நண்பர் அலைபேசினார். நீண்ட நாள் நண்பர்.
தனது உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால் எந்த ஆஸ்பத்திரியில் சேரலாம் என்று கேட்டு, நான் சொன்னபடி சேர்த்திருந்தார்.
உறவினர் பற்றி அப்டேட் சொல்வார். அவ்வப்போது பேசுவார். ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறை பேசுவார்.
சம்பவம் நடந்த அன்றும் பேசினார். அப்போது மாலை பேசும்போது ராத்திரிக்கு டிஃபன் வாங்க சென்று கொண்டிருப்பதாக சொன்னார். கூடவே முதுகு வலிப்பதாகச் சொன்னார்.
"உங்களுக்கா? அம்மாவுக்கா?"
"எனக்குதான்...... முதுகுல எலும்பெல்லாம் சேர்ந்து ஜாம் ஆயிடுச்சி.."
"அப்போ ராத்திரிக்கு ப்ரெட் வாங்கிடுங்க" என்றேன்.
வீட்டில் மகனும் பாஸும் 'பக்'கெனசிரித்து விட்டாலும் கடிந்து கொண்டார்கள்.
"அவர் என்னப்பா நினைப்பார்? பாவம் அவர் கஷ்டத்தை சொல்றாரு.."
"என் பேச்சு பாணிப்பா.. அவருக்கும் தெரியும்."
ஆனால் நண்பருக்கு புரியவில்லை போல... "ப்ரெட் சாப்பிட்டா நலலதா?" என்றார் அப்பாவியாய்.
சரி, ஆரம்பித்து விட்டோம், எப்படியும் பின்வாங்க முடியாது என்று நானும் "ஆமாம், ஜாம் ஆயிடுச்சுன்னு சொன்னீங்க இல்லையா?" என்றேன்.
சற்று மௌனம். "சரி, நான் வைக்கிறேன்" என்று ஃபோனை வைத்து விட்டார் நண்பர்.
"கோச்சுக்கிட்டார். வருத்தப்பட வச்சுட்டீங்களே" என்றார் பாஸ்.
"இனி பேச மாட்டார் "என்றான் மகன்.
இரண்டு நாட்களுக்குமுன் இப்படிதான்..
"ப்ரோ.. காம்பினேஷன் மாத்திரைகளே கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில சுத்தமா கிடைக்க மாட்டேங்குது.." என்றார்.
"ஏன்? கறையாயிருக்கா?"
"ப்ரோ?"
"குப்பைல போட்டு வச்சிருக்காங்களா?"
"இல்லை ப்ரோ... சுத்தமா கிடைக்கவே இல்லை... வெளிலதான் வாங்கறேன்" - என் அறுவை அவருக்கு புரியவில்லை என்றதும் விட்டு விட்டேன்!
இப்போது, "என்னதான் 'நண்பர், எப்போதும் பேசுவது போல பேசுகிறேன்' என்று சொன்னாலும் நேரம் காலம் இருக்கு இல்லையா?" என்றான் மகன்.
நானும் இனி வாயை அடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
பத்து நிமிடத்தில் அவரிடமிருந்து மறுபடி ஃபோன். தயக்கத்துடன் எடுத்தேன். 'லொடக்காஸி ஜோக்கெல்லாம் அடிக்காம நிதானமா பேசுடா ஸ்ரீ....'
"இப்பதான் புரிஞ்சுது.. ஓ.. நீங்க அப்படி சொன்னீங்களா?"
"எப்படி ரவி?"
"அதுதான்.. ஜாம் தொட்டுக்கிட்டு ப்ரெட் சாப்பிடலாம்னு... ஒண்ணும் புரியலை. அதான் வச்சுட்டேன். கொஞ்சம் கழிச்சு இப்பதான் புரிஞ்சுது.. நைட்டுக்கு பிரெட்டே வாங்கிட்டேன்.. ஆனா ஜாம் தனியா வாங்கிட்டேன்.. வைக்கவா?" என்று வைத்து விட்டார்.
அப்புறமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.
========================================================================================
நியூஸ் ரூம்
- புதுடில்லி: இனி, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் விலை கொண்ட ஆடம்பர பொருள் வாங்கும்போது, டி.சி.எஸ்., எனப்படும் விற்பனையின்போதே வசூலிக்கப்படும் வரி 1 சதவீதம் விதிக்கப்படும் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் இது அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ராமேஸ்வரம்: தனுஷ்கோடி - இலங்கை இடையே, கடலில் ராமர் அமைத்த பாலத்தைக் கண்டு தரிசிக்க, மே, 15ல் இலங்கை அரசு, சுற்றுலா படகு சவாரியை துவக்குகிறது.
- மதுரை: காஷ்மீரில் நேற்றுமுன்தினம் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 68 தமிழர்கள் பாதுகாப்பாக தமிழகம் திரும்பினர்.
- பெங்களூரு : யு டியூபில் விளம்பரம் பார்த்து புடவையை ஆர்டர் செய்த, கர்நாடகாவைச் சேர்ந்த, பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஏமாற்றப்பட்டார்.
- ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் ஒரு ஹோட்டலில், வெறும் 10 நிமிடங்கள் கழிப்பறையை பயன்படுத்தியதற்கு, பெண்ணிடம் 805 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளனர்.
- மதுரை: மதுரை நீதிமன்றத்தில், கஞ்சா வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் ரகளையில் ஈடுபட்டனர். ஒருவர் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
- சென்னை: தமிழக சைபர் கிரைம் போலீஸ் பிரிவு பெயர் மற்றும், 'லோகோ'வை பயன்படுத்தி, போலி சமூக வலைதள கணக்குகள் இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்கும்படி, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- நீ சரணடைந்து விடு; நாங்களாவது நிம்மதியாக வாழ்கிறோம்! பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதியின் தாய் கதறல்.
- புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து என்.ஐ.ஏ., விசாரணையை துவக்கியது. சுற்றுலா பயணியருக்கு, 'ரீல்ஸ்' எடுத்து தரும் உள்ளூர், 'வீடியோகிராபர்' துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முழுமையாக, 'வீடியோ' பதிவு செய்துள்ளதை அடுத்து அவரை முக்கிய சாட்சியாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
- சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில், டீசல் செலவை குறைக்க, 1,000 பஸ்கள், சி.என்.ஜி., என்ற, 'காஸ்' தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட உள்ளன. இந்த வகை பஸ்கள் வாயிலாக, ஒரு கி.மீ.,க்கு 3 முதல் 4 ரூபாய் வரை மிச்சமாகிறது.
- மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று -29/4/25 - துவங்குகிறது. காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள், சுவாமி சன்னிதி முன் கொடியேற்றம் நடக்கிறது.
- நண்பா... நான் இருக்கேன்! பாகிஸ்தான் ஆதரவு: சீனா அறிவிப்பு.
- சென்னை: கர்ப்பிணியருக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை எளிதாக கண்டறிய, சென்னை ஐ.ஐ.டி., நவீன கருவியை உருவாக்கி உள்ளது.
- கடந்த ஏப்., 22ல், காஷ்மீர் பஹல்காம் அடுத்த பைசரன் புல்வெளியில் 26 சுற்றுலா பயணியர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். அந்த 'கருப்பு செவ்வாய்' அன்று, பலர் உயிர் இழந்த நிலையில் ஒரு சிலிர்க்க வைக்கும் வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.
- சென்னை: சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு செல்லாமல், பத்திரப்பதிவு மேற்கொள்ளும் வகையில், 'ஸ்டார் 3.0' மென்பொருளில், புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
- சி.பி.எஸ்.இ., 7ம் வகுப்பு புத்தகத்தில் முகலாயர், சுல்தான் பாடங்கள் நீக்கம்.
- நியூயார்க்: பிரபல அமெரிக்க நிறுவனமான, 'அமேசான்' நேற்று தனது முதல், இன்டர்நெட் இணைப்பு வழங்கும் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது. அது, எலான் மஸ்க் தலைமையிலான 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'ஸ்டார்லிங்க்ஸ்' செயற்கைக்கோள் இணையதள நிறுவனத்திற்கு போட்டியாக கருதப்படுகிறது.
- லக்னோ: உத்தர பிரதேசத்தில், திருமண விருந்தின் போது பனீர் எனப்படும் பாலாடைக்கட்டி சேர்க்கப்பட்ட உணவு வகை ஏதும் பரிமாறப்படாததால் ஆத்திரமடைந்த உறவினர், மண பந்தலுக்குள் மினி பஸ்சை ஓட்டிச் சென்று மோதினார். பஸ்சை மோதச் செய்தவர் மீது மணப்பெண் வீட்டார் போலீசில் புகாரளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார், புகார் தந்தால் தான் திருமணம் என கூறிவிட்டனர்.
-
=================================================================================================
இணையத்தில் ரசித்தது...
-
=============================
==========================================================================================="நானுறங்கும் நாள் வேண்டும்... சாய்ந்துகொள்ள தோள் வேண்டும் என் கண்ணில் நீர் வேண்டும் சுகமாக அழவேண்டும்..." - வைரமுத்து
தனிமையில் யோசிக்கும்போது
தைரியமாகத்தான் இருக்கிறது
சாய்ந்துகொள்ள
ஒரு
நெருங்கிய தோள்
கிடைத்த உடன்தான்
உடைந்து விடுகிறது.
எல்லா தோள்களிலும்
சாய்ந்து கொள்ள
முடிவதில்லை
சுகமாக அழ,
பாரம் இறங்க,
கண்ணீர் சிந்த
தனித்த ஒரு
துணை வேண்டியிருக்கிறது
=========================================================================================
ஹிஹிஹி...... சில வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் பகிர்ந்தது...
'பொன்மேனி உருகுதே... என் ஆசை பெருகுதே...' போன்ற பாடல்களையும் 'நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்' போன்ற பாடல்களையும் பல விமர்சனங்களுக்கிடையே ரசித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதும் இது போலப் பல பாடல்கள் வருகின்றன.
எப்போதும் 'பெரிசுகள்' சொல்லும் வசனம் "காலம் கெட்டுப் போச்சு! அந்தக் காலத்துல..."
அந்த 'அந்தக் காலத்துல', அதாவது 1933ல் வெளிவந்த 'வள்ளி' படத்தில் முருகன் வள்ளியை நினைத்து பாடும் பாடல் வரிகள் இவை :
"ஆலோலமென்று குரல் காட்டி
இந்த அரும் புனத்தில்
சேலோடு கண்ணைத் தினைமீது
வைத்த சிங்காரி தன்னை
காலோடு கால் சேர்த்து அனு
ராக போக கலவி செய்தால்
பாலோடு சேர்ந்த பழம் போலும்
தித்திக்கும் பண்புறவே"
======================================================================================

படப்பிடிப்புக்கு வெளியூர் சென்று வந்த நாட்களிலும் வழியில் இருக்கும் அந்தச் சிறு கடையில் அங்கே சாப்பிட்டேன். இப்போது அந்தக் கடை அங்கே இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.
தனியாவும், மிளகாயும், மசாலாவும் அரைத்துச் சேர்த்த மாட்டிறைச்சியை உப்பிட்டு வேக வைத்து நன்றாக வெந்து வரும்போது அதில் மரவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து சேர்க்கிறார்கள். பிறகு இரண்டும் ஒன்று கலந்து ஒட்டி உறவாடி பிரித்தெடுக்க முடியாமல் கொஞ்சம் கரைந்த பிறகு தேங்காய் எண்ணெயையும் கறிவேப்பிலையையும் சேர்த்து மூடிவிடுகிறார்கள். செயல்முறையைக் கேட்டால் சாதாரணமாக இருக்கும். ஆனால் விறகடுப்பில் நம் பாரம்பரியப் பாத்திரத்தில் தயாராகும் இந்த உணவின் ருசி பதினெட்டு வருடங்களுக்குப் பிறகும் என்னை ஏங்க வைக்கிறது. வீட்டில் அப்படிச் சமைக்க நான் முயற்சித் திருக்கிறேன். ஆனால் எப்போதும் மரவள்ளி தனியாகவும் மாட்டிறைச்சி தனியாகவும் பிரிந்து கிடந்த உணவாகத்தான் இருந்ததே தவிர, ஒன்று கலந்த ருசியுடன் மாறவேயில்லை.
மலப்புரத்தில் 'எடப்பாளி' என்ற இடத்திற்கும் Üகுட்டிப்புறம்ý என்ற இடத்திற்கும் இடையில் 'நிஷா' என்றொரு ஹோட்டல் இருந்தது. அங்கேயும் பலமுறை நான் நல்ல உணவைச் சாப்பிட்டிருக்கிறேன். புட்டு எடுத்து பீங்கான் கிண்ணத்தில் போடுவார்கள். எரிந்து கொண்டேயிருக்கும் அடுப்பிலிருந்து குழம்பை அள்ளி ஊற்றுவார்கள். எல்லா மசாலாவையும் ஒன்றாய்க் கரைத்து அதில் விதவிதமான கறிகளையும் காய் கறிகளையும் போட்டு, பல பெயர்களிட்டு பரிமாறும் வழக்கமே இந்தக் கடையில் இல்லை. ஒவ்வொரு குழம்பிற்கும் வெவ்றோன மசாலாக் கலவைகளை தனித்தனியாக சிரத்தையெடுத்து தயாரித்து மூடி வைத்து பரிமாறுவார்கள். மிகுந்த ஈடுபாட்டோடு இடையில் உணவு தீரத்தீர
நம்மைக் கேட்காமலேயே, போதுமென்று சொன்னாலும், 'கொஞ்சம் புட்டு வச்சுக்கோங்க. இன்னும் கொஞ்சம் கொழம்பு, ஒரு பீஸ்' எனப் பிரியத்துடன் பரிமாறுவார்கள். சாப்பிடுவதற்கு இணையாக போல பரிமாறுவதையும் அவர்கள் ரசித்து செய்தார்கள்.
கொச்சியில் 'காயிக்கா' பிரியாணியும், திருவனந்தபுரத்தின் 'கேத்தலின்' சிக்கன் குழம்பும் மலையாளிகளின் ருசியின் அடையாளமாக மாறிப்போனது வெறும் ருசியால் மட்டுமல்ல. அதில் அதீத அன்பும், அக்கறையும் பிணைந்திருக்கிறது. நன்றாக ருசித்துச் சாப்பிடுபவர்களுக்கு இங்கே பில்தொகை குறைவாகவே இருக்குமாம். சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் 'மாமாக்கடை' தான் எங்கள் கனவு. ஒரு ரூபாய் கொடுத்தால் சாப்பாடும், இருபத்தைந்து பைசா கொடுத்தால் மீனும் கிடைக்கும். 'குணம்பு', 'கரிமீன்' என்ற மீன்களில் தேங்காய் அரைத்துவிட்டு செய்த 'மீன்கறி' களுக்கு மறக்க முடியாத காலங்கள் கடந்த ருசியிருந்தது. நான் சொல்லும் இந்த உணவு வகைகளிலெல்லாம் மலையாளிகளின் அன்பும் சேர்ந்திருந்தது. இப்போதும் நல்ல சாப்பாடு கிடைக்கும் எத்தனையோ உணவு விடுதிகள் இருக்கிறது. நல்ல உணவு எங்கே கிடைத்தாலும் சாப்பிடும் மலையாளிகளின் ருசி உணரும் தன்மை மிகவும் விசாலமானது. இப்போதெல்லாம் சைனீஸ் உணவு அம்மா அப்பாக்களின் பெருமையாக உணரப்படுகிறது. அதைச் சாப்பிட குழந்தைகள் பழகிப் போயிருக்கிறார்கள். அதற்கு நம் குழந்தைகளைக் குறைசொல்ல முடியாது. புதிய உணவுகளான பீட்சாக்களுக்கு சில நேரங்களில் நல்ல ருசி இருக்கவே செய்கிறது. ஆனால் பதினெட்டு வருடங்கள் இருபது வருடங்கள் எனக் காலம் கடந்து நினைவில் தங்கும் ருசி அதற்கிருப்பதாய்த் தெரியவில்லை.
- மூன்றாம் பிறை என்னும் சுயவரலாற்றுப் புத்தகத்தில் மம்மூட்டி -
==============================================================================================
================================================================================================
படித்ததை, ரசித்ததை பகிர்கிறேன்.
நாலாயிரம் மக்கள் கூடியிருந்த ஒரு நிகழ்வில்தான் ஷைலஜா என்ற பெயரை நான் எனக்குள் பதித்துக் கொண்டேன். அதற்கும் பிறகான நாட்களில் நிகழ்ந்த எங்கள் உரையாடல்கள் வெறும் இலக்கியம் சார்ந்தவைகள் மட்டுமல்ல என்பதை இருவருமே உள்ளுக்குள் உணர்ந்திருந்தோம். அப்போதுதான் பறித்த ரோஜாப்பூக்களை கையிலேந்தி, இருப்பதைந்து வயதில் ஒரு இளைஞன் தெரு முனையில் காத்துக்கிடப்பது இலக்கிய உரையாடலை மட்டும் எதிர்பார்த்து இல்லைதானே?
நாங்கள் இருவரும் எழுதிய கடிதங்களுக்கு உதவியாக கல்யாண்ஜியை காலப்பிரியாவை,
கலீப்கிப்ரானை எங்கள் கூடவே வைத்துக் கொண்டோம். ஒரே நாளில் ஐந்து கடிதங்களைக் கூட பறிமாறிக் கொண்டிருக்கிறோம். எங்கள் காதல் ஜாதி, மதம், இனம் மொழி மாநிலம் கடந்தது. இருவீட்டிலும் பெரிய எதிர்ப்பு என்று ஒன்றும் இல்லை. இப்போது யோசித்தால் எளிய மனிதர்களின் வாழ்வில் மூன்று வேளை உணவு, வசிப்பிடம், நல்ல உடை, இவைகளுக்கு அப்புறமே இந்த ஜாதி மதம் என புரிகிறது.
மாபெரும் மக்கள் திரளில் எங்கள் திருமணம் ஒரு ஞாயிறு மாலையில் நிகழ்ந்தது. அம்மா எனக்காக ஒவ்வொரு வருடமும் சேமித்து வைத்திருந்து பயன்படுத்தாமல் போன சொந்தநிலத்துஅரிசி, கத்திரிக்காய், தக்காளி எல்லாம் அந்தவருடம், எங்கள் திருமணத்திற்கு பயன்பட்டது.
திருமணம் முடிந்த அடுத்தநாளே, ஒரு கலைக்குழுவிற்கு பத்து நாட்களும் மூன்று நாட்களும் சமைத்து போட வேண்டும்.
என்ற என் வேண்டுகோளை அவள் ஒரு புன்னகையால் எதிர்கொண்டாள். இன்றுவரை அந்த வேண்டுதல்களும், புன்னகையும் அப்படியேதான் தொடர்கிறது. அல்லது வேண்டுகோள்கள் அவளிடமே நேரடியாய் செல்கிறது அவளே அதை தனி ஆளாக எதிர்கொள்கிறாள்.
திருமணத்திற்குப் பிறகான ஒரு வாரத்தில், ஜே.ஜே.சில குறிப்புகளில் வரும் ஏலிக்குட்டி என்ற பெண்ணைப்போல, இருநூறுப்பக்க நோட்புக்கில் அவள் அதுவரை எழுதியிருந்த கதைகளை கொண்டு வந்து என்னிடம் வாசிக்கத்தந்தாள். என் கண் விரிதலுக்காக அவள் காத்திருந்திருக்கலாம்.
ஷைலஜா மீது காதல் மேலோங்கி இருந்த காலம் அது.
அந்த எழுத்துக்களின் முதிரா தன்மையும், பழகிய வழித்தடமும் பத்து பக்கங்களுக்கு மேல் என்னை வாசிக்கவிடவில்லை. அவளிடமே அதைத் திருப்பித்தந்து, ‘இதைமொத்தமாக கிழித்துப் போட்டுவிட்டு புதிதாக வாசிக்க ஆரம்பி’ என்று சொன்னேன். அதன்பிறகான நாட்களில் கவனித்தேன், அவள் கைகளில் அம்பையும், பிரபஞ்சனும், ஜானகிராமனும் இருந்ததை. அவள் வாசிப்பின் முற்றலை மெல்ல அவதானித்தேன். நெல்கதிர்கள் பாலேறி முற்றி பொன்னிறத்திற்கு மாறுமில்லையா? அப்படி!
இப்போது எழுதத் தோன்றுமே ஏன் இன்னும் எழுதாமல் இருக்கிறாள்? என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அப்போதுதான் கேரளாவின் புகழ்பெற்ற கவிஞன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு நாங்கள் நடத்திய ‘முற்றம்’ இலக்கிய நிகழ்விற்கு பங்கேற்க திருவண்ணாமலை வந்திருந்தார்.
நிகழ்வு முடிந்து எங்கள் வீட்டில் அன்றிரவு தங்கினார் அடுத்த நாள் காலை காபிதம்ளரோடு அவரின் புகழ்பெற்ற ‘சிதம்பரஸ்மர்னா’ என்ற அனுபவ பகிர்வுகள் கொண்ட மலையாளப் புத்தகத்தோடு எங்கள் வீட்டு ஹாலில் உட்கார்ந்து முதல் பாகத்தை தன் கணீர் குரலால் படிக்க ஆரம்பித்தார். இன்னும் அக்குரலின் வலிமை குறையவேயில்லை. அக்குரல் தந்த உத்வேகத்தில்தான் ஷைலஜா தன் முதல் மொழியெர்ப்பைத் துவங்கினாள். அது ஒரு காட்டாற்று சூழலைப்போல அவளை இழுத்துப்போனது.
- பவா செல்லதுரை
நன்றி:கனலி
===========================================================================================
==============================================================================================
பொக்கிஷத்தில் விட்டுப்போனது....
=====================================================================================================
உறவினர் வீட்டு ஜன்னலில் டொக் டொக்கென்று கொத்தும் மைனா....அல்லது மைனாக்கள். சுற்றிலும் இருக்கும் ஜன்னல்களில் ஒன்றிரண்டாக வந்து அமர்ந்து சத்தப்படுத்துகின்றன. சேலம், எடப்பாடி, பாலமலை அடிவாரத்தில் அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் வீடு!
===================================================================================
உன் கண் உன்னை ஏமாற்றினால்...
ரீல்ஸ் என்று அழைக்கப்படும் ஷார்ட்ஸ்ஸிலிருந்து எடுக்கப்பட்டது. கடைசி படம் உண்மையைச் சொல்கிறது பாருங்கள்...=========================================================================================
ஜோக்ஸ்...
இதயம் பேசுகிறது 1978 ல் வந்த சில ஜோக்ஸ்...
யாரிந்த VIP தெரியவில்லை. பார்த்த முகமாயிருக்கிறது!
மாலை வணக்கம்
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்.. வணக்கம்.
நீக்குசென்னை ஜாம்பஜாருக்கு அந்தப் பெயர் வந்தக் காரணம் என்ன?
பதிலளிநீக்குஎன்னிடம் யாராவது இந்தக் கேள்வியைக் கேட்டால், "ஜக்குவைக் கேட்டால் தெரியும்.." என்று நழுவி விடுவேன்.
நீங்கள்?..
கரெக்ட்.
நீக்குஎன்கிட்டே கூட 'எதுலயும் முன்ஜாக்கிரதையா இருக்கறது எப்படி'ன்னு ரவி கேட்டார்.
'முத்தண்ணாவை கேளுங்க'ன்னுட்டு வந்துட்டேன்!
'தனியாவும் மிளகாயும் மசாலாவும் அரைத்துச் சேர்த்து'...
பதிலளிநீக்குமசாலான்னா என்னவோ?
மசாலா என்பது பல்பொருள் கூட்டு சேர்ந்தது. மிளகாயை தனியா முதலில் அரைக்கணுமாம், அப்புறம் மசாலாவோட சேர்த்தும் அரைக்கணுமாம்.
நீக்குநாம தமிழ் நாட்டில் தான். இப்போக் கேரளமும் உண்டுனு தெரியுது. மசாலானா தனியாச் சேர்க்கும் பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், கசகசா போன்றவை என நினைக்கிறோம். நாம் சாம்பாருக்கோ ரசத்துக்கோ வறுத்து அரைத்துச் சேர்க்கும் எந்தப் பொருளும் மசாலாத்தான். பொரிச்ச கூட்டு, பொரிச்ச குழம்பு வகைகளுக்கு அரைப்பதும் மசாலாவோடு சேர்த்தி.
நீக்குஆம். ஒத்துக்கொள்கிறேன்!
நீக்குசாய்ந்த கொள்ள நெருங்கிய தோள் வேண்டுமாமே?
பதிலளிநீக்கு'சுகவாசிகளுக்கு என்னலாம் வேண்டியிருக்கு, பாரு' என்று யோசனை
ஒடியது.
சுகவாசிகளை எப்படி வரையறை செய்வது ஜீவி ஸார்? அப்படி யாரும் இருக்க வாய்ப்பிருக்கிறதா?!!
நீக்குசிறிய மரம் பெரிய நிழல்... அரசியல் கட்சிகளின் கூட்டணியைப் பற்றிய விமர்சனமா?
பதிலளிநீக்குவிரல்களில் பெரிய ஆப்ஜெக்டை அடக்குவதுபோல் ஏன் மனிதன் படமெடுக்க ஆசைப்படுகிறான்? சூரியனை, மலையை வைத்தும் இப்படிப் படமெடுப்பார்கள்.
வாங்க நெல்லை. முடியாததை முடிக்க நினைப்பது மனித ஆசை. காட்டைக் கைகளால் கட்டிப்பிடிக்க வேண்டும், வானத்தை எட்டி எட்டித் தொடவேண்டும், கடலை ஜாடியில் அடைக்க வேண்டும் என நான் முன்பு ஒன்று எழுதி இருந்தேன்!
நீக்குஅரசியல் கட்சி கூட்டணி பற்றிய என்னும் உங்கள் உவமை புன்னகைக்க வைத்தது. சரியாகச் சொன்னீர்கள்!
நீக்குஸ்ரீராம் நவீன கிஷ்ணர்.
நீக்கு:-))
நீக்குபுரியவில்லை
ஆயினும்
புன்னகைக்கிறேன்!
சீக்கா திருமண புகைப்படமா?
பதிலளிநீக்குபாக்யராஜ் என்று நினைத்தேன். அவரைப் பார்த்தா சீக்கா மாதிரியா தெரிகிறது?
நீக்குநானும் ஸ்ரீக்காந்த் என்றுதான் நினைக்கிறேன். கல்யாணக் காட்சி ஊஞ்சல் - பார்த்தால், பாக்யராஜ் ஆக இருக்க வாய்ப்பில்லை.
நீக்குஸ்ரீகாந்த் கல்யாணம் 1978 ; நடந்ததா என்று பார்க்க வேண்டும். கண்ணாடி அணிந்திருப்பாரா என்ன ஸ்ரீகாந்த்?
நீக்குஇந்த கல்யாண படம் எஸ்.பி சைலஜா , சுபலேகா சுதாகர் அவர் கணவர் அவ்ரும் சினிமா, சின்னதிரையில் நடித்து கொண்டு இருக்கிறார்.
நீக்குஅப்படியா சொல்கிறீர்கள்?
நீக்குநான் உலக்கையும், வாணி கணபதியும்னு நினைச்சேன். எப்போவோ பொம்மைப் பத்திரிகையில் பார்த்த நினைவு. நிச்சயமா ஸ்ரீகாந்த் இல்லை. அதோடு எஸ்பி ஷைலஜா கல்யாணத்தில் ஊஞ்சல் எல்லாம் இருந்திருக்குமானு சந்தேகம்.
நீக்குஅறுபதுகளின் கடைநியில் ஸ்ரீகாந்த் நடிக்க வந்துட்டார். வரச்சேயே கல்யாணம் ஆகிவிட்டதாக நினைவு. அம்பேரிக்கன் கான்சுலேட் ஜெனரல் அலுவலகத்தில் பணி புரிந்ததாயும் நினைவு.
நீக்குகீதா அக்கா... நாங்கள் சொல்லி இருப்பது நடிகர் ஸ்ரீகாந்த் அல்ல. கிரிக்கெட் ஸ்ரீகாந்த்!
நீக்குஎதற்கும் நேரடியாகப் பதில் சொல்லாமல் எள்ளலாக எகத்தாளமாகப் பதில் சொன்னால் கடுப்பாகாத நண்பர்களும் உங்களுக்கு இருக்கிறார்கள் என்பது புரிந்தது.
பதிலளிநீக்குஎள்ளலாக எகத்தாளமாக என்று நினைக்கும் நண்பர்களுக்கு கோபம் வரும். நான் அப்படிப்பட்டவன் இல்லை என்பதை உணர்ந்தவர்கள் என் நண்பர்கள்! சட்டென புன்னகைக்க வைக்கும் பிளேடு அறுவை இவை என்று புரியும் நண்பர்கள் தொடர்வார்கள்!
நீக்குஉரையாடல்களை கவனித்தபோது எனக்கு I am OK, You are OK - Transactional Analysis நினைவுக்கு வந்தது. அதன்படி இந்த உரையாடல் .. !!
நீக்கு__/\__
நீக்குஎனக்கு என்னவோ அவ்வளவாய் ரசிக்கலை என்பதைச் சொல்லிக் கொண்டு ........................
நீக்கு:((
நீக்கும்ம்முட்டியின் பகுதி, நான் 80-90களில் சாப்பிட்ட சரவணபவன் உணவின் சுவையை நினைவூட்டியது. எந்த அயோக்கியப் பசங்க அந்தச் செய்முறையை மாற்றி ஹோட்டலின் பெயரைப் பாழடித்தது என யோசிக்கிறேன்.
பதிலளிநீக்குவேறு யார்? திராவிட மாடல் குழுதான்.
நீக்குஆனால் அவர்கள் அறிமுகபப்டுத்திய பாணியை, ருசியை, ஸ்டைலை அத்தனை ஹோட்டல் காரர்களும் பின்பற்ற தொடங்கினார்கள். அதுவும் ஒரு காரணம்.
பெயர் சொல்லாமல் ;பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டால் வித்தியாசமே தெரியாது!
திராவிட மாடலிடம் போனதும்தரம் செட்டிருக்கணுமே. நாங்க ரொம்ப தாமதமாகத் தான் சரவண பவனை ரசிக்க ஆரம்பித்தோம். என் மைத்துனர்கள், ஓர்ப்படி எல்லாம் ரொம்ப உசத்தியாக என்னமோ தாஜ் ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டு வந்த ரேஞ்சில் பெருமை பேசிக்கொள்வார்கள். அவங்களுக்கு நாங்க ஓட்டலுக்கெல்லாம் போவோமா என்பது சந்தேகம். பின்னார் ஒரு நாள் நான் அண்ணா நகர் ஐயப்பன் கோயிலுக்கு எதிரேயுள்ள சுக்சாகரின் வாடிக்கையாளர் என்பதைத் தற்செயலாகச் சொல்ல நேர்ந்ததும் வாயடைச்சுப் போயிட்டாங்க.
நீக்குசாப்பாட்டுச் சீட்டு வாங்கிய உடன் சரவணபவானின் கேள்வி ரசிக்க வைக்கும். "பச்சரிசியா? புழுங்கல் அரிசியா?"
நீக்கு. சுக் சாகரில் மத்தியானம் சாப்பிட்டாலும் சரி, மாலை/இரவு சாப்பிட்டாலும் சரி, ஆர்டர் பண்ணிச் சாப்பிடுவது தான். நாங்க பெரும்பாலும் பட்டர் பராத்தா(சும்மா பராத்தானு ஆர்டர் பண்ணினால் மைதாமாவு புரோட்டா வந்து பயமுறுத்தும். க்ர்ர்ர்ர்ர்)ஆகவே பட்டர் பராத்தா அல்லது ஃபுல்கா அல்லது ருமாலி ரொட்டி. குழந்தைங்களோட போனால் அவங்க விருப்பம் பட்டர் நான் தான் பெரும்பாலும்.
நீக்குசரவணபவன் சாப்பாடு ஏதோ ஓரிரு முறை தவிர்க்க முடியாமல் சாப்பிட்ட நினைவு. ஜலதரங்கம் வாசிக்கப் போறோமோனு ஜந்தேகமே வந்துடும். அத்தனை கிண்ணங்கள். டிஃபனும் எண்ணினாற்போல் ஓரிரு முறை தான் சாப்பிட்டிருப்போம். அண்ணா நகர் ப்ளூ ஸ்டார் நிறுத்தம் அல்லது அசோக் நகரில்
நீக்குமயிலை போயிட்டுத் திரும்பும்போது கோயிலில் ஒருத்தர் என்ன நினைச்சுண்டாரோ எங்களை மாடவீதியில் சங்கீதாவில் கொத்துமல்லி வடை சாப்பிட்டுப் போகச் சொன்னார். அவர் சொன்னதால் எங்களுக்கு அங்கே சாப்பிடும் எண்ணம் இல்லாமல் இருந்தாலும் போய்ச் சாப்பிட்டோம். நன்றாக இருந்தது. பெரும்பாலும் வித்யாபவன் எதிரே கற்பகாம்பாள் மெஸ்ஸில் தான் சாப்பிடுவோம். அன்னிக்கு சங்கீதாவில் சாப்பிட்டோம்
நீக்குஎனக்கு என்னவோ கீதா அக்கா, ரோட்டி, ருமாலி, பட்டர் நான், இதெல்லாம் எனக்கு அவ்வளவாய் ஈர்ப்பில்லை.
நீக்கு// ஜலதரங்கம் வாசிக்கப் போறோமோனு ஜந்தேகமே வந்துடும். அத்தனை கிண்ணங்கள். //
ஹா.. ஹா... ஹா... சிரித்து விட்டேன்.
அண்ணா நகர் சரவணபவனிலும் சாப்பிட்டிருக்கிறேன். அசோக் பில்லர் சரவணபவனிலும் சாப்பிட்டிருக்கிறேன்.
சங்கீதாவின் கொத்துமல்லி வடையா... இன்னும் கொடுக்கிறார்களா தெரியவில்லை. எனினும் மறுபடி அந்தப் பக்கம் போகும்போது முயற்சித்து விடுகிறேன்!!!
வித்யாபவன் எங்கே இருக்கிறது என்று பார்த்து கற்பகாம்பாள் மெஸ்ஸிலும் சாப்பிட்டுப் பார்க்கும் ஆவல் வருகிறது.
உன் கண் உன்னை ஏமாற்றினால்... நல்ல பகிர்வு
பதிலளிநீக்குநன்றி. காணொளியாக பார்த்தால்தான் சுவாரஸ்யம்! தேவக்கோட்டையார் அவற்றை தளத்தில் பகிர்கிறார். நான் இன்னும் அந்த சூட்சுமத்தை அறியவில்லை!
நீக்குஅது கொஞ்சம் கஷ்டப்பட்டுப் புரிஞ்சுண்டேன்.
நீக்குஆ... அம்புட்டு கஷ்டமாவா இருந்தது? கேமிரா கோணம்! இன்று கேமிரா கோணத்தில் இரண்டு ட்ரிக் ஷாட் வெளியிட்டிருக்கிறேனாக்கும்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கமும், நன்றியும்.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனகவேல் காக்க
வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமையாக உள்ளது.
முதல் பகுதி... உங்களுக்கு கிடைத்திருப்பவர்கள் நல்ல நண்பர்கள். சொல்வது சட்டென புரியாமல், தாமதமாக புரிந்தாலும் அவரின் சிறு சிலேடையான வாக்கியத்தை "வேறே ஜாம் வாங்கிட்டேன் "என்று சொல்லி முடித்து விட்டார். நீங்களும் தப்பாக எதையும் சொல்லவில்லை. அவரும் எதையும் தவறாக நினைக்கவில்லை. அதனால்தான் இன்னமும் பேச்சுக்கள் தொடர்கின்றன. சிலர் இதை சாக்கிட்டு அவசியமாக பேசுவதை கூட தவிர்த்து விடுவதும் உண்டு. மாறுபட்ட மன இயல்புகள் உள்ளவர்களதானே மனிதர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆம். இது அவர்களை புண்படுத்துவது ஆகாது. ஆனால் அவர்களுக்குப் புரியவே வேண்டுமே.. நானே அப்படிப்பட்டவர்களிடம் ஒழுங்காய் பேசிவிடுவேன்!!
நீக்குபதிவு சிறப்பு..
பதிலளிநீக்குமம்முட்டி அவர்களது நினைவுகள் ரசனை..
மகிழ்ச்சி..
மகிழ்ச்சி. நன்றி செல்வாண்ணா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகவிதை அருமை. நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். "தோள் கண்டேன் தோளே கண்டேன்" என்ற பழைய பாடல் நினைவுக்கு வந்தது.
செய்திகள் படித்தறிந்து கொண்டேன். லக்னோ செய்தி வியப்பைத் தருகிறது. பல மாதங்கள் பாடுபட்டு உருவாகும் ஒரு திருமணத்தை நிறுத்த எப்படியெல்லாம் வழி பிறக்கிறது என எண்ணும் போது வியப்புடன் வருத்தமும் வருகிறது.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.. ஒரு கேள்வி. செய்திகளில் அந்த லிங்க் தொட்டு சென்று படிப்பீர்களா?
நீக்குஆம். முடிந்தவரை அப்படித்தான். அப்படிச் செல்லும் போது மற்றைய பல செய்திகளில் மூழ்கி விடுவேன். கைப்பேசி கையை கனக்க வைக்கும் நேரத்தில், "எவ்வளவு பொழுதாக கைப்பேசியை வைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்.." என்ற பேச்சுக்கள் வீட்டில் வரும் போது படித்த முதல் செய்தி கவனத்தில் வர அப்போதைக்கு கைப்பேசிக்கு கைகளிலிருந்து விடுதலை தர அப்புறம் நான் வந்து கருத்து தருகையில் "ஆறிய கஞ்சி பழங்கஞ்சியாகி" விடும். ஹா ஹா. இன்று அந்த லிங்கை மட்டும் தொடாமல் விபரத்தை யூகித்துக் கொண்டேன்.
நீக்குஅப்பா... ஒரு கேள்விக்கு எத்தனை பெரிய பதில். பின்னே வீட்டில் கோபிக்காமல் கொஞ்சுவார்களா..! என மனசாட்சி இடிக்கிறது.
நன்றி அக்கா. எந்தன்றால் எத்தனைபேர் லின்க்கைத் தொட்டு செய்தி படிக்கிறார்கள் என்பதும் எந்தவகைச் செய்திகள் யாருக்கு சுவாரஸ்யமாய் இருக்கின்றன என்றும் தெரிந்து கொள்ளத்தான். எந்தவகையான செய்திகளைத் தேர்வு செய்து கொடுக்கலாம் என்பதும் ஒரு ஐடியா கிடைக்கும்.
நீக்கு// ஒரு கேள்விக்கு எத்தனை பெரிய பதில். //
அதெல்லாம் இல்லை. விளக்கமான பதில்களே சிறந்ததது!
வியாழன் கதம்பத்தில் இந்த மாதிரி அரட்டைகளும் பயனுள்ளதாக த்தான் அமைகிறது என்கிறீர்கள். உண்மைதான். ஒருவரின் மனநிலையை, ரசனைகளை, நம் பதிவுகளில் வரும் சம்பவங்களின் மூலமாக மற்றவர்களின் அனுபவங்களை, நியாயமாகவும் நகைச்சுவையாகவும், உணர்ந்து கொள்ள இந்த அரட்டைகள் பயன்படுகிறது. நானும் எப்போதும் எபி. பதிவுகளோடு, மற்றவர்களின் கருத்துரைகளையும் விடாமல் படிப்பேன். நிறைய விஷயங்களை கிரகித்துக் கொள்ள முடிகிறது. இவ்வாறான பகிர்வுகளுக்கு தங்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
நீக்குஆம். உண்மைதான். நாம் பதிவு தெரிவு செய்யும்போதோ, எழுதும்போதோ வாசகர் பல்ஸ் பார்க்க உதவலாம்!
நீக்குஆனால் இந்த அரட்டைகள் பற்றி ஜீவி ஸார் வேறு அபிப்ராயம் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன்!
சாதாரணமாக எ பி யில் வியாழன் அன்று ஒரு எதிர்பார்ப்புகளுடன் காலையிலேயே வந்து வாசித்து பின்னூட்டமாக கருத்துக்களை கூறுவேன். ஆனால் தற்போது அந்த ஆர்வம் குறைந்து விட்டது. ஏன் என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குசரி இன்றைய பதிவைப்பார்ப்போம்.
முதலில் இடம் பெறுவது துணுக்கு கட்டுரை. உங்களுக்கே உண்டான கடி. பாவம் கேட்டவர் கோபம் கொள்ளவில்லை. ஜாமுக்கு விடையாக எனக்கு தோன்றியது "கொஞ்சம் கிரீஸ் அல்லது எண்ணெய் போடுங்கள்' .
செய்திகள் நிறைய. ஆனால் அறியாதவை குறைவு.
தோள் கண்டேன் தோளில் சாய்ந்தேன்.
https://www.youtube.com/watch?v=u97Y5jB5GSc
கவிதைக்கு பதில்.
எல்லா தோள்களிலும்
சாய்ந்து கொள்ள
முடிவதில்லை
சுகமாக அழ,
பாரம் இறங்க,
கண்ணீர் சிந்த
தனித்த ஒரு
துணை வேண்டியிருக்கிறது
ஸ்ரீ வள்ளி பாட்டு அந்தக்கால நாட்டுப்புற பாடல். பாமரர் பேசும் மொழி. ஆனால் தற்போது பாட்டில், செய்கையிலும் அதை காட்டுவதே 'காலம் கேட்டு போச்சு" என்பது.
பழைய கடிகள் குழந்தைக் கடிகளாக அனுபவிக்கத்தக்கவையாக உள்ளன. ஆனாலும் இதயம் பேசுகிறதைக் காட்டிலும் விகடன் ஜோக்குகள் தான் சிறப்பாக தொன்றுகின்றன.
மம்மூட்டி கூறிய திருவனந்தபுரத்தின் கேத்தல் கடை தற்போதும் உண்டு. சிக்கன் மட்டும் தான் ஸ்பெஷல். ஆனால் அன்றைய ஒரிஜினல் ருசி இல்லை, மாறிவிட்டது. பிராய்லர்கள் கெடுத்துவிட்டன. ஜெயமோஹனின் "சோற்றுக்கணக்கு" என்ற சிறுகதையின் மூலம் அதுதான்.
குறு மரம் போட்டோ அருமை.
Jayakumar
ஆனால் தற்போது அந்த ஆர்வம் குறைந்து விட்டது. ஏன் என்று தெரியவில்லை.//
நீக்குஅச்சச்சோ... ஏன் என்று யோசித்து கட்டாயம் சொல்லுங்கள். மிக அதிகப்படியாக கன்டென்ட்ஸ் பகிர்கிறேனா? வேறு ஏதாவதா?
அவர் எனக்கு கேஜி எஸ் மூலமா அறிமுகமானவர். கே ஜி எஸ் இன்னமும் அதிகமாக... எனவே பழகி இருக்கும்!
சிவனை ஆறுதல் படுத்திய மோடி பகிர்ந்திருக்கிறீர்கள்!
மற்ற பதில்களும் நன்றி. ஏன் சுவாரஸ்யம் குறைகிறது என்று சொன்னால் மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கும்.
எங்கே இன்னும் உங்களை காணோமே என்று தேடிக்கொண்டிருந்தேன்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குமாற்றம் என்னிடத்தில் தான். அரைமணி நேரம் தொடர்ச்சியாக வாசிக்க முடிவதில்லை. வெள்ளெழுத்து வருகிறது. கூடவே சோர்வும். எழுந்து ஒரு 15 நிமிடம் படுத்து ஒய்வு எடுத்து விட்டு பின்னர் வாசிக்க வேண்டும். கண்ணாடி மாற வேண்டும். பையன் வரும்போது தான் மாற்ற முடியும்.
நீக்குJayakumar
ஓ.. நல்லது. ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இந்நிலையிலும் நீங்கள் சனிக்கிழமையை சமாளிப்பதும் சமீப காலமாக திங்களிலும் கலக்குவதும் வியப்புக்குரியது. பாராட்டுகள்.
நீக்கு//அன்று ஒரு எதிர்பார்ப்புகளுடன் காலையிலேயே வந்து வாசித்து பின்னூட்டமாக கருத்துக்களை கூறுவேன். ஆனால் தற்போது அந்த ஆர்வம் குறைந்து விட்டது. // ஸ்ரீராம், நான் எழுதலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். உங்களுக்கு நேரமில்லாததால், முதல் பகுதி சென்ற சில வாரங்களாக சுமாராக இருக்கிறது. அந்தப் பகுதி நெடியதாக இருந்தாலும் படிக்க ரசனையாக இருக்கும். நியூஸ் ரூமிலும் சில பல செய்திகள் பழசாக ஆகிவிடுகிறது. நகைச்சுவை கொஞ்சம் நல்லா தேர்ந்தெடுக்கலாம். இந்த இரண்டு குறைதான்.
நீக்குNoted.
நீக்குஜீவி ஸார் என் பகுதியைக் குறைத்துக் கொண்டு இலக்கியத்துக்கு அதிக இடம் கொடுக்கச் சொன்னார்.
வியாழக்கிழமையின் ருசிகரமே வம்பு, தும்பு நிறைந்த உங்கள் அரட்டைப் பாகம் தான். :))))) அதுக்குத் தானே வரோம்.
நீக்குநன்றி.. நன்றி கீதா அக்கா. அவர் சொன்னது பதிவில் நான் எழுதும் பகுதி.
நீக்கு//காலோடு கால் சேர்த்து அனு
பதிலளிநீக்குராக போக கலவி செய்தால்
பாலோடு சேர்ந்த பழம் போலும்// - இதுக்கு விடை கண்டுபிடிப்பது சுலபம். நீங்கள் நம்ம கோயில்களுக்கெல்லாம் போயிருப்பீங்க. ஒரு சில சிற்பங்களாவது பார்த்திருப்பீங்க. நமக்கு ரொம்ப சலனம் ஏற்படாது. வெளிநாட்டு ஓவியங்கள் சிற்பங்கள் பார்த்தால் சலனம் ஏற்படும். அதுதான் வித்தியாசம். ரொம்ப explicitஆக பாடல்கள் காட்சிகள் மாறிக்கொண்டு வருகிறது. முன்பெல்லாம் முத்தம் என்ற காட்சி வந்தாலே பாரதிராஜாவும் மற்றவரும் இரண்டு பூக்களைக் காண்பித்து ஆட்டிவிடுவார்கள். ஆனால் வர வர, (கமலஹாசன் இதற்குக் காரணம்) முத்தம் கொடுக்கிறானா இல்லை அவளுடைய குடலை உறிஞ்சுகிறானா என்ற சந்தேகமே வர ஆரம்பிக்கிறது.
சலனம் ஏற்படுதா இளையங்கறது இல்லை.. அந்தக் காலத்துல அந்தக்காலத்துல என்று இந்தக் காலத்தைப் பற்றி ஆபாசம் பற்றி பேசுவார்கள். அதற்குச் சொன்னேன்!
நீக்கு//'லொடக்காஸி ஜோக்கெல்லாம் அடிக்காம நிதானமா பேசுடா ஸ்ரீ....'//
பதிலளிநீக்குஅவர் உங்கள் ஜோக்கை ரசித்து சிரிக்கும் மனநிலையில் இல்லை.
இருந்து இருந்தால் இப்படி சொல்லி இருக்கமாட்டார்.
இடம், பொருள், ஏவல் பார்த்து பேசனும் என்று உங்கள் மகன் சொன்னது சரிதான்.
//அதுதான்.. ஜாம் தொட்டுக்கிட்டு ப்ரெட் சாப்பிடலாம்னு... ஒண்ணும் புரியலை. அதான் வச்சுட்டேன். கொஞ்சம் கழிச்சு இப்பதான் புரிஞ்சுது.. நைட்டுக்கு பிரெட்டே வாங்கிட்டேன்.. ஆனா ஜாம் தனியா வாங்கிட்டேன்.. வைக்கவா?" என்று வைத்து விட்டார்.//
முதலில் புரியவில்லை அவருக்கு, புரிந்தபின் ஜாம் தனியாக வாங்கிட்டேன் என்று சொல்லி வைத்து விட்டாரே!
ஐயோ அக்கா... அது அவர் சொல்லலை. அது என் மைண்ட்வாய்ஸ்! சிங்கிள் கமா பாருங்க... முதலில் புரியவில்லை என்று சொல்லியவர் சொன்னது என்னை கலாய்க்கிறார்!
நீக்குஉங்கள் மைண்ட் வாய்ஸா ? சரி சரி டா போட்டு பேசும் அளவுக்கு உரிமை உடைய நட்பு என்றால் கிண்டல், கேலி பேசலாம், இருந்தாலும் அன்றைய மன நிலை ஏற்கும் நிலையில் இல்லை.
நீக்குசும்மா ஜாலிதானே அக்கா?
நீக்குமீனாட்சி அம்மன் கோவில், சித்திரை திருவிழா நியூஸ் படித்தவுடன் நேற்று எதிர்பார்க்காமல் மீனாட்சி அன்னையின் இரண்டாம் திருநாள் திருவிழா பார்க்கு பேறு கிடைத்தது.
பதிலளிநீக்குதங்கை வீட்டுக்கு போய் இருந்தேன், உடனே கிளம்ப நினைத்தேன், வந்து இருந்த உறவினர்கள் விடவில்லை சுவாமி வரும், வீட்டுக்கு அருகில் வரும் சாமியை பார்க்காமல் போககூடாது என்று தடுத்து விட்டனர் . இரண்டாம் நாள் விழா கண்டு களித்தேன்.
எனக்கு கூட மதுரை செல்ல ஆவலாக உல்ளது. ஓரிரண்டு வேலைகளும் இருக்கிறது!
நீக்குசிறிய மரம், பெரிய நிழல் கங்கை கொண்ட சோழபுர படங்களா?
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது.
விரல் இடுக்கில் கோபுரத்தை கொண்டுவர முயற்சியும் நன்று.
கவிதை அருமை. உரிமை உள்ள தோள், உண்மையான ஆறுதல், அரவணைப்பு தரும் தோள்வேண்டும்.
நன்றி அக்கா. 2014!
நீக்குரீல்ஸ் என்று அழைக்கப்படும் ஷார்ட்ஸ்ஸிலிருந்து எடுக்கப்பட்டது. கடைசி படம் உண்மையைச் சொல்கிறது பாருங்கள்...//
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது.
சிரிப்புகள் சிரிக்க வைத்தன கைலாஷ் இப்படி அர்த்தம் சொல்லி இருக்கவேண்டாம். "கை இருப்பு இல்லை, காலி" என்று இதைதான் சொல்வார்களோ!
சமயங்களில் இப்படி நேர்ந்து விடும். "பளிச் சலவைத்தூள் உபயோகித்தால் துணிகள் எல்லாம் கிழிச்" என்று ஒரு ஜோக் வந்ததது. அடுத்த வாரம் அதற்கு கண்டனம் வந்து விட்டது. பளிச் என்று நிஜமாகவே ஒரு பொடி இருந்திருக்கிறது!
நீக்குஜாம் ஆனதுக்கு உங்கள் பதில்...., நகைச்சுவைதான் ஆனாலும் அவர் இருக்கும் சூழலில் அப்படிச் சொல்வது தப்பு என்றே படுகிறது. ஒரு கஸ்டமான சூழலில் நம்மைத்தேடி பேசுகிறார்கள் எனில், அது நம்மிடமிருந்து ஆறுதல் கிடைக்கோணும் என மட்டுமே. அந்த இடத்தில் ஜோக் நல்லதல்ல, இருப்பினும் அவர் அதை மனதில் புதைத்துப்போட்டு மீண்டும் கதைக்கிறார் எனில், உங்கள் நட்பை அவர் இழக்க விரும்பவில்லை என்றே அர்த்தம்.
பதிலளிநீக்குநான் அனுபவத்தில் கண்டது, ஒருவர் ஒரு தப்புச் செய்துபோட்டு, ஓடிவந்து தப்புச் செய்திட்டேன் கைகால் எல்லாம் நடுங்குது எனச் சொன்னால், உடனே.. "நீ செய்தது மகா தப்பு, நடுங்கிக்கித்தான் ஆகோணும்".. எனச் சொல்லக்கூடாது, முதலில், அவரை சமாதானப்படுத்திப்போட்டுத்தான், பின்னர் உண்மையைச் சொல்லோணும் எனக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
என் பழைய கால நினைவு ஒன்றைக் கிளறிவிட்டீங்கள். அப்போ எனக்கு 14,15 வயசிருக்கும் நானும் நண்பியும் ஏதோ பண்ணிக்கொண்டிருந்தபோது என் கையில், விரலில் முள்ளுக்குத்தி ரத்தம் வந்தது, உடனே ஆ என்று கொண்டு நண்பிக்குக் காட்டினேன்... பார்த்தவுடன்... "சோ பியூட்டிஃபுல்" என்றா....
என்னால அந்தச் சொல்லை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, ,[அந்நேரம் நான் வீட்டிலும் சரி உறவுகளிடத்திலும் சரி சரியான செல்லப்பிள்ளை, செல்லடங்கா என்றே என்னைக் கூப்பிடுவார்கள் மாமா ஆன்றி ஆட்கள் ஹா ஹா ஹா, சின்ன விசயமானாலும் பரிதாபப்பட்டு தடவிக்கொடுத்தே பழக்கட்டிருந்தேன் அதனால என் நண்பியின் இச்சொல் தாங்க முடியவில்லை அந்நேரம்:))))::] , ஆனா நான் கோபிக்கவில்லை.. பேசிக்கொண்டுதானிருந்தேன், அவ கொழும்பில் இருக்கிறாதிருமணமானபின்பும் பேசிக்கொண்டுதானிருந்தேன் நட்பாக, ஆனா அவர் என்றைக்கும் என் நெருங்கிய தோழியாக முடியாமல் என் மனம் கொஞ்சம் தூரவே ஒதுக்கி வைத்திருக்கிறது.
இப்பகூடப் பாருங்கோ, நீறுபூத்த நெருப்பென்பினமே.. அதுபோல உங்கள் கதைபடிச்சதும் டக்கென நினைவுக்கு வந்து விட்டது ஹா ஹா ஹா பெரிசா எழுதிட்டேனோ.. சரி சரி இது என்ன புதுசா எனக்கு:))))))
ரொம்ப யோசித்து சீரியஸாவே பதில் சொல்லி இருக்கீங்க அதிரா... இது ஜாலிக்கு எழுதப்பட்ட பதிவு. ஆயினும் நானும் சீரியஸாவே சொல்றேன்! நான் அப்படி எல்லாம் எல்லா இடத்திலும் ஜோக் அடிச்சுட்டு இருக்க மாட்டேன்! சில இடங்களில் மட்டும்தான். இடம், பொருள், நேரம் உண்டு. ஆனால் நான் பேசியதில் நீங்கள் சொல்லி இருப்பது போல யாரேனும் காயப்பட்டு அதை இன்னும் மனதில் சுமக்கக் கூடும். ஏனெனில் நான் (நானும்) சுமக்கிறேன்!
நீக்குநீங்கள் சொல்லி இருப்பது எனக்கு வேறு ஒருவர் நினைவை ஏற்படுத்துகிறது. எல்லோரும் சாதாரணமாக அனுபவிக்கும் சிரமங்களை இவர் மட்டும் தான் ரொம்ப ஸ்பெஷலாக கஷ்டப்படுவதாக சொல்வார். கேட்க கடுப்பாக இருந்தாலும் மனம் கோணக்கொடாதே என்று முகம் கோணாமல் பதில் சொல்வதுண்டு.
நீக்குஒருவர் என்ன பிரச்சனையில் அல்லது என்ன மனநிலையில் இருக்கிறார் எனத் தெரியாமல் ஜோக் பண்ணுவது தப்பல்ல, ஆனா தெரிஞ்சுகொண்டால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லதுதானே, நாம் நல்லவிதத்துக்காகச் சொன்னாலும் கஸ்டத்தில் இருப்பவருக்கு அது எரிச்சலைத்தான் குடுக்கும்.
நீக்கு2. உண்மை, சிலர் ஓவர் பந்தாக் காட்டுவோரும் இருக்கினம்:)))
அதை அறிய முடியும் அதிரா... அந்த நேரத்தில் இபப்டி பேச முடியாது.
நீக்குராமர்பாலம் செய்தி நன்றாக இருக்கு நினைக்க. மற்றும்படி எனக்கான செய்தி எதுவுமில்லை நியூஸ்ரூமில்...
பதிலளிநீக்குவைல்ட் வைட் கோஸஸ் என வந்திருக்கோணுமோ... நேரில் பார்ப்பதுபோல இருக்கு.
இருக்கலாம். படைத்தவர் விருப்பம்!
நீக்குகவிதை வரிகள் நீங்கள் எழுதியதோ வை அங்கிள் எழுதியதோ?...
பதிலளிநீக்குசூப்பராக இருக்குது, உண்மையை வரிகளில் சொல்லியிருக்கிறீங்க/கிறார்.
கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார் "உன் சந்தோசத்தை மட்டும் அடுத்தவரோடு பகிர்ந்துகொள், துன்பத்தை உன்னுடனேயே வைத்திரு, நெருங்கியவர் என நம்பிப் பகிர்ந்தாலும், ஒரு பிரச்சனையில் குத்திக்காட்டி விடும் வாய்ப்பும் வந்திடலாம்"... ஆனா ஆரிடமாவது சொல்லி அழும்போதுதான் ஆறுதல் கிடைக்கும்.. அதனாலதானே சாமி, சந்நியாசி என இருப்போரைத் தேடிச்சென்று சிலர் மாண்டுபோய் விடுகின்றனர் அதிலேயே.
என்னுடைய வரிகள்தான் கீதா. அதுவும் சொந்த அனுபவத்தினால் வந்ததுதான். சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது.
நீக்குநீங்கள் சொல்லி இருப்பதும் சரி. கோவில்கள் ஏற்பட்டதே இதுபோன்ற சுமையைக் குறைக்கும் வெளிப்பாடுகளுக்காகத்தானே....
ஸ்ரீராம்.1/5/25 5:16 PM
நீக்குஎன்னுடைய வரிகள்தான் கீதா.
என்னாது ஊஊஉ கீதாவோ கர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா...
அச்சச்சோ.... அதிரா... அதிரா.... !!
நீக்குஹா ஹா ஹா போஸ்ட் ஒரே பீலிங்சாப்போகுதே என நினைச்சேன், பழைய காலம் என நினைக்கையில் சிரிப்பு வருது...
பதிலளிநீக்குஉண்மையில் பழைய காலத்தில்தான் அதிகமான காமம் சம்பந்தப்பட்ட விசயங்களும் அதற்கான முன்னுரிமையும் அதிகம் இருந்தது, தாசிகள் அதிகம் இருந்தார்கள், மன்னர்களுக்கு அந்தப்புரம் இருந்தது, அது சம்பந்தமான அனைத்து நூல்களும் அப்போதானே எழுதப்பட்டது, அதை வைத்துத்தானே இப்போ எல்லோரும் காலத்தை ஓட்டுகின்றனர், இப்போ புதுசா ஆரும் எதுவும் கண்டுபிடிக்கவில்லையே:)))...
அதனால அந்தக்காலத்தை விட இக்காலம் பெட்டர் தான்:)))
இப்போ யாருக்கும் கற்பனை ஓடுவதில்லை என்கிறீர்களா? உண்மைதான். ஓடும் கற்பனை கூட 'பழைய வரிகள்' பாதிப்பில் வந்து விடுகின்றன!
நீக்குஅது என்னமோ தெரியவில்லை, சில சுவை நம் நாக்கில் ஒட்டிக் கொள்ளூம், மறக்கவே முடியாது, ஆனா அதை விட அருமையாகச் செய்தாலும், அப்போ நாம் அனுபவிச்ச சுவை வராததுபோலவே பீலிங் இருக்கும், இது மம்முட்டி அங்கி?ளுக்கு மட்டுமில்லை நம் எல்லோருக்குள்ளும் இருக்கும்.
பதிலளிநீக்குஊரில இருந்த காலத்தில், தம் தோட்டத்தில் விளைந்த சாமி அரிசியில் ஒரு பிடிக்கொழுக்கட்டை செய்துதந்தா பக்கத்து வீட்டு ஆன்..ரி, அதன் பின் எத்தனையோ தடவை சாப்பிட்டும் அச்சுவை எனக்குக் கிடைக்கவே இல்லை, ஒருவேளை நம் மனம் தாம் காரணம் என நினைக்கிறேன். இப்பகூட சாமி வாங்கி வச்சிருக்கிறேன் விரைவில் வீடியோவாக வரும்:))))
சாமை அரிசியை சாமி ன்னு எழுதி கன்ஃப்யூஸ் ஆயிட்டாங்க அதிரா. கடைசி வரியைப் பார்த்து, சாமியையே வாங்குமளவு யூடியூபில் பணம் கொட்டுதோ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
நீக்குஹையோ... சொல்லாதீங்க... நம் நாக்கு ட்ரேட்மார்க் செய்து வைத்திருக்கும் சில சுவைகள் எல்லோருக்கும் இருக்கும். அது அவரவர் சுவையைப் பொறுத்து இருக்கலாம். எனக்கும் சில சுவை அளவீடுகள் உண்டு. அப்புறம் நான் சாப்பிடும் பொருள்கள் அதை எட்டிப்பிடிக்கிறதா என்று பார்பபதும் உண்டு. முக்கியமான விஷயம்.. அம்மா சமையல் என்று அல்ல, முதலில் சாப்பிட்டது என்கிற அளவுகோல் அல்ல.
நீக்குஹா ஹா ஹா சாமையை நாங்கள் ச்ச்ச்செல்லமா சாமி என அழைப்போமாக்கும்:)).
நீக்குமறக்க முடியாத சுவை பல உண்டு ஶ்ரீராம்....
சின்ன வயசில பஸ் இல் ஊருக்குப் போகும்போது ஒரு சிங்களக் கடையில் பஸ் நிற்கும், மதிய சாப்பாடு... அதன் சுவை மறக்கவே முடியாது, ஆனா அம்மா அப்பா போனபோது பல ஆண்டுகளின் பின், தேடிப்போய்ச் சாப்பிட்டிருக்கினம், பழைய சுவை கிடைக்கவில்லையாம்:)))
டெல்லியில் ஒரு ஶ்ரீராம் டாபா, ஏற்கனவே சொன்னேன்... அங்கு ஒரு 4,5 தடவைகள் சாப்பிட்டிருப்போம், ஆனா ஒருதடவை சாப்பிட்ட ரொட்டியையும் நெய்யையும் என்னால மறக்கவே முடியவில்லை.... திரும்பவும் போய்ச் சாப்பிடோணும் என ஆசை வருது.:).
கடைகளில் சாப்பிட்ட சுவையை விட வீட்டில், வீடுகளில் சாப்பிட்ட சுவை அதிகம். கடை நினைவு என்று எனக்கு கம்மியாகத்தான் இருக்கும். சுகுமார் செய்த புளிக்காய்ச்சல் போல, அவர் செய்த கல்கண்டு சாதம் போல, அவர்மனைவி செய்யும் வெந்தயக்குழம்பு போல, ரசம் போல, என் பாட்டி செய்யும் மொறுமொறு தோசை போல, என் அத்தை செய்யும் கரைத்த தோசை...பாஸின் அவியல், பிட்லே
நீக்கு//பாஸின் அவியல், பிட்லே// இது உண்மையாத்தான் இருக்கும். பாஸ் எபிக்கு வருவதே கிடையாதே. ஒருவேளை வருவாராயிருந்தால், இதற்கே இரண்டு மூன்று பேரா எழுதியிருந்திருப்பார் ஸ்ரீராம் (இல்லைனா, அப்போ தக்காளி ரசம் நல்லா இருக்காதா? பூண்டுச் சட்னி? என்றெல்லாம் கேள்விகள் எழுமே)
நீக்குஇல்லை நெல்லை.. இன்னும் இருக்குதானே. சொந்தப பெருமை வேண்டாம்னு நிறுத்திட்டேன்.
நீக்குபவா செல்லத்துரை அவர்கள், பிக்பொஸ் க்கு வராமல் இருந்திருக்கலாம், அப்படியெனில் இப்போ உங்கள் பதிவுக்கு ஆஹா ஓகோ என எண்ணிப்பதில் எழுதியிருப்பேன்.
பதிலளிநீக்குநான் இருவரையும் புத்தகக் கண்காட்சியில் பார்த்திருக்கிறேன். ஷைலஜா அவர்கள் நம் தளத்தில் ஒரு செவ்வாயில் சிறுகதை கொடுத்திருப்பதாக ஞாபகம்.
நீக்குஸ்ரீராம், இந்த ஷைலஜாவா எபியில் எழுதிய ஷைலஜா அவங்க? அப்படித் தெரியலையே ஸ்ரீராம்.
நீக்குஎ பி ல வந்த கதை எழுதிய ஷைலஜா அவங்க பெங்களூர் வாசி. நம்ம ராமலக்ஷ்மி மூலமா அறிமுகம்.
கீதா
அவங்கதான் இவங்க... இல்லையா? மம்மூட்டி புத்தகம் உட்பட மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதுபவர். புத்தக நிலையம் நடத்துகிறார்கள்.
நீக்குNO
நீக்குஆம். இவர் வேறு அவர் வேறு என்று கண்டுகொண்டேன். ராமலக்ஷ்மியிடமும் கேட்டு தெளிந்தேன். நானும் கீதாவும் ஆராய்ச்சிகள் செய்தோம்!
நீக்குசிறியமரம், பெரிய நிழல்....... அடம்பன் கொடியும்.. கதைதான்.
பதிலளிநீக்குகோபுரத்தைக் கைக்குள் அடக்கும்போது உங்கள் நேரடி வர்ணனை சூப்பர் ஶ்ரீராம் ஹா ஹா ஹா:).
ஆஆஆ அந்த ரெயில் ட்ரக் படம்... கடசிப்படம் இல்லை எனில், அது உண்மையான தண்டவாளம் இல்லை எனும் முடிவுக்கு வந்திருப்பேன் நான் ஹா ஹா ஹா நான் பெரிய அறிவாளி எல்லோ:)))
இரண்டுமே ட்ரிக் ஷாட் வகையறா.. ஒன்று ஓசி. இன்னொன்று சொந்தம்! வருடத்தைப் பார்த்தீர்களா? அப்போது நீங்களும் பேஸ்புக்கில் இருந்தீர்கள்.
நீக்குஇப்பவும் இருக்கிறீர்கள். ஆனால் வெளிப்படுத்திக் கொள்வதில்லை! சரியா?
இல்லை ஶ்ரீராம் இப்போ நான் பேஸ்புக்கில் அதிராவாக இல்லை, அதை டிலீட் பண்ணியே பல வருடமாகிவிட்டது.. ஆனா அதீஸ்பலஸ் என ஓபின் பண்ணியிருக்கிறேன்... அப்படியே இருக்குது, ஏனோ தெரியவில்லை எதுவும் போட மனமில்லை அங்கு.
நீக்குசரி.. சரி... ஓகே...
நீக்குஜோக்ஸ் அனைத்தும் சூப்பர், அந்த வி ஐ பி யைப் பார்க்க...கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாணமாலை யில் வரும் கமல் அங்கிள் என நினைச்சேன்... பின்பு இப்போ கொமெண்ட்ஸ் படிச்சேன், கொமெண்ட்டில கோமதி அக்கா சொல்லிட்டா.. இவர் அவர் இல்லை என:)) ஹா ஹா ஹா.. இன்று எனக்குப் பிடித்திருக்கிறது போஸ்ட் ஶ்ரீராம்....
பதிலளிநீக்குகமல் இல்லை. எஸ் பி ஷைலஜாவும் இல்லை. அந்தப் பக்கத்தில் யாரென்று போட்டுத் தொலைத்திருந்தால் இந்த பல்லிடுக்குப் பாக்கு சங்கடம் இல்லை!
நீக்குஹா ஹா ஹா அவரவர்க்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும் இதில நீங்க வேற:).. வேலியில போற ஓணானைப் பிடிச்சு வேட்டியில் விட்ட கதையாக்கிட்டீங்க எல்லோருக்கும் ஹா ஹா ஹா மூளைக்கு வேலை கொடுப்பது நல்லது தெரியுமோ... டிமென்ஷியா... அல்சைமர் எதுவும் வராது ஹா ஹா ஹா...
நீக்குஇன்றோடு மறந்து விடும்!
நீக்குஒரு போஸ்ட்டில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்திருக்கும், எல்லோர் கருத்துக்கும் நம்மால் இசைந்து கொடுக்க முடியாதுதானே, நமக்குப் பிடிச்சதால, நம் மனம் சொன்னதாலதானே எழுதுகிறோம், அதனால, படிக்கும்போது சில விசயங்கள் நமக்கு தேவையில்லை அல்லது சுவை இல்லை எனப்படும்போது, நமக்குப் பிடிச்சதை எடுத்துக்கொள்ளோணும் என அன்னம்போல ஆகிட்டேன் அதிரா ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குஏனெனில் சனிக்கிழமையையே நியூஸ் ரூமாக்கிட்டால்... அதற்கானோர் அன்று வந்து படிப்பினம்... இன்றைக்கு எதுக்கு நியூஸ் ரூம் என நான் நினைக்கிறேன் ஹா ஹா ஹா அப்பாடா சுற்றி வளைச்சு என் கருத்தையும் உள்ளே புகுத்திட்டேன்...
என் கொமெட்ஸைப் படிச்சுக்கொண்டிருக்கிறீங்க, ஆனா அதிரா வெளியே போகட்டும் பின்பு களம் இறங்கலாம் எனக் காத்திருக்கிறேங்க ஹா ஹா ஹா அப்போ மீ போட்டு வரட்டே....:)))
நியூஸ் ரூம் எவ்வளவு பேர் விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை. மெஜாரிட்டி வேண்டாம் என்று சொல்லி விட்டால் எடுத்து விடுகிறேன். ஏனெனில் சனிக்கிழமை பாஸிட்டிவ் செய்திகள் மட்டும்தான். இங்கே பாஸிட்டிவ் இல்லாத வேறு சுவாரஸ்ய செய்திகள். ஆனால் வியாழனுக்கு வேண்டும் என்று தொகுக்கும் சேர்ந்து விடுகின்றன. ஒருவருக்கு ஒரு செய்தி பிடிக்கும் இன்னொருவருக்கு வேறு செய்தி...
நீக்குபார்க்கிறேன். வாசகர்கள் சொல்லட்டும். எடுத்து விடுகிறேன்!
இல்லை ஶ்ரீராம் , அது உங்கள் விருப்பம், நீக்கியபின், சொல்லிப்போட்டு நான் 2 மாதம் காணாமல் போயிட்டால் என்ன பண்ணுவது ஹா ஹா ஹா அதனால உங்கள் மனதுக்குப் படுவதைச் செய்யுங்கோ:))
நீக்குஅதெல்லாம் இல்லை அதிரா... படிப்பவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்று அறிவதுதான் நோக்கம்?
நீக்குஸ்ரீராம் நான் லிங்க் போய் வாசிப்பதுண்டு. ஒரு சிலதுக்கு இங்கு கருத்து சொல்வேன். சிலது வாசித்துக் கடந்துவிடுவேன். இப்படித்தான் நியூஸ் தெரிந்துகொள்கிறேன் ஸ்ரீராம்.
நீக்குகீதா
அது சரி கீதா... ஜே கே சி சார் சொல்லி இருக்கும் யோசனை எப்படி? மொத்த செய்திகளையும் சனிக்கிழமைக்கு கடத்தி விடலாமா?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவிட்டதில் தொடர்கிறேன்.
குட்டி மரம் அதிக நிழல் தருவது என்பது ஆச்சரியந்தான். அழகாகவும் உள்ளது.
கையளவில் கோபுரத்தை கவர் செய்த புகைப்படமும் அருமை.
இணையத்தில் கண்டு ரசித்த படங்களை நானும் ரசித்தேன். அருமை.
பாரதியின் பேத்தி தன் பாட்டியுடன் (செல்லம்மா பாரதி அவர்கள்) இருப்பதை இப்போது பகிர்ந்ததில் பார்த்துக் கொண்டேன்.
தண்டவாளங்களை காட்டி கொஞ்ச நேரத்தில் ரயிலையும் இணைத்த படம் (உன் கண் உன்னை ஏமாற்றினால்) ரீல்ஸ் நன்றாக உள்ளது.
ஜோக்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளது. காருடன் நிழலுடன் வாக்கிங் போகும் அப்பாவையும், குறிப்பாக கணவரின் நிழலில் எப்போதும் இருக்கும் மனைவியை பாராட்ட வேண்டும். ஹா ஹா ஹா
நானும் சகோதரி அதிராவைப் போல அது கமல் என்றுதான் காலையில் சொல்ல நினைத்தேன். ஆனால், அது வாணி கணபதியின் சாயல் இல்லை என்பதால் குறிப்பிட்டு சொல்லாமல் விட்டு விட்டேன்.அவரின் பழைய கல்யாண போட்டோவில் வாணியுடன் கமல் இருப்பதை யூடியூபில் பார்த்திருக்கிறேன். ஆனால், அது ஊஞ்சல் காட்சியல்ல.. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. எல்லாவற்றையும் படித்து, கருத்து சொல்லி விட்டீர்கள். நன்றி. அந்த புகைப்படத்தில் இருக்கும் வி ஐ பி யார் என்பது இன்னும் புதிர்தான்.
நீக்குஅந்த விஐபி யாருன்னே தெரியலை.
நீக்குகீதா
ஸ்ரீராம்,
பதிலளிநீக்குஅங்கே அந்த இடத்தில் வைரமுத்துவை
ஏன் இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை?
அதிரா கேட்டிருக்கிறாரே ஜீவி ஸார்?
நீக்குஎன்னுடைய வரிகள் அதனால் விளைந்தது அல்ல, சொந்த அனுபவத்தால்!
நான் இட்டிருக்கும் பின்னூட்டம் அவர் கவிதை மனோபாவத்தை ஒட்டியே.
நீக்குதோள் சாய்தல் கவிதைகளுக்கே உரித்தானவையே தவிர
நிஜ வாழ்க்கைக்கல்ல. உன் பாரத்தை என் மேல் அழுத்த நான் என்ன்ச் சுமைதாங்கியா என்று எதிராளியை ஒரு வயதுக்கு மேல் முகஞ்சுளிக்க வைக்கும்.
கவிதைகளுக்குக் கூட தோள் சாய்க்க பெண்கள் தான் கிடைப்பார்களே தவிர எந்தப் பெண் கவிஞரும் தோள் சாய்ப்பதைப் பற்றி எழுதி நான் படித்ததில்லை.
ஆக, தோள் சாய்த்தல் எல்லாம் ஆண் வர்க்க வெற்றுக் கற்பனை
ஏக்கம் தான்!
நான் இட்டிருக்கும் பின்னூட்டம் அவர் கவிதை மனோபாவத்தை ஒட்டியே.
நீக்குதோள் சாய்தல் கவிதைகளுக்கே உரித்தானவையே தவிர
நிஜ வாழ்க்கைக்கல்ல. உன் பாரத்தை என் மேல் அழுத்த நான் என்ன்ச் சுமைதாங்கியா என்று எதிராளியை ஒரு வயதுக்கு மேல் முகஞ்சுளிக்க வைக்கும்.
கவிதைகளுக்குக் கூட தோள் சாய்க்க பெண்கள் தான் கிடைப்பார்களே தவிர எந்தப் பெண் கவிஞரும் தோள் சாய்ப்பதைப் பற்றி எழுதி நான் படித்ததில்லை.
ஆக, தோள் சாய்த்தல் எல்லாம் ஆண் வர்க்க வெற்றுக் கற்பனை
ஏக்கம் தான்!
தோள் சாய்தல் என்பதை அப்படியே எடுத்துக் கொள்கிறீர்களா ஜீவி ஸார்? அது ஒரு உருவகம். உங்கள் மனபாரம் குறைக்கும் ஒரு ஆள். தோளில் சாயவேண்டும் என்று அவசியமில்லை.
நீக்கு
பதிலளிநீக்குஅதிரா சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். நியூஸ் ரூமை சனிக்கு மாற்றிக்கொள்ளலாம். ஒரு வார செய்தி ரவுண்ட் போல சரியாக இருக்கும். நான் படிச்ச கதை பகுதி அவ்வப்போது வெளியாகும் ஒரு விருப்ப பகுதியாக மாற்றலாம்.
Jayakumar
பாஸிட்டிவ் என்று இல்லாமல் வாரச் செய்திகளின் தொகுப்பாகவா? சனிக்கிழமைகளில் நான் அப்படிச் கதைக்கு பதில் வேறு ஏதாவது யோசிக்கிறேன். அவ்வப்போது அதுவும் மாற்றுக்கு இன்னொன்றும்.
நீக்குஉறவுகள் வீட்டில் பார்த்த மைனாக்கள் அழகு. இங்கும் பறவைகள் கண்ணாடி கதவுகளை கொத்தும்.
பதிலளிநீக்குஅப்படியா? ஏன் கொத்துகின்றன? கண்ணாடியில் தெரியும் தங்கள் பிம்பம் பார்த்துக் கொத்துகின்றனவோ....
நீக்குமுதல் பகுதி, ஸ்ரீராம் நீங்க பதில் சொல்வது போல எனக்கு என் நெருங்கிய உறவுகளில் ஒன்றிரண்டு பேர் இப்படி ஜோக்கடிப்பாங்க. நான் சிரித்துவிடுவேன்.
பதிலளிநீக்குன்.
பொதுவில் தவிர்க்கலாம்தான். அது சரி ஏப்ரல் முடிஞ்சுருச்சு ஸ்ரீராம்!!!
கீதா
வாங்க கீதா... ஜோக்கடிப்பவர்களுக்குள் இருக்க வேண்டும். வெளியில் சொல்ல வேண்டாம் என்கிறீர்களா?!!
நீக்குஅட ராமர் பாலம் செய்தி ஈர்க்கிறது.
பதிலளிநீக்குபஹல்காம் - மிகவும் பயங்கரம்.
நானும் அந்த பஹல்காம் வைரல் வீடியோவை பார்த்தேன். அவர் தொங்கிக் கொண்டே போகும் சமயம் கீழே வெடிச்சத்தம். நினைத்தாலே நடுங்குகிறது.
கீதா
நன்றி அதிரா... (கண்டுக்காதீங்க கீதா... ஒரு கணக்கை நேர் செய்யணும்!)
நீக்குஹா ஹா ஹா. கொஞ்சம் மாத்தி யோசிங்கிற மாதிரி..! . ரசித்தேன்.
நீக்குபெயர் மாற்றத்தைதான் சொல்கிறேன்.
நீக்கு:))
நீக்கு///ஸ்ரீராம்.1/5/25 6:53 PM
நீக்குநன்றி அதிரா... (கண்டுக்காதீங்க கீதா... ஒரு கணக்கை நேர் செய்யணும்!///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பூடிப் பண்ணினால் கணக்குச் சரியாகிடுமோ:)) கீதாக்கு இருண்டது விடிஞ்சது தெரியாமல் இப்போதான் வந்திருக்கிறா.. பயந்திடப்போறா ஹா ஹா ஹா
இணையத்தில் ரசித்த படங்கள் செம. குதிரைகள் நிஜம் போலவே இருக்கு
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.. அனைவரும் ரசிக்க வேண்டும் என்றுதானே பகிர்கிறேன்...
நீக்குவைரமுத்துவின் வரிகளை ரசித்தேன், ஸ்ரீராம்...நானுறங்கும் நாள் வேண்டும் என்பதை வாசித்ததும் அது நீள் துயிலா மீளா துயிலான்னு யோசிக்கையில் அடுத்த வரி முரணா இருக்கே என்று தோன்றிட அப்ப அது நல்ல உறக்கம் வேண்டும் என்று சொல்லும் நீள் துயிலைத்தான் சொல்கிறாரோ?
பதிலளிநீக்குகீதா
வைரமுத்து வரிகளா... கீதா....!?
நீக்குஆஆஆஆஆ ஶ்ரீராம் இப்போ கொயம்பிட்டார் என்னைப்போல:)))
நீக்குவைமு வைத் தொடரும் உங்கள் வரிகளையும் ரசித்தேன் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குகீதா
அப்பாடி.. அதுதானே பார்த்தேன்...
நீக்குஹிஹிஹிஹீ,,, ஸ்ரீராம், அந்தக் காலம் இந்தக்காலம்னு எல்லாம் சொல்லுதாங்க....அந்தக்காலம்னா என்ன ஸ்ரீராம்!!!
பதிலளிநீக்குஇப்படிக்குச் சின்னப்புள்ளை கீதா!
அது ஒரு வேளை, அந்தப் பழைய பாட்டின் தமிழினால் இருக்கும். அப்புறம் பாடும் விதத்தினாலும் இருக்கும்! பொன்மேனி உருகுதே பாட்டை நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையேன்ற மெட்டில் பாடினாலோ!!!??
கீதா
இதில் என்ன அந்தக் காலம் இந்தக் காலம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்!
நீக்குமம்முக்காவின் பகுதி சுவாரசியம். சில சுவை நமக்கு நாவில் தங்கிப் போகும் என்று சொல்வதுண்டுதான். ஆனால் என்னவோ எனக்கு அப்படிச் சொல்லத் தெரிவதில்லை. அதுவும் எப்ப எனக்குப் பின் தலையில் அடிபட்டு முகரும் உணர்வு போச்சோ அப்பலருந்து மணமும் தெரிவதில்லையே இப்போதெல்லாம் எப்பவாச்சும் தெரியும் ஆனால் அதுவும் முழுமையாகத் தெரியாது. எனவே ரொம்பவே தத்துவப்பித்தாகிவிட்டேன்!!!!!!
பதிலளிநீக்குகீதா
மம்முக்காவின் பகுதி சுவாரசியம். சில சுவை நமக்கு நாவில் தங்கிப் போகும் என்று சொல்வதுண்டுதான். ஆனால் என்னவோ எனக்கு அப்படிச் சொல்லத் தெரிவதில்லை. அதுவும் எப்ப எனக்குப் பின் தலையில் அடிபட்டு முகரும் உணர்வு போச்சோ அப்பலருந்து மணமும் தெரிவதில்லையே இப்போதெல்லாம் எப்பவாச்சும் தெரியும் ஆனால் அதுவும் முழுமையாகத் தெரியாது. எனவே ரொம்பவே தத்துவப்பித்தாகிவிட்டேன்!!!!!!
பதிலளிநீக்குகீதா
ரொம்ப சிரமம்தான் கீதா. சுவைக்கு மணம் முக்கியம் இல்லையா?
நீக்குஅரட்டையினால் என்ன பலனென்று கேட்டால், அமைதிப்படை சத்யராஜ் மாதிரி நுனி சீட்டுக்கு வந்து நகம் கடிப்பதும், மனம் மகிழ்வதும்தான். இல்லையா? 100 ஐ தாண்டி 200 ன் பக்கம் நெருங்குகிறதே .. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் அப்புறம் கமெண்ட்ஸ் கண்ணுக்கு தெரியாது. வித்தியாசமான முறையில் பார்க்க வேண்டும்!
நீக்குஆம். முன்புள்ள எபியை பார்ப்பது மாதிரி. சகோதரி அதிராவுக்கு நன்றி.
நீக்குபவா செல்லதுரை - ரொம்ப நாளாச்சு அவர் பக்கம் போய். அவரைப் பற்றி வாசித்தும். இடையில் மட்டும், பரிவை சே குமார் பதிவிலா இல்லை வேறெங்கோ தெரியலை, பவா ...அது என்ன....ஹாங் பெரிய பாஸில் பங்கெடுத்தாராமே. அதிலெல்லாம் போய் எதுக்கு இவர் என்று தோன்றியது. ஆனால் அதுக்குப் பிறகு இன்றுதான் பவா பற்றி உங்கள் மூலம்,
பதிலளிநீக்குகீதா
நான் பிக் பாஸ் பார்ப்பதே இல்லை!
நீக்குஸ்ரீராம் அந்த சின்ன மரம் செம ஷாட்! ரொம்ப அழகா இருக்கு.
பதிலளிநீக்குகைக்குள்ள கோயில் மாதிரி நிறைய ஷாட்ஸ் பார்த்திருக்கிறேன். தாஜ்மஹால், நிலா.... இப்படி...
இந்த கை விரல்குள்ள எடுத்த ஷாட் கூட இன்னும் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்திருந்தா செமையா வந்திருக்குமோ,
கீதா
ஆமாம் கீதா.. அவசரம்... வண்டி கிளம்பிடும். கே ஜி எஸ் வண்டிலதான் போனோம்!
நீக்குஅது செல்லமா பாரதியா? ஸ்ரீராம்?
பதிலளிநீக்குமைனா படங்கள் சூப்பர், ஸ்ரீராம். தன் ரிஃப்ளெக்ஷன் கண்ணாடியில் தெரியற்ப்போ தன் போட்டியாளர்னு நினைச்சுக் குத்துட்தாக இருக்கும்.
இரண்டாவது படம் செம ஷாட் மைனா கண்ணாடி வழியே...
ரயில் தண்டவாளம் ஷாட்ஸ் செம. அருமையா எடுத்திருக்கார்
கீதா
இல்லை கீதா.. செல்லம்மா பாரதியின் மகள். அல்லது பேத்தி.
நீக்குஆம், மைனாக்கள் ரொம்பக் குறும்பு.. அக்குறும்பு!