தரிசனம். மூலஸ்தானத்தில் படமெடுக்க விட்டார்களா? அருமை.
தேர் சக்கரங்களும், அதற்கு தங்களின் வாசகங்களும் பொருத்தமாக உள்ளது. ரசித்தேன்.
இறைவனின் அருளைப்பெற அதற்குரிய நேரம் வரை யாருமே காத்திருந்ததுதான் ஆக வேண்டும். அவர்களேயறியாமல் "அவனருள்" அவர்களுக்கு கிடைத்து இப்படித்தான் இந்த வாழ்வில் உய்யுற வேண்டுமென்ற பெரியவர்களின், மகான்களின் வரலாற்றை படிக்கும் போது நம் மனமும் உருகித்தான் போகும். அந்த வரலாற்றை படிக்கவும் அதற்கென்ற ஒரு நேரம் பெறவும் "அவனருள்" நமக்கு கண்டிப்பாக கிடைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த பாக்கியம் வெகு சுலபத்தில் நமக்கு கிடைக்காது. கோபுர படங்கள் மண்டப படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எனக்குமே அந்தக் கோயிலில் சிவதரிசனம் அருமையாக இருந்தது. இந்தக் கோயில் எவ்வளவு பழைமையானது, சோழ மன்னர்கள் அரசிகள் இளவரசிகள் வந்திருந்திருப்பார்கள் என்றெல்லாம் தோன்றியது. அந்தக் கோயிலில் ஆட்களே இல்லை.
நீக்குகணபதி மற்றும் கந்தனின் சிறிய சிற்பங்கள் மிக அழகாக இருந்தன. அதனால் அவற்றைப் பகிர்ந்துகொண்டேன்.
தெய்வதரிசனத்துக்கு அவனுடைய அருள் வேண்டும் என்பது உண்மைதான் கமலா ஹரிஹரன் மேடம்.
நன்றி
மாலையில்.வரென், நெல்லை. கொஞ்சம் பிசி.
பதிலளிநீக்குகீதா
மெதுவாக வாங்க கீதா ரங்கன் அக்கா. ஏதேனும் பயணமா ?(உள்ளூர்)
நீக்கு////நெல்லைத்தமிழன்4/5/25 11:06 AM
நீக்குமெதுவாக வாங்க கீதா ரங்கன் அக்கா////
ஓஒ நோ..ஓஓஓ என்னை விடுங்கோ... என் கையை விடுங்கோ மீ இப்பவே தேம்ஸ்க்குப் போகிறேன்....:))).. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு... ...க்கா...க்கா.. எனப்போட்டார் இப்போ முழூ..ஊஊஊஊஊஊஊஊஊசா அக்கா வாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) ஹா ஹா ஹா..
கீதா , நெ டமிலநைக் கூப்பிடுங்கோ அந்த போர்ட்டில.. முதலை இருந்த சரணாலயத்துக்கு ஒரு ட்ரிப் போக வாங்கோ என.. நானும் வாறேன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா முடியல்ல ஜாமீ..ஈஈஈஈஈஈஈஈஈ என்னால முடியேல்லை:)))
அதிரா.... நன்றி இதைப்பற்றி எழுதினதுக்கு.
நீக்குமுதலில் 'கீதா ரங்கன் கா' என்றேன். கொஞ்சம் வருடம் ஆனதும் 'க்கா'. இப்போ நிறைய வருடங்கள் ஆகிவிட்டதால் 'அக்கா'. எனக்கு வயது கூடுவதில்லை. ஆனால் என்னைப்போல அவர் இல்லையல்லவா? அவருக்கு வயது ஏறிக்கொண்டே இருக்கிறது. ஹா ஹா ஹா.
திருப்புகலூர், பழையாறை வடதளி கண்டு தரிசித்தோம். எமக்கெல்லாம் இவை படங்களில்தான் கண்டு களிக்கக் கிடைக்கும். நன்றி.
பதிலளிநீக்குசிற்பங்களும் அழகாக இருக்கிறது.
வாங்க மாதேவி அவர்கள். எனக்குமே இலங்கையில் பல இடங்கள் பார்க்கும் ஆசை உண்டு, இன்னு அமையவில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பயணம் செய்வதால் பல கோயில்கள் இடங்களைக் காண முடிகிறது.
நீக்கு//நம் கோமதி அரசு மேடம் கணவரின் பெயர் திருநாவுக்கரசு என்றே நினைவு.//
பதிலளிநீக்குஆமாம், என் கணவர் பேர் திருநாவுக்கரசுதான்.
என் பேத்தியின் பேர் மாதினி. என் மாமியார், மாமனார் தன் மகனின் முழு பேரை வாய் நிறைய அழைப்பார்கள். அவர்கள் அண்ணன் குழந்தைகள் பேரை சொல்லி சித்தப்பா, தம்பி பிள்ளைகள் பேரை சொல்லி பெரியப்பா என்று அழைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். கல்லூரியில் A.T சார் என்று அழைப்பார்கள்.
வாங்க கோமதி அரசு மேடம்... 'அரசு' என்ற திரைப்படத்தில் வடிவேலு, சரத்குமாரை, 'திருநாவுக்கரசு' என்று கூப்பிடுவது நினைவுக்கு வருகிறது.
நீக்குதிருநாவுக்கரசு மிக இனிமையான பெயர். சம்பந்தம், சுந்தரம் என்ற பெயர்களும் வழக்கத்தில் உண்டு.
எங்கள் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் பெயரும் திருநாவுக்கரசுதான்... அவரும் இப்போ இல்லை:((
நீக்குஎன் மாமனார் யாருக்காவது வயிற்றுவலி வந்தால் வயிற்றில் விபூதியை பூசி
பதிலளிநீக்கு//கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. //
இந்த பதிகத்தை பாட சொல்வார்கள்.
கல்லைகட்டி கடலில் போட்ட போது
நமச்சிவாய பதிகம்.
சுண்ணாம்பு காளவாயிலில் ஒரு வாரம் வைத்து அடைத்தப்போது
"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே"//
என்று பாடினார் எந்த கஷ்டம் வந்தாலும் அதிலிருந்து மீண்டு கொள்ள இந்த பாடலை பாட சொல்வார்கள்.
என் கணவர் இந்த பாடலுக்கு விளக்கம் தான் கடைசியில் அவர்கள்
சிவச்சுடர் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பியது.
சைவ கருத்தரங்கில் கட்டுரை வாசித்தது.
அப்பர் பற்றி நீங்கள் எழுதியதை வாசித்த போது
அவை நினைவுகளில் வந்து போனது.
சைவத் திருமுறைகளில் ஊறித் திளைத்ததல்லவா உங்கள் கணவர் குடும்பம். அதிலும் உங்கள் மாமனாரின் புகைப்படம் என் கண்முன் வந்துபோனது. தன் தந்தையையொட்டி உங்கள் கணவரும் சைவத் திருமுறைகளில் ஆர்வம் கொண்டிருந்ததில் வியப்பில்லை.
நீக்குஇது உங்கள் மகனிடம் தொடர்கிறதா?
ஆஹா... நீறுபூத்தது போல இருந்த, மாசில் வீணையையும் கோமதி அக்கா நினைவுபடுத்திட்டீங்க... இவை எல்லாம் மாஞ்சு மாஞ்சு பாடமாக்கி எழுதி "டி" வாங்கினேனாக்கும் சமயத்திலும்.... நெ .டமிலன் நம்பமாட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))
நீக்குஎங்களுக்கும் 'மாசில் வீணையும்' தமிழில் பாடமாக இருந்தது அதிரா. இன்னும் பல பாடல்கள். நீங்க பிளாக்கைத் தூசு தட்டி அந்த 'டி' வாங்கின சர்டிபிகேட்டையும் சிமியோன் டீச்சர் படத்தையும் போட்டால், நான் உடனே பார்ப்பேன்.
நீக்கு//ஆஹா... நீறுபூத்தது போல இருந்த, மாசில் வீணையையும் கோமதி அக்கா நினைவுபடுத்திட்டீங்க... இவை எல்லாம் மாஞ்சு மாஞ்சு பாடமாக்கி எழுதி "டி" வாங்கினேனாக்கும் சமயத்திலும்.... நெ .டமிலன் நம்பமாட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))
நீக்குநினைவு படுத்தி விட்டேனா நன்றாக படித்தது எப்படி மறக்கும்.
நெல்லையும் நம்புவார், உங்கள் நினைவாற்றல் தெரியும் அவருக்கு.
திருப்புகலூர் நிறைய தடவை போய் இருக்கிறோம்.
பதிலளிநீக்குதிருப்புகலூர் முருக நாயனார் அவதாரத் தலம்.
முருகநாயனார் சிலை இருக்கிறது இந்த கோயிலில்.
நாங்கள் ஒரு முறை யதேச்சையாகச் சென்றதுதான். அடுத்த முறை அந்த வழியாகச் சென்றபோதும் மதியம் ஆகிவிட்டதால் கோயிலுக்குச் செல்லவில்லை. நான் முருகநாயனார் சிலை பார்த்த நினைவில்லை. புகைப்படத் தொகுப்பைக் காணவேண்டும்.
நீக்கு//மண்டபத்தில் நின்றுகொண்டு என்னைப் பார்க்கிறாய். இருள் சூழ்ந்த பாதையில் உனக்கு ஒளியாக நான் இருக்கிறேன் என்கிறாரோ? //
பதிலளிநீக்குஅருமை . இருள் சூழ்ந்த பாதையில் இறைவன் ஒளியாக வருவார் என்ற நம்பிக்கை இருந்தால் போதும் நமக்கு.
நன்றி. எனக்கு இறைவனைப் பார்த்ததும் இந்த எண்ணம் உதித்தது.
நீக்கு//நான் ஓடத் தயார்… ஆனால் சக்கரம் மண்ணில் புதையுண்டிருக்கிறதே.. என்ன செய்ய?//
பதிலளிநீக்குதேரின் சக்கரம் மட்டும் அல்ல குதிரையின் கால் குழம்பும் காணவில்லை மண்ணில் புதையுண்டிக்குக்கிறது.
மங்கையற்கரசிக்கு மிக நேர்த்தியாக மடிப்பு வைத்து புடவை கட்டி விட்டு இருக்கிறார்கள்.
பழையாறை வட தளி சோமநாதஸ்வாமி தரிசனம் மிக அருமை.
படங்களும் நீங்கள் கொடுத்த வரிகளும் நன்றாக இருக்கிறது.
அப்பர் போல வயதானவர்கள் கோயிலில் உழவார பணி செய்வதும், விளக்கு தேய்த்து கொடுத்து விள்க்கேற்றுவதும், கோயிலை சுத்தம் செய்வதையும் நானும் பார்த்து இருக்கிறேன்.
அவர்களின் பக்தியை கண்டு வியந்து இருக்கிறேன். பிரதோஷம் அன்று அபிஷேகத்திற்கு தண்ணீர் நிறைத்து வைப்பார்கள் சிலர் .
சிலர் அபிஷேகப்பொருட்களை பிரித்து எடுத்து வைத்து உதவுவார்கள். பக்தர்கள் கொடுக்கும் பூக்களை, அருகம் புல்லை மாலையாக கட்டி தருவார்கள்.
நீங்கள் சொல்வது போல பக்தியால் உடல் துன்பத்தை பெரிது படுத்தாமல் கோயிலுக்கு வந்து பணி செய்கிறார்கள். அவர்களை கையெடுத்து வணங்க வேண்டும்.
இந்த மாதிரி நிறைய கோயில்கள் மண்மேடிட்டுவிட்டதா இல்லை சிற்பங்கள் மண்ணில் அழுந்திவிட்டதா என்ற சந்தேகம் எனக்கு எழும். இன்னும் ஆழமாகத் தோண்டாமல், குளம்பு மண்ணில் புதையுண்டிருந்தால் என்ன என்று புதிதாகத் தரை போட்டுவிட்டார்கள்.
நீக்குஉழவாரப் பணி செய்பவர்கள் மற்றும் கோயில் கைங்கர்யங்கள் தாமே முன்வந்து செய்பவர்களை நானும் நிறையப் பார்த்திருக்கிறேன். ஆனால் வடதளியில் இறைவனுடைய சன்னிதியைச் சுத்தம் செய்து விளக்கேற்றியவர் மிகவும் வயதான எளிமையான பெண்மணி. அந்த பக்தி என் மனதை உலுக்கிவிட்டது. இறைபக்தி, நற்குணம், பணம், படிப்பு, குலம் போன்ற எவற்றிர்க்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லை என்பது என் உறுதியான எண்ணம்.
பழையாறை வடதளி// பெயரே ஈர்க்கிறது. வடதளி.
பதிலளிநீக்குநாவுக்கரசர் வரலாறு வாசித்ததுண்டு. மாதினி பெயரும் மனதைக் கவருக்கும் பெயர். அது போல திருநாவுக்கரசர்!!!
கீதா
தளி-கோயில். வடக்குப் பக்கம் இருப்பது வட தளி. நாவுக்கரசர் வரலாறு என்னை மிகவும் கவர்ந்தது. மனித குலத்தில் மிகச் சிலரே, மற்றவர்களைவிட தாங்கள் ஸ்பெஷல் என்பதைக் காட்டுகிறார்கள் கீதா ரங்கன். அதன் காரணமும் இறைவனே அறிவான்.
நீக்குஇந்த சப்ஜெக்ட் (இறைவன்) என்பதை எடுத்துக்கொண்டால் பேச, விவாதிக்க பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் சப்ஜெக்ட் ரொம்பவே ஹெவியாகிவிடும் என்பதால் தவிர்க்கிறேன்.
துரை அண்ணாவும் நாவுக்கரசர் பற்றி எழுதியதை வாசித்ததுண்டு, இப்ப உங்கள் மூலம்.
பதிலளிநீக்குஅம்மன் கோவிலில் நரசிம்மர் - ஒரு வேளை அம்மனும் உக்ர கோலம் உண்டே அதனால் நரசிம்மரையும் இங்கு செதுக்கிடுவோம்னு இருக்குமாக இருக்கலாம் ஹிஹிஹிஹி...இன்னொரு வகையில் புராணங்களில் அம்மனுக்கு சகோதரன் விஷ்ணுன்னு சொல்வதுண்டே
கீதா
நரசிம்மர் சிற்பம் பல கோயில்களில் (சைவ சமயக் கோயில்களிலும்) நீங்கள் பார்த்திருக்கலாம். இவையெல்லாம் கோயிலின் காவலுக்காக என்று எனக்குத் தோன்றும்.
நீக்குசக்கரம் மட்டுமா புதையுண்டு இருக்கு? குதிரையின் காலும் தான்.
பதிலளிநீக்குஅது சரி இப்படியே இன்னும் கொஞ்சம் வருடங்களில் இன்னும் அழுந்திடுமோ?
கீதா
நம்ம ஊர்களில் புது ரோடு போட்டுப் போட்டு, நம் வீடுகள் கீழே இறங்கிவிடுவதுபோல (மழை பெய்தால் வீட்டைச் சுற்றி தண்ணீர் அதிகமாகத் தேங்கும்), காலப்போக்கில் மண் மேடிட்டுவிடுகிறதோ?
நீக்குஆஆஆஆஆஆஆ... திருநாவுக்கரசர் வரலாறு நன்றாக இருக்கிறது, ஏன் எனத் தெரியாது எங்கள் சிலபஸ் இல் திருநாவுக்கரசர் சம்பந்தர் எல்லாம் இருந்தது... மாஞ்சு மாஞ்சு படிச்சோம் இப்போ நினைவில் இல்லாதது போல இருக்கு ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குஎங்கள் ஒன்றுவிட்ட அண்ணியின் பெயர் மாதினி.
வாங்க அதிரா... உங்களுடைய இந்தக் கருத்து எனக்கு மனதில் நெகிழ்வை உண்டாக்கியது. சைவ சமயப் பாடங்களெல்லாம் ஈழத் தமிழர்களுக்குப் பாடமாக இருந்தது. அந்த நெறிகளும் வீடுகளில் இருந்தது என்பதைப் படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்லூர் (?) பற்றி நீங்கள் எழுதியிருந்ததும் நினைவுக்கு வருகிறது
நீக்குகூற்றாயினவாறு... இதெல்லாம் அத்துப்படியாகப் பாடமாக்கோணும், எதனால் எப்போது எங்கே எனக் கேள்விகள் வரும், நானும் பாடமாக்கியிருந்தேன் சூப்பராக ஆனா இப்போ மறந்துபோச்ச்ச்ச்:))).
பதிலளிநீக்குசொற்றுணை வேதியன், பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறோம் பாடுவார்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கா அதிரா? ஆச்சர்யம்தான், அவர்கள் பாடுவது.
நீக்குஓம் நெ தமிழன்... சொற்றுணை வேதியன், ஆனைமுகன் ஆறுமுகன், வெள்ளைக்கலை உடுத்து, சிவ சிவ என்றிட... இப்படிக் கொஞ்சம் இருவருக்கும் பாடமாக்கி குடுத்திருக்கு.. அத்தனையையும் மறந்திடக்கூடாதே என... விசேட நாட்கள், ஏதும் விரத நாட்களில் இருவரையும் பாடச்சொல்லித்தான் திருநீறு பூசிவிடுவது வழக்கம் வீட்டில்... இல்லை எநில் மறந்திடுவினமெல்லோ.
நீக்குஇன்னொன்று, இன்று நாங்கள் விரதம், சைவ நாள் எனச் சொன்னால் எந்த எதிர்ப்பும் இருக்காது.. ஓகே என்பினம், நண்பர்களோடு போனாலும் வெளியே, கஸ்டப்பட்டு சைவமாக இருப்பார்கள்... எல்லாம் அதிராட ட்ரெயினிங் தெரியுமோ:)) ஹா ஹா ஹா.
பிள்ளைகளை நன்றாக நம் வழியில் வளர்ப்பது தாயிடம்தான் இருக்கிறது. நீங்கள் உங்கள் வழக்கங்களை உங்கள் பிள்ளைகளுக்குக் கடத்தியிருப்பது பாராட்டத்தக்கது. அதிலும் வேறு ஒரு நாட்டில் இருந்துகொண்டு.
நீக்குஇதில ஒரு விசயம் நெ தமிழன், இப்போ நினைச்சாலும் எனக்கு கண் கலங்குகிறது....
நீக்குஎங்கட மூத்தவருக்கு 8,9 வயசாக இருந்தபோது, நவராத்திரி காலம்... அந்நாட்களில் நான் வீடெல்லாம் கோயில் போலாக்கிடுவேன்... அப்படியே கெளரிவிரதம், கந்தசஷ்டி முடிவுவரை, ஆனா பிள்ளைகள் கணவர் நவராத்திரி மற்றும் கந்தசஸ்டிக்கு சைவமாக இருப்பது வழக்கம்... இடையில் பல வருடங்கள் எல்லோரும் எல்லா காலமும் இருந்ததுமுண்டு, நான் கெளரி விரதகாலம் மட்டும் எதுவும் அவர்களுக்கு சொல்வதில்லை.. அது உங்கள் விருப்பம் என விடுவேன்.
அப்போ நவராத்திரி காலம், ஸ்கூலில் சைவம் தான் சாப்பிடோணும் என மகனுக்குச் சொல்லியிருந்தேன்.
ஒருநாள் இவர்களுக்கு சான்விச் செய்யச் சொல்லியிருக்கினம் ஹோம் சயன்ஸ் சப்ஜெக்ட்.
அதில் ஹாம் [தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு ஒருவகை இறைச்சி.. மெல்லியதாக இருக்கும்] சான்விச்தான் அன்று செய்திருக்கினம், அனைத்தும் ஸ்கூல் குடுக்கும்.
அப்போ மகன் சொல்லியிருக்கிறார் நான் இன்று சைவம் சாப்பிட முடியாது என, அதுக்கு ரீச்சர் உடனே சீஸ் குடுத்திருக்கிறா, இவருக்கு அதை சாப்பிட பயம்.. வேண்டாம் எனச் சொல்லிட்டார்.
வீட்டுக்கு வந்து சொன்னார், அம்மா எல்லோரும் சாப்பிட்டார்கள் நான் மட்டும் சாப்பிடேல்லை என மிகவும் சோகமாக... நான் சொன்னேன் , அச்சச்சோ ஏன் அப்பன் சீஸ் சாப்பிட்டிருக்கலாமே நீங்கள் என....
அதுக்கு சொன்னார், அது அநிமல் புரடெக்ட் என்பதால பயந்து சாப்பிடவில்லை என, எனக்கு நெஞ்செல்லாம் அடைச்சு கவலையாகிவிட்டது.. அதுக்கு கணவர் சொன்னார், வீட்டில் கவனிக்கலாம் வெளியே எதுவும் சொல்லாதீங்கோ குழந்தைகள்தானே மெண்டலி டிஸ்ரேப் ஆகிடுவினமெல்லோ என, ஆனா பின்பு அவர்களாகவே பழகிட்டினம்.. இன்றுவரை அந்நாட்களில் சைவம்தான்...
இந்தக்கதை ஏற்கனவே எங்கோ சொன்னதாக நினைவு.. இது ரிப்பீட்டூ....ஊஊஊ ஹா ஹா ஹா.
என் தமிழ் பொண்ட் இப்போ மாறியிருக்கு, அதனால நி,னி மாறுது குழம்பி வருது, போனால் போகட்டும் என அப்படியே விட்டிடுறேன் திருத்த நேரமில்லையாக்கும்:)))
பிள்ளைகள் விரதம் கடைபிடிப்பது மகிழ்வான விஷயம்.
நீக்குஇல்லத்தை கோயிலாக மாற்றுவது மகிழ்ச்சி அதிரா
மிக்க நன்றி கோமதி அக்கா, ஆனா எல்லாமுமே எங்கள் பரம்பரையுடன் முடிஞ்சுவிடும் என்றே நினைக்கிறேன், எங்களுக்குப் பின் பிள்ளைகள் இதனை எல்லாம் கடைப்பிடிக்க மாட்டார்கள், அவர்களுக்கு சொல்ல ஆள் இருப்பதால் இப்போ தெரிகிறது, இல்லை எனில் எப்படித் தெரியும்... மகன் சொல்கிறார், வருங்காலங்களில்..வெள்ளிக்கிழமை மட்டும் கடைப்பிடிப்பேன் ஏனையவை நீங்கள் சொல்வதாலதானே தெரிகிறது என, அது உண்மைதானே
நீக்குதிருநாவுக்கரசர் இருந்த இடம் தேடினீங்கள் என்றதும்தான் நினைவில் வருது....
பதிலளிநீக்குதுரோணருக்காக விரலைக் கொடுத்த ஏகலைவனின் [சமாதி] கோயிலாக டெல்லி-குர்கிராமில் இருக்கிறது, வீடியோ எடுத்துக்கொண்டே பார்க்கப் போனேன், மூடியிருந்தது, வந்து திறப்பார் உரிமையாளர் என அங்கு நின்ற குட்டீஸ் சொல்லியதால் வெயிட் பண்ணியும் ஆள் வரவில்லை, அதனால வீடியோவைக் கைவிட்டுவிட்டேன்.
குர்கிராம்... என்பது குருகிராமம் என தமிழ் பொருள்படும்... துரோணராகிய குருவின் கிராமம்... அங்கெல்லாம் நான் நடந்து திரிஞ்சேன் தெரியுமோ:)))
அதிரா... இன்னும் இரண்டு மாதங்களுக்குள்ளாக நாங்கள் சுமார் 9 தினங்கள் விருந்தாவனத்தில் இருக்கப்போகிறோம். அப்போது மஹாபாரத நிகழ்வு நடந்த மற்றும் கிருஷ்ணரின் பிறந்த இடங்களைக் காணப்போகிறோம். அதில் ஒன்றாக இதுவும் இருக்கும் என்று நினைக்கிறேன். கர்ணன் தேர் அழுந்திய இடம், என்று பலவற்றையும் காட்டுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் கிருஷ்ணர் பிறந்த மதுரா ஜென்மஸ்தான் (கிருஷ்ணர் பிறந்த இடம்), இராமர் பிறந்த இடம் , கிருஷ்ணர் வளர்ந்த இடம் போன்றவைகளுக்குப் பலமுறை சென்றிருக்கிறேன்.
நீக்குஒரு தடவை கயா யாத்திரை என்று நினைவு. அதில் கடைசியாக நாங்கள் ஆக்ராவிற்கு வந்தடைந்தோம். அன்று விரைவாக தயாரானால், எல்லோரும் மதுரா (கிருஷ்ணர் பிறந்த இடம்) மற்றும் கோகுலம் (வளர்ந்த இடம்) போகலாம் என்று சொல்லியிருந்தார். மாலை 4 மணிக்குள்ளாக ஆக்ரா திரும்பி, இரயில் நிலையத்துக்குச் செல்லணும். அப்போது எங்கள் குழுவில் வயதான ஒருவர் சொன்னார், எனக்கு கோகுலம் செல்லணும், அந்தப் புழுதி மண்ணில் புரளணும், கிருஷ்ணர் அங்குதானே விளையாடியிருப்பார் என்றார். உங்கள் கருத்தைப் படித்ததும் இது நினைவுக்கு வந்தது
நீக்குவிருந்தாவனம் எங்கிருக்கு? மதுரா பக்கமோ? அங்குதானே கிருஸ்ணர் பிறந்தார், நாங்கள் அந்த ஜெயில் பார்த்தமே... நின்றுபார்க்க விடாமல் விரட்டுவார்கள்.
நீக்குமகாபாரதக் கதையில குருசேத்திரம்.. டெல்லி தாண்டிப்போகோணும்... குருசேத்திரம் என "போர்ட்டுடன்" ரெயின் போகுதே பார்த்தேன்...
போயிட்டு வாங்கோ.. எனக்கும் சின்ன வயசில சிலபஸ் ல இவை எல்லாம் இருந்தமையால, சரியான சொல்ல முடியாதளவு விருப்பம் இப்படியான இடங்களைப் பார்ப்பதற்கு.
மதுரா, கிருஷ்ணர் பிறந்த பூமி. நள்ளிரவில் அவரைத் தூக்கிக்கொண்டு, அவருடைய தந்தை வசுதேவர், யமுனை ஆற்றைக் கடந்து கோகுலத்தில் நந்தகோபன் மாளிகையில் கொண்டுவிடுகிறார். கோகுலம் சுமார் 20 கிமீட்டர் தூரம். கிருஷ்ணர் பாலப் பருவத்தில் (adolescent) விளையாடியது, மற்றும் யமுனை ஆற்றில் விளையாடியது எல்லாமே விருந்தாவனத்தில். அது சுமார் 10 கிமீட்டர் தூரம். கோவர்தனகிரி அமைந்திருந்த இடம் 20 கிமீ தூரம். இவையெல்லாம் மதுராவை நடுவில் வைத்தால் இருக்கும் தூரம், ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் (விருந்தாவன் வடகிழக்கு, கோகுலம் தெற்கு, கோவர்தன் மேற்கு)
நீக்குநான் இந்த எல்லா இடங்களுக்கும் குருக்ஷேத்திரம் உட்பட பலமுறை சென்றிருக்கிறேன். மார்ச் மாதத்தில் மதுரா ஜென்மஸ்தானுக்கு மனைவியுடன் சென்றிருந்தேன், சுமார் 40 நிமிடங்கள் ஜென்மஸ்தானிலேயே இருந்து பாராயணம் செய்தோம்.
நீக்குஆஆஆஆஆஆஆஆ:))) அது அண்ணி கிருஸ்ண பக்தை என்பதாலோ...
நீக்குநான் அனைத்து இடங்களையும் மதுரா என நினைச்சு விட்டேன், மற்றும்படி நாங்களும் எல்லா இடமும் சுற்றி, தொட்டிலையும் ஆட்டினோம்.... வீடியோப் போட்டிருந்தேன் நீங்களும் வந்து கொமெண்ட் போட்டீங்கள்., ஆனா ஹைட் பிடித்திருந்தோம், அவர் கிட்டக் கூட்டிப்போய் இதைப்பண்ணு அதைப்பண்ணு எனச் சொல்லி... முடிவில் கோயில் பணிக்கு கட்டுங்கோ எனச் சொல்லி 5000 ரூபா கட்ட வச்சார்...
நீக்குஅடடா என்னா போஸூ.. என்னா போஸு ஹா ஹா ஹா நான் மயிலேறும் மரகதத்தைச் சொன்னேனாக்கும்... வேறு ஒண்ணுமில்லை:)))
பதிலளிநீக்குமயில்வாகனனைப் பார்த்த நீங்கள் நடனமாடும் விநாயகரை மறந்துவிட்டீர்களே
நீக்கு///பக்தி மனதிலிருந்து அதுவாகவே வரணும். நமக்கெல்லாம் எங்க?)
பதிலளிநீக்கு///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
அது மணியோசைகளுடன்... தீப ஆராதனை.. அரோகரா ஒலி.. இப்படியான சந்தர்ப்பத்தில் எனக்கும் உரு வருவதுபோல இருக்கும் மேனி எல்லாம் சைலிர்க்கும் ஹா ஹா ஹா... இதுதான் பக்தியோ?:)
மனம் அந்தச் சூழலில் ஒன்றும்போது, மனம் சிலிர்க்கும். ஸ்ரீகிருஷ்ணர் ஜென்மஸ்தான் (பிறந்த இடம்) அறையில் நின்றுகொண்டிருந்த சில நிமிடங்கள், திருப்பதி வெங்கடேசப் பெருமாள் சன்னிதியில் பல முறை அதிகாலை தரிசனத்துக்குச் சென்றபோது (பாசுரங்கள் பாடிக்கொண்டு சன்னிதி வரை செல்வது, பொதுவாக பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்காத பாக்கியம் அது) இந்த உணர்வு எனக்கு ஏற்பட்டிருக்கிறது அதிரா.
நீக்குஉருவச்சிலைகளுக்கு வேஷ்டி கட்டி அதை ... சண்டித்தனத்துக்குப் போவதைப்போல மடிச்சும் கட்டியிருக்கினம்... வித்தியாசமாக ரசிக்கும்படியாக இருக்கு.
பதிலளிநீக்குசோமநாதசுவாமி... நாகவாகனத்தில் இருக்கிறார்போல இருக்கே... குட்டியாக இருப்பினும் அழகாக இருக்கிறார்... என் ஃபேவரிட் தெய்வங்களில்... சிவலிங்கம்.. சிவன்... அடக்கம்.
சோமநாதஸ்வாமி சன்னிதி படம் அழகாக இருக்கிறது அல்லவா? பல கோயில்களில் உருவச் சிலைகளுக்கு உடை அணிவித்திருப்பது (வேஷ்டி அல்லது புடவைப் பகுதியை அப்படியே கட்டிவைத்திருப்பார்கள்) கொஞ்சம் வித்தியாசமாகத்தான் எனக்கு மனதில் படும். அந்தச் சிற்பங்கள் உடைகளுடன் இருக்கும் என்பது தெரியுமல்லவா?
நீக்குஎன் இஷ்ட தெய்வம் அறுமுகன், திருப்பதி பாலாஜி மற்றும் கிருஷ்ணர்.
ஓ... இலங்கையில் பாலாஜி கோயில் முன்பில்லை இப்போ இருக்குதென நினைக்கிறேன் அதனால அதுபற்றிய பக்தி அப்போ இல்லை, இப்போ கும்பிடுவோம். கிருஸ்ணர் என்றால் மகாபாரதக் கதையில வருபவர் என்பதுபோலதான் இருந்தது, ராமர், ஆஞ்சநேயர் எல்லாம், ஆனா 2000 ஆண்டுக்குப்பின்னர்தான், இலங்கையிலும் ஆஞ்சநேயர் கோயில்கள் வந்தன[எனக்கு தெரிஞ்சு, கோயிலாக முன்பு இருந்ததாக தெரியவில்லை].. இப்போ எல்லோரும் அஞ்சநேயரை நம்பி வழிபடுகின்றனர்.
நீக்குநாங்கள் வளர்ந்த வீட்டின் முன்னால் குட்டியாக ஒரு கல் அதில் ஒரு வைரவ சூலம் இருந்தது... அதைத்தான் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமையில் குடும்பமாக போய் விளக்கேற்றி வழிபடுவோம், பொங்கல் செய்வோம்... அவர் இப்போ கொஞ்சம் பெருத்து குட்டிக் கோயிலாகி... ஐயரும் இருக்கிறார் பூசைக்கு.. அதனால எனக்கு வைரவர் பேவரிட் ஆனார்:))...
இலங்கையில் சைவ சமயம்தான் பெரும்பாலும் இருந்தது என்பது நான் படித்துத் தெரிந்துகொண்டது. அதனால் அங்கு சிவன் கோயில்கள்தாம் அதிகம் (முருகன் கோயில், பிள்ளையார் கோயிலும் உண்டு). பிறகு சுற்றுலா காரணமாக, சீதை, இராமர் சம்பந்தப்பட்ட இடங்களில் அவர்களுக்கும் ஆஞ்சநேயருக்கும் கோயில்கள் வந்தன என்று தோன்றுகிறது.
நீக்கு//எனக்கு வைரவர் பேவரிட் ஆனார்// அவருக்குக் கொடுக்கவேண்டிய வைர மூக்குத்தி போன்றவைகளெல்லாம் கொடுத்தாச்சா? ஹா ஹா ஹா
நீக்கு///இது கர்ணனின் தேர் அல்ல….///
பதிலளிநீக்குமுல்லைக்கு முட்டுக் குடுத்த பாரியின் தேராக இருக்குமோ:))... என ஓசிச்சேன்ன்னாக்கும்....:) கொஞ்சம் சத்தமா யோசிச்சிட்டமோ:)))
நிஜமாகவே முல்லைக்குத் தன் தேரைக் கொடுக்கும் அளவு அறிவு மயங்கியிருக்குமா பாரி வள்ளலுக்கு? உங்கள் கருத்து என்ன? அதுபோல கன்றுக்குப் பதில், தன் மகனைத் தேர்க்காலில் வைத்து அழுத்திக் கொன்றது.
நீக்குஅது நெல்லைத்தமிழன், இருந்திருக்க வாய்ப்பிருக்கு.. எவ்வளவு அறிவாளியாக இருந்த அரசர்கள்கூட சிலசமயம் படுமுட்டாள்தனமான வேலைகள் செய்திருக்கினம் எல்லோ...
நீக்குஇப்போ ஐன்ஸ்ரைனில் பூனைக்கும் ஒரு துவாரம் பின்னர் குட்டி வந்துவிட்டதே, குட்டி எப்படி வெளியே போகும் என அருகில் குட்டிக்கும் ஒரு துவாரம் இட்டாரெல்லோ அதை எல்லாம் நினைக்கையில் இருந்திருக்க வாய்ப்பிருக்கு என்றே நான் நம்புகிறேன்.
கூட இருந்தவர்கள்கூட இந்த முட்டாள்தனத்தைச் சுட்டிக் காண்பித்திருந்திருக்க மாட்டார்களா? இவை எல்லாமே ரொம்பவே மிகைப்படுத்தின செய்திகள்னு எனக்குத் தோணுது.
நீக்குஆனால் நீங்க சொல்வதும் ஒரு வகையில் நியாயம்தான். அரசியல்ல, காமராஜர்னு ஒரு முதலமைச்சர் தமிழகத்துல மிகப் புகழ் பெற்று இருந்தார். ரொம்ப வருடங்கள் அரசியல்ல இருந்தார். ஆனால் பாருங்க, அவருடைய அம்மா (காமராஜருக்கு திருமணம் ஆகலை) கொஞ்சம் அதிகமாகப் பணம் அனுப்பச் சொன்னதுக்கு, மாட்டேன் என்று சொல்லிவிட்டார். வீட்டுக்கு தண்ணீர் குழாய் போட்டதையும் தடுத்துவிட்டார் (முதலமைச்சரின் அம்மா என்று உனக்கு ஸ்பெஷலாகச் செய்கிறார்கள் என்று). அந்த அம்மா, காமராஜரின் அக்கா ஆகியோர் வாழ்க்கையில் கஷ்டப்பட்டதுதான் மிச்சம். இதுபோல வ.உ.சிதம்பரனார் குடும்பம், முக்கிய அமைச்சராக இருந்த கக்கன் அவர்களின் குடும்பம் என்று பல உதாரணங்கள் உண்டு.
நாம அதற்காக அவர்களைப் பாராட்டலாம். ஆனால் வெறும்ன சீனி இனிக்கும்னு சொன்னால் நமக்கு சாப்பிட்ட திருப்தி வருமா?
எனக்கு இப்போ டக்கென நினைவில் எதுவும் வருகுதில்லை ஆனா நிறைய முட்டாள் அரசர்கள் இருந்திருக்கினம், மந்திரி சொன்னாலும் கேட்க மாட்டினம்... பக்கத்தில் இருப்பவருக்கு, இது முட்டாள்தனமான செயல் எனத் தெரிஞ்சாலும், சொன்னால் தலையை வெட்டிப்போடுவார் அரசர் எனும் பயமெல்லாம் இருந்ததெல்லோ அப்போ...
நீக்குசிலர் வந்து, நீதி ந்ர்ர்மை என வாழ்வோர் வாழ்க்கையில் கஸ்டம் தான் பட்டிருக்கிறார்கள்... அதனாலதான், சில சமயம் எண்ணத் தோணும், உயிர் போனபின் நமக்கு யாரும் சிலை வைக்கப் போவதில்லை:) அதனால எதுக்கு நீதி நேர்மையைக் கடைப்பிடிக்கோணும் என ஆனாலும் முடிவதில்லை.. ராசி அப்பூடி ஹா ஹா ஹா
கோபுரப் படங்களும் நீங்கள் எடுத்ததுதானே? எப்படி கிட்டவாக நன்கு தெரியும்படி எடுத்திருக்கிறீங்கள்? கோபுரம் உயரம் குறைவோ?...
பதிலளிநீக்குநான் இலங்கையில் முயற்சித்தேன் சிலைகளை யூ..ஊஊஊஊஊம் பண்ணியும் வீடியோக்குள் அடக்க முடியவில்லை.
இன்று ரசித்தேன் பதிவை, ஏனெனில் எனெக்குத் தெரிந்த திநாவுக்கரசர் என்பதாலோ என்னமோ.. இப்போ தெரியாத ஒருவரைப் பற்றி நீங்கள் வரலாறு எழுதியிருந்தால், பெரிதாக படிக்கும் எண்ணம் வராது.
ஆனா திருநாவுக்கரசரைப் பற்றியும் தப்பாக எல்லாம் கதைகள் வந்ததே...
நீங்கள் பொன்னியின் செல்வன் நாவலைப் படித்திருந்தால் இன்னும் பல வரலாற்றுத் தகவல்கள் இடங்கள் உங்கள் கருத்தைக் கவர்ந்திருக்கும்.
நீக்குதவறாகக் கதைகள் வந்த திருநாவுக்கரசர், சமீபகால அரசியல்வாதி அல்லவா? ஹா ஹா ஹா
சில படங்கள் சிறப்பாக அமைந்துவிடும். கோபுரம் படமும் அப்படித்தான்.
சுஜாதா கதையில் வஸந்த் கணேஷைத் பார்த்து வியந்து அல்லது பிரமித்துப் பொய் சொல்வார்.. "ஐ ஸ்வே.. நான் ஆடறேன் பாஸ்"
பதிலளிநீக்குஇப்போது அதிராவைப் பார்த்து நான் அதேதான் சொல்கிறேன்.
ஹா ஹா ஹா அந்த வைரவர் மேல், ஏன் நேர்த்தி வச்ச வைர அட்டியல் மேல் சத்தியமாக எனக்கு ஶ்ரீராம் என்ன சொல்கிறார் எனப் புரியுதில்லை.... எதைப்பார்த்து இந்தப் பிரமிப்பு ஶ்ரீராம்?:)))
நீக்குஉங்கள் விரதம், மகன்களை வளர்ந்திருக்கும் விதம், தமிழ்ப்பாடல்களை மனதில் வைத்திருப்பது... சீஸ் கூட சாப்பிடமாட்டேன் என்று சாப்பிடாமல் வீடு வரும் அளவு மகனை வளர்ந்திருப்பது...
நீக்குஓ அதுவா ஶ்ரீராம்.. , அதுக்கு எங்கட அப்பா என்னை வளர்த்த விதம்தான் காரணம் என நினைக்கிறேன், அப்படியே என் கணவரும்......
நீக்குஒவ்வொருவரும் [[ஒருவர் சமயத்தைக் கடைப்பிடிப்பவர் மற்றவர் நேரகாலமில்லாமல் அசைவத்தை விரும்புபவர் இப்படியான தம்பதி]] வேறு வேறு திசை எனில் பிள்ளைகளைப் பக்திக்குள் கொண்டு வருவது கஸ்டம்...
பின்பொரு தருணம் இதுபற்றி விரிவாகச் சொல்கிறேன்:))